Jump to content

ஓய்வை அறிவித்தார் அலைஸ்டர் குக்


Recommended Posts

ஓய்வை அறிவித்தார் அலைஸ்டர் குக்

 

 
 

இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் அலைஸ்டர் குக் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரின் பின்னர் டெஸ்ட்போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவி;த்துள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 33 வயதான குக் சிறப்பாக விளையாடாதது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையிலேயே அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

தீவிரமாக சிந்தித்த பின்னர் நான் இந்தியாவுடனான தொடரின் பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளேன் என குக் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இது துயரமான நாளாகயிருந்தாலும் நான் பெரும் முகத்துடன் அதனை அறிவிக்கலாம் ஏனெனில் நான் என்னால் முடிந்த அனைத்தையும் வழங்கிவிட்டேன் இனி எஞ்சியது எதுவுமில்லை என குக் தெரிவித்துள்ளார்.

நான் கற்பனைசெய்து பார்க்க முடியாத அளவிற்கு சாதித்துவிட்டேன் இவ்வளவு நீண்ட காலம் என்னால் இங்கிலாந்து சில தலைசிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாட முடிந்தமை குறித்து நான் பெருமிதம் கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது சகவீரர்களுடன் செலவிடும் நேரத்தை இழக்கப்போகின்றேன் என்பதே மிகவும் கடினமாக விடயமாக உள்ளது எனினும் ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான நேரம் என கருதுகின்றேன் எனவும் குக் குறிப்பிட்டுள்ளார்.

cook5.jpg

நான் எனது வாழ்நாள்முழுவதும், சிறுவயதில் எனது வீட்டில் விளையாட தொடங்கிய காலம் முதல் கிரிக்கெட்டை நேசித்துள்ளேன்,இங்கிலாந்து அணியின் சேர்ட்டை அணிந்து ஆட கிடைத்தது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்பதையும் நான் குறைத்து மதிப்பிடமாட்டேன் என குக் தெரிவித்துள்ளார்.

அலைஸ்டர் குக் டெஸ்ட் போட்டிகளில் 32 சதங்களுடன் 12,254 சதங்களை பெற்றுள்ளார்.

2006 ம் ஆண்டு 21 வயதில் இந்தியாவிற்கு எதிராக நாக்பூரில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய குக் தனது முதல் டெஸ்டிலேயே சதமடித்திருந்தார்.

அவரது தலைமையிலேயே இங்கிலாந்து அணி 20 வருடங்களிற்கு பின்னர் முதல் தடவையாக ஆசஸ் தொடரை கைப்பற்றியிருந்ததுடன் இந்தியாவிற்கு எதிரான தொடரையும் 2012 இல் கைப்பற்றியிருந்தது.

 

http://www.virakesari.lk/article/39656

Link to comment
Share on other sites

அலட்டல் இல்லாத அமைதியான சாதனையாளர் அலிஸ்டர் குக் ஓய்வு அறிவித்தார்

 

 
cook

அலிஸ்டர் குக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பு. | கோப்புப் படம். ராய்ட்டர்ஸ்.

இந்தியாவுக்கு எதிராக ஓவலில் நடைபெறும் 5வது டெஸ்ட் போட்டியே தன் இறுதி டெஸ்ட் போட்டி என்று இங்கிலாந்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மெனான உருவெடுத்த அலிஸ்டர் குக் அறிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த 6வது வீரர் அலிஸ்டர் குக். அவருக்கு வயது 33தான் ஆகிறது. ஆனால் பேட்டிங் பார்ம் சீரடையவில்லை, இந்த ஆண்ட் 9 டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 18.62 தான்.

   
 

ஆகவே இதுவே ஓய்வு பெற சரியான தருணம் என்று அவர் முடிவெடுத்து விட்டார்.

இங்கிலாந்திலேயே அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை குக் படைத்தவர். இதுவரை 160 போட்டிகளில் 12,254 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 44.88. சராசரி 45க்குக் கீழ் இப்போதுதான் இறங்கியுள்ளது. 32 சதங்கள் 52 அரைச்தங்கள், 11 டக்குகள். அதிகபட்ச ஸ்கோர் 294.

cook2jpg
 

2006-ல் நாக்பூர் டெஸ்ட்டில் அறிமுக டெஸ்ட்டிலேயே 21 வயது வீரராக சதம் அடித்தார். 2010-11-ல் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து ஆஸ்திரேலிய மண்ணில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வென்ற தொடரில் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார், அந்தத் தொடரில் தொடரின் ஆரம்பத்தில் சொதப்பிய குக் பிறகு பெரிய அளவில் மீண்டெழுந்து ஆஸ்திரேலிய பவுலர்களை வறுத்தெடுத்தார்.

32 சதங்களை இவர் எடுத்த வேகம் சச்சின் டெண்டுல்கர் சாதனையும் முறியடிப்பார் என்று இங்கிலாந்து ஊடகங்களை ஹேஷ்யம் கூற வைத்தன.

ஆனால் இவரது கிரிக்கெட் வாழ்வில் இருண்ட தருணங்களும் உண்டு 2014-ல் ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து எந்த ஒரு அறிவிப்புமின்றி திடீரென நீக்கப்பட்டார். குக்கின் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரில் 2013-14-ல் ஒயிட் வாஷ் வாங்கிய போது கெவின் பீட்டர்சன் வெளியேற்றப்பட்டதில் முக்கிய பங்காற்றியதாக இவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் இங்கிலாந்து கேப்டன்களிலேயே உண்மையில் ஒரு ஜெண்டில் மேன் இவர், அனாவசியமான கள சர்ச்சைகளில் சிக்கியதில்லை. சாதுவான சாதனையாளர். களத்தில் இந்த ஸ்லெட்ஜிங் போன்றவற்றை ஊக்குவிப்பவர் அல்ல என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

cook3jpg
 

உத்தி ரீதியாக எப்போதும் கொஞ்சம் அதீத கவனம் மேற்கொள்பவர் என்பதால் இவரது ஆட்டத்தை அது வெகுவாகப் பாதித்தது, சேவாக், கில்கிறிஸ்ட், ஜெயசூரியா, லாரா போன்றவர்களுக்கு எதிர்நிலையான மனநிலை, அவர்கள் பொதுவாக உத்திபற்றியெல்லாம் கவலைப் பட மாட்டார்கள். இவர் கொஞ்சம் கவாஸ்கர் ரகம். லெக் திசைதான் இவரது வலுவான பிரதேசம்.

இங்கிலாந்து அணி நம்பர் 1 இடத்துக்கு முன்னேறியதில் இவரும் ஆண்ட்ரூ ஸ்ட்ராசும் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய நாட்கள் மிக முக்கியமானது. 2012 தொடரில் இந்தியாவில் வந்து இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய போது அலிஸ்டர் குக் இந்திய ஸ்பின்னர்களை இந்தப் பிட்சில் ஆடியது பலருக்கும் கண் திறப்பாக அமைந்ததையும் மறுக்க முடியாது. மேத்யூ ஹெய்டனுக்குப் பிறகு இந்திய ஸ்பின்னர்களை இந்தியாவில் சிறப்பாக ஆடியவர் என்றால் அது அலிஸ்டர் குக் தான்.

ஆனால் ஸ்ட்ராஸ் ஓய்வு பெற்ற பிறகு குக்குடன் களமிறங்க ஏகப்பட்ட வீரர்களை இங்கிலாந்து சோதித்தது ஆனால் இன்னமும் கூட அவருக்கு துணையானவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

ஓவலில் குக் களமிறங்கும் போது 159 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாகக் களமிறங்கிய வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரர் ஆவார்.

இந்நிலையில் இவரது ஓய்வு இங்கிலாந்து அணியில் பெரிய ஓட்டையை ஏற்படுத்துவது உறுதி.

https://tamil.thehindu.com/sports/article24856223.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

 

 

7 வயது சிறுவனாக கிரகாம் கூச்சின் கையெழுத்துக்காக வரிசையில் காத்திருந்தேன்: ஓய்வு அறிவித்த அலிஸ்டர் குக் நெகிழ்ச்சி

 

 
gooch

கிரகாம் கூச், அலிஸ்டர் குக். | கோப்புப் படம்.

வரும் ஓவல் டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார், இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரரும் முன்னாள் கேப்டனுமான அலிஸ்டர் குக்.

இந்நிலையில் தன் ஓய்வு முடிவு குறித்து அவர் கூறியதாவது:

 

நிறைய யோசித்து கடந்த சில மாதங்களாக மனதில் வைத்திருந்த ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ளேன். இது துயரமான நாள் என்றாலும் என் முகத்தில் பெரிய புன்னகையுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். நான் அனைத்தையும் அளித்து விட்டேன், இனி என்னிடம் எதுவும் இல்லை.

நான் கற்பனை செய்ததற்கு மேலாகவே பங்களிப்புச் செய்து விட்டேன். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சிலபல கிரேட்களுடன் ஆடியதுதான் என் இனிய அனுபவம், நான் செய்த அதிர்ஷ்டம். இனி ஓய்வறையை எனக்குப் பிடித்த இங்கிலாந்து அணியுடன் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என்ற முடிவு மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் சரியான நேரத்தில்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

சிறுவயதில் தோட்டத்தில் கிரிக்கெட்டை ஆடத் தொடங்கியது முதல் இந்த ஆட்டத்தை பெரிதும் நேசித்து வருகிறேன். இங்கிலாந்து சீருடையை அணிந்ததை ஒருக்காலும் நான் குறைவாக எண்ண முடியாது. எனவே இளம் வீரர்களுக்கு வழிவிட இதுவே சிறந்த தருணம்.

தனிப்பட்ட முறையில் நிறைய பேருக்கு நன்றி நவில வேண்டும். ஆனால் பார்மி ஆர்மிக்கு சிறப்பு நன்றிகள். இங்கிலாந்து அணி எங்கு சென்றாலும் பார்மி ஆர்மி எங்களுக்கு அளித்த உத்வேகம் மறக்க முடியாதது. அதே போல் சிறப்பாக நன்றி தெரிவிக்க வேண்டுமெனில் அது கிரகாம் கூச்சிற்குத்தான். 7 வயது சிறுவனாக எசெக்ஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப் வாசலில் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க வரிசையில் காத்திருந்திருக்கிறேன். ஆனால் அவரே எனக்கு பின்னாளில் பயிற்சியாளரானதை எப்படி மறக்க முடியும். என் ஆரம்ப காலக்கட்டத்தில் கிரகாம் கூச்தான் எனக்கு எல்லாமும். மணிக்கணக்காக என் மட்டைக்கு அவர் பந்துகளை த்ரோ செய்ததைத்தான் மறக்க முடியுமா? நாம் என்னத்தை அடைய வேண்டும் என்று முயற்சிக்கிறோமோ அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை எனக்கு உணர்த்தியவர் கிரகாம் கூச்.

கிரிக்கெட் வீரராக குடும்பத்தை விட்டுப் பிரியும் பயணங்களை இந்த 12 ஆண்டுகளாக மேற்கொண்டேன் என்னைப் பொறுத்தருளி எனக்கு ஆதரவு காட்டிய என் குடும்பத்தினருக்கும் மிக்க நன்றிகள்.

என் 12 வயது முதல் என்னை ஆதரித்த எசெக்ஸ் கிரிக்கெட் கிளப்புக்கும் என் ஆழ்ந்த நன்றிகள்.

இங்கிலாந்து அணி எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்படுவதற்கு வாழ்த்துக்கள், அதனை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

இவ்வாறு கூறினார் அலிஸ்டர் குக்.

https://tamil.thehindu.com/sports/article24856578.ece

Link to comment
Share on other sites

விடைபெறும் அலிஸ்டர் குக்: புகழ் மழையிலும் கவனம் சிதறாத வீரர்

 
 

அலெஸ்டர் குக் புகழ் வெளிச்சத்தில் பிரகாசமாக மின்னினார். ஆனால், அப்புகழ் மழை அவரை மயக்கவில்லை. அவரது கிரிக்கெட் வாழ்க்கையானது தனித்துவமிக்கதாகவும், அட்டகாசமானதாகவும் இருந்தது.

அலிஸ்டர் குக்படத்தின் காப்புரிமைGARETH COPLEY

குக்கின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை விவரிக்க வேண்டுமானால் 2006 முதல் 2018 வரையிலான 12 வருடங்களை உற்றுநோக்க வேண்டும். கிரிக்கெட் உலகில் இக்காலகட்டத்தில் புதிய தலைமுறையின் பிரதிநிதியாக விளங்கினார் குக். அவர் பயணித்த பாதையில் பயணம் செய்தவர்கள் மிகக்குறைவு.

அவர் பேஸ்புக்கில் இல்லை; ட்விட்டர் கணக்கும் கிடையாது; இன்ஸ்டாகிராமிலும் அவருக்கு கணக்கு இல்லை. ஆகவே, எத்தனை ஃபாலோயர்களை வைத்திருக்கிறார் என பேசுவதற்கே இடமில்லை. சமூக ஊடகத்தில் ஒரு பதிவு போடுவதற்காக அவர் எவ்வளவு கோடிகள் சம்பாதிக்கிறார் என்றும் கேட்க முடியாது.

அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து புகைப்படங்கள், காணொளிகள் ஏதேனும் பகிர்ந்திருக்கிறாரா என நீங்கள் தேடினால், உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

குக் தனது தலைமுடிக்கு ஜெல் போடுவதில்லை; விசித்திரமான ஹேர்ஸ்டெயில் செய்துகொள்வதில்லை; உடலில் டாட்டூக்களை குத்திக்கொள்வதில்லை; டிஜெ பாடல்கள் கேட்பவரும் அல்ல; பிரபலமான தோழிகளும் அவருக்கு இல்லை; யாருடனாவது டேட்டிங் சென்றார்; எந்த பெண்ணுடனாவது உறவை முறித்துக் கொண்டார் என்ற கிசுகிசுக்களும் எழவில்லை. குடித்துவிட்டு இரவில் ஏதாவதொரு மதுபான விடுதியில் தகராறு செய்ததாக அவர் மீது புகார்களும் கிடையாது; வேகமாக வண்டி ஒட்டி சென்றார் எனக்கூறி அவருக்கு காவல்துறை இதுவரை அபராதம் விதித்ததுமில்லை.

கிரிக்கெட் களத்தில் மற்ற வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை. பந்தைச் சேதப்படுத்துதல் முதலான எந்தவொரு இழிவான செயல்களிலும் அவரது பெயர் அடிப்பட்டது கிடையாது. போட்டியிலோ அல்லது போட்டி முடிந்தபிறகோ யாரையாவது குத்தலாக பேசுவதோ அல்லது தன்னை முன்னிலைப்படுத்தி உயர்த்தி பேசியதுமில்லை.

குக் நிச்சயம் வித்தியாசமான மனிதர். அவர் 24 கேரட் தங்கம்.

இங்கிலாந்து அணியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை மிக இளம் வயதிலேயே துவங்கினார். தற்போது தனது 33-வது வயதில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அவர் தன்னை ஜாம்பவானாக்கிக் காண்பித்திருக்கிறார்.

அலிஸ்டர் குக்படத்தின் காப்புரிமைSTEVE BARDENS

12 வருடங்களுக்கு முன்னதாக இந்த கதை துவங்கியது. அப்போது 2006-ம் வருடம். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருக்கிறது இங்கிலாந்து அணி. மார்கஸ் டிரஸ்கோதிக் இங்கிலாந்தின் நம்பகமான தொடக்க வீரராக விளங்கினார். ஆனால் மன ரீதியான பிரச்சனை காரணமாக இத்தொடரில் இருந்து விலகினார். இங்கிலாந்துக்கு டிரஸ்கோதிக்கின் இழப்பு பேரிடியாக இறங்கியது.

அது மார்ச் மாதம். வெயிலின் தாக்கம் எகிறிக்கொண்டிருந்த நிலையில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஆகவே இங்கிலாந்து கடும் நெருக்கடியில் சிக்கியிருந்தது.

தொடக்க வீரராக யாரை களமிறக்கலாம் என தேர்வுக்குழு ஆலோசனை நடத்தியதில் இறுதியாக அந்த பட்டியலில் முதலிடத்துக்கு வந்தவர் அலெஸ்டர் குக். ஆனால் ஒரு பிரச்னை என்னவெனில் அப்போது 21 வயது குக் இங்கிலாந்து அகாடமி அணிக்காக வெஸ்ட் இண்டீஸில் விளையாடிக்கொண்டிருந்தார். ஆனால் தேர்வுக்குழு குக் தான் வேண்டும் என முடிவில் உறுதியாக இருந்தது. இதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் குக்கை அழைத்து.

இந்தியாவுடனான தொடர் துவங்குவதற்கு வெகு சில நாட்களே இருந்தநிலையில் விசா உள்பட அனைத்து தொழில்நுட்ப ரீதியான சம்பிரதாய முறைகளையும் முடித்தபிறகு வெவ்வேறு நேர மண்டலங்களையும் கடந்து மும்பை வழியாக நாக்பூரை சென்றடைந்தார். விமான பயண களைப்பு காரணமாக அவர் ஓய்வெடுக்கவில்லை மாறாக பயிற்சியில் ஈடுபட்டார். அடுத்த சில மணிநேரங்களில் அவர் இங்கிலாந்தின் தேசிய கிரிக்கெட் அணியின் வீரரானார்.

அலிஸ்டர் குக்படத்தின் காப்புரிமைMICHAEL DODGE

நன்றாக சவரம் செய்யப்பட்ட முகம், நல்ல உயரம், பெரிய ஹெல்மெட்டோடு கைகளின் பாதுகாப்பாக அணியப்படும் பட்டையை அணியாதநிலையில் களத்தில் காலடி எடுத்துவைத்தார் குக். அவர் நின்றதை பார்க்கும்போது பேஸ்பால் வீரர் போல இருந்தது.

முதல் இன்னிங்சில் 60 ரன்கள் குவித்தார். இவருக்குள் ஏதோ நல்ல திறமை இருக்கும் போல என நாக்பூர் மைதான பத்திரிகையாளர்கள் அறையில் முணுமுணுப்பு கேட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்த இளம் வீரர் சதமடித்ததும் கிரிக்கெட் ரசிகர்கள் மெய்மறைந்தனர். தொடக்க போட்டியிலேயே சதமடிப்பது, அதுவும் இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிராகவும் குறிப்பாக கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் போன்ற சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளாசியது சாதாரண காரியமல்ல. ஆனால் குக் தன்னால் களத்தில் நிற்க முடியும் என்பதை வெளிக்காட்டிய நாள் அது.

அன்றைய தினம் முதல் குக் தனது பாதையில் ஒரு துறவியை போல நேர்மையுடனும் பயணிக்கத் துவங்கினார். கடந்த 12 வருடங்களாக அவரது மட்டையில் இருந்து ரன் மழை பொழிகிறது.

குக் ஏன் தனித்துவமிக்க சிறப்பான வீரர் தெரியுமா? அவர் கடுமையான நெருக்கடி மிக்க சூழ்நிலைகளில் சக வீரர்களுடன் இணைந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருக்கிறார்.

குக்குடன் அந்த டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக வெள்ளை ஜெர்சியில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நுழைந்தவர் இந்திய வீரரான ஸ்ரீசாந்த். அவரும் தனது கிரிக்கெட் வாழ்க்கையை நன்றாகத் தான் துவக்கினார் ஆனால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார். மேலும் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் சிக்கி வாழ்நாள் தடை பெற்றார். இதே போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வை துவங்கிய இன்னொரு வீரரின் பெயர் மான்டி பனீசர்.

இங்கிலாந்துக்காக ஆடிய பனீசர் ஆரம்பகட்டத்தில் அச்சுறுத்தல்தரும் பந்துவீச்சாளராக தனது கிரிக்கெட் வாழ்வை துவங்கினார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரது நடத்தை சரியில்லாமல்போக, நல்லதொரு பாதையை தொலைத்தார்.

இதே டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மற்றொரு வீரர் இயான் பிளாக்வெல். அவருக்கு இதுதான் அறிமுக டெஸ்ட் போட்டியாகவும் கடைசி டெஸ்ட் போட்டியாகவும் அமைந்தது.

மூன்று வீரர்கள் ஒரு புறமிருக்க, குக் இன்னொரு பக்கத்தில் ஜொலித்தார். 12 வருட கிரிக்கெட் வாழ்வில் 33 வயது குக் 32 சதங்களை விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 12,254 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் குமார் சங்ககாரா, ராகுல் திராவிட், ஜேக்ஸ் காலிஸ், ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர்தான் குக்கை விட முன்னிலையில் இருப்பவர்கள். குக் எப்படிப்பட்ட விளையாட்டை விளையாடியிருக்கிறார் என்பதை மேற்கண்ட இந்த ஐந்து பெயர்கள் கூறும்.

கடந்த சில வருடங்களாக குக், டெண்டுல்கரின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் எனும் சாதனையை முடியடிக்கக்கூடும் என்ற செய்தி அடிக்கடி வலம் வந்தது. ஆனால் குக்கின் ஒரு சாதனை குறிப்பிடத்தக்கது. கடந்த 12 வருடங்களில் தொடர்ந்து 158 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதாவது இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானத்தில் இருந்து அவர் ஒரு டெஸ்ட் போட்டியையும் தவறவிட்டதில்லை.

அவரது ஆட்டத்திறன் அல்லது உடல்திறன் நிலையாக இருந்ததால் அணியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லாமல்போனது. முன்னதாக இந்த உலக சாதனையை செய்திருந்தவர் ஆலன் பார்டர். ஒரு ஜாம்பவானின் சாதனையை குக் என்ற இன்னொரு ஜாம்பவான் முறியடித்திருக்கிறார். எண்களில் இந்த சாதனையை குறிப்பிடுவது படிக்கும்போது கவர்ச்சிகரமானதாக இருக்கலாம் ஆனால் உண்மையில் மிகவும் கடினமான மகத்தான சாதனை இது.

அலிஸ்டர் குக்படத்தின் காப்புரிமைTOM SHAW

ஒரு பேட்ஸ்மேனின் பணி ரன்கள் குவிப்பது. உலகில் அனைத்து பேட்ஸ்மேன்களும் இதைச் செய்கிறார்கள். பிறகு, குக் ஏன் சிறப்பானவர் என சிலர் கேட்கலாம். கேள்வி கேட்பதற்கு முன்னதாக அணியில் குக்கின் பணி குறித்து புரிந்துகொள்ள வேண்டும். குக் தொடக்க வீரராக களமிறங்கினார். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் புத்தம்புதிய சிகப்பு பந்தை எதிர்கொள்ள ஒரு வீரருக்கு தனி திறமை தேவை.

ஒன்றரை நாள்கள் ஃபீல்டிங் செய்தபின்னர் உடல் தளர்ந்தாலும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் அல்லது ஆட்டத்தின் முதல் நாளில் முழு தெம்புடன் பந்துவீசவரும் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு வீரருக்கு பிரத்யேக திறமைஇருந்தால்தான் சாதிக்க முடியும்.

தன்னிடம் இருக்கும் தவறுகளை எதிரணி கண்டுபிடித்து தன்னை ஆட்டமிழக்கச் செய்துவிட்டால் கிரகாம் கூச்சிடம் சென்று தனது தவறுகள் குறித்து விவாதித்து, அதன் பின்னர் கடும் பயிற்சி வாயிலாக அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் சிறப்பாக ரன்கள் குவிப்பது அவரது வழக்கம்.

அனைவருமே உள்ளூர் ஆடுகளங்களில் ரன் குவிப்பவர்கள்தான். ஒரு பேட்ஸ்மேனுக்கு உண்மையான சோதனை என்னவெனில் அயல்நாட்டில் தனது திறனை வெளிப்படுத்துவது. குக் இச்சங்கதியில் சிறந்தவர் என்பதை ஆதாரங்கள் காட்டுகின்றன.

இந்தியா, இலங்கை, வங்கதேசம் போன்ற இடங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆசிய துணை கண்டத்தில் பொதுவாக பிட்சில் பந்துகள் நன்றாக திரும்பும். ஆகவே காலை முன்னோக்கி நகர்த்தி விளையாடுவதா அல்லது பின்னோக்கி நகர்த்தி விளையாடுவதா என முடிவு செய்ய பேட்ஸ்மேனுக்கு நேரம் பிடிக்கும். சுழல்பந்து வீச்சாளர்களை ஐந்து நாளும் எதிர்கொள்வதென்பது ஒரு புதிர் போன்றதாகவே இருக்கும்.

இதில் வெயில் காலம் என்றால், குளிர்பிரதேசத்தில் இருந்து வந்திருக்கும் இங்கிலாந்து வீரர்களுக்கு மொத்த சக்தியும் விரைவாக தீர்ந்துவிடும். ஆனால் குக் இது போன்ற சூழ்நிலைகளில் எளிதாக ரன்கள் குவித்துள்ளார்.

அலிஸ்டர் குக்படத்தின் காப்புரிமைPHILIP BROWN

இங்கிலாந்து அணிக்கு கிரிக்கெட்டில் எதிரி ஆஸ்திரேலியா. பொதுவாக ஆஸ்திரேலிய மைதானங்களில் பிட்ச் குளிர்ந்திருக்கும். இதுபோதாதன்று ஆஸ்திரேலியர்கள் வீரர்களை வம்புக்கிழுப்பதில் நன்றாக அறியப்பட்டவர்கள் என்பதால் அதையும் சமாளிக்க வேண்டும். இவ்விடங்களில் குக் சிறப்பாக விளையாடியிருக்கிறார்.

அவரை சீண்டும் வார்த்தைகளை பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் கவனம் குவித்து ரன்கள் குவித்திருக்கிறார்.

நியூசிலாந்தில் பந்து நன்றாக எழும்பும். அங்கே அதிகபட்ச குளிரும் கடுமையான குளிர் காற்றும் வேறு இருக்கும். இந்த சூழ்நிலைகளும் குக் எனும் ரன் மெஷினை தடுத்து நிறுத்தமுடியவில்லை.

தென் ஆப்ரிக்காவில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசுவார்கள். அனால் குக் தனது வேலையை செவ்வனே செய்வார்.

கரீபியன் தீவுகள் உலகின் இன்னொரு மற்றொரு பகுதியில் இருக்கிறது. இங்கே பெரிய பேட்ஸ்மேன்களே குழப்பமடைவார்கள். அங்கே வெற்றிகரமாக விளையாடியிருக்கிறார்.

இங்கிலாந்தில் குக் ஒரு ரன் மெஷின். அவர் லாரா அல்லது ஜெயவர்தனே போல அழகான பாணியில் விளையாடுபவரல்ல; பாண்டிங் அல்லது சங்கக்காரா போன்ற ஆதிக்கம் செலுத்தும் பேட்ஸ்மேன் அல்ல. அவருடைய ஆட்டம் கிரிக்கெட்டின் அழகியலில் புதிதாக எதையும் சேர்க்காமல் இருந்திருக்கலாம் ஆனால் அவர் நம்பகமான பேட்ஸ்மேனாகவும் அதிக ரன்கள் குவித்தவராகவும் விளங்கியிருக்கிறார். தனது பொறுப்பை கடந்த 12 வருடங்களாக சிறப்பாக செய்திருக்கிறார்.

https://www.bbc.com/tamil/sport-45427079

Link to comment
Share on other sites

கெவின் பீட்டர்சனை அணியிலிருந்து நீக்கிய தீராப்பழிக்கு காலம்தான் மருந்து: அலிஸ்டர் குக் வேதனை

 

 
cook-pietersenjpg

இந்தியாவில் தொடரை வென்ற பிறகு குதூகலத்தில் குக், பீட்டர்சன். | படம்: கே.ஆர்.தீபக்.

ஓவல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறும் இங்கிலாந்தின் மிகச்சிறந்த சாதனை பேட்ஸ்மென் அலிஸ்டர் குக், தான் கேப்டனாக இருந்த காலத்தில் ஏற்பட்ட கெவின் பீட்டர்சன் சர்ச்சை குறித்து பிபிசி டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

2014 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸியில் நடந்த ஆஷஸ் தொடரில் குக் தலைமையில் இங்கிலாந்து 5-0 என்று உதை வாங்கியது, அதில் இங்கிலாந்தில் ஓரளவுக்கு அதிக ரன்களை எடுத்தவர் கெவின் பீட்டர்சன் தான். ஆனால் இங்கிலாந்து அணியிலுள்ள மேட்டுக்குடி லாபி கெவின் பீட்டர்சனை வெளியேற்ற தோல்விகளை ஒரு காரணமாகப் பயன்படுத்தியது, ஜேம்ஸ் ஆண்டர்சன் உட்பட ஈடுபட்ட ஸ்டூவர்ட் பிராடின் சூழ்ச்சியில் கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து ஓய்வறைக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று ஒருமனதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது.

 
 

இங்கிலாந்துக்காக தென் ஆப்பிரிக்காவை விட்டு வந்து ஆடி அந்த அணிக்கு பல வெற்றிகளை ஈட்டித்தந்து தன் சொந்த நாட்டையே தியாகம் செய்த ஒரு வீரரை இங்கிலாந்து இழிவு படுத்தி அனுப்பியது. இதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக கேப்டன் குக்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து அப்போது கேப்டனாக இருந்த குக் கூறியதாவது:

என் கிரிக்கெட் வாழ்வில் அது மிகவும் கடினமான காலக்கட்டம். அந்தச் சர்ச்சை என் பேட்டிங்கையே பாதித்தது.

ஒருநாள் ஸ்ட்ராஸ் வந்து கெவின் பீட்டர்சன் இனி இங்கிலாந்துக்கு ஆடப்போவதில்லை என்று கூறியவுடன் என் தோள்களிலிருந்த பாரத்தை இறக்கி வைத்தது போல் இருந்தது.

முதலில் கெவின் பீட்டர்சனை அனுப்பிவிடுவது என்ற முடிவில் நானும் பங்கு பெற்றேன், ஆனால் இப்போதைக்கு வேண்டாம், ஓராண்டு கழித்து மீண்டும் அவரை அழைக்கலாம் என்றுதான் நான் கூறினேன்.

ஆனால் பல் டவுண்டன் தெளிவு வேண்டும் என்று வலியுறுத்தினார். பீட்டர்சன் விவகாரம் படுமோசம், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதனை மோசமாகக் கையாண்டதாகவே கருதுகிறேன். அதே போல் சமூக வலைத்தளங்கள் அப்போது சமூக வலைத்தளங்கள் எப்படிச் செயல்பட்டன என்பதையும் இங்கிலாந்து வாரியம் அறிந்திருக்கவில்லை.

ஆம், சமூகவலைத்தளங்களில் பீட்டர்சன் விவகாரத்தில் என்னைப் போட்டு வறுத்து எடுத்தார்கள். அதுதான் கேப்டனாக இருப்பது என்றால் ஏற்படுவது போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

டேவிட் கோவரை அணியிலிருந்து நீக்கியதற்கு கிரகாம் கூச்தான் காரணம் என்று அவர் மீது ஒரு தீராப்பழி இருந்தது. அதே போல் பீட்டர்சன் அனுப்பப் பட்டதற்கு நான் காரணம் என்று என் மீது தீராப்பழி உள்ளது. காலம்தான் மருந்து எங்கள் விரிசலுற்ற நட்பிற்கும் காலம்தான் மருந்து.

இதனால் நானும் பீட்டர்சனும் அதற்குப் பிறகு 4 ஆண்டுகளாக பேசிக்கொள்ளக்கூட இல்லை. ஆனால் எங்களிடையே நிறைய நினைவுகள் உள்ளன. நல்ல நினைவுகள் உள்ளன. கிரிக்கெட் என்ற ஒன்றை எடுத்துவிட்டால் எங்கள் உறவுகளில் பாதிப்பில்லை என்றுதான் கூறுவேன், ஆனால் பீட்டர்சன் வேறு கருத்தை நிச்சயம் வைத்திருப்பார்.

இவ்வாறு கூறினார் அலிஸ்டர் குக்.

https://tamil.thehindu.com/sports/article24890445.ece

Link to comment
Share on other sites

குக் போல ஓய்வு அறிவித்துவிட்டு பிறகு சதமடித்த ‘கில்லி’ பேட்ஸ்மேன்கள்!

 

 
cook444xx

 

சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாயிடும் - சிவாஜி படத்தில் சுஜாதா எழுதிய வசனம். ஆனால் இதுவே என் கடைசி டெஸ்ட் என்று முன்பே அறிவித்துவிட்டு அந்தக் கடைசி டெஸ்டில் சதமடித்த கில்லிகளும் உண்டு. நேற்று சதமடித்த குக் போல. 

5 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-1 என இங்கிலாந்து ஏற்கெனவே கைப்பற்றி விட்டது. இறுதி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 332 ரன்களுக்கும், இந்தியா 292 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகின. இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 364 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் வீரர்கள் அலிஸ்டர் குக் 147, கேப்டன் ஜோ ரூட் 125 ஆகியோர் அபாரமாக ஆடி சதமடித்தனர். இதன் மூலம் இந்தியாவைக் காட்டிலும் 464 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்களை எடுத்திருந்தது. இறுதி நாளான செவ்வாய்க்கிழமை வெற்றி பெற இந்தியாவுக்கு 406 ரன்கள் தேவைப்படுகின்றன.

இங்கிலாந்து அணியில் அதிக டெஸ்ட் ரன்களை எடுத்த சாதனைக்கு சொந்தக்காரரான முன்னாள் கேப்டன் அலிஸ்டர் குக், இந்தியாவுடன் நடைபெறும் இறுதி டெஸ்ட் ஆட்டத்தோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஓவல் மைதானத்தில் நடைபெறும் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 71 ரன்களை எடுத்த குக், இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக ஆடி 147 ரன்களுடன் தனது கடைசி டெஸ்டில் இருந்து விடை பெற்றார். கடந்த 2006-இல் நாக்பூரில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இரண்டாம் இன்னிங்ஸில் குக் சதமடித்தார். தற்போது இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற கடைசி டெஸ்டிலும் சதமடித்து சாதனை படைத்துள்ளார். ஆஸி வீரர்கள் ரெஜினால்ட் டப், பில் போன்ஸ்போர்ட், கிரேக் சாப்பல், இந்திய வீரர் அஸாருதீன் ஆகியோர் இச்சாதனையை நிகழ்த்தி உள்ளனர். 

161 டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்ற குக் 33 சதங்கள், 57 அரை சதங்களுடன் 12472 ரன்களை அடித்துள்ளார். மேலும் தொடர்ந்து 158 டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்ற வீரர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். குக்கை இந்திய வீரர்கள் கேப்டன் கோலி தலைமையில் பாராட்டி வழியனுப்பினர்.

ஓய்வு அறிவித்துவிட்டு, பிறகு கடைசி டெஸ்டில் சதமடித்த வீரர்கள்

ராமன் சுப்பா ரோவ் (1961, இங்கிலாந்து), ரன்கள்: 12, 137. 
சோமொர் நர்ஸ் (1969, மே.இ.), ரன்கள்: 258.
கிரேக் சேப்பல் (1984, ஆஸ்திரேலியா),  ரன்கள்: 182.
ஜாக் காலிஸ் (2013, தென் ஆப்பிரிக்கா) ரன்கள்: 115.
பிரண்டன் மெக்கல்லம் (2016, நியூஸிலாந்து) ரன்கள்: 145, 25.
அலாஸ்டர் குக் (2018, இங்கிலாந்து), ரன்கள்: 71, 147.

http://www.dinamani.com/sports/sports-news/2018/sep/11/the-elite-club-alastair-cook-joins-after-signing-off-with-a-hundred-2998292.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.