Jump to content

பறக்கும் விமானத்தில்.. பெண் பயணியுடன், கடும் வாக்குவாதத்தில் குதித்த தமிழிசை.


Recommended Posts

'பாசிச பாஜக ஒழிக' என கோஷம் எழுப்பிய பெண் கைது

சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தராஜன் முன்பாக பா.ஜ.கவுக்கு எதிராக கோஷமிட்ட பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரசியல் கட்சிகள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

சோஃபியாபடத்தின் காப்புரிமைFACEBOOK Image captionசோஃபியா

இன்று காலையில் சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்தார். விமானத்தில் அவருக்கு சில இருக்கைகள் தள்ளி தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த சோஃபியா என்ற பெண்ணும் பயணம் செய்தார். அவருடன் அவருடைய பெற்றோரும் பயணம் செய்தனர்.

விமானம் பயணம் நெடுகசோஃபியா தன் தாயிடம் பா.ஜ.க. அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசிவந்துள்ளார். பிறகு விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தில் நடந்துவரும்போது 'பாசிச - பா.ஜ.க. அரசு ஒழிக' என்று கோஷமிட்டுள்ளார்.

இதற்கு தமிழிசை சவுந்தரராஜனும் அவருடைய ஆதரவாளர்கள் சிலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தன்னுடைய கருத்துரிமை என சோஃபியா கூறினார். ஆனால், சோஃபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை வலியுறுத்தினார் என்றும் சோஃபியா அதற்கு மறுத்திவிட்டார் என்றும் அவரது வழக்கறிஞர் அதிசயகுமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதனால், தமிழிசை காவல்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட சோஃபியா புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். அப்போது தமிழிசை சவுந்தரராஜனும் அவருடன் வந்தவர்களும் தன்னை அவதூறாகப் பேசியதாக சோஃபியாவும் புகார் அளித்தார்.

தமிழிசைபடத்தின் காப்புரிமைFACEBOOK

இதற்குப் பிறகு, சோஃபியா மீது இந்திய குற்றவியல் சட்டம் 270, தமிழக குற்றவியல் சட்டம் 75 -1-C, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் மீது பதிவுசெய்யப்பட்ட 505 என்ற பிரிவை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.

இதன் பிறகு மகளிர் சிறையில் அடைக்கப்பட்ட சோஃபியா, வயிற்று வலி என்று கூறியதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரை நாளை பிணையில் எடுப்போம் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதற்கிடையில் விமான நிலையத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், சோஃபியாவுக்குப் பின்னால் ஏதேனும் அமைப்புகள் இருக்கிறதோ என சந்தேகிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

சோஃபியா கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சோஃபியாவை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கூறியுள்ளார். "அப்படிச் சொல்பவர்களையெல்லாம் சிறையில் அடைப்பீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கிறேன், பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

22 வயதாகும் சோஃபியா, கனடாவின் மான்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் ஆய்வு மாணவியாக இருந்துவருகிறார். இந்தியாவின் இணைய தளங்கள் சிலவற்றிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

தமிழிசை செளந்தரராஜன் அந்த பெண் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் வருகின்றன.

இந்நிலையில் இந்திய அளவில் 'பாசிச பாஜக_ஆட்சி ஒழிக' என்ற ஹாஷ் டேக் டிவிட்டரில் டிரண்டாகி வருகிறது.

 

https://www.bbc.com/tamil/india-45398985

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

à®à¯à®ªà®¿à®¯à®¾

பறக்கும் விமானத்தில்.. பெண் பயணியுடன், கடும் வாக்குவாதத்தில் குதித்த தமிழிசை.

தூத்துக்குடி விமானத்தில் பாஜக தலைவர் தமிழிசை இளம் பெண்ணுடன் தகராறில் ஈடுபட்ட விவகாரம் பெரும் பரபரப்புக்கு உள்ளாகி உள்ளது.

அந்தப் பெண் ஏதோ கூறியதால், கோபமடைந்த தமிழிசை செளந்தரராஜன் அந்தப் பெண்ணுடன் சண்டைக்குப் போய் விட்டார்.

நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழிசை சவுந்தராஜன் இன்று கலந்து கொள்ளவிருக்கிறார். அதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு பயணமானார்.

அப்போது விமானத்தில் தமிழிசையை கண்டதும் சோபியா என்ற இளம் பெண் ஒருவர், பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று பாஜகவுக்கு எதிராக திடீரென கண்டன முழக்கங்களை எழுப்ப தொடங்கினார்.

விமானத்துக்குள்ளேயே தனியாளாக இப்படி பாஜகவுக்கு எதிரான முழக்கமிட்டதை பார்த்து, தமிழிசை உட்பட மற்ற பயணிகள் அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், பாஜகவை விமர்சித்து கோஷமிட்ட அந்த பெண்ணிடம் தமிழிசை விமானத்திலேயே வாக்குவாதத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, விமானம் தரை இறங்கியதும் தூத்துக்குடி விமான நிலைய காவல்நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், ஏதாவதொரு அமைப்பின் தூண்டுதல் காரணமே இளம் பெண் தமக்கு எதிராக முழக்கம் எழுப்பியதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழிசை அந்த புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/thamizhisai-soundararajan-argues-with-young-girl-on-the-plan-328876.html

 

###################  #####################  #######################  #####################  ##########################

 

சோபியாவின் ஒரே கோஷம்.. ஒரு மணி நேரத்தில், தேசிய அளவில் வைரல் ஆன  பாசிச பாஜக ஆட்சிஒழிக!

மாணவி சோபியா கைது செய்யப்பட்டதை அடுத்து #பாசிசபாஜக_ஆட்சிஒழிக என்ற ஹேஷ்டேக் 1 மணி நேரத்தில் தேசிய அளவில் வைரல் ஆகி உள்ளது..

சோபியா பற்றித்தான் தற்போது தமிழகமே பேசிக்கொண்டு இருக்கிறது. ஒரு விமான பயணம், அவரை இந்தியா அளவிற்கு வைரலாக்கும் என்று அவரே நினைத்து இருக்க மாட்டார்.

நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசைக்கு எதிராக அவர் இட்ட ''பாசிச பாஜக ஆட்சி ஒழிக கோஷம்'' பெரிய வைரல் ஆகியுள்ளது. இதனால் தமிழிசைக்கும் சோபியாவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.

இதன் காரணமாக பலரும் சோபியாவிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். தமிழிசைக்கு, பாஜகவிற்கு எதிராக கண்டனம் தெரிவிக்க தொடங்கினார்கள். இதனால் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக என்ற ஹேஷ்டேக் 1 மணி நேரத்தில் தேசிய அளவில் வைரல் ஆனது.

பாசிசபாஜக_ஆட்சிஒழிக என்ற ஹேஷ்டேக் எந்த அளவிற்கு வைரல் ஆனதோ அதே அளவிற்கு சோபியா என்ற பெயரும் வைரல் ஆனது. ஆம், இந்தபெயரை வைத்து நேற்று மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான டிவிட்டுகள் செய்யப்பட்டுள்ளது.

இவர் ''வேலியில் போன ஓணானை வேட்டியில் எடுத்து விட்ட கதை...ஏர்போர்ட்ல முடிஞ்சி இருக்க வேண்டிய பிரச்சனய ஆல் இந்தியா டிரெண்ட் ஆகி போச்சே'' என்றுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/fascist-bjp-rule-down-down-slogan-becomes-viral-after-sophia-328905.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாà®à®¿à® பாà®à® à®à®´à®¿à®

தமிழிசையுடன் வாதிட்ட மாணவி சோபியா அதிரடி கைது.. !

தூத்துக்குடி விமானத்தில் தமிழிசை சவுந்தரராஜனை பார்த்து, பாஜக ஒழிக என முழக்கமிட்ட சோபியா என்ற மாணவி கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழிசை சென்னை விமான நிலையம் வந்தார். பின்னர் தூத்துக்குடிக்கு விமானம் மூலம் பயணமானார்.

அப்போது விமானத்தில் தமிழிசையை பார்த்ததும், சோபியா என்ற இளம் பெண், பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று பாஜகவுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்ப தொடங்கினார்.

தமிழிà®à¯ வாà®à¯à®à¯à®µà®¾à®¤à®®à¯

விமானத்துக்குள்ளேயே இப்படி முழக்கமிட்டதை பார்த்து, தமிழிசை அதிர்ச்சியிடைந்து, பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், விமானம் தரை இறங்கியதும் தூத்துக்குடி விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்து, அந்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.

அந்த புகாரின்பேரில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். பின்னர் அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவரின் மகள்தான் சோபியா என்றும், 23 வயதுடைய சோபியா கனடாவில் படித்து வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து, சோபியாவை கைது செய்த போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

15 நாள் சிறை: இதன்பின்னர், சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு பிறகு நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைக்க சோபியாவை போலீசார் கொண்டு செல்ல இருந்தனர். இந்த நிலையில் அவரை திடீரென மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் போலீஸார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/15-days-police-remand-speak-against-bjp-tamilisai-328896.html

Link to comment
Share on other sites

சோபியாவுக்கு ஜாமீன்: தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

 

 
jkjpgjpg

பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட மாணவி சோபியாவுக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் சோபியா (28). இவர் கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ஆராய்ச்சி மாணவியாக உள்ளார். இந்நிலையில், இவர் திங்கள்கிழமை சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் பயணித்தார். அதே விமானத்தில் அப்பெண்ணின் இருக்கைக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் பயணித்தார். அப்போது, தமிழிசை சவுந்தரராஜன் அந்த விமானத்தில் இருப்பதை அறிந்த சோபியா, ‘பாசிச பாஜக ஒழிக’ என முழக்கமிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, தமிழிசை எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துள்ளார்.

 

நண்பகலில் விமானம் தூத்துக்குடி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் சோபியா மீண்டும் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, வரவேற்பறையில் “விமானத்தில் இப்படிச் சொல்வது சரியா?” என தமிழிசை அப்பெண்ணிடம் கேட்டுள்ளார். இதனால், அப்பெண்ணுக்கும் தமிழிசைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழிசை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பயணித்த இண்டிகோ அதிகாரிகளிடமும் புகார் அளித்தார். அதிகாரிகள் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண்ணுக்கு எதிராகப் புகார் அளித்தனர். இதையடுத்து தமிழிசை அங்கிருந்து திருநெல்வேலி சென்றார்.

சோபியா மீது ஐபிசி பிரிவு 505 (1) (பி) பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்ளுதல், ஐபிசி 290 பொதுஇடங்களில் மக்களுக்கு இடையூறு விளைவித்தல், தமிழ்நாடு சிட்டி போலீஸ் பிரிவு 75 போலீஸாருக்கு ஒத்துழைக்காதது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதன்பின், போலீஸார் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற 3-வது நீதிபதி தமிழ்ச்செல்வி வீட்டில் இரவில் சோபியாவை ஆஜர்படுத்தினர். அப்போது ஐபிசி பிரிவு 505 (1) (பி) இதற்குப் பொருந்தாது என ரத்து செய்து, மற்ற இரு வழக்குகளில் சோபியாவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் நெல்லை மகளிர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அப்பெண்ணின் வழக்கறிஞர் அதே நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் மனுவை செவ்வாய்கிழமை விசாரித்த நீதிபதி தமிழ்ச்செல்வி, சோபியாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24862434.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோபியா விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவரா?  --சுப்பிரமணியன் சுவாமி

1536027986-9579.jpg

இன்று காலை முதல் இந்திய அளவில் டிரெண்டில் இருந்து வரும் சோபியாவுக்கு பாஜக மற்றும் அதிமுகவினர் தவிர அனைத்து கட்சியினர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். நெட்டிசன்கள் சோபியாவை வீரமங்கை என்ற அளவில் புகழ்ந்து வருகின்றனர்.

அதேபோல் சோபியாவை பாஜக தலைவர்கள் ஒரு தீவிரவாதி போல் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். அந்த வகையில் பாஜக தலைவர்களில் ஒருவராகிய சுப்பிரமணியன் சுவாமி,

'சோபியா விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவராக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சோபியா கனடாவில் படித்து வருவதாகவும், கனடாவில் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதாகவும், கனடாவில் உள்ள தமிழர்கள்தான் 'பாசிசம் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துவார்கள் என்றும் சுவாமி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஏற்கனவே சோபியாவின் பின்னணியை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அவரை பின்னால் இருந்து ஏதோ ஒரு இயக்கம் வழிநடத்துவதாகவும் பாஜக தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் இல.கணேசன் கூறியுள்ளனர் என்பது குறிப்ப்பிடத்தகக்து.

http://m.tamil.webdunia.com/article/regional-tamil-news/sophia-is-a-ltte-member-says-subramanian-swamy-118090400054_1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனையை விமான நிலையத்துடன் அப்படியே விட்டிருந்தால் பாரதீய ஜனதாவுக்கு சேதாரம் இல்லாமல் போயிருக்கும். இப்ப சிறை....விவாதம் என பெரிசு படுத்தி உள்ளதையும் கெடுத்து விட்டார்கள். :cool:

Link to comment
Share on other sites

யார் இந்த லூயிஸ் ஷோபியா? - பின்னணி தகவல்

 

சோபியா

PC:aajtak.intoday.in

லூயிஸ்  ஷோபியா... ஊடகங்களிலும் சமூக வலைதளங்களில் இப்போது இந்தப் பெண்ணின் பெயர்தான் டிரெண்டிங். விமானத்தில், இவர் பா.ஜ.க-வின் தமிழக தலைவர்  தமிழிசை செளந்தரராஜனை நோக்கி, ``பாசிச பா.ஜ.க ஒழிக” எனக் கோஷமிட்டதற்காக, கைது செய்யப்பட்டு, தற்போது நிபந்தனையற்ற ஜாமீனில் வெளி வந்திருக்கிறார். 

 

 

இவர் கனடாவில் மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் (university of montreal), கணிதத்தில் பி.எச்டி  பயின்றுவருகிறார். தூத்துக்குடியைச் சேர்ந்த இவர், சமீபத்தில் தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு கலவரம் நடந்தபோது, இந்தக் கலவரத்தின் பின்னணி பற்றியும் வேதாந்தா நிறுவனம் செய்யும் அரசியல் பற்றியும் சமூக வலைதளங்களில் எழுதி வந்தவர். இதைத் தொடர்ந்து, ’தி போலிஸ் ப்ராஜெக்ட்’ (The Polis Project) என்ற இணையதளத்தில், விரிவான பேட்டி ஒன்றையும் அளித்திருக்கிறார். தன் ட்விட்டர் பக்கத்திலும், திருமுருகன் காந்தியின் கைது நடவடிக்கைக்கு  எதிர்ப்பு தெரிவித்தும், சமீபத்தில் எழுத்தாளர்கள் கைது குறித்தும்,  ஆவணப் பட இயக்குநர் திவ்யா பாரதியின் இயக்கிய ’ஒருத்தரும் வரல’ என்ற ஆவணப் படத்துக்கு ஆதரவு தெரிவித்தும், சமூக ஆர்வலர் வளர்மதியைக்  காவல்துறையினர் சித்ரவதை செய்ததைக் கண்டித்தும் எழுதியிருக்கிறார்.

அவரைக் கைது செய்வதற்கு முன்னதாக, ``நான் இப்போது தமிழிசை செளந்தரராஜனுடன் விமானத்தில் இருக்கிறேன். எனக்குப் `பாசிச பா.ஜ.க ஒழிக' என்று கத்த வேண்டும் போல் இருக்கிறது. என்னை விமானத்திலிருந்து இறக்கிவிட்டுவிடுவார்களோ?!”, என்று  ட்விட் செய்திருந்தார். இவர் தொடர்ந்து தமிழக அரசியல் மற்றும் சமூக சூழல் குறித்து எழுதி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இவரின் கைது நடவடிக்கையை, ஒருபுறம் ஜனநாயகத்தை ஒடுக்கும் செயல் என்றும், மறுபுறம் விமானத்தில் கோஷமிடுவது சட்டப்படி குற்றம் என்றும் விவாதிக்கப்பட்டுவருகிறது.

https://www.vikatan.com/news/tamilnadu/135909-who-is-lois-sofia.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2018 at 4:52 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சோபியா விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவரா?  --சுப்பிரமணியன் சுவாமி

1536027986-9579.jpg

இன்று காலை முதல் இந்திய அளவில் டிரெண்டில் இருந்து வரும் சோபியாவுக்கு பாஜக மற்றும் அதிமுகவினர் தவிர அனைத்து கட்சியினர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். நெட்டிசன்கள் சோபியாவை வீரமங்கை என்ற அளவில் புகழ்ந்து வருகின்றனர்.

 

No automatic alt text available.

 

Image may contain: 2 people

ஆஹா... எப்படி எல்லாம், யோசிக்கிறார்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1536027986-9579.jpg&key=c9d74ccbdcbb6093

இந்த மாணவியின் முகத்தில் தெரியும்.....தன்னப்பிக்கையும்....உறுதியும்.....தமிழிசையின் முகத்தில்  அவர் ...எத்தனை....பல்கலைக் கழகங்களின் படிகள் ஏறி இறங்கினாலும்....வரவே வராது!

 

மதுரையை...எரித்த கண்ணகியின்....

கண்களில் கூட......

இந்தக் கனல் கனன்றிருக்காது!

 

மோதி....மிதித்து விடு....பாப்பா,

அவர் தம் முகத்தில் உமிழ்ந்து விடு ...பாப்பா!

அந்தப் பாரதி கண்ட ......

புதுமை பெண் நீயென்பேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 

No automatic alt text available.

 

Image may contain: 2 people

ஆஹா... எப்படி எல்லாம், யோசிக்கிறார்கள். :grin:

40940660_2473677186191899_32356439950402

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் பிரபல்யமாவதற்கு இப்படியான குறுக்கு வழிகளைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

எல்லோரும் பிரபல்யமாவதற்கு இப்படியான குறுக்கு வழிகளைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள் 

இது தான்  இப்படியான சிந்தனைகள் தான் திருப்பி கேள்வி கேட்போரை தூரம் தள்ளி வைக்கின்றது.

ஒரு அரசியல்வாதியிடம் பகிரங்கமாகத்தான் கேள்விகளையும் விமர்சனங்களையும் வைக்க வேண்டும்.

அதை நாலு சுவரின் மத்தியில் கேட்டால்  அது  ஊழல்.


ஒரு அரசியல்வாதியை இன்னொரு அரசியல்வாதிதான் கேள்வி கேட்க முடியுமென்றால்.....
வாக்குகள் எதற்கு? தேர்தல் எதற்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சுதந்திரம் இந்தியாவில் வருமா? tw_blush:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2018 at 12:52 AM, குமாரசாமி said:

பிரச்சனையை விமான நிலையத்துடன் அப்படியே விட்டிருந்தால் பாரதீய ஜனதாவுக்கு சேதாரம் இல்லாமல் போயிருக்கும். இப்ப சிறை....விவாதம் என பெரிசு படுத்தி உள்ளதையும் கெடுத்து விட்டார்கள். :cool:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.