Jump to content

உலக நிகழ்வுகள்.....நான்கு வழிச் சாலையால் பொருளாதாரம் சிதையும் - இது ஆப்ரிக்க அச்சம்


Recommended Posts

நான்கு வழிச் சாலையால் பொருளாதாரம் சிதையும் - இது ஆப்ரிக்க அச்சம்

கடந்த சில மணி நேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.

ஆப்ரிக்கா அச்சம்

ஆப்ரிக்கா அச்சம்

சீனா வழங்கும் கடன்களுக்கு ஆப்ரிக்க நாடுகள் இசைவு தெரிவித்து வரும் நிலையில், சீன கடன்களால் ஆப்ரிக்க நாடுகளின் பொருளாதாரம் சிதையும் என அஞ்சுகிறார்கள் நிபுணர்கள். உகாண்டா நாட்டு தலைநகரையும் இண்டெப் தர்வதேச விமான நிலையத்தையும் இணைக்கும் நான்கு வழிச்சாலை பணியை 476 மில்லியன் டாலர் மதிப்பில் சீன நிறுவனம் ஒன்று மேற்கொண்டது.

இதற்கு சீனா எக்ஸிம் வங்கி கடன் வழங்கியது. இந்த 51 கி.மீ சாலையால் இரண்டு மணி நேரம் வரை பயண நேரம் குறையும். ஆனால், கடன் பெற்று மேற்கொள்ளப்படும் இந்த உள்கட்டமைப்பு பணிகளால் ஆப்ரிக்க பொருளாதாரம் சிதையும் என அஞ்சுகிறார்கள் நிபுணர்கள்.

இது சீனா லாபமடைய மட்டுமே வழிவகுக்கும் என்பது அவர்கள் அச்சம். இந்த பகுதிகளில் 40 சதவீத குறைந்த வருமானம் உடைய நாடுகள் கடன் சிக்கலில் சிக்கி உள்ளதாக கூறுகிறது சர்வதேச நாணய நிதியம்.

Presentational grey line

'தீயில் கருகிய நூற்றாண்டுகால பொக்கிஷம்'

பிரேசில்படத்தின் காப்புரிமைREUTERS

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள இருநூறு ஆண்டுகால பழமையான தேசிய அருங்காட்சியகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அந்நாட்டின் பழமையான அறிவியல் நிலையமான இந்த அருங்காட்சியகயத்தில் 2 கோடிக்கு அதிகமான பொக்கிஷ பொருட்கள் உள்ளன. தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைக்க போராடி வருகின்றனர். யாருகேனும் காயமடைந்து இருக்கிறதா என்பதும் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

Presentational grey line

'இல்லை... எங்களை யாரும் தாக்கவில்லை'

சிரியா தாக்குதல்படத்தின் காப்புரிமைREUTERS

டமாஸ்கஸ் அருகே உள்ள சிரியா வான்படை தளத்தில் இஸ்ரேல் வான் தாக்குதல் எதுவும் நடத்தவில்லை என சிரியா கூறி உள்ளது. இஸ்ரேல் சிரிய வான்படை தளத்தை தாக்கியது என தகவல் பரவிய நிலையில், அந்த தகவலை சிரியா மறுத்துள்ளது. சிரிய ஆயுத கிடங்கில் மின்சார கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்துதான் குண்டு சத்தம் எழுந்ததற்கு காரணம் என்று சிரியா விளக்கி உள்ளது.

Presentational grey line

லிபியா: சிறையிலிருந்து 400 கைதிகள் தப்பியோட்டம்

லிபியாபடத்தின் காப்புரிமைREUTERS

லிபியாவின்  தலைநகரான  திரிபோலியில் போராளி குழுக்களுக்கு இடையே நடந்த மோதல்களால் இந்நகரின்  அருகே உள்ள ஒரு சிறைக்கூடத்தில் இருந்து கிட்டத்தட்ட கைதிகள் தப்பியோடியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அய்ன் ஜாரா என்ற அந்த சிறையின் கதவுகளை உடைத்து அவர்கள் வெளியேறியதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். தப்பியோடுபவர்களை தடுத்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சிய சிறைக்காவலர்களால், சிறையில் ஏற்பட்ட கலவரத்தையும் அதன்பின் நடந்த நிகழ்வையும் தடுக்க இயலவில்லை. 

Presentational grey line

இங்கிலாந்தின் சுழல் பந்துவீச்சில்  வீழ்ந்தது  இந்தியா 

இங்கிலாந்தின் சுழல் பந்துவீச்சில்  வீழ்ந்தது  இந்தியா படத்தின் காப்புரிமைREUTERS

சவுதாம்ப்டனில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த நான்காவது கிரிக்கெட் டெஸ்டில் 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, தொடரை 3-1 என கைப்பற்றியுள்ளது.

தனது  முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 246 ரன்களை குவிக்க, அதற்கு பதிலாக இந்தியா  273 ரன்களை எடுத்தது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 271 ரன்களை எடுத்தது. இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

வெற்றி இலக்கான 245 ரன்களை நோக்கி களத்தில்  இறங்கிய இந்தியா ஒருகட்டத்தில் 3 விக்கெட்டுகளுக்கு 22 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர் கோலி மற்றும் ரஹானே ஆகிய இருவரும் 100 ரன்களுக்கு மேல் ஜோடி சேர்த்தனர். ஆனால், கோலி ஆட்டமிழந்த பின்னர், இந்திய அணியால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இந்திய அணி 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழக்க போட்டியையும், தொடரையும் இங்கிலாந்து வென்றது

https://www.bbc.com/tamil/global-45392776

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.