Jump to content

வெடுங்குநாறி ஆதி சிவன் ஆலயமும் தொல்பொருட் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பும்


Recommended Posts

வெடுங்குநாறி ஆதி சிவன் ஆலயமும் தொல்பொருட் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பும்

 

தமிழர்கள் தனித்துவமான கலை, கலாசார, பண்பாடு பாரம்பரியங்களுடன் இந்த மண்ணில் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு எமது தேசத்தில் காணப்படும் பல்வேறு சான்றுகள் இன்றும் பறைசாற்றி நிற்கின்றன. யுத்தம் மற்றும் அதன் தாக்கத்தில் இருந்தும் மீண்டும் தமது வாழ்வியலை மீட்டெடுக்க முனையும் தமிழ் சமூகம் தனது கலாசார பாரம்பரியங்களில் இருந்து என்றும் விலகாது அதனை போற்றிப் பாதுகாத்து வருகின்ற நிலையில், தென்னிலங்கை பேரினவாத சக்திகள் தமது அதிகார செயன்முறைகளின் ஊடாக தமிழர்களது கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையினை சிதைக்க முனைவதை நாம் காணக்கூடியதாகவுள்ளது.

அந்தவகையில் வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுங்குநாறி மலைப் பகுதியில் உள்ள ஆதி சிவனை ஏறத்தாழ 200 வருடங்களுக்கும் மேலாக இப் பிரதேச மக்கள் வழிபட்டு வந்தனர். யுத்தகாலத்தில் வழிபாடுகள் நலிவடைந்திருந்தாலும் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் மீண்டும் வழிபாடுகள் சிறப்பாக இடம் பெற்றும் வந்தன. தற்போது வெடுங்குநாறி மலையில் உள்ள ஆதி சிவன் ஆலயத்திற்கு சென்று சுதந்திரமாக வழிபடுவதற்கும், கட்டிட நிர்மாணங்களை மேற்கொள்வதற்கும் தொல்பொருட் திணைக்களம் தடை வித்துள்ளது.

images-1.jpg

வவுனியா வடக்கு, ஒலுமடு பிரதேசத்தில் இருந்து 1 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள வெடுங்குநாறிமலை என்பது நாகர் காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய ஒரு இடமாகவும், அதில் தமிழ் பிராமிய எழுத்துக்கள் காணப்படுவதனையும், மலையின் அடிவாரத்தில் பிள்ளையார் மற்றும் முருகன் விக்கிரகங்களும், மேலே செல்லச்செல்ல வைரவர், நாகதம்பிரான் சிலைகள் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளதையும், மலையின் உச்சியில் இந்துக்களின் முழுமுதல் கடவுளான ஆதி சிவனின் இலிங்கவடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது. அத்துடன் இந்து ஆலயங்களுக்கு அருகில் கேணி அல்லது குளம் அமைந்திருப்பது வழமை. இதனை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் பாறை படைகளை குடைந்து அழகிய சிறிய கேணியும் அமைக்கப்பட்டு நாகர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாகர்கள் இங்கு சிவவழிபாட்டில் ஈடுபட்டார்கள் என்பதை தமிழர் தொன்மை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஆய்வாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

யுத்த காலத்திலும், அதன் பின்னரான காலத்திலும் அப்பகுதி மக்களால் இவ் ஆலயப்பகுதி தெய்வீக பிரதேசமாக பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.இந் நிலையில் குறித்த பகுதியில் தொல்பொருட்கள் இருப்பதாகக் கூறியே தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் இது உண்மைக்குப் புறம்பானது என அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் அரசாங்கம் தனது ஆதிக்கத்தை மறைமுகமாகச் செலுத்தி இங்கு புத்தர் கோயில் அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்கின்றனர் பிரதேச மக்கள்.

DSC01438.jpg

வவுனியா வடக்கின் எல்லைப் பகுதியில் இனப்பரம்பலை குலைக்கும் வகையில் சிங்கள குடியேற்றங்கள் வேகமாக நடைபெற்று வருகின்றது. நெடுங்கேணியின் கிழக்குப் பகுதியை மகாவலித் திட்டத்தின் எல் வலயம் என அடையாளப்படுத்தி சிங்கள குடியேற்றங்கள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றது. இந்தப் பின்னணியில் தொல்பொருள் திணைக்களத்தையும், வனவளத்திணைக்களத்தையும் பயன்படுத்தி புதிய குடியேற்றங்களுக்கு அண்மையில் உள்ள வடக்கின் உயரமான மலைகளில் ஒன்றாகிய வெடுங்குநாறி மலையில் புத்தர் சிலை அமைப்பதை நோக்கமாக கொண்டே காய் நகர்த்தல் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். இதனை வலுப்படுத்தும் வகையில் இப்பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இந் நிலையில் ஆடி அமாவாசை உட்பட ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் இப் பிரதேசத்தில் உள்ளவர்களால் இங்குள்ள ஆதி விக்கிரகங்களுக்கு பூஜை வழிபாடுகள் செய்து வருவதுடன் சுமார் 300 அடி உயரத்தில் உள்ள மலைக்குன்றில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் ஆதி சிவனுக்கும் உமைஅம்மைக்கும் பயபக்தியுடனும் மத வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்களும் சென்று வழிபாடுகளை 5 தலைமுறைகள் கடந்தும் பல்லாண்டு காலமாக செய்துவருகின்றனர்.

625.500.560.350.160.300.053.800.900.160.

தமிழர்களது மரபுசார்ந்த பல இடங்களையும் தொல்லியல் திணைக்களம் தமது ஆளுகைக்குள் உட்படுத்தி அதனை பாதுகாப்பதாக தெரிவித்து பௌத்த மேலாதிக்க சிந்தனை கொண்டு பௌத்த வழிபாட்டு இடங்களாக மாற்றியுள்ளதனை கிழக்கில் கன்னியா வென்னீரூறிலும், தமிழர் வழிபாட்டு இடமான கதிர்காமத்திலும், வடக்கில் கந்தரோடையிலும் நாம் கண்டுள்ளோம்.

அவ்வாறே பரம்பரை பரம்பரையாக இந்துக்களால் வழிபடப்பட்டு வருகின்ற வடக்கில் உள்ள வெடுங்குநாறி மலைக்கும் இந்நிலை ஏற்படக்கூடாது என்பதில் வடபுலத்து தமிழர்கள் உணர்ந்து செயல்பட வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அதன் விளைவாகவே மக்கள் வெடுங்குநாறி மலைக்காக வீதியில் இறங்கி போராடியுள்ளார்கள். தமிழர் தொன்மையை அழிக்க நினைக்கும் சக்திகளிடம் இருந்து எமது பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது அதாவது வெடுங்குநாறி ஆதி சிவன் ஆலய தமிழர் தொன்மையை அழிக்க நினைக்கும் சக்திகளை தகர்த்தெறிய வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. தமிழர் அடையாளமான வெடுங்குநாறி மலை மற்றும் ஆதி சிவன் ஆலயத்தை மீட்டு பாதுகாப்பதன் மூலமே எதிர்காலத்தில் தமிழரின் வரலாற்று மரபுகளுடனும், கலாசார பண்பாடுகளுடனும் தொடர்புடைய இடங்களை பாதுகாத்து தமிழர் இருப்பை நிலைபெற செய்ய முடியும் என்பதையே கடந்த கால படிப்பினைகளும் தொல்பொருட் திணைக்களத்தின் நடவடிக்கைகளும் வெளிப்படுத்தியிருக்கின்றது.

எனவே தமிழ் மக்கள் தமது வரலாறு, காலாசார பண்பாடுகளுக்காக ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய அவசியத்தை மீண்டும் காலம் ஏற்படுத்தியிருக்கின்றது. இதனை அனைவரும் புரிந்து செயற்பட வேண்டியது அவசியமானதே.

எஸ்.திவியா

http://www.newsuthanthiran.com/2018/09/03/வெடுங்குநாறி-ஆதி-சிவன்-ஆ/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
    • என்ன‌ பெரிய‌ப்பா 10பேர் இன்னும் வ‌ர‌ வில்லை என்று ஆத‌ங்க‌ ப‌ட்டினங்க‌ள் இப்ப‌ மொத்த‌ம் 17பேர் க‌ல‌ந்து இருக்கின‌ம்......................உற‌வுக‌ள் நீங்க‌ள் கொடுத்த‌ தேதிக்கு ச‌ரியா க‌ல‌ந்து கொண்டு விட்டின‌ம்.................இன்னொரு உற‌வு தானும் தானும் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் போட்டியில் என்று சொன்னார் ஆனால் அவ‌ரை சிறு நாட்கள் யாழில் காண‌ வில்லை இந்த‌ முறை நான் தான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்பேன் ஒரு க‌தைக்கு ந‌ம்ம‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல் இட‌த்துக்கு வ‌ந்தால் என்னை தூக்கி போட்டு மிதிச்சு போடுவார் ஹா ஹா😂😁🤣....................................
    • வருமான அதிகரிப்பு பொறிமுறை; வடக்கு ஆளுநர் தெரிவிப்பு! சுற்றுலாவிகளுக்கு வீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையை தயார் செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!  (மாதவன்) சுற்றுலாவிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போர், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில், ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் (18) சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாவிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலாவிகள் தங்குவதற்காக சில பகுதிகளில் மக்கள் தமது வீடுகளிலேயே அறைகளை வழங்குவதோடு, முழுமையான வீட்டையும் நாள், கிழமை மற்றும் மாத அடிப்படையில் வாடகைக்கு வழங்குவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், குறித்த நபர்கள் எந்தவொரு பணிமனையிலும் பதிவுகளை மேற்கொள்வதில்லை எனவும், தங்குமிடங்களின் வசதிகள் தொடர்பில் கரிசனை கொள்வதில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவ்வாறான நபர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி, அவர்களது வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது கூறினார். பதிவு செய்யாது தங்குமிட வசதிகளை வழங்குவோர் தொடர்பில் தகவல்களை திரட்டி, அவர்களின் சேவைகளை ஒழுங்குப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் கூறினார். அத்துடன் சட்ட பொறிமுறைக்குள் அவ்வாறானவர்கள் உள்வாங்கப்படும் போது, அவர்களின் தங்குமிட வசதிகள் தொடர்பில் இணையத்தளங்களில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான பொறிமுறையை வடிவமைக்குமாறும் அறிவுறுத்தினார். (ஏ)   https://newuthayan.com/article/வருமான_அதிகரிப்பு_பொறிமுறை;_வடக்கு_ஆளுநர்_தெரிவிப்பு!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.