Jump to content

ஐ.அமெரிக்க - துருக்கி முரண்பாட்டில் பாகிஸ்தானின் பங்கு


Recommended Posts

ஐ.அமெரிக்க - துருக்கி முரண்பாட்டில் பாகிஸ்தானின் பங்கு
 

-ஜனகன் முத்துக்குமார்

துருக்கிய அரசாங்கத்தால் குற்றஞ்சாட்டப்பட்ட ஐக்கிய அமெரிக்கப் போதகர் அன்ட்ரூ பிரன்சன் கைது செய்யப்பட்டதில் இருந்து எழுந்துள்ள அவநம்பிக்கையால், சமீபத்தில் துருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுவிழந்துள்ளதுடன், இது தொடர்பில் எதிர்த்தரப்பு நடவடிக்கைகளை, ஐ.அமெரிக்காவும் துருக்கியின் மீது மேற்கொண்டுள்ளது. அதன் பிரகாரம், ஐ.அமெரிக்கா, பொருளாதாரத் தடைகளை துருக்கி மீது சுமத்தியிருப்பதுடன், இரும்பு, அலுமினிய வர்த்தகங்களின் மீது அதிகரித்த தீர்வைகளை துருக்கி மீது ஐ.அமெரிக்கா சுமத்தியிருப்பது, துருக்கியின் பொருளாதாரத்தை வெகுவாகவே பாதித்துள்ளது. இதனால், துருக்கியின் பணமான லிரா, ஐ.அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், கணிசமான அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதுடன், இதனால் சர்வதேச வர்த்தகத்தில் துருக்கிக்காகக் கொடுக்கல் - வாங்கல் தொடர்பான சமநிலை மாறுபட்டிருப்பதுடன், அதிகரித்த மாற்று விகிதங்கள், பெருகிய கடன்கள் ஆகியவை, துருக்கியின் பொருளாதாரத்தை வெகுவாகவே பாதிக்கின்றன.

வரலாற்று ரீதியாக, துருக்கியும் ஐ.அமெரிக்காவும், நேட்டோ நட்பு நாடுகளாகும். பனிப்போருக்குப் பிந்திய காலப்பகுதியில் இருந்து இரு நாடுகளும், பாதுகாப்பு, இராஜதந்திர உறவு, அதன் அடிப்படையான நட்பை, நீண்டகாலமாக அனுபவித்திருக்கின்றன. இரு நாடுகளும் பல சர்வதேச பிரச்சினைகள் தொடர்பாகத் தீர்வுகள் காண்பதற்கு இணக்கமாக இருந்தன. குறிப்பாக, “பயங்கரவாதத்தின் மீதான போர்” அல்லது மத்திய கிழக்கில் உள்ள நிலைமை என்பது, ஐ.அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையிலேயே குறித்த பிராந்தியத்தில் சாத்தியமாயிற்று. ஆனால், ஐ.அமெரிக்க - துருக்கி உறவுகளில் ஏற்பட்ட பிளவு, பன்முகமானது.

குறிப்பாக, ஈராக்கில் குர்திஷ் அரசாங்கம் அமைவதை ஐ.அமெரிக்கா ஏற்றுக்கொண்டமையைத் தொடர்ந்து இப்பிளவு விருத்தியடைந்து. இந்நிலையைப் பொறுத்தவரை, யுத்தத்துக்குப் பின்னரான சிரியாவின் பூகோளவியலில் குர்திஷ் அமைப்பின் இருப்பை, ரஷ்யாவும் ஐ.அமெரிக்காவும் ஆதரிக்கின்றன. மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிரான போராட்டத்தில் குர்திஸ் குழுவின் முக்கிய பாத்திரத்தை, ஐ.அமெரிக்காவும் ரஷ்யாவும் அடிக்கடி வலியுறுத்துகின்றன. மறுபுறத்தில் துருக்கி, YPG குழுவை, சிரியாவின் அங்கமாகவே பார்க்கிறது. எனவே துருக்கி, பிராந்தியத்தில் உள்ள குர்திஸ் அமைப்பான YPG-ஐ, துருக்கியிலுள்ள PKK அமைப்பை ஒத்ததாகவே கருதுகின்றது. இது, துருக்கியின் உள்நாட்டு விவகாரங்களில் எவ்வாறு PKK குர்திஷ் மக்களுக்கு தனித்துவமானதோர் அடையாளத்துக்கான அழைப்பு விடுக்கின்றதோ, அதேபோன்று பிராந்தியத்தில் துருக்கிக்கு எதிரான ஒரு குர்தக்‌ஷ் தன்னாட்சி அரசு அமைவதற்கு, YPG வழிவகுத்துவிடும் என கருதுகின்றது. இருந்தபோதிலும், மொஸ்கோவும் வொஷிங்டனும், YPG-ஐ பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட மறுத்துவிட்டன என்பது, ஐ.அமெரிக்காவுக்கு எதிராகத் துருக்கி செயற்படக் காரணமாயிற்று.

இரண்டாவதாக, ட்ரம்ப்பின் அரசாங்கம், நேட்டோ உடன்படிக்கையைப் பொறுத்தவரை, மத்திய கிழக்கின் பாதுகாப்புச் செலவீனங்களை ஐ.அமெரிக்கா, ஐரோப்பா ஏற்காது என அறிவித்ததிலும் இருந்து ஆரம்பமாயிற்று. மேலும் இது தொடர்பில் துருக்கி தனிமைப்படுத்த
ப்பட்டமை, சிரிய, ஈரானிய அரசாங்கங்களின் எதிர்ப்பை துருக்கி சந்திக்கையில், ஐ.அமெரிக்கா துருக்கி சார்பாக நிற்காமை ஆகியன, இப்பிளவை மேலும் விரிவுபடுத்தின.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை, துருக்கியுடனான ஒற்றுமையை காண்பிப்பதற்கான நேரம் இதுவாகும். கடந்த காலத்தில், துருக்கி, எப்போதும் பிராந்திய மற்றும் உலக விவகாரங்களில் பாகிஸ்தானை ஆதரித்துள்ளது. காஷ்மிர் பிரச்சினை, ஆப்கானிஸ்தான் நெருக்கடி போன்ற பல விடயங்களில், இரு தரப்பினருக்கும் இராஜதந்திர உறவைப் பலப்படுத்தியதுடன், பாதுகாப்பு சார்பான விடயங்களைப் பகிரப்படுவதில் இரு தரப்பினரும் நீண்டகால உறவைப் பேணியிருந்தனர். மேலும், இரு நாடுகளும் ஆழ்ந்த வேரூன்றிய கலாசார, மத கொள்கைகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்பது ஒரு புறமிருக்க, இவ்விரு நாடுகளும், பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு (ECO) அங்கத்தவர்களாகவும், இராணுவ ரீதியாக, இரு நாடுகளும், தொடர்ச்சியாகவே கூட்டுப் பயிற்சிகள், பகிரப்படும் தொழில்நுட்பம், ஆயுத உபகரணங்கள், துருப்புகளின் பயிற்சி ஆகியவற்றில் இணைந்து பணியாற்றுகின்ற
மையானது, பாகிஸ்தானைப் பொறுத்தவரை, அதனை ஆதரிக்கும் ஒரே ஒரு முஸ்லிம் நேட்டோ நாடாக துருக்கி அமைவதென்பது, மிகைப்படுத்தப்பட்டதாக இருக்க முடியாது.

பாகிஸ்தானின் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பிரதமர் இம்ரான் கான், வெளிப்படையாக ஐ.அமெரிக்காவின் தற்காலிக இராஜதந்திர அழுத்தத்துக்கு மத்தியில், துருக்கிக்கான ஆதரவை உறுதிசெய்துள்ளமை, இதன் பிரகாரமே ஆகும். அதன் அடிப்படையில், பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம், உத்தியோகபூர்வமாக துருக்கியைக் கண்டிக்கும், அதன் உள்விவகாரங்களில் தலையிடும் ஐ.அமெரிக்கக் கொள்கையை நேரடியாகவே கண்டனம் செய்துள்ளது. எது எவ்வாறிருந்த போதிலும், துருக்கிக்கு தார்மீக ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் ஆதரவு தரக்கூடிய பாகிஸ்தான், எந்த அளவுக்குப் பொருளாதார ரீதியாக உதவ முடியும் என்பது சந்தேகமே.

மறுபுறத்தில், ஆப்கானிஸ்தானின் ஸ்திரத்தன்மை, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானின் பங்கைப் பற்றிய சந்தேகங்கள் அடிப்படையில், பாகிஸ்தான் - ஐ.அமெரிக்க உறவுகளும் நல்ல நிலையில் அமையவில்லை. ஆயினும், தெற்காசியாவின் பூகோள மூலோபாய சூழலைக் கருத்திற்கொண்டு, பாகிஸ்தான் திறமையான நடவடிக்கையொன்றை மேற்கொள்ள
வேண்டுமாயின், அது ஐ.அமெரிக்காவுடனான உறவை முறித்துக்கொள்ளாது என்பது ஒரு புறமிருக்க, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சின் தற்போதைய கண்டனமானது, பாகிஸ்தான் தனது நாட்டின் இறையாண்மை, தேசிய மதிப்பீடு ஆகியவற்றைப் பாதுகாக்கவும், தனது ஒவ்வொரு மாநிலத்தின் உள்ளார்ந்த இறைமையை ஐ.அமெரிக்கா போன்ற மேற்கத்தேய நாடுகளின் “பயங்கரவாதத்துக்கு எதிரான போரில்” இழக்க விரும்பாத நிலையாகும் என்பதுடன், துருக்கியின் ஆதரவுடன் ரஷ்யாவும் சீனாவும் முன்னோக்கி வந்துள்ளன என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே, பாகிஸ்தான் இந்த முரண்பாட்டில் தனக்காக எந்தவோர் உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆயினும், இந்நிலை எவ்வளவு காலத்துக்கு செல்லுபடியாகும் என்பது கேள்விக்குறியே. இந்நிலையிலேயே, பாகிஸ்தான் அரசாங்கம் அண்மையில் துருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான முரண்பாட்டை, தான் ஒரு நடுநிலைமையாளர் என்ற நிலையில் இருந்து தீர்க்க முன்வந்தமை பார்க்கப்பட வேண்டியதாகும். இருந்தபோதிலும், இப்பேச்சுவார்த்தைக் கதிரைக்கு இரு நாடுகளும் வர விரும்புகின்றனவா என்பதே இப்போதைய கேள்வியாகும்.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஐ-அமெரிக்க-துருக்கி-முரண்பாட்டில்-பாகிஸ்தானின்-பங்கு/91-221136

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.