Jump to content

தமிழர்களின் ஐக்கியத்தை வலியுறுத்திய முல்லைத்தீவு நிலமீட்புப் போராட்டம்


Recommended Posts

தமிழர்களின் ஐக்கியத்தை வலியுறுத்திய முல்லைத்தீவு நிலமீட்புப் போராட்டம்

 

 

 
keppapilavu-demo-160317-seithy-1-780x405
 
 

மூல்லைத்­தீவு மாவட்­டத்­தில் இடம்­பெ­று­கின்ற நில அப­க­ரிப்பு மற்­றும் சிங்­க­ளக் குடியேற்றங்களை எதிர்த்து ஆயிரக்கணக்­கான தமிழ் மக்­கள் கட்சி பேத­மின்றி ஒன்று கூடித் தமது எதிர்ப்­பைத் தெரி­வித்­துள்­ள­னர். முல்­லைத்­தீ­வில் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் இடம்­பெ­றா­தென அர­ச­த­லை­வர் தெரி­வித்­துள்ள நிலை­யி­லும், இந்­தப் போராட்­டம் நடந்து முடிந்­துள்­ளது.

தெற்­கின் பல பிர­தே­சங்­கள் மகா­வலி கங்­கை­யின் நீரால் செழிப்­பு­டன் காணப்­ப­டு­கின்­றன. ஆண்டு தோறும் நீர் கிடைப்­ப­தால் மூன்­று­போக நெற்­செய்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. இத­னால் விவ­சா­யி­கள் அதிக வரு­மா­னத்தை ஈட்­டிக்­கொள்­கின்ற னர். அநு­ரா­த­புர மாவட்­டத்­தின் வறட்­சி­யான பகு­தி­கள் பச்­சைப் பசே­லெ­னக் காணப்­ப­டு­வ­தற்கு மகா­வலி நீரே கார­ண­மா­கும்.

ஆனால் அநு­ரா­த­பு­ரம்­வரை வந்த மகா­வலி நீரி­னால் அதற்கு அப்­பா­லுள்ள வட­ப­கு­தியை எட்­டிப் பார்க்க முடி­ய­வில்லை. இதற்­கும் இன­வா­தத்­தைத்­தான் கார­ண­மா­கக் கூற முடி­யும். ஆனால் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தி­லுள்ள தமிழ் மக்­க­ளின் காணி­களை அப­க­ரித்து சிங்­க­ளக் குடி­யேற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தில் மகா­வலி அபி­வி­ருத்­திச்­சபை முனைப்­பு­டன் செயற்­ப­டு­வதை எவ­ரால்­தான் பொறுத்­துக் கொள்ள முடி­யும்?

முல்­லைத்­தீ­வில் சிங்­க­ள­வர்­கள் குடி­யே­றப்­ப­ட­வில்லை என்­கி­றார் அரச தலை­வர்

முல்­லைத்­தீ­வில் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் கிடை­யா­தென அர­ச­த­லை­வர் அடித்­துக் கூறு­கி­றார். ஆனால் அவ­ரை­யும் மீறி, அவ­ருக்­குத் தெரி­யா­மல் அதி­கா­ரி­க­ளின் அனு­ச­ர­ணை­யு­டன் இந்­தக் குடி­யேற்­றங்­கள் இடம்­பெ­று­கின்­ற­னவா? என்ற சந்­தே­க­மும் கூடவே எழு­கின்­றது.

நாட்­டின் பெரும்­பான்­மை­யின மக்­கள் வாழ்­கின்ற பிர­தே­சங்­க­ளில் ஏரா­ள­மான நிலங்­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டாத நிலை­யில் உள்­ள­போது தமி­ழர் பிர­தே­சங்­க­ளைக் குறி­வைத்து சிங்­கள மக்­க­ளைக் குடி­யேற்­று­வ­தற்கு ஏதே­வொரு உள்­நோக்­கம் இருக்­கத்­தான் வேண்­டும்.

தமிழ் மக்­க­ளின் முக்­கிய தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை, சேனா­தி­ராசா கூறிய கருத்­துக்­கள் இன்­றைய நிலை­யில் முக்­கி­யத்­து­வம் பெறு­கின்­றன. சுமார் 40ஆயி­ரம் சிங்­க­ளக் குடும்­பங்­க­ளைக் குடி­யேற்­று­வ­து­தான் மகா­வ­லித் திட்­டத்­தின் முதன்மை நோக்­க­மெ­ன­வும், இதற்­கான சான்­று­கள் தம்­மி­டம் உள்­ள­தா­க­வும் அவர் தெரி­வித்­துள்­ளார். அவர் கூறிய குறித்த தக­வல் உண்­மை­யென்­றால், சிங்­க­ளக் குடி­ யேற்­றங்­க­ளால் ஏற்­ப­டக்­கூ­டிய விளை­வு­கள் மிகப்­பா­ர­தூ­ர­ மா­ன­வை­யா­கவே அமைந்­து­வி­டப் போகின்­றன.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் வாழ்­கின்ற தமிழ் மக்­க­ளின் இருப்பு கேள்­விக் குறி­யாக மாறி­வி­டப்­போ­கின்­றது. அர­ச­த­லை­வர் முல்­லைத்­தீவில் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் இடம்­பெ­றா­தெ­னக் கூறு­வ­தால் எவ்­வித பய­னும் ஏற்­பட்­டு­வி­டாது. அவர் தமது அதி­கா­ரங்­களை முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்தி இதனை முற்­றா­கத் தடுப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும். அப்­போ­து­தான் அர­ச­த­லை­வ­ரின் உறு­தி­மொ­ழி­கள்­மீது தமிழ்­மக்­கள் நம்­பிக்கை வைக்க முடி­யும்.

திட்­ட­மிட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றம் கார­ண­மா­கவே மண­லாறு பறிக்­கப்­பட்டு
வெலி­ஓ­யா­வாக ஆக்­கப்­பட்­டுள்ளது

ஏற்­க­னவே மண­லாற்­றில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றம் தமி­ழர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் பெரும் தலை­வ­லி­யா­கவே அமைந்­து­விட்­டது. முல்­லைத்­தீ­வி­லி­ருந்து கிழக்கு மாகா­ணத்­துக்­குச் செல்­வ­தா­யின் இந்­தக் குடி­யேற்­றத்தை கடந்தே செல்ல வேண்­டி­யுள்­ளது. அசா­த­ர­ண­மான சூழ்­நிலை ஏற்­ப­டும்­போது இந்­தப் பய­ணம் பாது­காப்­பாக இருக்­காது.

இத­னால் பல மைல்­கள் சுற்­றுப்­பா­தை ­யில் பய­ணிக்க வேண்­டிய அவ­லத்­தை­யும் தமி­ழர்­கள் எதிர்­கொள்­ள­வேண்­டிய நிலை உரு­வா­கி­வி­டும். இந்த நிலை­யில் வடக்­கை­யும் கிழக்­கை­யும் இணைக்­கும் பகு­தி­க­ளில் மண­லாறு, வெலி­ஓயா ஆக்­கப்­பட்­டமை போன்று பெரு­ம­ள­வில் சிங்­க­ளக் குடி­ யேற்­றங்­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டால் வடக்­கும், கிழக்­கும் நிரந்­த­ர­மா­கவே பிரிக்­கப்­பட்­டு­வி­டும்.

திட்­ட­மிட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றம் வடக்­கின் இனப்­ப­ரம்­பலை முற்­றா­கவே சீர­ழித்து விடு­மென்­ப­தைக் கூறத்­தே­வை­யில்லை. கிழக்­கைப் போன்று வடக்­கி­லும் தமி­ழர்­கள் தமது பெரும்­பான்மை பலத்தை இழந்து விடு­வார்­கள். அது மட்­டு­மல்­லாது கிழக்கு மாகா­ண­ச­பையை இழந்­த­து­போல வடக்­கி­லும் இடம்­பெற்­று­வி­ட­லாம்.

இந்த நாட்­டில் இன­வா­தம் தலை­வி­ரித்­தா­டு­வதை முல்­லைத்­தீ­வில் இடம்­பெ­று­கின்ற தமி­ழர் விரோத சம்­ப­வங்­கள் உறுதி செய்­கின்­றன. இன­வா­தத்­தைக் கைவிட்­டால் அர­சி­ய­லில் இடம்­கி­டைக்­காது என்­ற­தொரு நிலை இருக்­கும்­வ­ரை­யில் சிறு­பான்­மை­யி­ னத்­த­வர்­கள் இங்கு நிம்­ம­தி­யாக வாழவே முடி­யாது.

முல்­லைத்­தீவு நில மீட்­புப் போராட்­டம் தமி­ழர் தரப்­புக்­க­ளது  ஒற்­று­மைக்கு கட்­டி­யம் கூறி­யுள்­ளது

முல்­லைத்­தீ­வில் இடம்­பெற்ற நில­மீட்­புக்­கான போராட்­டம் தமி­ழர்­கள் ஒரே அணி­யில் திரண்டு தமது உரி­மைக்­கா­கப் போராட வேண்­டி­ய­தன் அவ­சி­யத்தை உணர்த்­தி­யுள்­ளது. ஆளுக்­கொரு அணி, ஆளுக்­கொரு கொள்கை என்று தமி­ழர்­கள் பிரிந்து காணப்­ப­டு­வ­தால் அவர்­க­ளுக்­கெ­தி­ரான திட்­டங்­களை முன்­னெ­டுப்­பது இன­வா­தி­க­ளுக்கு இல­கு­வாக ஆகி­விட்­டது.

மிக­வும் மோச­மான கட்­டத்­தைக் கடந்து கொண்­டி­ருக்­கும் தமி­ழர்­கள், தமக்­குள் நில­வு­கின்ற வேற்­று­மை­க­ளைக் களைந்து ஒரே­ய­ணி­யில் திரண்டு தமது பொது எதி­ரிக்கு எதி­ரா­கப் போராட வேண்­டும். முல்­லைத்­தீ­வுப் போராட்­டத்தை இதற்­கொரு உதா­ர­ண­மாக அவர்­கள் எடுத்­துக்­கொள்ள வேண்­டும். இதை­வி­டுத்து அவர்­கள் தமக்­குள் பகை­மையை வளர்த்து பல அணி­க­ளா­கச் சித­றிக் காணப்­பட்­டால் மோச­மான எதிர் விளை­வு­களை அவர்­கள் எதிர்­கொண்­டே­யாக வேண்­டும்.

முல்­லைத்­தீ­வில் இடம்­பெற்ற போராட்­டம் ஓர் ஆரம்­பமே என்­ப­தை­யும் நாம் மன­தில் கொள்ள வேண்­டும். தமது உரி­மை­கள் பறிக்­கப்­ப­டும்­போ­தெல்­லாம் தள­ராது ஒன்று திரண்டு எதிர்­கா­லத்­தி­லும் போரா­ட­வேண்­டி­யி­ருக்­கும் என்­ப­தை­யும் தமி­ழர்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும்.

https://newuthayan.com/story/14/தமிழர்களின்-ஐக்கியத்தை-வலியுறுத்திய-முல்லைத்தீவு-நிலமீட்புப்-போராட்டம்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.