Jump to content

பாஜகவுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தவர் கருணாநிதி


Recommended Posts

பாஜகவுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தவர் கருணாநிதி: சென்னையில் நடந்த நினைவேந்தலில் மத்திய அமைச்சர் கட்கரி பெருமிதம்; சமூகநீதியை காக்க வாழ்வை அர்ப்பணித்தவர் என குலாம்நபி ஆசாத் புகழாரம்

 

 
b78fcd02P1482964mrjpg

தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ எனும் தலைப்பில் கருணாநிதி புகழ் வணக்கக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. படம்: க.ஸ்ரீபரத்

சமூகநீதி, மதச்சார்பின்மையை காக்க தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் கருணாநிதி என தேசியத் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்' என்ற தலைப்பில் தேசிய தலைவர் கள் பங்கேற்ற புகழ் வணக்க கூட்டம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நேற்று மாலை 5.08 மணிக்கு தொடங்கியது. இதில் பங்கேற்ற தேசிய தலைவர்கள் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை வகித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித் தார். பொருளாளர் துரைமுருகன் வரவேற்புரையாற்றினார்.

 

பின்னர் தேசியத் தலைவர்கள் பேசியதாவது:

மத்திய கப்பல், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி:

பாஜகவுடன் நீண்ட காலமாக, நெருங்கிய உறவு வைத்திருந்தவர் கருணாநிதி. நெருக்கடி நிலை பிரகடனத்தை முதலில் எதிர்த்தது திமுக அரசு. அதனால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. ஸ்டாலின் உட்பட பலர் கைதாகினர். நெருக் கடி நிலையை எதிர்த்து 1975-ம் ஆண்டு ஜூலையில் மெரினா வில் மிகப்பெரிய மாநாட்டை கருணா நிதி நடத்தினார். அதில் லட்சக் கணக்கானோர் கலந்துகொண்டனர். தமிழ் திரைத்துறை, இலக்கியம், இதழியலுக்கு கருணாநிதி ஆற்றிய பங்கு அளப்பரியது. ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் நாளொன்றுக்கு 15 முதல் 20 மணி நேரம் உழைக்கக்கூடியவர் கருணா நிதி. அவரைப் போன்ற மனிதரை காண்பது அரிது. மத்தியில் கூட்டணி ஆட்சியை உருவாக்குவதில் முன் னோடியாக திகழ்ந்தவர்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத்:

40 ஆண்டுகளாக கருணாநிதிக் கும், எனக்குமான நட்பு தொடர்ந் தது. கடைசி வரை தனக்கு பிடித்த எழுத்துப் பணியை அவர் கைவிட வில்லை. போக்குவரத்து நாட்டு டைமை, கை ரிக்‌ஷா ஒழிப்பு, குடிசை மாற்று வாரியம் அமைத்தது, விவ சாயிகளுக்கு இலவச மின்சாரம், உழவர் சந்தை ஆகியவற்றை கொண்டு வந்து தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு வழிவகுத்தவர் கருணாநிதி. சமூகநீதி, மதச்சார் பின்மையை காக்க வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

முன்னாள் பிரதமர் தேவகவுடா:

அடித்தட்டு மக்களின் நலனுக் காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் கருணாநிதி. திராவிட இயக்கத்தை அரை நூற்றாண்டுக் கும் மேலாக முன்னெடுத்துச் சென் றவர் அவர். ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சிக்கும் அச்சுறுத்தல் ஏற் பட்டபோதெல்லாம் அதனை காக்க துணை நின்றவர். கருத்துரிமை, சமூகநீதி காப்பதில் உறுதியாக இருந்தவர். கூட்டணி அரசுகளை நிலைபெறச் செய்ததில் கருணா நிதிக்கு முக்கிய பங்கு உண்டு. மாநில கட்சியை கட்டமைப்பது என்பது அத்தனை எளிதானதல்ல. அந்த கடமை தற்போது ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறை வன் அவருக்கு எல்லா வலிமையும் அளிக்க வேண்டும்.

பிஹார் முதல்வர் நிதிஷ்குமார்:

இந்தியாவின் முதுபெரும் தலை வரான கருணாநிதி, சமூகநீதி, சமத்துவத்துக்காக வாழ்வை அர்ப் பணித்தவர். தாழ்த்தப்பட்டோர், பெண்களுக்காக பல்வேறு சமூக நலத் திட்டங்களை நிறைவேற்றி யவர். பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க காரணமாக இருந்தவர். தமிழகத் தின் இன்றைய வளர்ச்சிக்கு அவர் ஏற்படுத்திய உள்கட்டமைப்பு வசதி களும், தொழிற்சாலைகளுமே கார ணம். மத்தியில் பல்வேறு கூட்டணி ஆட்சி அமைய வித்திட்டவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி:

கருணாநிதியுடன் பல ஆண்டு கள் இணைந்து பணியாற்றியுள் ளேன். அவரிடமிருந்து பலவற்றை யும் கற்றுக்கொண்டுள்ளேன். நகைச் சுவை உணர்வு மிக்கவர் அவர். நெருக்கடி நிலையை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய ஒரே முதல்வர் கருணாநிதி. முற்போக்கு சிந்தனை இருந்தால் மட்டுமே சமூகத்தில் சம உரிமையை நிலைநாட்ட முடியும். அதற்கு முக்கியத்துவம் அளித்தவர் கருணாநிதி. அவரது வழியைப் பின்பற்றி தமிழ்நாட்டை முன்னேற்ற ஸ்டாலினை வாழ்த்துகிறேன்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா:

ஜாதி, மதம், இனம், மொழி என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரையும் சமமாக மதித்து நடத்தியவர் கருணாநிதி. ஜனநாய கம், கூட்டாட்சி தத்துவத்தை வலுப் படுத்தியவர். அனைவருக்கும் சம உரிமைகள், சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். அப்போது தான் தேசிய ஒருமைப்பாடு பேணிக் காக்கப்படும் என்பதை உணர்ந்தவர். தற்போது நாட்டை சூழ்ந்துள்ள சவால்களை எதிர்கொள்ள கருணா நிதி காட்டிய வழியில் நாம் பய ணிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து மத்தியில் உள்ள பாசிச ஆட்சியை வீழ்த்துவோம்.

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி:

இந்தியாவின் மகத்தான தலை வர்களில் ஒருவரான கருணாநிதி, மக்கள் நலனுக்காகவே வாழ்ந் தவர். அதனால்தான் அவரது மறைவால் ஏற்பட்ட அதிர்ச்சியை தாங்க முடியாமல் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சமூக, பொருளாதார மேம்பாட்டுக் காகவும், மொழியின் வளர்ச்சிக்காக வும் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தியவர். சமூகநீதி, மதச்சார் பின்மை, ஜனநாயகம், மாநில சுயாட்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி யின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல்:

தமிழகம் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியாவுக்கான தலைவ ராக திகழ்ந்தவர் கருணாநிதி. நான் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது கருணாநிதி முதல்வராக இருந்தார். சென்னை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம் போன்ற திட்டங்கள் குறித்து ஆலோசிக்கும் போது அவரது கூரிய அறிவுத் திறனையும், நவீன சிந்தனைகளை யும் கண்டு வியந்துள்ளேன். கருணாநிதிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

மாநிலங்களவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவர் டெரிக் ஓ பிரையன்:

கூட்டாட்சி தத்துவத்தின் முக் கியத்துவத்தை உணர்ந்த கருணா நிதி, மத்தியில் குவிந்துள்ள அதி காரங்கள் மாநிலங்களுக்கு வர வேண்டும் என தொடர்ந்து போரா டினார். பகுத்தறிவாளரான கருணா நிதி, நவீன சிந்தனைகள் கொண் டவர். அவரது கொள்கைள், சிந் தனைகளை நாம் பின்பற்ற வேண் டும். அனைத்து மாநில கட்சிகளும் வரும் 2019 மக்களவைத் தேர்தலில் ஒன்றிணைந்து பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும். மத்திய ஆட்சியை கைப்பற்ற வேண்டும். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும். இதுவே கருணாநிதிக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

இவ்வாறு தலைவர்கள் பேசினர். தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஒய்.எஸ்.சவுத்ரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சோம்நாத் பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பேசினர்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24826993.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கர்ப்பிணிப் பெண்ணின் நடைகுறித்து கட்டுமரம் விளக்கம் ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.