Jump to content

சுவா­மியின் ஆட்டம் பலிக்­குமா?


Recommended Posts

சுவா­மியின் ஆட்டம் பலிக்­குமா?

SAMAKALAM010918-PG01-R1Page1Image0009-3cb11393ec1a48828886bd3582aa7851acc87e42.jpg

 

இந்­தி­யாவை ஆட்சி செய்யும் பார­தீய ஜனதா கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக உள்ள சுப்­ர­ம­ணியன் சுவா­மியின் அழைப்பின் பேரில், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ வரும் 11ஆம் திகதி புது­டெல்­லிக்குப் பயணம் மேற்­கொள்­ள­வுள்ளார்.

சுப்­ர­ம­ணியன் சுவா­மியைத் தலை­வ­ராக கொண்ட விராட் ஹிந்­துஸ்தான் சங்கம் என்ற அமைப்­பினால் புது­டெல்­லியில் வரும் செப்­டெம்பர் 12ஆம் திகதி ஒரு கருத்­த­ரங்கு ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளது.

அந்தக் கருத்­த­ரங்கில் சிறப்புப் பேச்­சா­ள­ராக மஹிந்த ராஜபக் ஷ கலந்து கொள்­ள­வி­ருக்­கிறார். இந்தப் பய­ணத்தின் போது, மஹிந்த ராஜபக் ஷ புது­டெல்­லியில் மூன்று நாட்கள் தங்­கி­யி­ருக்கப் போவ­தாக அவ­ரது ஊடகப் பிரிவு அறி­வித்­துள்­ளது,

அதா­வது, செப்­டெம்பர் 13ஆம் திகதி வரை அவர் புது­டெல்­லியில் இருப்பார் என்­பது உறு­தி­யா­கி­யி­ருக்­கி­றது.

2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8ஆம் திகதி நடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷ தோல்­வியைத் தழு­விய பின்னர், முதல்­மு­றை­யாக புது­டெல்­லிக்குச் செல்லப் போகிறார்.

2014 ஆம் ஆண்டு மே மாதம், இந்­தியப் பிர­த­ம­ராக நரேந்­திர மோடி பத­வி­யேற்ற நிகழ்வு தான், மஹிந்த ராஜபக் ஷ கடை­சி­யாக புது­டெல்­லிக்குச் சென்ற சந்­தர்ப்­ப­மாகும். கிட்­டத்­தட்ட நான்கு ஆண்­டு­க­ளாக அவர் புது­டெல்லிப் பக்கம் தலை­காட்­ட­வே­யில்லை.

ஆர்­எஸ்எஸ் நடத்­திய பௌத்த மாநாடு ஒன்றில் பங்­கேற்க மஹிந்த ராஜபக் ஷ மும்­பைக்குச் சென்­றி­ருந்தார். திருப்­ப­திக்கு வழி­பாடு நடத்­தவும் அடிக்­கடி சென்று வந்தார். திருப்­பதி செல்லும் வழி­யாக பெங்­க­ளூ­ரையும் பயன்­ப­டுத்திக் கொண்டார்.

ஆனால், புது­டெல்­லியை மாத்­திரம் அவர் எட்­டியும் பார்க்­க­வில்லை.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு, மூன்று மாதங்­களில் முதல் முறை­யா­கவும், 2016 ஆம் ஆண்டு இரண்­டா­வது முறை­யா­கவும் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி கொழும்­புக்கு வந்­தி­ருந்த போது, மஹிந்த ராஜபக் ஷ வையும் சந்­தித்­தி­ருந்தார்.

அப்­போது, மஹிந்த ராஜபக் ஷ வை புது­டெல்­லிக்கு வரு­மாறு அழைப்பு விடுத்­தி­ருந்தார் நரேந்­திர மோடி. அந்த அழைப்பை ஏற்­றுக்­கொண்டு அவர் இது­வ­ரையில் புது­டெல்­லிக்குப் பய­ணத்தை மேற்­கொள்­ள­வில்லை.

ஆனால், நரேந்­திர மோடியின் கட்­சியில் இடம்­பெற்­றுள்ள ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சுப்­ர­ம­ணியன் சுவா­மியின் அழைப்பை ஏற்றுக் கொண்டு, இப்­போது புது­டெல்­லிக்குப் பயணம் மேற்­கொள்ள இணங்­கி­யி­ருக்­கிறார்.

மஹிந்த ராஜபக் ஷவுக்கும் சுப்­ர­ம­ணியன் சுவா­மிக்கும் இடையில் உள்ள உற­வுகள் அனை­வரும் அறிந்­தது தான். விடு­தலைப் புலிகள் என்­றாலோ சுப்­ர­ம­ணியன் சுவா­மிக்கு கடும் எரிச்சல். எப்­போதும் விடு­தலைப் புலி­களை எதிர்த்து வந்­த­வ­ரான சுவா­மியை, விடு­தலைப் புலி­களை அழிக்கும் இலக்­குடன் செயற்­பட்ட மஹிந்த ராஜபக் ஷவுக்கு பிடித்துப் போனதில் ஒன்றும் ஆச்­ச­ரியம் இல்லை.

விடு­தலைப் புலிகள் இருந்த காலத்­திலும் சரி, அதற்குப் பின்­னரும் சரி, மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் இருந்த காலத்தில், சுப்­ர­ம­ணியன் சுவா­மிக்கு கொழும்பில் இரா­ஜ­ம­ரி­யாதை தான் கிடைத்து வந்­தது.

இரா­ணுவம் நடத்­திய பாது­காப்புக் கருத்­த­ரங்­கு­க­ளிலும், வேறு பல நிகழ்­வு­க­ளிலும் அவர் ராஜபக் ஷவி­னரின் சிறப்பு அழைப்­பா­ள­ராக பங்­கேற்று வந்தார்.

மஹிந்த ராஜபக் ஷ அதி­கா­ரத்தை இழந்த பின்­னரும் சுவா­மிக்கும் அவ­ருக்கும் நல்ல தொடர்பு இருந்தே வந்­தது. அதன் தொடர்ச்­சி­யாகத் தான் இப்­போது மஹிந்­தவை புது­டெல்­லிக்கு அழைத்­தி­ருக்­கிறார் சுப்­ர­ம­ணியன் சுவாமி.

அது­மாத்­தி­ர­மன்றி, இந்­தி­யாவில் சாத­னை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும் அதி உயர் விரு­தான பாரத ரத்னா விரு­தையும் அவ­ருக்கு வழங்க வேண்டும் என்றும் கூறி­யி­ருக்­கிறார்.

மஹிந்த ராஜபக் ஷவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சுப்­ர­ம­ணியன் சுவாமி கோரு­வது இது தான் முதல் முறை­யன்று. விடு­தலைப் புலி­களை அழித்­த­மைக்­காக, அவ­ருக்கு இந்த விருது வழங்­கப்­பட வேண்டும் என்ற கருத்தை சுவாமி ஏற்­க­னவே முன்­வைத்­தி­ருந்தார்.

நெல்சன் மண்­டே­லா­வுக்கு பாரத ரத்னா விருது வழங்­கி­யது போல மஹிந்­த­வுக்கும் வழங்க வேண்டும் என்று இப்­போது அவர், நியா­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

மஹிந்த ராஜபக் ஷவின் மீதான அவ­ரது அன்பின் வெளிப்­பா­டா­கவோ, நட்பின் வெளிப்­பா­டா­கவோ இதனைப் பார்க்கக் கூடி­ய­தன்று.

அதற்கும் அப்பால், மஹிந்த ராஜபக் ஷவைப் பற்­றிய ஒரு சாத­க­மான (positive) அலையை புது­டெல்­லியில் பரவ விடும் தந்­தி­ரமும் கூட.

இன்னும் கிட்­டத்­தட்ட 15 மாதங்­களில் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலை இலங்கை சந்­திக்கப் போகின்ற சூழலில் தான், மஹிந்­த­வுக்­கான புதி­ய­தொரு கதவைத் திறந்து விட்­டி­ருக்­கிறார் சுப்­ர­ம­ணியன் சுவாமி.

வெறு­மனே ஒரு கருத்­த­ரங்கில் உரை­யாற்­று­வ­தற்­காக மஹிந்­தவை அவர் புது­டெல்­லிக்கு அழைத்­தி­ருக்­கிறார் என்­பது மிகை­யான கற்­பனை.

கருத்­த­ரங்கில் உரை­யாற்­று­வ­தற்­காக மாத்­தி­ரமே வரு­வ­தென்றால், அந்தப் பயணம் மூன்று நாட்கள் புது­டெல்­லியில் தங்­கி­யி­ருக்கும் வகையில் திட்­ட­மி­டப்­பட்­டி­ருக்க வேண்­டி­ய­தில்லை.

அதற்கும் அப்பால் சில அர­சியல் சந்­திப்­பு­களை ஒழுங்கு செய்யும் முயற்­சி­யாக சுப்­ர­ம­ணியன் சுவாமி இந்த நிகழ்வை ஏற்­பாடு செய்­தி­ருக்­கிறார் என்­பதே பர­வ­லான கருத்­தாக உள்­ளது.  

புது­டெல்­லி­யுடன் மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஒரு சுமு­க­மான உறவு இல்லை.அந்த உறவை மீள­மைப்­பது, சுப்­ர­ம­ணியன் சுவா­மிக்கு கொடுக்­கப்­பட்­டி­ருக்­கின்ற வேலை­யா­கவும் இருக்­கலாம். அந்த வேலையை யார் கொடுத்­தது என்ற கேள்­விக்கு இப்­போது விடை­யில்லை. 

சுப்­ர­ம­ணியன் சுவாமி அண்­மையில் இலங்கை வந்­தி­ருந்த போது, மஹிந்­தவைப் போலவே, அதி­கா­ரத்தை இழந்து நிற்கும் மாலை­தீவின் முன்னாள் ஜனா­தி­பதி நசீ­மையும் கொழும்பில் சந்­தித்­தி­ருந்தார்.

அப்­போது, அவர் மாலை­தீவில் வரும் 23ஆம் திகதி நடக்­க­வுள்ள தேர்­தலில் குழப்­பங்கள் நிகழ்ந்தால் இந்­தியா தலை­யீடு செய்யும் என்று கூறி­யி­ருந்தார்.

உட­ன­டி­யா­கவே, “அது இந்­திய அரசின் கருத்து அல்ல, சுவா­மியின் தனிப்­பட்ட கருத்தே” என்று இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சின் பேச்­சாளர் ரவீஷ் குமார் அந்தக் கருத்தை மறுத்­தி­ருந்தார்.

சுவா­மியின் இந்தக் கருத்து, மாலை­தீவு அர­சுக்கு கோபத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன், இந்­தியத் தூது­வரை அழைத்துக் கண்­ட­னமும் தெரி­வித்­துள்­ளது.

மாலை­தீவு விவ­கா­ரத்தில் மூக்கை நுழைத்து வாங்கிக் கட்டிக் கொண்ட சுப்­ர­ம­ணியன் சுவா­மியின் அழைப்பின் பேரில் தான் மஹிந்த ராஜபக் ஷ புது­டெல்­லிக்கு செல்­ல­வுள்ளார். மாலை­தீவு விடயம் போலவே, மஹிந்த விவ­கா­ரத்­தையும் தன்­னிச்­சை­யாக கையாள எத்­த­னிக்­கிறார் போலும்.

எது எவ்­வா­றா­யினும், மஹிந்த ராஜபக் ஷவின் சீன சார்பு நிலையே, 2015 ஜனா­தி­பதி தேர்­தலில் அவர் தோற்­க­டிக்­கப்­ப­டு­வ­தற்­கான சூழல் உரு­வா­கி­ய­தற்கும் முக்­கிய கார­ணி­யாக இருந்­தது.

மஹிந்த ராஜபக் ஷ தோற்­க­டிக்­கப்­பட்ட பின்னர், தி ஹிந்து நாளி­த­ழுக்கு அளித்­தி­ருந்த முத­லா­வது பேட்­டி­யி­லேயே, இந்­தியா மற்றும் அமெ­ரிக்க புல­னாய்வு அமைப்­பு­களை குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார்.

நரேந்­திர மோடி அர­சாங்­கத்தை அவர் நேர­டி­யாக குற்­றம்­சாட்­டா­வி­டினும், இந்­தியப் புல­னாய்வு அமைப்­பான, றோவின் மீது அவர் தனது கோபத்தை வெளிப்­ப­டுத்­தினார். அவர் மாத்­தி­ர­மன்றி, பசில் ராஜபக் ஷ, கோத்­தா­பய ராஜபக் ஷ ஆகி­யோரும் கூட, மஹிந்­தவின் தோல்­விக்கு இந்­தியப் புல­னாய்­வுத்­துறை தான் காரணம் என்று கூறி­யி­ருந்­தனர்.

மஹிந்த ராஜபக் ஷ சீனா­வுடன் கொண்­டி­ருந்த நெருக்கம், இந்­தி­யா­வுக்கு அச்­சத்தைக் கொடுத்­தது. அவர் தொடர்ந்து ஆட்­சியில் இருப்­பது இந்­தி­யாவின் நலன்­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தி விடும் என்று யோசித்­தது.

அதன் விளைவு தான், அவ­ரது ஆட்­சியைக் கவிழ்ப்­ப­தற்­கான ஒரு அணியைத் தயார்­ப­டுத்­து­வ­தற்­கான ஊக்­கத்­தையும் கொடுத்­தி­ருந்­தது.

இப்­படி தனது ஆட்­சியைக் கவிழ்த்த இந்­தி­யாவின் தலை­ந­க­ரத்­துக்கு இது­வரை எட்டிக் கூடப் பார்க்­காத மஹிந்த ராஜபக் ஷ, கருத்­த­ரங்கில் உரை­யாற்­று­வ­தற்­காக வரப் போகிறார் என்­றதும், அதற்குப் பின்னால் இருக்கக் கூடிய அர­சியல் தான் எல்­லோ­ராலும் ஆரா­யப்­ப­டு­கி­றது.

இந்தச் சூழலில், மகிந்­தவின் தயவு இந்­தி­யா­வுக்குத் தேவைப்­ப­டு­கி­றதா- அல்­லது இந்­தி­யாவின் தயவு மகிந்­த­வுக்குத் தேவைப்­ப­டு­கி­றதா என்­பதே அந்த ஆய்­வு­களின் அடிப்­படை.

அதுவும் மஹிந்­தவே மீண்டும் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டுவார் என்றும், இல்­லை­யில்லை அவ­ரது சகோ­த­ரர்­களில் ஒரு­வ­ரையே போட்­டியில் நிறுத்­துவார் என்றும், ஒரு ட்ம்மியையே போட்­டியில் நிறுத்­துவார் என்றும் பர­வ­லாகப் பேசப்­ப­டு­கின்ற சூழலில் தான் அவ­ரது புது­டெல்லிப் பயணம் திட்­ட­மி­டப்­பட்­டி­ருக்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் இல்­லா­விட்­டாலும், இலங்­கையில் சீனாவின் தலை­யீ­டுகள் தவிர்க்க முடி­யாத அல்­லது தடுக்க முடி­யா­த­ள­வுக்கு வளர்ந்து விட்­டது. மஹிந்­த­வுக்குப் பதி­லாக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆட்­சியில் அமர்த்­து­வதில் வெற்­றியைக் கண்­டி­ருந்­தாலும், அவ­ரது அர­சாங்கம் சீனாவை உதறித் தள்ளி விட்டுச் செயற்­படத் தயா­ராக இல்லை.

இலங்­கையில் சீனாவின் தலை­யீ­டுகள் இந்­தி­யா­வுக்குப் பிடிக்­கா­விட்­டாலும், ஓர­ள­வுக்கு அதனை பொறுத்துக் கொள்ள வேண்­டிய நிலையே காணப்­ப­டு­கி­றது.

ஆனாலும், கொழும்பை ஆட்­டு­விப்­பதில், தான் நினைத்­ததை நடத்தி வைப்­பதில், இன்­னமும் புது­டெல்­லியின் கடி­வாளம் கழன்று போக­வில்லை.

சீன சார்­பா­ள­ரான மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வந்தால், அவர் எப்­படி நடந்து கொள்வார் என்ற சிக்கல் உள்­ளது. அவ­ரது கடந்த காலத்தை வைத்து மதிப்­பீடு செய்தால், அது இந்­தி­யா­வுக்கு சாத­க­மா­ன­தல்ல.

அவ­ரிடம் மாற்றம் நிகழும் என்று எதிர்­பார்த்­தாலும் கூட, அது இந்­தி­யா­வுக்கு சாத­க­மா­ன­தாக இருக்கும் என்று கரு­து­வ­தற்­கில்லை. எனவே, மஹிந்­தவை வைத்து இந்­தியா எதையும் சாதிக்க முனை­வ­தற்கு சாத்­தி­யங்கள் குறைவு.

ஆனால், உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் வெளிப்­பட்­டுள்ள மஹிந்­தவின் பலம், இந்த விட­யத்தில் இந்­தியா முன்­யோ­ச­னை­யான சில முடி­வு­களை எடுப்­ப­தற்கு வழி வகுத்தால் அது ஆச்­ச­ரி­ய­மல்ல.

அதே­வேளை, மஹிந்­தவைப் பொறுத்­த­வ­ரையில் இந்­தி­யாவின் தயவு அவருக்குத் தேவைப்படுகிறது. மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கு அவர் இந்தியாவைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் புதுடெல்லியுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவருடைய முதன்மையான தேவையாக இருக்கிறது.

புதுடெல்லியில் மஹிந்த தங்கியிருக்கப் போகும் மூன்று நாட்களும், முக்கியமானவை. அந்தக் காலப்பகுதியில், மஹிந்த நடத்தப் போகும் சந்திப்புகள், வெளிப்படுத்தப் போகும், சமிக்ஞைகள் கூறப் போகும் கருத்துக்கள் எல்லாமே உன்னிப்பாக பார்க்கப்படும்.

ஏனென்றால், அது, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்பதை முடிவு செய்வதில் தீர்க்கமான பங்கை வகிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ஆனாலும், அதற்கும் அப்பால், 2019 ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் எதிர்பார்க்கப்படும் இந்திய பாராளுமன்றத் தேர்தலில் அமையப் போகும் அடுத்த அரசாங்கத்தின் கொள்கையையும் இந்தக் கட்டத்தில் யாரும் சாதாரணமாக எடைபோட்டு விட முடியாது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-02#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.