Jump to content

துயரமே வாழ்க்கை: மத்தியதரைக் கடல் பகுதியில் ஒரு பயணம்


Recommended Posts

துயரமே வாழ்க்கை: மத்தியதரைக் கடல் பகுதியில் ஒரு பயணம்

உலகெங்கும் உச்சத்தில் இருக்கிறது குடியேறிகள் பிரச்சனை. போர், சிதைந்த பொருளாதாரம், இன அழிப்பு, பயங்கரவாதிகள் என பல்வேறு காரணங்களால், உலகெங்கும் பல்வேறு நாடுகளில் மக்கள் பாதுகாப்பான நாடுகளுக்கு தஞ்சம் கோரி குடியேறிகள் பயணித்து கொண்டிருக்கிறார்கள்.

துயரமே வாழ்வாய்: மத்தியதரைக் கடல் பகுதியில் ஒரு பயணம்

 

ஜோஷிபா

பாதுகாப்பற்ற வழிகளில் இவர்கள் மேற்கொள்ளும் பயணங்களால், பல துயர சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கின்றன. குறிப்பாக மத்தியதரைக் கடல் பகுதிகளில் குடியேறிகளை சுமந்து கொண்டு வந்த படகுகள் கவிழ்ந்த சம்பவங்களில் பலர் உயிர் இழந்திருக்கிறார்கள்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை சேர்ந்த ஜுவான் மெடினா லிபிய கடல் பகுதிகளில் தத்தளிக்கும் குடியேறிகளை மீட்கும் படகுகளில் 29 நாட்கள் பயணித்து பல புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்.

ஒவ்வொரு புகைப்படமும் அடர்த்தியான துயரத்தை நம்மிடம் கடத்துகிறது.

ஸ்பேனிஷ் தொண்டு நிறுவனத்தால் இயக்கப்படும் இழுவை படகு 'ஓபன் ஆர்ம்ஸ்'. 36 மீட்டர் நீளம் கொண்ட படகு இது.

இந்த படகானது ஐரோப்பிய நாடுகளுக்குள் கடந்த சில ஆண்டுகளாக உள்ளே நுழைய முயலும் லட்சகணக்கான மக்களை கடல் பகுதியில் கண்காணிக்கிறது. தத்தளிப்பவர்களை மீட்கிறது.

துயரமே வாழ்வாய்: மத்தியதரைக் கடல் பகுதியில் ஒரு பயணம்

 

 

மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளிலிருந்து ஏறத்தாழ 18 லட்சம் பேர் மத்தியதரைக் கடல் பகுதி முழுவதும் குடியேறி இருக்கிறார்கள் என்கிறது ஐ.நா தகவல்.

'ஒபன் ஆர்ம்ஸ்' இழுவை படகில் ஜுவான் மெடினா ஏறிய போது அப்படகு கடலில் தத்தளித்த ஒரு பெண்ணை மீட்டுக் கொண்டிருந்தது. குடியேற நிலம் தேடியவர்கள் ரப்பர் படகில் வந்துக் கொண்டிருந்தனர். ஆனால், துரதிருஷ்டமாக ரப்பர் படகிலிருந்து காற்று போனதில் அவர் மட்டுமே ஜோஷிபா எனும் ஒரு பெண் மட்டுமே பிழைத்தார்.

அந்த படகில் நான்கு வயது குழந்தையும், அவரது தாயும் இறந்து கிடந்தனர்.

ஜூலை 17 ஆம் தேதிதான் ஜோஷிபா மீட்கப்பட்டர். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தபோது, அவரது உடல்நிலை மிகமோசமாக இருந்தது.

அவர் மத்திய ஆப்ரிக்காவில் உள்ள கேமரூன் குடியரசை சேர்ந்தவர்.

ஆகஸ்ட் மாதம் அதே பகுதியில் அகமது என்பவர், அவரது 13 வயது மகனுடன் மீட்கப்பட்டார்.

துயரமே வாழ்வாய்: மத்தியதரைக் கடல் பகுதியில் ஒரு பயணம்

 

ஜோஷிபா

துயரமே வாழ்வாய்: மத்தியதரைக் கடல் பகுதியில் ஒரு பயணம்

 

ஜோஷிபா

மெடினாவிடம் பேசிய அகமது, சூடானிலிருந்து தாங்கள் பயணிப்பதாக கூறி உள்ளார். லிபிய நகரத்தில் அவரும், இன்னும் சிலரும் கடத்தப்பட்டு ஏழு நாட்கள் வரை சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பின் அங்கிருந்து அவரும் அவர் மகனும் தப்பி கிழக்கு நோக்கி 130 கி.மீ பயணித்து கரபுள்ளி நகரத்தில், ஒருவருக்கு 1,438 டாலர்கள் அளித்து ரப்பர் படகில் ஏறி இருக்கிறார்கள்.

துயரமே வாழ்வாய்: மத்தியதரைக் கடல் பகுதியில் ஒரு பயணம்

 

அகமது

துயரமே வாழ்வாய்: மத்தியதரைக் கடல் பகுதியில் ஒரு பயணம்

 

 

பதினைந்து மணி நேரம் அந்த ரப்பர் படகில் பயணித்து இருக்கிறார்கள். பின் அந்த படகு உடைந்து முன்று மணி நேரம் கடலில் தத்தளித்து இருக்கிறார்கள்.

அந்த கணத்தை அவரே விவரிக்கிறார். "எங்களை நோக்கி ஒரு வெளிச்சம் தெரிந்தது. உண்மையில் நாங்கள் அப்போது பயந்துவிட்டோம். லிபிய ரோந்து படகுதான் எங்களை நோக்கி வருகிறதோ... மீண்டும் எங்கள் அந்த நரகத்திற்கே அனுப்பி விடுவார்களோ என்று அஞ்சினோம்" என்கிறார்.

ஆனால், எங்களை நோக்கி வந்தவர்கள் நேச கரம் நீட்டினார்கள். "நாங்கள் உங்கள் நண்பர்கள். ஸ்பேனிஷ் மீட்பு படகை சேர்ந்தவர்கள் என்றார்கள். நாங்கள் சந்தோஷத்தில் கூக்குரலிட்டோம்" என்கிறார் அகமது.

துயரமே வாழ்வாய்: மத்தியதரைக் கடல் பகுதியில் ஒரு பயணம்

 

மெடினா பிற குடியேறிகளையும் புகைப்படம் எடுத்திருக்கிறார்.

கீழே உள்ள புகைப்படத்தில் இசை கேட்டுக் கொண்டிருக்கிறார் தானே... அவருக்கு பதினேழு வயது. பெயர் சியோல். அவரும் சூடானை சேர்ந்த ஒரு குடியேறி.

துயரமே வாழ்வாய்: மத்தியதரைக் கடல் பகுதியில் ஒரு பயணம்

 

சியோல்

துயரமே வாழ்வாய்: மத்தியதரைக் கடல் பகுதியில் ஒரு பயணம்

 சியோல்

துயரமே வாழ்வாய்: மத்தியதரைக் கடல் பகுதியில் ஒரு பயணம்

 

அம்ஜத்

மேலே உள்ள புகைப்படத்தில் இருப்பவரின் பெயர் அம்ஜத். 23 வயதான் இவரும் சூடானை சேர்ந்தவர். ஓபன் ஆர்ம்ஸ் மீட்பு இழுவை படகில் ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்.

யூசுப்

 

யூசுப்

இந்த புகைப்பத்தில் இருப்பவர் யூசுப் ஒபன் ஆர்ம்ஸ் படகில் நின்று கடலை ஏதோவொரு சிந்தனையுடன் பார்த்து கொண்டிருக்கிறார்.

இவர்கள் ஒவ்வொருவரிடமும் சொல்ல துயர் மிகுந்த ஏராளமான கதைகள் உள்ளன. அந்த கதைகளுடன் வாழ நிலம் தேடி பயணித்து கொண்டிருக்கிறார்கள்.

https://www.bbc.com/tamil/global-45393993

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.