Jump to content

``பீலா விடுறதக்கூட உயர்வா விட்டோமா இல்லையா?!" இது சீமான் வைரல் புருடாக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 
``பீலா விடுறதக்கூட உயர்வா விட்டோமா இல்லையா?!
 

மூக வலைதளங்களில் பகிரப்படும் காணொலிகளில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடைகளிலும், பேட்டிகளிலும் பேசியவைதான் சமீபமாக அதிகம் பகிரப்படுகின்றன.. 

சீமான் பேசியதில் சமீபத்திய வைரல்ஸ் இவை..

'பிரபாகரன் இருந்த இடத்தில் சீமான் இருந்திருந்தால் ஒரு சிங்களன் உயிரோடு இருந்திருக்க மாட்டான்'

``நான் ஒருநாள் கோவிச்சுட்டு இருந்தேன். சிவாஜி ஐயா வந்தாரு. 'என்னடா ராஜா உன் பிரச்னை'ன்னு கேட்டாரு. 'என்ன எழுதிக் கொடுத்தாலும் கிழிச்சுப் போடுறாங்க'ன்னு சொன்னேன். 'உனக்கு என்ன தோணுதோ அதை என்கிட்டே சொல்லிடு. நான் 'டேக்'ல பேசி விட்டுடுறேன். பேசிட்டு ஓகேவா'ன்னு கேப்பாரு. 'நானும் ஓகே'ன்னு சொல்லுவேன்."

``நாற்பதாயிரம் டன் அரிசியைச் சுமந்து நடுக்கடலில் வந்துகொண்டிருந்த ஆஸ்திரேலியக் கப்பலை வழியில் நிறுத்தி விட்டுட்டுப் போகச் சொன்னார் பிரபாகரன். உடனே அவர்கள் போனார்கள். அந்தக் கப்பலைத்தான் எனக்கு சுட்டுப் பழகிக்கக் கொடுத்தார்." 

``விசா வாங்குவதற்காக அமெரிக்கத் தூதரகம் போனோம். ஆயிரக்கணக்கானோர் வரிசையில நின்னுட்டு இருந்தாங்க. கூட வந்த மச்சினன் தங்கர்பச்சான் இவனுக்கு இந்தம்மா விசா கொடுக்காதுன்னு நினைச்சாரு. டை கட்டிட்டு இருந்தவன் எல்லாம் என்னையே பாக்குறான். அந்த வெள்ளைக்கார அம்மாகிட்ட போனேன். என்னுடைய புகைப்படங்கள், வாங்குன பரிசுகள் மற்ற ஆவணங்கள் எல்லாம் அவங்ககிட்ட கொடுத்துட்டு அந்தம்மாகிட்ட வணக்கம்னு சொன்னேன். எதுவுமே கேக்கல வாங்கி வெச்சுட்டு 'ஹாப்பி ஜர்னி'ன்னு சொல்லிடுச்சு!" 

``ஏ.கே 74 ரகத் துப்பாக்கியை நானும் எங்க அண்ணனும் சுட்டுப் பயிற்சி எடுக்கும்போது, 'அண்ணே.. இது ரஷ்யாவுக்கு அப்புறம் வேற எங்க இருக்கு'ன்னு கேட்டேன். 'நம்மகிட்டதான் இருக்கு. இந்தியாவுல இல்ல'ன்னு சொன்னாரு. 'அப்போ இந்தியாவிலேயே ஏ.கே 74ல சுட்டது நான்தானா'ன்னு கேட்டேன். 'ஆமா, அதைப் போய் எல்லார்க்கும் சொல்லு சொல்லுங்கிறாரு!" 

சீமான்

``நம்மகிட்ட குதிரைப்படை இல்ல. யானைப்படைதான். ஒரு கப்பல்ல அறுபதாயிரம் யானைகளை ஏத்திக்கிட்டு போயிருக்கான். போயி போர்லாம் போடலை. அவ்வளவு யானைகளையும் வரிசையா நிறுத்தி இருக்கான். பார்த்த உடனே எதிரி விழுந்துக் கும்புட்டான். நான் சண்டைக்கு வரல. நீ என்ன சொல்றயோ கேக்கறேன்னுட்டான்!" 

``தமிழ்நாடு கிரிக்கெட் அணியை உருவாக்குவேன். 'இந்திய அணி உலகக்கோப்பை விளையாடப்போவதற்கு முன்பு என்னுடைய தமிழ்நாட்டு அணியை வென்றுவிட்டுத்தான் போகணும்'னு சவால் விடுவேன்" 

``ஆமை ஓட்டை மல்லாக்கத் திருப்பிப்போட்டு ஒரு ஆள் பயணம் போவதைப் பார்த்தேன். இருபத்தெட்டு கிலோ ஆமைக்கறியை அண்ணன் பிரபாகரன் எனக்குக் கொடுத்தார்." 

``சிற்பிகளுக்கு மாலை இடையூறாக இருக்குன்னு மாலையை இப்படிப் போட்டு வடிச்சான். ரொம்பநேரம் அந்த வேலையை செய்யும்போது உடல்சூட்டுலேயும், வெயில் வெப்பத்துலேயும் பூ வாடி உதிர்ந்துட்டு வெறும் நூல் மட்டும் அவன் முதுகுல இருந்தது. அந்த நூலுக்கு பேர்ல பூ உதிர்ந்திருந்துச்சு அதனாலே அது பேர் பூணூல்!"

``ஸ்பீச் எங்க இருந்து வருது. என் பேச்சுக்கு முன்னாடி ஒரு எஸ் போட்டா ஸ்பீச் ஆகுது. 'உடன்'க்கூட ஒரு 'எஸ்' போட்டா 'சடன்', 
'தாக்கு' அதை அப்படியே 'ஏ' போட்டு அட்டாக்கு" 

``அதிகாரத்தைக் கைப்பற்றுவோம். கட்டாயப் பாடமாக இந்தியை ஆக்காமல் பஞ்சாபியை ஆக்குவோம். அன்பு உடன்பிறப்புகளுக்காக சீக்கிய மொழியை நாம் படிப்போம்." 

`` 'சீமான் சயனைடு கட்டுவாரா'ன்னு கேக்குறாங்க. நானே சயனைடு தானடா!" 

``பீலா விடுறோம்னே வெச்சுக்கோ. பீலா விடுறத கூட உயர்வா விட்டோமா இல்லையா!"

விகடனுக்கு
நன்றி
நன்றி
நன்றி

https://www.vikatan.com/news/politics/135490-seeman-and-his-viral-comment.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் தமிழ்த்தேசியத்தின்பாலான உறுதியென்பதைச் சிதைக்கும் எண்ணம் ஒருவருக்கு வருகிறதென்றால், நிச்சயம் அவர் தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர் என்பதுதான் எனது கருத்து.

இன்று சீமானை விமர்சிக்கும் விகடன் குழுமமாக இருக்கட்டும், தினமலர் ஆக இருக்கட்டும், ஹிந்துவாக இருக்கட்டும், இவர்கள் எல்லோருமே திராவிடக் கொள்கை ஆரம்பித்த காலத்திலிருந்தே இன்றுவரைக்கும் தமிழ்த் தேசியம் பேசும் அனைவருக்கு எதிராகவும் செயற்பட்டு வருகிறார்கள். 

இதற்கு முக்கியமான காரணமாக அமைவது அப்பத்திரிக்கை நிறுவனங்களை ஆளும் அல்லது வழிநடத்துகின்றவர்கள் தமிழ்த்தேசியக் கொள்கைக்கெதிரான பிராமணர்களாக இருப்பது ஆகும்.

தமிழ்த்தேசியத்தின் ஒரு அங்கமான ஈழத்தமிழரின் தேசிய விடுதலைப் போரட்டத்தினை எதிர்ப்பதென்னும் இவர்களின் போக்கு இந்த அடிப்படையேலே பார்க்கப்படுதல் அவசியம்.

ஹிந்துவை ஆரம்பித்த சுப்ரமணிய ஐய்யராக இருக்கட்டும், விகடன் குழுமத்தை ஆரம்பித்த புத்தலூர் வைத்தியநாதர் ஐய்யராக இருக்கட்டும், தினமலரை ஆரம்பித்த ராமசுப்பைய்யராக இருக்கட்டும், துக்ளக்கினை ஆரம்பித்த சோ ராமசாமியாக இருக்கட்டும், ஹிந்துவில் தமிழின விஷம் கக்கிய  ராம் மாணிக்கலிங்கம், பார்த்தசாரதி, பத்மநாபன் ஆகிய எல்லோருமே பிராமணர்கள்தான்.இவர்களைவிடவும், இன்றும் 2009 இனக்கொலைக்காக மகிந்தவைப் பாராட்டி கெளரவிக்க முன்னிற்கும் சுப்ரமணியசுவாமி கூட பிராமணர்தான். 

ஆக, இவர்களின் விமர்சனங்கள் இப்படித்தான் இருக்குமென்பது ஆச்சரியமல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசியவெறிக்கும் தேசிய உணர்வுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

நாஸிகள் போன்று தேசிய வெறிகொண்டவர்கள் மற்றைய இனங்களின் மீது வெறுப்பை உமிழ்பவர்கள். சீமான் இந்தவகையில் உள்ளதை அவர் பேச்சுக்கள் காட்டுகின்றன.

தேசிய உணர்வுகொண்டவர்கள் தமது தேசியத்தின் மீது பெருவிருப்பும் பெருமையும் கொண்டவர்கள்.அதே நேரத்தில் பிற இனங்களின் தேசிய உணர்வுகளையும் மதிப்பவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragunathan said:

 

இன்று சீமானை விமர்சிக்கும் விகடன் குழுமமாக இருக்கட்டும், தினமலர் ஆக இருக்கட்டும், ஹிந்துவாக இருக்கட்டும், இவர்கள் எல்லோருமே திராவிடக் கொள்கை ஆரம்பித்த காலத்திலிருந்தே இன்றுவரைக்கும் தமிழ்த் தேசியம் பேசும் அனைவருக்கு எதிராகவும் செயற்பட்டு வருகிறார்கள். 

 

தினமலர்,ஹிந்து,துக்ளக்கைவிடுங்கள் காலம் காலமாக எங்களை பற்றி  எமது போராட்டம்பற்றி அவதூறு பரப்புவதற்கே அவதாரம் எடுத்தவர்கள்.

ஆனால் விகடனை அவர்கள் வரிசையில் நீங்கள் சேர்த்தது விகடன் எமது போராட்டத்துக்கு வழங்கிய தன்னால் முடிந்த பங்களிப்பை நாம் கொச்சைபடுத்துவது போலாகும்.

ராஜீவ் கொலையின் பின்னர் தமிழகத்தில் யாருமே ஈழபோராட்டம்பற்றி அதிகம் பேசாதிருந்த நிலையில் விடுதலைபுலிகளுக்கு ஆதரவான கருத்து கணிப்பை முதலில் செய்தது விகடன், இன்றுவரை தலைவரின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அவரின் தியாகம்,கடந்துவந்த பாதைகள், ஒழுக்கம் நேர்மைபற்றி ஒரு வருஷம்கூட தவறாமல் செய்தி வெளியிடுவது விகடன்.

ஒவ்வொரு மாவீரர்நாளின்போதும் ஈழதமிழரின் தியாகங்கள்பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறது.

விகடன் முள்ளிவாய்க்கால் பேரவலம்பற்றி இன்றுவரை பேசுகிறது...

அவர்கள் வியாபார நோக்கத்தில் இதை செய்கிறார்கள் என்று நம்மவர்கள்  சிலர் கருதினாலும், அதன் வாசகர்களாயிருக்கும் பலகோடி தமிழக மக்களுக்கு எம்மை கொண்டு செல்கிறார்கள் என்பதையே நாம் உற்று நோக்கவேண்டும்.

இது சீமானுக்கு எதிரான செய்தியை விகடன் அனுமதித்ததால் அது தொடர்பாக பகிரும் கருத்தல்ல.

எமது தேசியத்திற்கு எதிராக செயற்படும் தமிழக பத்திரிகைகளுடன் நீங்கள் விகடனையும் சேர்த்ததற்கு மட்டுமே சொல்லப்பட்ட கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், ஜேர்மனின் நாசிகளை சீமானுடன் நீங்கள் ஒப்பிடுவது என்னைப்பொறுத்தவரை சரியாகப் படவில்லை. ஆனால், உங்கள் கருத்தில் ஓரளவிற்கு உண்மையும் இல்லாமல் இல்லை.

ஜேர்மனிய நாசிகளுக்கெதிராக திட்டமிட்ட இனக்கொலையொன்று பல்வேறு நாடுகளின் துணையுடன் நடைபெறவில்லை. வேறுமனே "யூதர்கள் சுரண்டுகிறார்கள்" என்கிற போலியான கோஷத்தையும், ஜேர்மபிய ஆரியர்கள் மட்டுமே இவ்வுளகில் வாழத் தகுதியான இனம், மற்றையவர்கள் தகுதியற்றவர்கள் என்கிற தூய ஆரிய ஆதிக்க வெறியையும் கொண்டே அவர்களின் இன  வெறி அமைந்த்கிருந்தது. 

ஆனால், சீமானின் கோபமும் ஆவேசமும் நியாயமானது. திட்டமிட்டு அழிக்கப்பட்ட ஒரு இனத்திற்காக நீதிகேட்பது. தமிழன் தமிழ்நாட்டில் அதிகாரத்தில் இருந்தால் ஈழத்தில் இன்வக்ஷிப்பு நடந்திருக்காதே என்கிற ஆதங்கத்தில் எழுவது. இதை எப்படி நாசிகளுடன் ஒப்பிட்டீர்கள் என்றுதான் தெரியவில்லை.

ஜேர்மனிய நாசிகளுடன் ஒப்பிடக்கூடிய இன்னொரு இனம் இருக்கிறது. அதற்கு ஆரியச் சிங்களம் என்று பெயர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ragunathan said:

கிருபன், ஜேர்மனின் நாசிகளை சீமானுடன் நீங்கள் ஒப்பிடுவது என்னைப்பொறுத்தவரை சரியாகப் படவில்லை. ஆனால், உங்கள் கருத்தில் ஓரளவிற்கு உண்மையும் இல்லாமல் இல்லை.

நாஸி ஜேர்மனியர்கள் யூதர்களை மனிதர்களாகவே மதிக்கவில்லை. சிங்கள இனவாதிகளும் தமிழர்களை அடக்கப்படவேண்டியவர்கள் என்ற கருத்தியலோடு இனவெறியை உமிழ்வதால் அவர்களும் இனவெறியர்கள்தான்.

சீமானின் அடையாளம் தமிழ் தேசியம், விடுதலைப்புலிகள் எனும் இரண்டு புள்ளிகளுக்கிடையில் தான் இருக்கிறது. ஆனால் அவரது தேசியக் கூச்சல் பிற இனங்கள் மீது வெறுப்பாக உமிழப்படும்போது அது தேசிய வெறியை அவர் கட்சிக்காரர்களிடமும் ஆதரவாளர்களிடமும் உருவாக்குகின்றது. இந்த வெறி பிற இனங்களை கீழ்மை செய்யும்போது தேசியவாதி பாஸிஸவாதியாக மாறுவதைக் காணலாம். சிங்கள இனத்தால் அடக்கியொடுக்கப்பட்டும் புலிகள் சிங்கள மக்கள்மீது வெறுப்பை உமிழ்ந்து பிரச்சாரம் செய்யவில்லை என்ற வித்தியாசத்தையும் பார்க்கவேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் இனவெறியனாகவோ தேசிய வெறியனாகவோ வேற என்னவாகவோ இருந்திட்டுப்போகட்டும் இதனால் எமக்கு என்ன பிரச்சனை. சீமான் இன்னமும் சொல்லத்தக்கமாதிரி பெரிய செல்வாக்கான ஆளாக வளரவில்லை சிலவேளை அப்படி ஒரு செல்வாக்கான அரசியல்வாதியாக அவர் வளர்ந்தால் இதே பத்திரிகைகள் அந்தமாதிரி எழுதும் ஜெயலலிதா கருனாநிதி மேலும்பல அரசியல்வாதிகள் சசிகலா ஆகியோர் அப்பட்டமாக ஊழல் செய்தவர்கள் என அனைவருக்கும் தெரியும் ஏன் அனைத்துப்பத்திரிகைக்கும் தெரியும் ஆனால் கேட்டுப்பாருங்கள் அவரைப்பற்றி ஓரிடத்திலாவது புகழாத பத்திரிகைகள் எதுவும் இல்லை. தொலைக்காட்சியில் அவர்களைச்சொல்லி பெருமிதப்படுபவர்களை இப்பொதுசன ஊடகங்கள் குளோசப்பில் காட்டி எங்களையும் அழவைக்கிறதுதானே. 

சீமானுக்காக நாம் ஏன் குத்தி முறியவேண்டும் அது தமிழ்நாட்டின் அரசியல் பிரச்சனை மட்டுமே 

தமிழ்நாட்டில் கடவுள் நினைத்தாலும் ஈழத்தமிழர்க்கான ஆதரவு நிலைப்பாட்டி எவராலும் முன்னெடுத்துச்செல்லமுடியாது. 

எமது பெயரையும் தலைவர் பெயரையும் சொல்லி நிறையப்பேர் நிறையவே சாதித்துவிட்டார்கள் பாவம் அந்தாளையும் விடுங்கோவன்

வைகோவைப்பாருங்கள் அந்தாள் பாவம் இப்போ ஸ்டாலினை முதல்வர் ஆக்கிறன் எனப்புறப்பட்டிருக்கிறார். அதோடு ஒப்பிடுகையில் சீமான் தேவலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நாஸி ஜேர்மனியர்கள் யூதர்களை மனிதர்களாகவே மதிக்கவில்லை. சிங்கள இனவாதிகளும் தமிழர்களை அடக்கப்படவேண்டியவர்கள் என்ற கருத்தியலோடு இனவெறியை உமிழ்வதால் அவர்களும் இனவெறியர்கள்தான்.

சீமானின் அடையாளம் தமிழ் தேசியம், விடுதலைப்புலிகள் எனும் இரண்டு புள்ளிகளுக்கிடையில் தான் இருக்கிறது. ஆனால் அவரது தேசியக் கூச்சல் பிற இனங்கள் மீது வெறுப்பாக உமிழப்படும்போது அது தேசிய வெறியை அவர் கட்சிக்காரர்களிடமும் ஆதரவாளர்களிடமும் உருவாக்குகின்றது. இந்த வெறி பிற இனங்களை கீழ்மை செய்யும்போது தேசியவாதி பாஸிஸவாதியாக மாறுவதைக் காணலாம். சிங்கள இனத்தால் அடக்கியொடுக்கப்பட்டும் புலிகள் சிங்கள மக்கள்மீது வெறுப்பை உமிழ்ந்து பிரச்சாரம் செய்யவில்லை என்ற வித்தியாசத்தையும் பார்க்கவேண்டும்.

 

சீமானை, எங்கே கொண்டு போய் ஒப்பிட்டு வைக்கிறீர்கள் என்பது சற்றே மிகைப்படுத்தப்பட்ட கூற்று போல தெரிகிறது.

ஆட்சி அதிகாரத்தில் இருந்த கிற்லர், சிங்கள அரசியல்வாதிகள் இனவாதம் பேசுவதே அபாயகரமான விடயம்.

இரு நூறு ஆண்டுகள் இருந்த வெள்ளையனே வெளியேறு என்பது இனவெறியா அல்லது சுதந்திரப் போராட்டமா? 

அது சுதந்திரப் போராட்டமாயின், இதுவும் அப்படிதானே. படங்களில் நடித்து தமிழர் அல்லாதோர், ஆட்சிக்கு வரமுடியமாயின், டப்பிங் தமிழ் பேசும் ஜேம்ஸ் பாண்டும் வரலாமே நாளை.

திராவிடம் என்ற உன்னதமான கருத்தியலின் சிதைவு, கருணாநிதியுடன் ஆரம்பித்தது.

வருமானவரி பிரிவினர், இருபத்தியொரு கோடி லஞ்சம் பெற்ற ஆதாரமுள்ளது  என்று அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சொல்லியும் அவர் அமைச்சரவையில் தொடர்கிறாறென்றால் ஊழல் எவ்வளவு தூரம் ஸ்தாபனப் படுத்தப்பட்டுள்ளது திராவிட கட்சிகளினுள் என தெரிகிறது.

ஆரம்பத்தில் சீமான் தெலுங்கர் ஆள்வதா, மலையாளி ஆள்வதா என்றார். இப்போது அவ்வாறு நேரடியாக சொல்லாமல் தமிழகத்தை தமிழனே ஆளவேண்டும் என்கிறார்.

அண்டைய மாநிலங்களில் தமிழர் ஆளவே முடியாது என்ற நிலை இருக்கும் வரை, சீமானின் நிலைப்பாடு தவறானதல்ல என்பதே எனது பார்வை.

வேறு இனத்தவருக்கு வீடுகளை, காணிகளை விற்காதீர்கள், அவர்களிடம் பொருள் வாங்காதீர்கள், அவர்களை அடித்து விரட்டுங்கள் என்பதே ஆபத்தானது.

பாம்பையும், பாப்பானையும் கண்டால், பார்பானை முதலில் அடி என்று சொன்னது திராவிடம்... அது ஆபத்தான இனவெறுப்பன்றி வேறென்ன?

புலிகள் சிங்களவர் மீது இனத்துவேசமாக பேசவில்லை என்கிறீர்கள். இது அப்பாவித்தனமானது.

முஸ்லீம் மக்களை யாழில் இருந்து வெளியனுப்பியது, சமாதான பேச்சிடையே கெப்பற்றிக்கொல்லாவயில் பஸ் மீது கிளைமோர் தாக்குதல் நடாத்தியது தான் புலிகள் விடுதலை போரட்ட அமைப்பு என்ற நிலைப்பாட்டை தகர்த்தது என்பதை ஏற்பீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இனியொருவில் இருந்து..

http://inioru.com/anti-social-nazist-seeman/

“சீமான் தனது வழிகாட்டிகளில் ஒருவராக உலகின் அதிபயங்கரக் கொலையாளி ஹிட்லரின் படத்தை தனது திருச்சி மாநாட்டில் அறிவித்தார். இன்று ஜேர்மனியில் நிறவாதிகள் கூட ஹிட்லரின் பெயரை உச்சரிப்பதற்குக் கூட அவமானப் படும் நிலையில் சீமான் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலுள்ள சீமான் கோமாளிகள் ஹிட்லரை தனது வழிகாட்டியாக அறிவித்துள்ளனர்.

தவிர. ஹிட்லரின் நாஸிப் படைகள் வணக்கம் செலுத்தும் முறையில் மேடையில் நின்று வணக்கம் தெரிவித்து மாநாட்டை ஆரம்பித்தனர். இதையெல்லாம் காவல் துறை கண்ணாரப் பார்த்துக்கொண்டிருந்தது.”

 

 

hitlersalute.jpg

 

விகடன் பேட்டியில் சீமானின் சமாளிப்பு..

https://www.vikatan.com/news/tamilnadu/47596.html

 

திருச்சி மாநாட்டில் ஹிட்லர் படம் வைத்திருந்தீர்களே... என்ன காரணம்?

''அந்தப் படத்தை ஆர்வத்தில் சில தம்பிகள் வைத்துவிட்டார்கள். வழிகாட்டும் தலைவர்கள் படத்தில், புத்தர் படம்கூட வைத்திருந்தார்கள். நேற்று இலங்கையிலும் இன்று பர்மாவிலும் புத்தரின் பெயரால்தான் சிறுபான்மை மக்களை அழித்தொழிக்கிறார்கள் அதற்காக புத்தரை ஃபாசிஸ்ட் எனச் சொல்ல முடியுமா? மாநாடுகளில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகளை வைத்து அரசியல் முத்திரை குத்தத் தொடங்கினால், எல்லா அரசியல் கட்சிகளைப் பற்றியும் இப்படி ஆயிரம் அபத்தங்களை அடுக்க முடியும்.''

'சீமான், முருகன் வழிபாட்டில் தொடங்கி ஹிட்லர் வழிபாடு வரை செய்துகொண்டிருப்பதற்கு ஒரே காரணம் ஈழம் பிசினஸ் படுத்ததுதான்’ என்கிறாரே தி.மு.க முகாமைச் சேர்ந்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்?

''எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் பிசினஸ் செய்யும் கட்சியான தி.மு.க-வில் இருந்துகொண்டு இதைப் பார்த்தால்,  பிழையாகத்தான் தெரியும். தி.மு.க என்பது, கட்சி அல்ல; ஒரு தொழில்நிறுவனம். தேர்தல் நேரத்தில் நிதி கேட்பார்கள். வேட்பாளர் தேர்வு நேர்காணலின்போது, 'கட்சிக்கு எவ்வளவு நிதி கொடுப்பாய்?, தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்வாய்?’ என்றுதான் கேட்பார்கள். இப்படி தேர்தலை வைத்துத் தொழில் செய்யும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர், அனைத்தையும் வணிகமாகத்தானே பார்ப்பார். இத்தனைக்கும் ஈழத்தை வைத்து வியாபாரம் செய்ததே தி.மு.க-தான். ஆனால், ஈழத் தமிழர்களுக்கு தி.மு.க செய்த துரோகங்களால் அதன் ஈழ வியாபாரம் படுத்துவிட, இப்போது கடையைத் தொடர்ந்து நடத்த முடியாமல் டெசோ என்ற டம்மி அமைப்பைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

நான் ஹிட்லரை வைத்திருப்பது இருக்கட்டும். தி.மு.க தலைவர் தன் மகன் கருணாநிதிக்கு 'ஸ்டாலின்’ என ஏன் பெயர் வைத்தார்? 'ஸ்டாலின் ஒரு ஃபாசிஸ்ட்’ எனச் சிலர் சொல்கிறார்களே. மனுஷ்ய புத்திரன் இது பற்றி கேட்டுச் சொல்லட்டும். அப்படியே, கலைஞர் தொலைக்காட்சியில் ஹிட்லர் தொடரை ஏன் ஒளிபரப்பினார்கள் என்றும் கேட்டுச் சொல்லட்டும்.''
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

 இனியொருவில் இருந்து..

http://inioru.com/anti-social-nazist-seeman/

“சீமான் தனது வழிகாட்டிகளில் ஒருவராக உலகின் அதிபயங்கரக் கொலையாளி ஹிட்லரின் படத்தை தனது திருச்சி மாநாட்டில் அறிவித்தார். இன்று ஜேர்மனியில் நிறவாதிகள் கூட ஹிட்லரின் பெயரை உச்சரிப்பதற்குக் கூட அவமானப் படும் நிலையில் சீமான் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலுள்ள சீமான் கோமாளிகள் ஹிட்லரை தனது வழிகாட்டியாக அறிவித்துள்ளனர்.

தவிர. ஹிட்லரின் நாஸிப் படைகள் வணக்கம் செலுத்தும் முறையில் மேடையில் நின்று வணக்கம் தெரிவித்து மாநாட்டை ஆரம்பித்தனர். இதையெல்லாம் காவல் துறை கண்ணாரப் பார்த்துக்கொண்டிருந்தது.”

 

 

hitlersalute.jpg

 

விகடன் பேட்டியில் சீமானின் சமாளிப்பு..

https://www.vikatan.com/news/tamilnadu/47596.html

 

திருச்சி மாநாட்டில் ஹிட்லர் படம் வைத்திருந்தீர்களே... என்ன காரணம்?

''அந்தப் படத்தை ஆர்வத்தில் சில தம்பிகள் வைத்துவிட்டார்கள். வழிகாட்டும் தலைவர்கள் படத்தில், புத்தர் படம்கூட வைத்திருந்தார்கள். நேற்று இலங்கையிலும் இன்று பர்மாவிலும் புத்தரின் பெயரால்தான் சிறுபான்மை மக்களை அழித்தொழிக்கிறார்கள் அதற்காக புத்தரை ஃபாசிஸ்ட் எனச் சொல்ல முடியுமா? மாநாடுகளில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகளை வைத்து அரசியல் முத்திரை குத்தத் தொடங்கினால், எல்லா அரசியல் கட்சிகளைப் பற்றியும் இப்படி ஆயிரம் அபத்தங்களை அடுக்க முடியும்.''

'சீமான், முருகன் வழிபாட்டில் தொடங்கி ஹிட்லர் வழிபாடு வரை செய்துகொண்டிருப்பதற்கு ஒரே காரணம் ஈழம் பிசினஸ் படுத்ததுதான்’ என்கிறாரே தி.மு.க முகாமைச் சேர்ந்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்?

''எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் பிசினஸ் செய்யும் கட்சியான தி.மு.க-வில் இருந்துகொண்டு இதைப் பார்த்தால்,  பிழையாகத்தான் தெரியும். தி.மு.க என்பது, கட்சி அல்ல; ஒரு தொழில்நிறுவனம். தேர்தல் நேரத்தில் நிதி கேட்பார்கள். வேட்பாளர் தேர்வு நேர்காணலின்போது, 'கட்சிக்கு எவ்வளவு நிதி கொடுப்பாய்?, தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்வாய்?’ என்றுதான் கேட்பார்கள். இப்படி தேர்தலை வைத்துத் தொழில் செய்யும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர், அனைத்தையும் வணிகமாகத்தானே பார்ப்பார். இத்தனைக்கும் ஈழத்தை வைத்து வியாபாரம் செய்ததே தி.மு.க-தான். ஆனால், ஈழத் தமிழர்களுக்கு தி.மு.க செய்த துரோகங்களால் அதன் ஈழ வியாபாரம் படுத்துவிட, இப்போது கடையைத் தொடர்ந்து நடத்த முடியாமல் டெசோ என்ற டம்மி அமைப்பைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

நான் ஹிட்லரை வைத்திருப்பது இருக்கட்டும். தி.மு.க தலைவர் தன் மகன் கருணாநிதிக்கு 'ஸ்டாலின்’ என ஏன் பெயர் வைத்தார்? 'ஸ்டாலின் ஒரு ஃபாசிஸ்ட்’ எனச் சிலர் சொல்கிறார்களே. மனுஷ்ய புத்திரன் இது பற்றி கேட்டுச் சொல்லட்டும். அப்படியே, கலைஞர் தொலைக்காட்சியில் ஹிட்லர் தொடரை ஏன் ஒளிபரப்பினார்கள் என்றும் கேட்டுச் சொல்லட்டும்.''
 

ஆரம்ப ஆர்வக்கோளாறுகள் பல இப்போது திருத்தப்பட்டுள்ளன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாகப்பட்டது.. வெள்ளையனே வெளியேறுன்னு.. கோசம் போடலாம்.. அது நிறவெறி ஆகாது.

ஹிந்தி எரிப்போம்.. அழிப்போம் என்று.. மொழிவெறி காட்டலாம்..  அது திராவிடக் கூலிக் கும்பல்களின்.. மொழிவெறி ஆகாது.

தனித் தமிழ்நாடு.. திராவிடருக்கு கேட்கலாம்.. அது.. பிரதேசவெறி ஆகாது.

கன்னடன்.. கர்நாடவை ஆளலாம்.. மலையாளி.. கேரளாவை ஆளலாம்.. தெலுங்கன்.. ஆந்திராவை ஆளலாம்.. குஜராத்தி குஜராத்தை ஆளலாம்.. சிங்களன் சொறீலங்காவை ஆளலாம்.. ஜேர்மனி.. ஜேர்மனை ஆளலாம்... அதெல்லாம் எந்த வெறியும் இல்லை.. திராவிடக் கும்பலுக்கு..

ஆனால்.. தமிழ் நாட்டை.. தமிழீழத்தை தமிழன் ஆளனும் என்பது தான் திராவிடக் கூலிகளும்.. அவர் தம் திராவிடக் குஞ்சுகளுக்கும்.. வெறியாத் தெரியுது.

இத்தனை ஆயிரம் ஈழத்தமிழரைக் கொல்ல சிங்களவனுக்கு.. ஆயுதமும்.. பயிற்சியும் வழங்கிய ஹிந்தியன் நல்லவன்.. பாகிஸ்தானி நல்லவன்.. இஸ்ரேலிய யூதன் நல்லவன்... அமெரிக்கன் நல்லவன்..

ஆனால்.. தமிழர்களுக்கு நேரடியாக எந்த பாதிப்பையும் உண்டு பண்ணாத ஹிட்லர் மகா கொடியவன். போங்கையா.. நீங்களும்.. உங்கட தத்துவங்களும். 

ஹிட்லர் மகா கொடியவராக இருக்கலாம்.. ஏன் அமெரிக்கன் அளவுக்கு அணுகுண்டு போடும் அளவுக்கு கொடியவராக இருக்கவில்லை.

ஹிட்லர் தன் மக்கள் நாடு என்று நல்ல சில கொள்கைகளையும் கொண்டிருந்தார்.. அதை இனங்காண்பது தவறல்ல.. அணுகுண்டு வீசிய அமெரிக்காவை ஜனநாயக நாடுன்னு இன்றும் கொண்டாடிக் கொண்டிருப்பவர்களை விட. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆசிய ஆபிரிக்க நாடுகளில் செய்த அட்டூளியங்களில் ஒரு வீதத்தைக்கூட ஹிட்லர் செய்யவில்லை என்பதே உண்மை.
அதே நேரம் யூதர்கள் ஜேர்மனியில் நடந்த நடத்தைகளினால் தான் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார் என்பதை ஏன் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் சிந்திக்கவில்லையென்பது கவலைக்குரிய விடயம்.

உலகப்போரில்  ஜேர்மனியை அழிக்க முனந்தவர்கள் யாரென்று சிந்தித்தால் அடிப்படை அரசியலின் சித்தார்ந்தம் புரியும்.

வட அமெரிக்காவில்  வசித்த செவ்விந்தியர் மீது பிரிட்டிஷ்  மேலாதிக்கம் செய்யாத கொடுமைகளையா ஹிட்லர் செய்தார்?

கருத்து எனும் போர்வையில் வரலாறுகளையும் உண்மைகளையும் தவற விடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கருத்து எனும் போர்வையில் வரலாறுகளையும் உண்மைகளையும் தவற விடாதீர்கள்.

உண்மை வரலாறுகளை தெரிந்தால் இப்படி  கருத்து இடுவார்களா ?

Link to comment
Share on other sites

பிற இனத்தவர்கள் தமிழ் நாட்டு மக்களின் மேல் சம்பல் அரைக்கும் போது 60 வருடத்துக்கு பிறகாவது ஒருவர் அவர்களை தோலுரித்து காட்டுவதற்கு பெயர் நாசி அல்லது அதற்கு மேலாகவும் இருக்கலாம்.கடைசி தமிழ் நாட்டு மக்கள்  தாங்கள் எங்கு இருக்கிறோம் என புரிந்தாலே போதுமானது.

கர்நாடகத்தவர்கள் கர்நாடகத்தை ஆள்கிறார்கள். தெலுங்கர்கள் தெலுங்கு தேசத்தை ஆள்கிறார்கள்.மலையாளிகள் மலையாளத்தை ஆள்கிறார்கள். தமிழர்கள் தம்மை ஆளவேண்டும் என கேட்பது எப்படி தேசிய வெறியாகும் என விளங்கவில்லை.ஏனைய மானிலத்தவர்கள் தமிழர்களுக்கு கிடைக்கும் அத்தனை சுதந்திரத்தையும் அனுபவிக்கலாம் என்று கூறுவது தேசிய வெறியா?? விளக்கம் தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

 

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆசிய ஆபிரிக்க நாடுகளில் செய்த அட்டூளியங்களில் ஒரு வீதத்தைக்கூட ஹிட்லர் செய்யவில்லை என்பதேண்மை.
அதே நேரம் யூதர்கள் ஜேர்மனியில் நடந்த நடத்தைகளினால் தான் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார் என்பதை ஏன் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் சிந்திக்கவில்லையென்பது கவலைக்குரிய விடயம்.

 உலகப்போரில்  ஜேர்மனியை அழிக்க முனந்தவர்கள் யாரென்று சிந்தித்தால் அடிப்படை அரசியலின் சித்தார்ந்தம் புரியும்.

 

ஜேர்மனியில் வசிக்கும் கு.சா. ஐயாவுக்கு கட்டாயம் வரலாற்றைப் பற்றி வகுப்பெடுத்திருப்பார்கள். ஆனால் ஹிட்லர் மேல் இருக்கும் கவர்ச்சியால் 6 மில்லியன் யூதர்களைக் கொடூரமாகக் கொன்றது ஒரு வீதமாகத் தெரிகின்றது. இந்தக் கணக்கின்படி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் 600 மில்லியன் மக்களை காலனியாதிக்கத்தில் கொன்றிருக்கவேண்டும். 

Link to comment
Share on other sites

இதற்கு கனடாவிசிட் புகழ் டொக்டர்ஷாலினி முகநூலில்  எழுதின இன்றைய பதிவு ஒன்றையும் அதற்கு கிடைத்த குறிப்பிட்ட எதிர்வினைகளையும் இணைத்தல் நன்று அவர்களின் சீமான் பற்றிய பார்வை எப்படிஇருக்கிறது என அறியலாம் 

 

இது டாக்டர் ஷாலினியின் பதிவு 

 

சீமான் என்றொரு ஆசாமி இருக்கிறார், சினிமாக்காரர், சினிமா உலகில் ஒரு கட்டபஞ்சாயத்துக்காரர், அவர் அரசியலில் ஒரு also ran என்பது வரை தான் எனக்கு தெரியும்.
நான் கனடா சென்று வந்த போது அங்கு பல ஈழதமிழர்கள் போரின் விபரீதத்தை பற்றி என்னிடம் சொன்னார்கள். பலர் போர் அநாவசியமானது என்பது பற்றியும், அவர்களுக்கு தலைவன் யார், அவர் மீதுள்ள அதிருப்திகள் என்ன என்பது பற்றியும் சொன்னார்கள்.
இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்ல வேண்டும்?
அவர்களுக்குள் இது பற்றி பேச சுதந்திரம் இல்லை, போருக்கு எதிராக பேசினால் இனதுரோகி என்று முத்திரை குத்தி, அப்படியே ஒதுக்கி விடுவது, இழிவு படுத்துவது, வாழ்க்கையை கஷ்டமாக்கிவிடுவது மாதிரியான பழிவாங்கும் நடவடிக்கைகளில் பெரும்பாலோர் ஈடுபடுவதால், தங்களுக்குள் புலம்ப வழி இல்லை. என்னை மாதிரி வெளியாள், அதுவும் மருத்துவர் என்பதால் என்னிடம் புலம்பினார்களோ என்னவோ......
Slice of life மாதிரியான பகிர்வுகள், சமூக மாற்றத்திற்கு தேவையான விவாத கருத்துக்கள் என்றால் நான் அவற்றை முகநூலில் எழுதுவது வழக்கம், அது போலவே கனடிய கருத்துக்களை நான் தொகுத்து எழுதிவிட- பெரிய எதிர்ப்பு சுனாமி கிளம்பியது. 
யதார்த்தமாக நான் எழுதியதை இவ்வளவு தீவிரவாதமாய் அணுக முடியுமா என்று எனக்கே புரியாத நிலை. அப்போது ஒரு நலன் விரும்பி என்னிடம் பேசினார், “மேடம் சீமானை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
உண்மையில் சீமான் எனும் அந்த மனிதனை பற்றி அப்போது எனக்கு பெரிய அபிப்ராயம் இல்லை. கொஞ்சம் கோமாளித்தனம்+போலி வீரம் உமிழும் ஒரு காமடி பீஸ் என்றே நான் நினைத்திருந்தேன்
ஆனால் அவர் சொன்னார், “அவர் தான் தமிழ்நாட்டின் எதிர்கால முதல்வர்”
நான் சிரித்தேன், “தமிழ்நாட்டு மக்களை பெம்பளத்தான்னு நினைக்காதீங்க சார்”
“உங்களுக்கு தெரியுது, ஆனா இங்க எல்லாரும் அவர் தான் தமிழர்களின் எதிர்காலம்னே நினைக்கிறாங்க....”
“அட பாவமே உங்க ஊர்ல அத்தனை பேரும் அவ்வளவு பெம்பளத்தானா?!”
அதன் பிறகு நான் மிஸ்டர் சீமானை கவனித்துக்கொண்டே இருக்கிறேன். தமிழ்நாட்டின் தலைவர் எனும் பிரதிநிதித்துவம் பெறும் பிரத்தியேக சிறப்பு ஏதாவது அவரிடம் உண்டா என்று திறந்த மனதுடனே நான் அவரை அணுகுகிறேன்.
ஆனால் - ஒரு புரொடியூசரிடம் தன் அசட்டு கதையை மிகுந்த narcissismத்தோடு தானே ரசித்து ரசித்து வளர்த்துக்கொண்டே போகும் ஒரு மொக்கை புதுமுக டைரக்டர் போலவே எனக்கு தேன்றுகிறார்.
இவரை போய் மாவீரன், மஹானுபாவன்,  எழுச்சிதமிழன், எதிர்கால தமிழர்தலைவன் என்றெல்லாம் எவரும் நினைத்தால்.... very poor prognosis தான் போங்கள்!!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் சாலினி ஒரு மணோதத்துவ நிபுணர் அவர் எல்லாவற்றையும் அதனூடே பார்ப்பார்  ஆனால் சாதாரண வாக்காளன் பிளஸ் மனிதன் அரிசி பொங்கப்பானை அண்டா குண்டா பிரியாணி குக்கர் சாராயம் இந்த இழவுகளையெல்லாம் ஓட்டுப்போடுவதற்காக எதிர்பார்க்கிறான் எண்டு சொன்னால் சாலின் என்னைப் பெம்பளத்தான் எனக்கூறுவார்.

தமிழ் நாட்டில் யார் ஆண்டாலும் இந்த புறியாணிபொட்டலத்துக்கு ஓட்டுப்போடுபவர்களுக்குக் கவலை இல்லை ஆகவே அவர்கள் பொட்டலத்துக்குத் தொடர்ந்து ஓட்டுப்போடுவார்கள் இல்லாதுவிட்டால் சென்னையில் கூப்பிடு தூரத்திலிருக்கும் ஆர்கே நகரில் தினகரன் வென்றிருக்க வாய்ப்பே இல்லை காரணம் அரசியலில் அடிமட்டச் சாராய புறியாணிப்பொட்டலத் தொண்டர்கள து எதிர்பார்ப்பெல்லாத்தையும் தவிடுபொடியாக்கி தினகரன் வென்றிருக்கிறர், இதைவிடக்கேவலம் ஆர் கே நகர் ஜெயலலிதாவின் தொகுது சென்னைக்கு அருகிலுள்ள அந்த முதல்வர் தொகுதியிலேயே அடிப்படை வசதிகள் எதுவுமில்லாது குப்பைமேடு சுற்றிவரக் காட்சியளிக்கும் பகுதி அது எல்லாம் வல்ல ஜெயலலிதா தேர்தலுக்குப்பின்பு வெள்ளத்துக்கு  அங்குபோனதாக நினைவு அவர்கள் அடிக்கிற காசில் மாதாந்தம் ஒரு விகிதம் செலவளித்திருந்தாலே அத்தொகுதியின் நிலையை மாற்றியிருக்கலாம் அபராஜிதன் சென்னையில்தானே வாழ்கிறீர்கள் ஒருகை போய்வாருங்கள் ஆர் கே நகருக்கு கையோட இயலுமாகில் சாலினியையும் கூட்டிப்போங்கள் அப்போ தெரியும் யார் பெம்பளத்தான் என.

இப்போது வருகுது திருவாரூர் இடைத்தேர்தல் கருனாநிதியின் தொகுதி அப்பிரதேசம் அதைவிடக்கேவலம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஜேர்மனியில் வசிக்கும் கு.சா. ஐயாவுக்கு கட்டாயம் வரலாற்றைப் பற்றி வகுப்பெடுத்திருப்பார்கள். ஆனால் ஹிட்லர் மேல் இருக்கும் கவர்ச்சியால் 6 மில்லியன் யூதர்களைக் கொடூரமாகக் கொன்றது ஒரு வீதமாகத் தெரிகின்றது. இந்தக் கணக்கின்படி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் 600 மில்லியன் மக்களை காலனியாதிக்கத்தில் கொன்றிருக்கவேண்டும். 

நிற்சயமாக ....
6000 மில்லியனை ஒரே போரில் கொல்லவில்லை 
பிரிடிஷ் ஏகபத்தியாயத்தின் தொடர்ச்சியாக இன்றும் மக்கள் 
இறந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

மூன்றாம் உலகு .. முதலாம் உலகு என்ற பாகுபாடே 
முதலாம் உலகு மேற்கொண்ட பொருளாதார சுரண்டலால் 
வந்துதான் அனைத்து வளங்களும் சூறையாடப்பட்டு 
தொடர்ச்சியான சுரண்டலுக்கும் வழிகோலி உள்ளூர் 
கலவரங்களையும் .... இன மோதல்களையும் உருவாக்கி 
சென்றவர்கள் பிரிடிஷ் ஏகாபத்திய காரர்கள்தான்.

ஈழத்தமிழரின் படுகொலையில் அவர்களுக்கும் நிறைய பங்கு உண்டு 
இல்லாத தேசங்களை உருவாக்கி பாரிய போர்களை தொடர்ச்சியாக 
வழிகாட்டி வந்தவர்கள் ...... இன்றைய சிரிய போரின் அடிப்படை பிரச்சினை என்ன?
அத்தனை கொலைக்கும் அத்திவாரம் போட்டது பிரிட்ஸின் எல்லை பிரிப்புதான். 

 

சீமான் மீது ஆரம்பத்தில் சேறுபூச தொடங்கியதால் 
கைவிடமுடியாத நிலையில் பலரும் ஆதி நுனி தெரியாது 
சேறுபூசவது போலவே பிரிடிஷ் ஏகபத்திய சுரண்டலும் கொலைகளும் தொடர்கின்றன.

மற்றைய இனங்களை அவதூறாக சீமான் தூற்றுவதில்லை 
அவர் தூற்றுகிறாரோ இல்லையோ 
தூற்றவேண்டும் எனும் எதிர்பார்ப்புடன் பலர் தவிக்கிறார்கள். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, அபராஜிதன் said:

இதற்கு கனடாவிசிட் புகழ் டொக்டர்ஷாலினி முகநூலில்  எழுதின இன்றைய பதிவு ஒன்றையும் அதற்கு கிடைத்த குறிப்பிட்ட எதிர்வினைகளையும் இணைத்தல் நன்று அவர்களின் சீமான் பற்றிய பார்வை எப்படிஇருக்கிறது என அறியலாம் 

 

இது டாக்டர் ஷாலினியின் பதிவு 

இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் அல்லவா...

வி சி கட்சி திமுகவுடன், காங்கிரசுடன் கூட்டணி போட முயல்கிறது.

வேறு என்ன எதிர்பார்க்க முடியும், அந்த அம்மணியிடம் இருந்து?

27 வருடங்களுக்கு முன்னர் கட்சி ஆரம்பித்த இம்ரான் கான் குறித்தும் எதிர்க்கடசிகள் இப்படி தான் சொன்னார்கள். 

பிளே பாய் அரசியலுக்கு லாயக்கு ஆகி வர முடியுமா என்று நக்கல் அடித்தார்கள். இது கிரிக்கட் இல்லை ராஜா, நினைத்தவுடன் சிக்ஸ்ர் அடிக்க என்கிறார்கள்.

அவர் அமைதியாக ஆனால் தெளிவுடன், உறுதியாக காத்திருந்தார்... 27 வருடங்கள். இன்று மக்கள் அவரை பிரதமராக்கி உள்ளனர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத்தமிழர்களுக்கு (எல்லோருமில்லை) ஈழத்தானைக்கண்டால் எப்பவுமே இளக்காரம் அப்படியானவர்களது உறவாடல்களோ என்னவோ அபராஜிதனுக்கு தனது சமூகத்தை யாராவது பழித்தால் குசியாகிவிடுவார் சென்னையில் நீண்ட நாதள் வாழ்கிறார் இதனாலும் அவரது நட்புவட்டம் பத்திரிகையாளர் பத்தி எழுத்தாளர்கள் இவர்களைச்சுற்றியிருப்பது காரணமாகலாம். அதுசர் ஒரு கேள்வி உங்களிடம் அண்மையில் நீங்கள் கூறினீர்கள் இறுதிப்போரின்போது தாயகத்திலிருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு அகதி அந்தஸ்து கோராது வாழ்கிறேன் என சென்னையில் கியூ பிரிவுப் பொலீசாரின் கண்களில் மண்தூவுவது சிரமம் அப்படியாகில் என்ன செல்வாக்கில் அங்கு வாழ்கிறீர்கள் ஒன்றில் மேற்படியாருடன் தொடர்பிருக்கவேணும் இல்லையேல் நிறயப்பணமிருக்கவேணும் இதில் எதுசரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Elugnajiru said:

இந்தியத்தமிழர்களுக்கு (எல்லோருமில்லை) ஈழத்தானைக்கண்டால் எப்பவுமே இளக்காரம் அப்படியானவர்களது உறவாடல்களோ என்னவோ அபராஜிதனுக்கு தனது சமூகத்தை யாராவது பழித்தால் குசியாகிவிடுவார் சென்னையில் நீண்ட நாதள் வாழ்கிறார் இதனாலும் அவரது நட்புவட்டம் பத்திரிகையாளர் பத்தி எழுத்தாளர்கள் இவர்களைச்சுற்றியிருப்பது காரணமாகலாம். அதுசர் ஒரு கேள்வி உங்களிடம் அண்மையில் நீங்கள் கூறினீர்கள் இறுதிப்போரின்போது தாயகத்திலிருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு அகதி அந்தஸ்து கோராது வாழ்கிறேன் என சென்னையில் கியூ பிரிவுப் பொலீசாரின் கண்களில் மண்தூவுவது சிரமம் அப்படியாகில் என்ன செல்வாக்கில் அங்கு வாழ்கிறீர்கள் ஒன்றில் மேற்படியாருடன் தொடர்பிருக்கவேணும் இல்லையேல் நிறயப்பணமிருக்கவேணும் இதில் எதுசரி

 

இங்கிருந்து புஹ்தகம் எழுதி 
வெளியிட்ட பலரையே நாம் பார்த்திருக்கிறோம் 

சொந்த பிழைப்புக்கு 
இனத்தை விக்கிறதுதான் அவர்கள் வேலை.

இதில் சீமானை வீழ்த்தவும் சேறு அடிக்கவும் ஒரு குரூப் வேற.

சீமான் சொல்வது முழுதும் பொய் என்றால் கூட .........
ஊழல் செய்து ...... கொள்ளை அடித்து நாடடையே நாறடித்த 
நாதரிகள் அரசியல் செய்யும் ஊரில் 
பொய் சொல்லுவதுதான் பெரிய குற்றமா ? 

அந்த நாதாரிகள் பற்றி ஏன் இவர்கள் யாரும் ஏதும் எழுதுவதில்லை?
சொந்த பிழைப்புக்கு நக்குவதை தவிர வேறு என்ன காரணம்?

ஒரு வேளை சீமான் முதல்வராகி விட்டால் ....
சீமானுக்கு போய்  காவடி எடுக்கும் கூடடமும் இதுதான் 
நாம் அப்போதும் இங்கே சும்மாதான் இருப்போம். 


புலிகள் உச்சத்தில் இருந்த காலத்தில் 
புலிகளுக்கு காவடி ஆடி 
சொந்த பிழைப்பை பார்த்த அதே கூடடம்தான் 
எழுத்துக்களில் ஆயுதம் செய்து புத்தகம் விக்கிறார்கள் 

நாம் புலிகளிடமும் அடிவாங்கி ....
ஆமியிடமும் வாங்கி தான் வந்திருக்கிறோம்.

அதுக்காக அடித்தார்கள் என்பதால் கூட 
புலிகள் மீது சேறு அடித்து சொந்த இனத்தை விக்கும் 
புத்தி வரவில்லை ..... வர போவதும் இல்லை.

இந்த நாதாரிகள் வாழும் இனத்தை வைத்து இப்படி ஒரு 
விடுதலை போரை எப்படி செய்தார்கள் என்ற வியப்பு மட்டுமே. 

Link to comment
Share on other sites

1 hour ago, Elugnajiru said:

இந்தியத்தமிழர்களுக்கு (எல்லோருமில்லை) ஈழத்தானைக்கண்டால் எப்பவுமே இளக்காரம் அப்படியானவர்களது உறவாடல்களோ என்னவோ அபராஜிதனுக்கு தனது சமூகத்தை யாராவது பழித்தால் குசியாகிவிடுவார் சென்னையில் நீண்ட நாதள் வாழ்கிறார் இதனாலும் அவரது நட்புவட்டம் பத்திரிகையாளர் பத்தி எழுத்தாளர்கள் இவர்களைச்சுற்றியிருப்பது காரணமாகலாம். அதுசர் ஒரு கேள்வி உங்களிடம் அண்மையில் நீங்கள் கூறினீர்கள் இறுதிப்போரின்போது தாயகத்திலிருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு அகதி அந்தஸ்து கோராது வாழ்கிறேன் என சென்னையில் கியூ பிரிவுப் பொலீசாரின் கண்களில் மண்தூவுவது சிரமம் அப்படியாகில் என்ன செல்வாக்கில் அங்கு வாழ்கிறீர்கள் ஒன்றில் மேற்படியாருடன் தொடர்பிருக்கவேணும் இல்லையேல் நிறயப்பணமிருக்கவேணும் இதில் எதுசரி

நான் வாழ்வது சென்னையில் இல்லை இதுவரையும் சென்னை / இந்தியா போனதும் இல்லை

 

என் இனத்தை தலைவரை மற்றும் இயக்கத்தை போராட்டத்தை விமர்ச்சிப்பவர்களுடன் என் கருத்துகளால் கடுமையாக பதிலடி கொடுக்கிறேன்  எனக்கு தெரிந்த விடயங்களை வைத்து.. அதற்காக அவர்களிற்கும் நாம் தமிழர்களிற்குமிடையிலான கருத்து மோதல்களில் மௌனமாக கடந்து விடுவேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, அபராஜிதன் said:

நான் வாழ்வது சென்னையில் இல்லை இதுவரையும் சென்னை / இந்தியா போனதும் இல்லை

அட பயப்பிடாதீங்கோ...

எழு ஞாயிறு சும்மா தாமசுக்கு.. அப்படி கேட்டார்.. :grin:

*****

தமிழகத்து போலி அரசியல் வாதிகள், கல்வி அறிவு இல்லாத அபத்த அரசியல் வாதிகள் மத்தியில் சீமானின் அறிவு பூர்வமான பேச்சு எனக்கு வியப்பினை அளிக்கிறது.

லயன் கிளப் போன்ற அறிவு சார் கூட்டம்.... கல்லூரிகள், பாடசாலைகள் அவரை தமது விழாவுக்கு அழைப்பு விட ஓர் வலுவான காரணம் உண்டு. 

இந்த அழைப்பு ஸ்டாலினுக்கோ, வைகோவுக்கு போகாது. ஏனெனில் எங்கே, என்ன பேச வேண்டும் என பலருக்கு புரிவதில்லை.

நீண்ட பேச்சின் போது, களைப்பினால்,  ஒரு flow வில், toungue slip காரணமாக சில சில்லறை தவறுகள் விட்டிருக்கலாம். அதனை வேண்டுமென்றே பெரிதாக்கும் எதிராளிகள் குறித்த கவலைப் பட வேண்டியதில்லை என்பதே என் கருத்து. 

அதுவே நான் சீமானை ஆதரிக்கக் காரணம்....

அவர் புலிகளை ஆதரிக்கிறார், பிரபாகரனை தாங்கிப் பிடிக்கிறார் என்பதெல்லாம் எனக்கு பெரியதாக படவில்லை.

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் அல்லவா...

வி சி கட்சி திமுகவுடன், காங்கிரசுடன் கூட்டணி போட முயல்கிறது.

வேறு என்ன எதிர்பார்க்க முடியும், அந்த அம்மணியிடம் இருந்து?

27 வருடங்களுக்கு முன்னர் கட்சி ஆரம்பித்த இம்ரான் கான் குறித்தும் எதிர்க்கடசிகள் இப்படி தான் சொன்னார்கள். 

பிளே பாய் அரசியலுக்கு லாயக்கு ஆகி வர முடியுமா என்று நக்கல் அடித்தார்கள். இது கிரிக்கட் இல்லை ராஜா, நினைத்தவுடன் சிக்ஸ்ர் அடிக்க என்கிறார்கள்.

அவர் அமைதியாக ஆனால் தெளிவுடன், உறுதியாக காத்திருந்தார்... 27 வருடங்கள். இன்று மக்கள் அவரை பிரதமராக்கி உள்ளனர்.  

இவர் வி்சி்க இல்லை பெரியாரிஸ்ட் திமுக விசுவாசி நடுநிலை என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருப்பவர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.