Jump to content

வரலாற்றில் இல்லாத வீழ்ச்சி: டாலருக்கு எதிரான ஈரான் ரியால் மதிப்பு 1 லட்சத்து 28 ஆயிரமாக சரிவு; அமெரிக்க தடையால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பு


Recommended Posts

iranPNG

ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் ரியாலின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரியால் என்ற அளவில் சரிந்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதார தடையால் நாணய மதிப்பு வீழ்ச்சியடைந்து. பொருளாதார சிக்கலும், விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதால் பெரும் நெருக்கடிக்கு ஈரான் ஆளாகியுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

 
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. இதைத் தொடர்ந்து ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

இதுமட்டுமின்றி உலக நாடுகள் ஈரானுடன் உறவுகளை துண்டித்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்து வருகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்து வருகிறது. இதனால் ஈரானில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் 40 சதவீதம் முடங்கியுள்ளது.

இதனால் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் தேக்கத்தால் ஈரான் மிகப் பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான ஈரான் ரியாலின் மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது.

கடந்த ஜனவரி 1-ம் தேதி ஒரு டாலர் 35,186 ரியாலாக இருந்தது. மார்ச் மாதம் 50,000-க்கும் கீழ் சரிந்தது. அதிலிருந்து நான்கு மாதங்களில் மேலும் பாதியாக சரிவடைந்திருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் ரியாலின் மதிப்பு, ஒரு டாலர் 98,000 ரியால் என்ற அளவில் சரிந்தது. பின்னர் இத, ஒரு டாலர் 1.12 லட்சம் ரியால் என்னும் அளவுக்கு சரிந்தது. இது ஈரான் வரலாற்றில் இல்லாத சரிவாக வர்ணிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஈரான் ரியாலின் மதிப்பு தற்போது மேலும் சரிவடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் ரியாலின் மதிப்பு தற்போது, மீண்டும் வரலாறு காணாத சரிவை சந்திதுள்ளது.

ஒரு டாலருக்கு நிகரான ரியாலின் மதிப்பு ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரியால் என்ற அளவில் சரிந்துள்ளது. இது 50 சதவீத அளவுக்கு சரிவாகும். அமெரிக்க டாலருக்கு எதிராக மற்ற நாடுகளின் நாணயம் இந்த அளவுக்கு சரிவை சந்தித்து வருவது இதுவரை இல்லாத ஒன்றாகும்.

 
நாணய மதிப்பு சரிந்து பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசுக்கு எதிராக பெரிய அளவில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்து வருவதால் பெரும் நெருக்கடிக்கு அந்நாடு ஆளாகி வருகிறது.

ஈரான் நிதியமைச்சர் மசவுத்தை பதவி நீக்கம் செய்யும் தீ்ர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எம்.பி.பிக்கள் கொண்டு வந்தனர். அதிபர் ரவுகானிக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் நடந்து வருகிறது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது 71.20 ரூபாய் என்ற அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://tamil.thehindu.com/world/article24861352.ece?utm_source=HP&utm_medium=hp-epick

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.