Jump to content

கவிஞர் ச. வே. பஞ்சாட்சரம் அவர்களுடன் கலைஞனின் உரையாடல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி....கலைஞன்!

வேலையில் இருக்கிறேன்!

வீட்டுக்குப் போன பின்னர் கருத்தெழுதுகின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூல் வெளியீடு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள். கலைஞன் நேர்காணல் செய்வதும், அதுவும் யாழ் இணையத்திற்காக, மிகவும் நன்றாக உள்ளது.  எல்லோரும் காணொளியை முழுமையாக பார்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் குருஜி......பின்பு கருத்து எழுதுகின்றேன்......!

Link to comment
Share on other sites

முழுமையாக உரையாடலை கேட்ட பின் உங்கள் சிந்தனைகளையும் பகிர்ந்துகொண்டால் சிறப்பாக அமையும்; நன்றி!

Link to comment
Share on other sites

மிக்க நன்றி கலைஞன்.. கன காலத்திற்கு பிறகு பிரயோசனமான ஒரு நேர்காணால். வாழ்த்துக்கள்

கவிஞரின் பாடல்கள் முன்பு கேட்டிருக்கின்றேன். அவரோடு உரையாடியதை பார்த்தது மிக மன நிறைவு.

சம காலத்தை இலக்கியமாக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் மிக உயர்ந்தது. அவர் அதையே செய்தார். இப்ப கூட நாட்டில் நடக்கும் வாள்வெட்டு கஞ்சா போதை புழக்கத்தை இலக்கித்தினூடாக சுட்டிக்காட்ட வேண்டும் என்கின்றார். இலக்கியப் பற்றும் காலத்தோடு ஒன்றிய சமூக அக்கறையும் ஒருமித்த எண்ணமாக வெளிப்படுகின்றது. 

நினைவு மீட்டிய வள்ளலார் பாடலும் பாரதிதாசன் பாடலும் மிக இனிமையாக இருந்தது. எம்மவர்களில் கவிஞர் போன்று சரளமாக இயல்பாக துணிவாக பேசுகின்றவர்கள் அதிகமில்லை. எம் சமூகத்திற்கு இவர் ஒரு முன்உதாரணம். 

மீண்டும் நன்றிகள்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் கலைஞன். நல்லதொரு முயற்சி.

நாங்கள் வாழ்வில் சந்திக்கும் பல் துறை சார்ந்தோர்கள் மற்றும் சான்றோர்களை சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையுமானால் இப்படி பிரத்தியேக பேட்டிகள் எடுத்து யாழ் களத்தில் கோப்புக்களாக சேமிப்பது மிகவும் போற்றத்தக்கது.

- 14:00 - 17:00 உங்களின் சமகால இலக்கியம் குறித்த கேள்விக்கு; கவிஞர் ஐயா அவர்களின் பதில் நெத்தியடியாக இருந்தது. அவ்வளவு யதார்த்தமான பதில். இந்த பதில் சமகால அரசியல்வாதிகளுக்கு சாளப் பொருந்தும்.

- வாசிப்புத்திறன், மொழிஆளுமை, ரசிப்புத்திறன் மற்றும்  இலக்கணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு கவிதை வரைந்தால் ..கவிதையில் உயிர்ப்பு இருக்காது போன்ற கருத்துக்கள் மிகவும் ஆழமானவை.

கவிஞர் ச.வே. பஞ்சாட்சரம் அவர்களின் நீண்ட ஆயுளுக்கு இறைவனை தொழுது, 
தமிழ் வளர்த்த அவருக்கும், அவரை இங்கே அறிமுகம் செய்த உங்களுக்கும் நன்றியயை தெரிவிக்கின்றேன்...?

Link to comment
Share on other sites

நேரம் செலவளித்து உரையாடலை கேட்டு, அத்துடன் உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி சண்டமாருதன், சசிவர்ணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் நானும் இப்போது தான் முழுமையாகப் பார்த்து முடித்தேன்!

உங்கள் குரலும்.....கேள்விகளும்...அருமை!

கமராவை....முழு நேரமும்....கவிஞர் ஐயாவை நோக்கி இருக்காமல்....இடைக்கிடை...நீங்கள் கேள்விகளைக் கேட்கும் போது...உங்களையும் நோக்கித் திருப்பியிருந்தால்..பேட்டி...இன்னும் உயிருள்ளதாக அமைந்திருக்கக் கூடும் என்பது எனது தாழ்மையான கருத்து!

பேட்டியின் இறுதியில்....மனதில்...ஒரு இனம்புரியாத இறுக்கம் ஏற்பட்டது!

எம்முள்ளேயே இருக்கும்....எத்தனை கவிஞர்களை....அறிவு ஜீவிகளை....எழுத்தாளர்களை...நாம் அறியாமல் இருந்திருக்கிறோம் என்பதனால் தான் அந்த இறுக்கம் எனக் கருதுகிறேன்!

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்....இவ்வாறானவர்களை...வெளிச்சத்துக் கொண்டு வாருங்கள்!

அவர்கள் வாழும் காலத்திலேயே...அவர்களுக்கான அங்கீகாரத்தையும்....எம்மாலானா உதவிகளையும்....செய்வோம்! 

மீண்டும் நன்றி......!

Link to comment
Share on other sites

நன்றி புங்கையூரன் உங்கள் நேரத்துக்கும், கருத்துக்கும். நீங்கள் கூறிய விடயங்களை கவனத்தில் எடுக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த காலத்திலிருந்து இன்று வரைக்கும் அதே திடத்தோடு  எண்ணங்களை வெளிப்படுத்துவது என்பது கவிஞரய்யாவுக்கே உரித்தானது.சமூகம் தொடர்பான கவலையும் மீட்பும் அவரிடம் முன்பைவிட இன்னும் அடர்த்தியாகத்தான் இருக்கிறது. அங்கு இன்றைய காலத்தில் தோன்றியிருக்கும் இலக்கிய வறட்சி பற்றி இதுவரையும் யாரும் வெளிப்படுத்தவில்லை. நேற்று முடிந்தேறிய விடயத்தை மட்டுமே இருக்கும் சிலரும் எழுதுவதும்... அவற்றைக் கடந்த காலமாக கருதி சமூகம் விலகி நடப்பதும் இன்றைய நாளுக்குரியதை சொல்லும் திராணியற்று இலக்கியவெளி இருண்டு கிடப்பதையும் சுட்டிக்காட்டும் திறன்மிக்க நெம்புகோல் இவர். தமிழும், தமிழர் சமூகமும் அவர்தம் வாழ்வும் பற்றி ஒரு உணர்ச்சிக்குழம்பான கவிஞராக அல்லாமல் சிறந்த திறனாய்வு மிக்க விசாலமான சிந்தனையாளராக பல சமயங்களில் பார்த்திருக்கிறேன். எதிர்வரும் 15 - 9 - 2018 அவருடைய நூல் வெளியீட்டுக்கு செல்ல உள்ளேன். பலர் புகழ் மிக்கவர்களாக  சுயநலமிகளாக இலக்கிய வெளிகளில் ஆணவம் நிறைந்தவர்களாக இருக்கும் இந்நாளில் இவரைப்போன்ற ஒரு பெருமகனைப்பார்க்கமுடியாது. இப்போதெல்லாம் நூல் வெளியீடுகளை அறவே தவிர்த்து வருகிறேன். ஆனால் சிலருக்கு மட்டும் தலை வணங்குவேன். அத்தகைய என் வணக்கத்திற்கு உரிவர்கள் மிகச்சிலரே. அதில் கவிஞர் ச. வே பஞ்சாட்சரம் அய்யாவும் ஒருவர்.  அவருடைய நூல் வெளியீட்டுக்குச் செல்வது எனக்கு காலத்தால் கிடைத்திருக்கும் பொக்கிசமாகும். நேர்காணலுக்கு நன்றி கலைஞன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கவிஞர்  பஞ்சாட்சரம் ஐயாவிடம், கலைஞன்  கேட்ட கேள்விகள்...
ஐயாவின்  வாழ்க்கை அனுபவத்திலிருந்து, நாம் என்ன அறிய வேண்டுமோ.... அதனை அழகாக கேட்டிருந்தார். 
யாழ். களத்துக்காக,  பிரத்தியேகமாக... எடுக்கப் பட்ட  பேட்டிக்கு,  ஆயிரம் நன்றிகள் கலைஞன்.  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசிகனாக இருந்தால்தான் கலைஞனாக உருவாகலாம் என்று கவிஞர் சொல்லுகின்றார். வாசிப்புப் பழக்கம் குன்றாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

கலைஞன் தொடர்ந்தும் நம்மவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்.... இதற்கு முன்பும், இலங்கையில் வசிக்கும் முக்கியமான ஒருவரை....
பல வருடங்களின் முன்பு,   பேட்டி கண்டவர்.  அதுகும்... மறக்க முடியாதது.

அந்த இணைப்பையும்.... இணைத்து விடுங்களேன். ?

எமக்கு... ஒரு  ஒப்பீட்டுக்கு, பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும்.  ?

Link to comment
Share on other sites

நன்றி கிருபன், தமிழ்சிறி. 

தமிழ்சிறி, நீங்கள் கூறுவது சுவிஸ் வானொலி அஜீவனுடனான உரையாடல் என்று நினைக்கின்றேன். அந்த திரி யாழில் இருக்கவேண்டும், ஆனால் ஒலிப்பதிவு அழிந்துவிட்டது, குறிப்பிட்ட ஈசினிப்ஸ் இணையம் தற்போது பாவனையில் இல்லை என்று நினைக்கின்றேன். கனடாவில் தமிழ் திரைப்படம் எடுத்த கலைஞர் ஒருவரையும் முன்பு பேட்டி கண்டேன். இவை தவிர, அன்புக்கும் மதிப்புக்கும் உரிய கே. எஸ். பாலச்சந்திரன் ஐயா, தமிழ் வாணம் (நோர்வே வசீகரன்) இன்னும் சிலரது நூல்கள்/படைப்புக்கள் பற்றியும் முன்பு விமர்சனங்கள் கொடுத்தேன். 

இவை எல்லாம் யாழ் கருத்துக்கள உறவுகள், நண்பர்களின் ஊக்கத்தினால் சாத்தியம் ஆகின.

Link to comment
Share on other sites

  • 4 months later...

அருமையான உரையாடல், கலைஞன். எனது உண்மையான பெயரைச் சூடியவர் கவிஞர் ஐயா தான். நம் ஊரவர். சிறுவயதில் எனது தமிழாசான்; நாட்டுச் சூழலால் ஏற்பட்ட பிரிவு நிறைய விடங்களை ஐயாவிடமிருந்து கற்பதைத் தடுத்துவிட்டது. 

நன்றி கலைஞன். ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிறப்பான பேட்டி குருஜி........! இப்பொழுதுதான் முழுதும் பார்த்தேன். பண்டிதர் அய்யாவின் கம்பீரம் ஒரு சிங்கம் கர்சிப்பதுபோல் இருந்தது....பலப்பல விடயங்களை அருமையாக எடுத்து சொல்கின்றார்......!

அன்று எங்களுக்கு வெளியில் பொழுது போக்குவது என்றால் சினிமாதான் இருந்தது. என்றாலும் கூட தமிழ் படங்கள் எல்லாம் சுத்தமான தமிழ் படங்களாகவும், பாடல்கள் எல்லாம் எதுகை மோனை சந்தங்களுடன் கூடியதாகவும் சிறப்புற அமைந்திருந்தது எமது தலைமுறை செய்த பெரும்பேறு. பிறகு பார்த்தால் எப்போதும் மாறி மாறி கோவில்களில் கருத்தான பாடல்களுடன் கூடிய பிரசங்கங்கள் வில்லுபாட்டுகள் மற்றும் சொற்பொழுவுகள்  நடைபெறும். அங்கு செல்லாமல் வீட்டுக்குள் படுத்திருந்தாலும் கூட அவை ஒலிபெருக்கி வழியாக எமது செவிக்குல் நுழைந்து கொண்டே இருக்கும். இன்றைய தலைமுறையின் வாழ்க்கை பாதையே முற்றிலுமாக மாறி இருக்கின்றது. ஆகவே எல்லாம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல் ஆகியிருக்கு. வீடுகளிலும் சமூகத்திலும்  பழமொழிகளுக்கு பஞ்சமிருந்ததில்லை. இப்போது அவை பஞ்ச்  டயலாக் ஆக மாறி விட்டது. பழமொழி தெரியாத சின்னஞ் சிறுசுகள் எல்லாம் பஞ்ச் டயலாக்கை பஞ்சு போல் பறக்க விடுகின்றார்கள். நாம் இவற்றை ஏற்றுக் கொண்டுதான் கடந்து போக வேண்டும்......!

பகிர்வுக்கு நன்றி குருஜி.....!  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 03:25 PM   உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182029
    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
    • 26 APR, 2024 | 03:16 PM   மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.