Jump to content

எனது கருத்தை விமர்சிப்பவர்களுக்கு சமஷ்டி பற்றி முழு அறிவு உண்டா? – சுமந்திரன் எம்.பி. கேள்வி


Recommended Posts

எனது கருத்தை விமர்சிப்பவர்களுக்கு சமஷ்டி பற்றி முழு அறிவு உண்டா? – சுமந்திரன் எம்.பி. கேள்வி

 
 

“சமஷ்டி தொடர்பில் நான் கூறிய கருத்துக்களை விமர்சிக்கும் எங்கள் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கோ அல்லது வேறு எவருக்குமோ சமஷ்டிக் குணாதிசயங்கள் என்னவென்று சொல்லும் அறிவு உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே, சமஷ்டி, ஒற்றையாட்சி என்றால் என்ன என்று தெரிந்து புரிந்து அதற்கான கருத்துக்களை யாராவது முன்வைத்தால் அதற்கான பதில் கருத்தை நான் கூறலாம். சந்தர்ப்பவாதிகளுக்கு நான் பதில் கூறத் தேவையில்லை.”

– இவ்வாறு குறிப்பிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் புதிய அரசமைப்பு உருவாக்கக் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.

நேற்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சமஷ்டி தேவையில்லை என்று நீங்கள் கூறினீர்கள் என வெளியாகியிருக்கும் கருத்துக்கள் கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றதா? அவ்வாறு நீங்கள் கூறிய கருத்து உங்களது தனிப்பட்ட கருத்து என்று பங்காளிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனரே? என ஊடகவியலாளர்கள் சுமந்திரனிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர்,

“இது சம்பந்தமாகத் தவறான செய்தியை வெளியிட்ட ஊடகம் எங்கள் பங்களிக் கட்சித் தவைர்களைத் தொலைபேசியில் கூப்பிட்டு அவர்களுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆனால், என்னிடம் இது குறித்து கேட்கவில்லை. நான் மறுப்பறிக்கை வெளியிட்ட பின்னர் கூட என்னிடம் கேட்கவில்லை. இது மிகவும் துரதிஷ்டவசமான விடயம். அதனைத் தெரிந்துகொண்டு தான் என்னிடம் கேட்வில்லை. ஏனெனில் அதனை என்னிடம் கேட்டால் அதற்கான சரியான விளக்கத்தை நான் கொடுத்து விடுவேன் என்ற காரணத்தால் குழப்பகரமான செய்திகளைப் பிரசுரிப்பதற்காகவே அப்படிச் செய்தார்கள்.

ஆனாலும், இந்த விடயங்கள் தொடர்பில் மிகவும் தெளிவாக எமது கட்சி அலுவலகத்தில் நான் தெளிவுபடுத்தியிருக்கின்றேன். தெளிவுபடுத்தலை தவறாகப் பிரசுரித்த பத்திரிகைகள் அந்த தெளிவுபடுத்தலை இன்னும் பிரசுரிக்கவில்லை. மாறாக அந்தத் தவறான கருத்தை இன்னமும் வைத்துக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் மற்றவர்களிடம் கருத்துக்களைப் பெற்றுப் பிரசுரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சமஷ்டி என்றால் என்னவென்று தெரியாத பலர் பல கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் எனது விளக்கத்தில் தெட்டத்தெளிவாகப் பல விடயங்களைச் சொல்லியிருக்கின்றேன். சமஷ்டிக் குணாதிசயங்கள் அடங்கிய அரசமைப்புச் சட்டத்தைத் தான் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்பது எங்கள் நிலையான கொள்கை. சமஷ்டிக் கட்டமைப்பிலான என்று எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாங்கள் சொல்லியிருக்கின்றோம்.

சமஷ்டிப் பெயருள்ள அரசமைப்பு என்று நாங்கள் எங்கேயும் சொன்னது கிடையாது. சமஷ்டி பெயர் இருக்கவேண்டுமா? இல்லையா? என்பது பற்றித் தெட்டத் தெளிவாக எங்கள் மக்களக்குப் பல தடவைகள் சொல்லியிருக்கிறேன். எங்கள் பங்காளிக் கட்சித் தலைவர்களும் இருந்த பல கூட்டங்களிலேயே நாங்கள் இதைச் சொல்லியிருக்கின்றோம்.

முதல் தடவையாக சமஷ்டியைப் பற்றி நான் சொன்ன விடயமல்ல இது. நான் நூறு தடவை பல இடங்களில் பெயர்ப்பலகை தேவையில்லை என்றும், உள்ளடக்கம் தேவை என்றும், சமஷ்டிக் குணாதிசயம் என்ன என்றும் சொல்லயிருக்கின்றேன்.

அப்படியிருக்கையில் பங்காளிக் கட்சித் தலைவர்களோ அல்லது வேறு எவரோ இதை விமர்சிக்கின்றவர்களுக்கு சமஷ்டிக் குணாதிசயங்கள் என்னவென்று சொல்லும் அறிவு உண்டா என்பது எனக்குத் தெரியாது. இடைக்கால அறிக்கையிலே எந்தெந்தப் பக்ககங்களில் அவை முன்மொழியப்பட்டிருக்கின்றன என்று பார்க்கவேண்டும்.

அந்த இடைக்கால அறிக்கையில் இருக்கிற விடயங்கள் தான் இன்றைக்கு ஒரு வரைவாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக இரண்டு குணாம்சங்கள் அந்த வரைவில் இருக்கின்றன. சமஷ்டி என்றால் என்ன ஒற்றையாட்சி என்றால் என்ன என்று தெரிந்து புரிந்து அதற்கான கருத்துக்களை யாராவது சொன்னால் அதற்குப் பதில் நான் சொல்லாம். ஆனால், சந்தர்ப்பவாதிகளாகத் திடீரென்று யாரோ ஒருவர் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டார்கள் என்பதற்காகச் சுமந்திரன் சொன்னால் அது நான் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுபவர்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை.

வடக்கு மாகாணத்தின் கல்வி அமைச்சர் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் சுமந்திரன் இப்படிச் சொன்னது எழுபது ஆண்டுகளுக்கு செய்யும் துரோகம் என்று சொல்லியிருக்கின்றார். அவருடைய கட்சி வீதி வீதியாக இளைஞர்களைப் பிடித்துச் சென்று அவர்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்கள் என்று காட்டிக் கொடுத்துக் கொலை செய்த காலங்களில் அப்படிப் பிடிபடாமல் கொழும்புக்கு வந்தவர்களை கொழும்பு இந்துக் கல்லூரியில் பாராமரித்து வந்தவர்களில் நானும் ஒருவன்.

நான் எந்த வேளையிலும் எந்தச் சந்தியிலும் முகமூடி அணிந்து கொண்டு எவரையும் காட்டிக் கொடுக்கவில்லை. அந்தக் கைங்கரியத்தைச் செய்தவர்கள் இப்போது எனக்குத் துரோகிப் பட்டம் சூட்டுவதற்குத் துணிந்திருக்கின்றார்கள். அப்படியிருந்தும் நான் எவரையும் துரோகி என்ற வார்த்தையால் இதுவரை வர்ணித்தது இல்லை. ஆகையால் அவர் குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை” – என்றார்.

http://www.newsuthanthiran.com/2018/09/04/எனது-கருத்தை-விமர்சிப்பவ/

Link to comment
Share on other sites

 

தமிழ் இளைஞர்களைக் காட்டிக் கொடுத்தவர்கள் இன்று தனக்குத் துரோகி பட்டம் சூட்டுவதாக, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதானே? யாழில் யாருக்காவது சமஸ்டி பற்றிய முழு அறிவு உண்டா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல உந்த சும்முக்கு அறிவிருக்கா என்பதே கேள்வி. இதில சும் மற்றவர்களைப் பார்த்து கேட்பது வேடிக்கையாக உள்ளது.

அதுசரி... சொய்சாபுரவில்.. அக்கா குடும்பத்துக்கு வீடு வாங்க எங்க இருந்து காசு வந்தது என்பதை முதலில் விளக்கனும்.. உந்தச் சும்மர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

முதல்ல உந்த சும்முக்கு அறிவிருக்கா என்பதே கேள்வி. இதில சும் மற்றவர்களைப் பார்த்து கேட்பது வேடிக்கையாக உள்ளது.

அதுசரி... சொய்சாபுரவில்.. அக்கா குடும்பத்துக்கு வீடு வாங்க எங்க இருந்து காசு வந்தது என்பதை முதலில் விளக்கனும்.. உந்தச் சும்மர். 

 

அவரின்ட பேர்சனல் விஷயங்களை முகப் புத்தகத்தில் கேளுங்கோ...அதற்கு முன்னால் எனக்கு சமஷடி  என்றால் என்ன என்று விளங்கப்படுத்துங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

 

அவரின்ட பேர்சனல் விஷயங்களை முகப் புத்தகத்தில் கேளுங்கோ...அதற்கு முன்னால் எனக்கு சமஷடி  என்றால் என்ன என்று விளங்கப்படுத்துங்கோ 

நாங்கள் தமிழீழம் தான் முடிந்த முடிவு என்றிட்டம். அதை மறிதலித்து.. சமஷ்டி.. நல்லாட்சி.. புரிந்துணர்வு.. பேசிக் கொண்டிருக்கும்.. சும்மிடமே முதலில் அதுக்குரிய விளக்கத்தை வாங்கிக் கொண்டு வரவும்.

அவரின்ட பேர்சனல் கிடையாது. தமிழ் மக்களை காட்டிக்கொடுத்து.. தமிழ் மக்களின் உரிமையை விற்று வாங்கின கூலி தான் இப்ப குடும்பச் செழிப்பாகி நிற்கிறது. அதுதான் கேள்வி முளைக்கிறது.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

நாங்கள் தமிழீழம் தான் முடிந்த முடிவு என்றிட்டம். அதை மறிதலித்து.. சமஷ்டி.. நல்லாட்சி.. புரிந்துணர்வு.. பேசிக் கொண்டிருக்கும்.. சும்மிடமே முதலில் அதுக்குரிய விளக்கத்தை வாங்கிக் கொண்டு வரவும்.

அவரின்ட பேர்சனல் கிடையாது. தமிழ் மக்களை காட்டிக்கொடுத்து.. தமிழ் மக்களின் உரிமையை விற்று வாங்கின கூலி தான் இப்ப குடும்பச் செழிப்பாகி நிற்கிறது. அதுதான் கேள்வி முளைக்கிறது.?

 

சமஸ்டி பற்றி தெரியாமல் அது பற்றி கதைக்க வேண்டாம் என்று தான் அவரும் சொல்கிறார்...ஒன்றை எதிர்ப்பதற்கு அது பற்றி தெரிந்திருக்க வேண்டும் இல்லையா தம்பி? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

சமஸ்டி பற்றி தெரியாமல் அது பற்றி கதைக்க வேண்டாம் என்று தான் அவரும் சொல்கிறார்...ஒன்றை எதிர்ப்பதற்கு அது பற்றி தெரிந்திருக்க வேண்டும் இல்லையா தம்பி? 

முதலில் சமஷ்டி பற்றி முழு அறிவும் உள்ள சும் தான் அதனைப் பற்றி சொல்லனும். அதை முதலில் அவரிடம் விரிவாகக் கேட்டு வந்து சொல்லுங்க. நாங்க அதுக்குப் பதில் சொல்லலாம். இல்லாது.. நமக்கு அவசியமில்லாத ஒன்றுக்கு எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கனும்.

தமிழீழம் தான் எங்கள் முடிவு. 

தமிழீழம் குறித்து விளக்கம் தேவை என்றால்.. சும் எங்களிடம் கேட்டு அறிவு பெற்றுக் கொள்ளலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நவீனன் said:

 

தமிழ் இளைஞர்களைக் காட்டிக் கொடுத்தவர்கள் இன்று தனக்குத் துரோகி பட்டம் சூட்டுவதாக, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சமஷ்டி கட்டமைப்பு 
சமஷ்டி பெயர் உள்ள கட்டமைப்பு
சமஷ்டி குணாதிசயங்கள் பற்றிய அறிவு.....இதை வைச்சே இன்னுமொரு 50 வருசத்தை கடத்திடுவியள் மகாபிரபுக்களே.....

தபால்காரன் செய்யுற வேலை இருக்கட்டும்......தமிழனுக்கு நீதி வேணுமெண்டால் கோட்டுச்சூட்டு போட்டுக்கொண்டு கோட்டுக்கு போகோணுமோ....இல்லாட்டி வெள்ளை வேட்டியோடை பாராளுமன்றம் போணுமோ.......இல்லாட்டி முதல்லை பாராளுமன்றம் அதுக்குப்பிறகு கோட்டோ....
எல்லாம் ரூ இன் வண் சிஷ்டம் பாத்தியளோ.....

எல்லாம் காசு...காசு....காசு....காசு....காசு 

Link to comment
Share on other sites

சம்சும் கும்பலின் அரைவேக்காட்டு அறிவிற்கேற்ப சமஷ்டி என்றால் ஜனநாயக விரோதமாகவும் தான்தோன்றித் தனமாகவும் செயற்பட்டு, படுகொலைகாரர்களின் கைக்கூலிகளாகவும் இருந்துகொண்டு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் அழிப்பதற்கும் படுகொலைகாரர்களைக் காப்பாற்றுவதற்கு துணை போவது தான்.

இதைத் தான் தமிழரசுக் கட்சியின் சம்மந்தன், சுமந்திரன், மாவை போன்ற ஈனப் பிறவிகள் செய்துவருகின்றன. 

Link to comment
Share on other sites

5 hours ago, ரதி said:

 

அவரின்ட பேர்சனல் விஷயங்களை முகப் புத்தகத்தில் கேளுங்கோ...அதற்கு முன்னால் எனக்கு சமஷடி  என்றால் என்ன என்று விளங்கப்படுத்துங்கோ 

 

Quote

 

பலதரப்பட்ட அரசியல் சமூகங்களை ஒரு பொது அரச கட்டமைப்பில் அச்சமூகங்களின் பொதுத் தேவைகளை நிறைவு செய்வதற்காக உருவாக்கப்படும் அரசாட்சி முறையே (government sytem) கூட்டாட்சி (இலங்கை வழக்கு:சமஷ்டி) (Federal system) ஆகும். கூட்டாட்சி முறையில் அமைக்கப்படும் அரசு கூட்டரசு எனப்படும்.


கூட்டாட்சியில் பொதுத் தேவைகளுக்காக ஒரு பொது அரச கட்டமைப்பும், அந்த கூட்டமைப்பில் சேர்ந்துள்ள தனித்துவ அரசியல் சமூகங்களுக்காக உள்ளூர் அல்லது மாகாண அல்லது மாநில அரச கட்டமைப்புக்களும் இருக்கும். கூட்டரசு உருவாக்கப்படும்பொழுது ஏற்றுக்கொள்ளப்படும் அரசியலமைப்பு சட்டம் கூட்டரசுக்கும் உள்ளூர் அரசுகளுக்குமிடையே இருக்கும் உறவுகளையும், கடமைகளையும், உரிமைகளையும் விபரித்து இரண்டு அம்சங்களுக்கிடையான சட்ட ஆக்க அதிகாரப் பங்கீடுகளையும் விபரிக்கும். இந்தியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டாட்சி அரசுகளுக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.

https://ta.wikipedia.org/wiki/கூட்டாட்சி

 

இவ்வாறுதான் இணையத்தில் வரைவிலக்கணம் இருக்கின்றது. 

சிங்களப் பேரினவாதத்துக்கு முன்னால் இவ்வாறான அதிகாரப் பகிர்வு எதிர்பார்ப்புகள் எல்லாம் நடமுறைச் சாத்தியமற்றது. 

Quote

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

 

சமஸ்டி பற்றி தெரியாமல் அது பற்றி கதைக்க வேண்டாம் என்று தான் அவரும் சொல்கிறார்...ஒன்றை எதிர்ப்பதற்கு அது பற்றி தெரிந்திருக்க வேண்டும் இல்லையா தம்பி? 

அதுவா அக்கோய் ...வலு சிம்பில்
சமஷ்ட்டி என்றால் ஒரு நாடு இரு தேசம் 
இல்லாட்டில் இருநாடு ஒருதேசம் , நாட்டிற்குள்ளே தேசமிருந்தால் அது நாடு 
தேசமுள்ளே நாடு இருந்தால் அது தேசம், ஒற்றையாட்சிக்கு பங்கம் வராமல் அதிகாரம் 
எப்படி என்றால் எதிர்க்கட்சி தலீவர் ,ஜனாதிபதி சட்டத்தரணி, பிராடோ V8, உத்தியோகபூர்வ வாசஸ்தலம் 
இது அனைத்திற்கும் பெயர் தான் சமஷ்ட்டி.  கேட்டுப்பாருங்கோ  உங்கடை சட்டம்பிமார்களிடம் இன்னும் நன்றாக குனியவச்சி குதிரை ஏறுவினம் 
    

Link to comment
Share on other sites

6 hours ago, அக்னியஷ்த்ரா said:

அதுவா அக்கோய் ...வலு சிம்பில்
சமஷ்ட்டி என்றால் ஒரு நாடு இரு தேசம் 
இல்லாட்டில் இருநாடு ஒருதேசம் , நாட்டிற்குள்ளே தேசமிருந்தால் அது நாடு 
தேசமுள்ளே நாடு இருந்தால் அது தேசம், ஒற்றையாட்சிக்கு பங்கம் வராமல் அதிகாரம் 
எப்படி என்றால் எதிர்க்கட்சி தலீவர் ,ஜனாதிபதி சட்டத்தரணி, பிராடோ V8, உத்தியோகபூர்வ வாசஸ்தலம் 
இது அனைத்திற்கும் பெயர் தான் சமஷ்ட்டி.  கேட்டுப்பாருங்கோ  உங்கடை சட்டம்பிமார்களிடம் இன்னும் நன்றாக குனியவச்சி குதிரை ஏறுவினம் 
    

அப்பிடி போடுங்கோ அரிவாளை! ☺️

Link to comment
Share on other sites

On 9/4/2018 at 5:06 PM, போல் said:

சம்சும் கும்பலின் அரைவேக்காட்டு அறிவிற்கேற்ப சமஷ்டி என்றால் ஜனநாயக விரோதமாகவும் தான்தோன்றித் தனமாகவும் செயற்பட்டு, படுகொலைகாரர்களின் கைக்கூலிகளாகவும் இருந்துகொண்டு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் அழிப்பதற்கும் படுகொலைகாரர்களைக் காப்பாற்றுவதற்கு துணை போவது தான்.

 

On 9/4/2018 at 5:53 PM, சண்டமாருதன் said:

சிங்களப் பேரினவாதத்துக்கு முன்னால் இவ்வாறான அதிகாரப் பகிர்வு எதிர்பார்ப்புகள் எல்லாம் நடமுறைச் சாத்தியமற்றது. 

 

On 9/4/2018 at 10:28 PM, அக்னியஷ்த்ரா said:

அதுவா அக்கோய் ...வலு சிம்பில்
சமஷ்ட்டி என்றால் ஒரு நாடு இரு தேசம் 
இல்லாட்டில் இருநாடு ஒருதேசம் , நாட்டிற்குள்ளே தேசமிருந்தால் அது நாடு 

 

On 9/4/2018 at 12:11 PM, nedukkalapoovan said:

தமிழீழம் தான் எங்கள் முடிவு. 

பிரபாகரனாலேயே முடியாமல் போன தமிழீழத்தை  புதிய தேசிய தலைவர் நெடுக்கலேபோவான் எடுத்து தருவார், எல்லாரும் ஆயத்தம் ஆகுங்கோ சுதந்திர நாள் கொண்டாட. 

நக்கலும், நளினமும் செய்யும் நீங்கள் சொல்லும் தீர்வான தமிழீழம் சாத்தியம் இல்லை என்பது ஏன் இன்னமும் புரியவில்லை உங்களுக்கு?

இந்தியா இருக்கும் வரை தமிழீழம் சாத்தியம் இல்லை. வேறு தீர்வு வேண்டும் அல்லது மீதம் உள்ள தமிழர் புலம் பெயர்ந்த நாங்கள் கனேடியர், பிரான்சியர், ஜெர்மானியர், அமெரிக்கர் ஆனது போல அங்கே சிங்களவர், முஸ்லிம்கள் ஆகி விடுவார்கள். கனவு காண்பவர்களின் தலைமுறை போக அங்கே கனவும் இல்லை, நனவும் இல்லை என்று ஆகிவிடும். சிங்கள இனமே இப்படி வேறு இனங்களின் கூட்டால் உருவான இனம். அதில் தமிழர் குறிப்படத்தக்க பாகம். ஆகவே மீதம் உள்ள தமிழரை சிங்களவர் மற்றும் முஸ்லிம்கள் ஆக்க சிறப்பான வழி நெடுக்கரின் கனவு வழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

பிரபாகரனாலேயே முடியாமல் போன தமிழீழத்தை  புதிய தேசிய தலைவர் நெடுக்கலேபோவான் எடுத்து தருவார், எல்லாரும் ஆயத்தம் ஆகுங்கோ சுதந்திர நாள் கொண்டாட. 

தமிழீழம் என்பது ஈழம் வாழ் தமிழர்களின் தேசிய விருப்பு. அந்த விருப்புக்கு அவர்கள் வரலாற்று ரீதியான உரித்துடையவர்களும் கூட. அதனை கேட்டு பலரும் பல வடிவங்களில் காலனித்துவம் உருவாக்கி கையளித்த.. சிங்கள தேசத்திடம் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.. இருந்தார்கள்.

அதில் தேசிய தலைவர் பிரபாகரன்.. பிரதானமாக இருந்தார். அவர் பெற்றுத் தந்த தமிழீழத்தை காப்பாற்றாமல் விட்டதில்.. நீங்களும் எல்லோரும் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள். ஏன் சம் சும் கும்பல் கூட.

தமிழீழம் இன்றும் இருக்கிறது. ஆனால் அது அடுத்தவரின் கையில் இருக்கிறது. அது எமது கைக்கு வரவேண்டின்.. காலத்தேவைக்கு ஏற்ப வடிவங்களை மாற்றி எமது குரலை சர்வதேச அரங்கில் ஓங்கச் செய்வதன் ஊடாகத்தான் விடுவிக்க முடியும். அதற்கு பரந்தபட்ட ராஜதந்திர நகர்வுகளும் விடா முயற்சியும்.. சோர்ந்து விடும் தன்மைகள் அற்ற உறுதியும் தேவை.

சம் சும் கும்பல் போல.. துகில் உரியும்..நாட்டியக்காரிகள் ஆடைகளைவது போல.. ஒவ்வொன்றாய் அவிழ்த்தெறிந்துவிட்டு.. அதாவது விட்டுக்கொடுத்துவிட்டு.. இறுதியில் அம்மணமாய் நிற்க தமிழர்கள் எனியும் தயார் இல்லை. 

பிரபாகரன் ஆயுத்தால் பெற முயன்றதை எனி அரசியலால்.. முயன்று வெல்ல வேண்டும். அதற்கான களம் அமைந்து கொண்டு தான் இருக்கிறது. அதை.. இனங்காணத் தவறவது உங்கட பிரச்சனையே தவிர..

சம் சும் கும்பலால்.. தமிழ் மக்களுக்கு சிங்களவனிடம் இருந்து.. ஒரு பிடி மண்ணைக் கூட சுதந்திரமாக வாங்கித்தர முடியாது. அவர்கள் அரசியல் எப்பவோ தோற்றுப் போய்விட்டது. ஆனால்.. பிரபாகரனின் ஆயுதங்கள் ஆதிக்க சக்திகளால் மெளனிக்கப்பட்டிருக்கலாம்..  அதற்காக தமிழீழம் என்ற தமிழ் மக்களின் நியாயமான தார்மீகமுள்ள.. வரலாற்று நில உரிமையை.. அரசியலை யாரும் கைவிட முடியாது. கைவிட்டதாகவும் தெரியவில்லை.

உங்களைப் போன்ற சிலர் காலத்துக்கு காலம் சூழ்நிலைக்கு சூழ்நிலை எழும்.. துகில் உரியும் நாட்டியக்காரிகளுக்கு வக்காளத்து வாங்கிக் கொண்டிருப்பது போல.. தமிழீழம் என்பது கிடையாது. அது பிரபாகரனின் கோரிக்கை மட்டுமானதல்ல. மொத்த தமிழினத்தினதும் பெரு விருப்பாகும். அது கைவிடப் பட முடியாத ஒன்று. ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை செல்வா காலத்திலும் தமிழீழம் அவரின் கனவு.. என்று தான் சொல்லி உங்களின் மூதாதைகள் சில எள்ளி நகையாடின. இறுதியில் அவர்களே.. இரத்தத்திலகம் இட்டு அதனை கோரிக்கையாக்கி தமிழ் மக்களின் முன் வட்டுக்கோட்டைப் பிரகடனமாக்கி.. தேர்தல் அரசியலாக்கினர். அதையே பின் பிரபாகரன்.. தமிழீழத்தில் அந்நியரின்.. ஆக்கிரமிப்பை ஆயுதம் மூலம் அகற்றி.. அதற்கான விடுதலையை சாத்தியப்படுத்த முனைந்தார். அதில் அவர் நிழல் தமிழீழ அரசையும் உருவாக்கிக் காட்டினார்.. இந்த உலகின் முன்.

ஆனால் அதை காப்பாற்றத் தவறியதில்.. எம்மவரின் காட்டிக்கொடுப்புகளும் சுயநலமும் பிரதானமாக இருந்ததே தவிர.. எல்லோரும் ஒற்றுமையாக தேசிய தலைவரின் பின்னால் நின்றிருந்தால்.. இன்று சர்வதேசமே அதை முன்மொழிந்து.. பெற்றுத்தந்திருக்கும். அந்தச் சந்தர்ப்பங்களை தவற விட்டத்தில் சம்பந்தன் முதலான சந்தர்ப்பவாத.. எஜமான விசுவாச.. சுயநல தோற்றுப் போன அரசியல் செய்யும் அரசியல் வியாதிகள் முதன்மையானவர்கள்.  இன்று தமிழ் மக்கள் அந்த வியாதிகளை நம்பி வாக்குப் போடும் நிலை இருப்பது தான் கேவலமாக உள்ளது. இன்றும் அந்த வியாதிகள் திருந்தவில்லை.. மாறாக வியாதி முத்தி திரியுதுங்கள். நீங்கள் சிலர் அதுகளின் வியாதி பெருக.. ஊதிக் கொடுத்துக் கொண்டு திரிகிறீர்கள்.. அவ்வளவே. ?

Link to comment
Share on other sites

தமிழீழத்தையும், புலிகளையும் தமிழன் கைவிட்டாலும் சிங்களவன் கைவிடமாட்டான். தமிழனுக்கு உரிமைகள் கொடுக்கக் கூடாது எனப் போராடிய ஒரு போராட்டத்தில் தமிழீழச் சின்னம் கொண்ட உடைகளை அணிந்தே போராடினார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவாளி சுமந்திரன் வாழ்க சிங்களனின் அல்லக்கை சுமந்திரன் வாழ்க

இவர் என்ன சொல்லுறார் எண்டால் கொழும்பு இந்துக்கல்லூரியில் பொடியளை வைத்துப்பராமரித்தவராம் யார் இதயெல்லாம் காணப்போகிறார்கள் அப்படிச்செய்தார இல்லைய என்பதற்கு எதாவது சாட்சி என்ன என யாரும் கேதமாட்டார்கள் ஆனால் சுமந்திரன் சொன்னால் நம்புங்கோ

நானும்தான் தேசியத்தலைவர் குடும்பத்தை சுவீடன் பின்லாந்து எல்லையிலுள்ள ஒரு கிராமத்தில் அகதி முகாமில் பராமரித்தேன் என ஒருத்தரும் நம்புகினமில்லை. இதுக்குத்தான் நாலு ஆங்கிலம் தெரியவேணுமெண்டுறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

   அதானே சட்டம் , அரசியல் யாப்பு .. நன்கு கரைத்து குடித்த லோயர்மாரை மட்டுமே தேர்தலில் நிறுத்தவேணும் . ?மக்களுக்கு சேவை செய்ய எண் ணம் கொண்ட  மீதம் உள்ளோர்  பின்வாசல் ( back door ) வழிவர வேண்டும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் எனக்கு உங்கள் மேல் அதீத கோபம் என்று வைத்துக் கொள்வோம்...ஆனாலும்,நீங்கள் சொல்கிறீர்கள் ஒரு நாளைக்கு  இரு தடவை பல் தீட்டுவது நல்லது  என்று? ...உங்கள் மேல் கோபம் என்பதற்காக நான் நீங்கள் சொன்ன மாதிரி இரண்டு தரம் பல்லு தீட்டாமல் இருப்பதா ?

யார் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை...அவர்கள் என்ன சொல்கிறார்கள்/செய்கிறார்கள் என்பது தான் முக்கியம்...நீங்கள்,நான்  உட்பட இங்கு யாழில் எழுதும் ஒருத்தருக்கும் கூட சமஸ்டி என்டால் என்னவென்று தெரியவில்லை...சுமத்திரன் சொல்கிறார் என்பதற்காக எதிர்க்கிறீர்கள்...ஒன்றை ஆதரிப்பதற்கோ அல்லது எதிர்ப்பதற்கோ அது பற்றி நன்கு விடயம் தெரிந்திருக்க வேண்டும்.

சுமாத்திரனோ அல்லது கூட்டமைப்போ தமிழ் மக்களுக்கு ஒன்றையும் பெற்றுத் தரப் போவதில்லை...ஆனால் அவர்கள் தங்கள் திட்டத்தை முன் வைக்கும் முன்னரே தமிழராகிய நீங்கள் எதிர்த்தால் அவர்கள் தப்பிப்பதற்கு இது ஒரு வாய்ப்பாய் போய் விடும்.


அவர்களால் முடிந்த சமஸ்டி மூலம் தீர்வு பெற்றுத் தருகிறோம் என்கிறார்கள்...அவர்கள் அதற்கு முயற்சி செய்யட்டும்...தமிழராகிய நீங்கள் இங்கேயிருந்து கொண்டு தமிழீழம் பெற்றுக் கொடுங்கள்.

 

Link to comment
Share on other sites

31 minutes ago, nunavilan said:

 

"நான் அரசியல்வாதியாக வருவதற்கு என்ன செய்யவேண்டும்" என்று  பிரிட்டன் பிரதமரான தலைசிறந்த இராசதந்திரி வின்சன் சர்ச்சில் அவர்களிடம் ஒருவர் ஆலோசனை கேட்டபொழுது "நீ தவறாகப் பேசியவற்றை, செய்தவற்றை சரி என்று நிறுவிவிடக்கூடிய திறமை உன்னிடம் இருக்குமானால் நீ அரசியல்வாதி" என்று கூறினாராம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, உங்களுக்குத் தெரியாதது அல்ல. ஆனால், இங்கே வாசிப்பவர்கள் கொஞ்சம் புரிந்துகொள்ள இதனை எழுதுகிறேன்.

சமஷ்ட்டி அமைப்பிலான அரசியல் என்பது, இரு தன்னாட்சி அதிகாரமுள்ள அரசுகளுக்கிடையே பங்குபோடப்படும் அரசியல் அதிகாரமாகும். இந்த இரு தன்னாட்சி அதிகாரமுள்ள அரசுகளில் ஒன்று தேசிய அளவில் செயற்பட, மற்றைய தன்னாட்சி அதிகாரமுள்ள அரசு மாநில அளவில் செயற்படும். ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் அமைப்பிற்கு அமைவாக பகிரப்படும் அதிகாரங்கள், தேசிய அரசுக்கு நாடு முழுவதற்குமான அதிகாரத்தை வழங்கும் அதேவேளை, மாநில அரசு தனது மாநிலத்தில் சுதந்திரமாக தனது அதிகாரத்தைச் செலுத்த வகை செய்யும்.

Link to comment
Share on other sites

17 hours ago, Jude said:

 

 

 

பிரபாகரனாலேயே முடியாமல் போன தமிழீழத்தை  புதிய தேசிய தலைவர் நெடுக்கலேபோவான் எடுத்து தருவார், எல்லாரும் ஆயத்தம் ஆகுங்கோ சுதந்திர நாள் கொண்டாட. 

நக்கலும், நளினமும் செய்யும் நீங்கள் சொல்லும் தீர்வான தமிழீழம் சாத்தியம் இல்லை என்பது ஏன் இன்னமும் புரியவில்லை உங்களுக்கு?

இந்தியா இருக்கும் வரை தமிழீழம் சாத்தியம் இல்லை. வேறு தீர்வு வேண்டும் அல்லது மீதம் உள்ள தமிழர் புலம் பெயர்ந்த நாங்கள் கனேடியர், பிரான்சியர், ஜெர்மானியர், அமெரிக்கர் ஆனது போல அங்கே சிங்களவர், முஸ்லிம்கள் ஆகி விடுவார்கள். கனவு காண்பவர்களின் தலைமுறை போக அங்கே கனவும் இல்லை, நனவும் இல்லை என்று ஆகிவிடும். சிங்கள இனமே இப்படி வேறு இனங்களின் கூட்டால் உருவான இனம். அதில் தமிழர் குறிப்படத்தக்க பாகம். ஆகவே மீதம் உள்ள தமிழரை சிங்களவர் மற்றும் முஸ்லிம்கள் ஆக்க சிறப்பான வழி நெடுக்கரின் கனவு வழி.

 

இதுவரைக்குமான வரலாற்றில் சிங்களப் பேரினவாதம் பஞ்சாயத்து அதிகாரமளவுக்கு கூட தமிழர்களுக்கு தர மறுக்கின்றது. தர விரும்பவும் இல்லை. அதனாலேயே இவைகளை நடமுறையில் சாத்தியமற்றது என்கின்றோம்.

பிரபாகரனால் தமிழீழம்  முடியாமல் போனதற்கு பிரபாகரன் பொறுப்பல்ல. பிரபாகரன் மேல் பழிபோட்டுவிட்டு ஏனையவர்கள் யோக்கியமாக முடியாது. 

நேற்றய அமிர்தலிங்கம் வகையறாக்கள் இன்றய சம்மந்தன் விக்கி சுமந்திரன் வகையறாக்கள் ஒட்டுமொத்த இனத்துக்குமான பொதுத் தலமைகள் இல்லை. இவர்கள் இந்த இனத்தின் வரக்க ஆதிக்கத்தில் இருந்து முளைப்பவர்கள். பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டும் விலாங்கு மீன் போன்று சிங்களப்பேரினவாதத்துக்கும் தமிழ்தேசியவாதத்துக்கும் இடையில்  அரசியல் நடத்துபவர்கள். இவர்களால் உறுதியாக ஒன்றை சிங்களத்திடம் கேட்கவும் முடியாது கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. உதாரணத்திற்கு சமஷ்டி அதிகாரத்தை கோரி மக்களை திரட்டி ஒரு பேரணி, உண்ணாவிரதம் அல்லது ஏதாவது ஒரு முயற்சி செய்ய முடியாது. தீர்வு கிடக்கட்டும், போரால் பாதிக்கப் பட்ட பல்வேறு பட்ட மக்களின் தேவைக்காக, காணாமல் போனவர்களுக்கா ஒரு அடயாள எழுச்சியை செய்யவும் முடியாது. இவர்கள் மக்களை விட்டு தாங்கள தனித்தனியாக கதைத்துபேசி ஏதோ ஒரு அதிகாரத்தை பெறப்போவதாக சொல்வார்கள் அல்லது அடுத்தாண்டுக்குள் தீர்வு அல்லது இரண்டு ஆண்டுகளில் தீர்வு என்று அறிக்கை விடுவார்கள். சுருக்கமாக இவர்களின் முயற்சி மக்களில் இருந்து தொடர்பின்றி தனிமனிதர்களினதாக இருக்கும். அதில் வலுவும் இருக்காது சிங்களமும் சரி உலகும் சரி அதை பொருட்படுத்தவும் மாட்டாது.. 

கசந்தாலும் இவர்கள் எம்மினத்தின் அரசியல் பிரதிநிதிகள் இல்லை. எம்மினத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள். அடயாள அந்தஸ்த்து தேடுபவர்கள் அல்லது தக்கவைக்க முனைபவர்கள். புலம்பெயர் நாடுகளிலும் இவற்றை அடிப்படையாக கொண்டு அரசியலில் ஈடுபட முனைகின்றார்கள். இவர்களது அரசியலும் அணுகுமுறையும் வேறு மக்கள் விடுதலையும் அதற்கான முயற்சி அணுகுமுறையும் வேறானது. இவர்களது போன தலமுறையும் சரி இந்த தலமுறையும் சரி இனிவரும் தலமுறைகளும் சரி மாநில சுயாட்சி சமஸ்டி வடகிழக்கு இணைப்பு.. அதிகாரப்பகிர்வு என்பவற்றைப் பற்றி கதைத்துக்கொண்டே இருப்பார்கள்... அதுவே இவர்களது அரசியல் எல்லை. 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.