Jump to content

60 வயது மாநிறம் திரை விமர்சனம்


Recommended Posts

60 வயது மாநிறம் திரை விமர்சனம்

 

60 வயது மாநிறம் திரை விமர்சனம்
 
 

தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர் ராதாமோகன். ஆனால், சமீபமாக இவர் ஒரு ஹிட் கொடுத்து ரீஎண்ட்ரி ஆக மிகவும் முயற்சி செய்து வருகின்றார். இப்படி ஒரு நிலைமையில் தான் சில வருடங்களாக விக்ரம் பிரபுவும் உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள படமே 60 வயது மாநிறம், இவர்கள் இருவருக்கும் அந்த வெற்றி கிடைத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

விக்ரம் பிரபு தன் அப்பா பிரகாஷ்ராஜை பார்க்க மும்பையில் இருந்து சென்னை வருகின்றார். பிரகாஷ்ராஜுக்கு தன்னையே யார் என்று தெரியாத அளவிற்கு மறதி உள்ளது.

அதை தொடர்ந்து ஹோமில் இருக்கும் தன் அப்பாவை துணி எடுக்க அழைத்து செல்கின்றார் விக்ரம் பிரபு. அப்போது தன் கவனக்குறைவால் அப்பாவை ஹோம் வாசலிலே மிஸ் செய்கின்றார்.

பிறகு தன் அப்பாவை தேடி தெரு தெருவாக விக்ரம் பிரபு அலைய, ஒரு போலிஸை கொலை செய்துவிட்டு வரும் சமுத்திகனியிடம் பிரகாஷ்ராஜ் சிக்குகின்றார். சமுத்திரக்கனிக்கு எவிடன்ஸ் ஏதும் இருக்க கூடாது அதனால் பிரகாஷ்ராஜை கொலை செய் என பாஸிடம் இருந்து ஆர்டர் வருகின்றது.

இதை தொடர்ந்து விக்ரம் பிரபு தன் அப்பாவை கண்டுபிடித்தாரா, சமுத்திரக்கனி பிரகாஷ்ராஜை என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விக்ரபு பிரபு நீண்ட வருடங்களாக ஒரு ஹிட் படத்திற்கு போராடி வருகின்றார். இந்த படம் அவருக்கு ஹிட் கொடுக்குமா என்று தெரியவில்லை, ஆனால் கண்டிப்பாக நல்ல பெயரை வாங்கி கொடுக்கும்.

பிரகாஷ்ராஜ் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கின்றார், அனைத்தையும் மறந்து அவர் தன் மகன் பெயர் சிவா மட்டுமே நினைவில் வைத்து சிவா சாப்பிட்டாயா, சைக்கிள் ஓட்டினாயா என்று அவர் கேட்கும் இடம் கண் கலங்க வைக்கின்றது.

சமுத்திரக்கனி ஒரு கொலையை செய்துவிட்டு, அதை மறைக்க குமரவேல் குடும்பம், பிரகாஷ்ராஜ் ஏன் தன் கூடவே இருக்கும் பையனை கூட கொல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றார். ஆனால் அவர் எப்படி இதிலிருந்து வெளியே வந்து சாதாரண மனிதனாக மாறத்துடிக்கின்றார் என்பதையும் மிக அழகாக காட்டியுள்ளனர்.

படத்திற்கு மிகவும் பக்க பலமாக இருப்பது விஜியின் வசனமும், இளையராஜாவின் பின்னணி இசையும் தான். அன்பு தான் இந்த உலகம் அதை வெளியில் காட்டாமல் நாம் தான் உள்ளுக்குள்ளே அடக்கி வச்சுகிறோம் போன்ற வசனம் ரசிக்க வைக்கின்றது.

ஆனால், இத்தனை இருந்தும் மிக பொறுமையாக செல்லும் திரைக்கதை, படத்திற்கு இந்த ஸ்லோ தேவை என்றாலும் ஜென்ரல் ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்வார்களா ராதாமோகன்.

க்ளாப்ஸ்

நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு, அதிலும் பிரகாஷ்ராஜ் செம்ம ஸ்கோர் செய்கின்றார்.

படத்தின் வசனம் மற்றும் குமரவேல் மதுமிதா தம்பதிகளின் யதார்த்தமான காமெடி.

பிரகாஷ்ராஜ் தன் காதல் கதையை சொல்லும் இடம் கவிதை போல் உள்ளது.

இளையராஜா பின்னணி இசை.

பல்ப்ஸ்

மிக மெதுவாக நகரும் திரைக்கதை.

சமுத்திரக்கனி திருந்தி வாழவேண்டும் என்று நினைக்கும் போது அப்படி ஒரு முடிவு தேவையா...

மொத்தத்தில் கொஞ்சம் பொறுமை இருந்தால் நீங்களும் கண்டிப்பாக இந்த 60 வயது மாநிற மனிதனை தேடலாம்.

https://www.cineulagam.com/films/05/100960?ref=reviews-feed

Link to comment
Share on other sites

`ஒரு வருத்தம்... ஒரு வாழ்த்து!' - ‘60 வயது மாநிறம்’ விமர்சனம்

 
`ஒரு வருத்தம்... ஒரு வாழ்த்து!' - ‘60 வயது மாநிறம்’ விமர்சனம்
 

குழந்தைகளை தொலைத்துவிட்டு தேடும் தந்தைகள் பற்றி தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் வந்திருக்கின்றன. தந்தையைத் தொலைத்துவிட்டு பரிதவிப்பாய் அலையும் மகன் பற்றிய கதைதான் இந்த '60 வயது மாநிறம்.'

பிரகாஷ்ராஜ்

ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியரான பிரகாஷ்ராஜுக்கு அல்சைமர் நோய். மனைவியை ஏற்கெனவே புற்றுநோய்க்குப் பறிகொடுத்த அவருக்கு மகன் விக்ரம் பிரபு மட்டுமே ஒரே ஆறுதல். ஆனால், விக்ரம் பிரபுவுக்கு வேறு ஊரில் வேலை கிடைக்க, தந்தையை ஒரு கேர் சென்டரில் இந்துஜா கண்காணிப்பின் கீழ் விட்டுச் செல்கிறார். ஓராண்டுக்குப் பின் அப்பாவை பார்க்க வரும் விக்ரம் பிரபு அவரை வெளியே அழைத்துச் செல்கிறார். அப்போது கவனக்குறைவால் பிரகாஷ்ராஜை தொலைத்துவிடுகிறார். இன்னொரு பக்கம் ரவுடியான சமுத்திரக்கனி ஒரு கொலை முயற்சியில் இறங்குகிறார். பார்க்கும் எல்லாரையும் மகன் பெயரைச் சொல்லி அழைத்துக்கொண்டிருக்கும் பிரகாஷ்ராஜ் சமுத்திரக்கனியிடம் மாட்டிக்கொள்கிறார். விக்ரம் பிரபு, தன் தந்தையைத் தேடும் படலமே மீதிக்கதை.

 

 

60 வயது மாநிறம்

60 வயது மாநிறத்தவராகப் பிரகாஷ்ராஜ். நடிப்பைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வெள்ளை கறுப்பு நாய்க் கதை, தன் மனைவியுடனான காதல் கதை என்று வசனங்களோடு கண்களாலும் கதை சொல்கிறார். தனியனாய் அலையும்  ஒவ்வொரு காட்சியிலும் அவரின் இத்தனை கால அனுபவம் பேசுகிறது. 

 

 

முழுநீள சென்டிமென்ட் படத்தில் விக்ரம்பிரபு நடிப்பது இதுவே முதல்முறை. பிரகாஷ் ராஜோடு இருக்கும் காட்சிகளில் கொஞ்சம் தடுமாறினாலும் மற்ற காட்சிகளில் நன்றாகவே சமாளித்திருக்கிறார். 'மேயாத மான்' இந்துஜா டாக்டர் ரோலுக்கு பளிச் பொருத்தம். மேக்கப் மட்டுமே இயல்பைத் தாண்டி உறுத்துகிறது. பெரிதாக ஸ்கோப் இல்லாததால் சமுத்திரக்கனிக்கு இது மற்றுமொரு படம். குமரவேல், விஜய் டிவி புகழ் சரத் ஆகியோர் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள்.

பிரகாஷ்ராஜ்

வசனங்கள் ஓரிரு இடங்கள் விஜி பெயர் சொல்கிறது. ராதாமோகன் படத்தில் இயல்பான நகைச்சுவை அதிகமிருக்கும். ஏனோ இந்தப் படத்தில் ஒருசில இடங்கள் தவிர்த்து பிற இடங்களில் வலிந்து திணித்த காமெடிகள்தான் அதிகமிருக்கின்றன. இசை இளையராஜா என்பது பின்னணி இசையில் ஒலிக்கும் அவர் குரலை வைத்துமட்டுமே தெரிந்துகொள்ள முடிகிறது. பல இடங்களில் 'இது ராஜா இல்லையே' என்று நினைக்க வைக்கிற பின்னணி இசை. என்ன ஆச்சு ராஜா சார்?

'Life is Beautiful' என்ற நெகிழ்ச்சியான குறும்படம், ராம் - மரியா - ஜானி மூவருக்குள் இருக்கும் வித்தியாச உறவு, பிரகாஷ் ராஜின் காதல் கதை என ஒருசில இடங்கள் நிஜமாகவே பியூட்டிஃபுல். ஆனால், அதுமட்டுமே போதாதே? அன்பை பேசுகிறேன் என ஒவ்வொரு காட்சியிலும் மெனக்கெட்டிருப்பது ஒருகட்டத்தில் ஓவர்டோஸாகிறது. படத்துக்கும் செயற்கை சாயம் பூசுகிறது.  

indhuja

மனித மனங்களைப் பற்றி பேசும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். தொடர்புபடுத்திக்கொள்ள அவகாசம் தராமல் சட்சட்டென கடந்து செல்லும் காட்சிகள் உணர்வுகளைக் கடத்துவதில் தோல்வி காண்கின்றன. இதனாலேயே ஒளிப்பதிவுக்கும் படத்தொகுப்புக்கும் பெரிய வேலையில்லை. முக்கியமாக வில்லனும் அவரின் சகாவும் போகிறபோக்கில் 'இந்தா செவப்பு சட்டை போறான் பாரு அவனை முடிச்சுடு, அந்தா ஒருத்தன் இட்லி சாப்பிடுறான் பாரு, அவனை முடிச்சுடு' எனப் பார்ப்பவர்களை எல்லாம் போட்டுத்தள்ளச் சொல்கிறார்கள். நானோ அளவுக்குக்கூட பதற்றம் இந்தச் செயற்கைத்தனத்தால் வரமாட்டேன் என்கிறது.

 

 

'கோதி பன்னா சாதாரண மைகட்டு' என்ற கன்னட படத்தின் ரீமேக்தான் இது! அதை எடுக்க நினைத்ததெல்லாம் சரி, ஆனால், எடுத்தவிதம்தான் 60 வயது மாநிறம் கொண்ட பெரியவரை பதற்றமில்லாமல் நம்மைத் தேட வைக்கிறது. 

https://cinema.vikatan.com/movie-review/135593-60-vayathu-maaniram-movie-review.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.