Jump to content

‘மெல்ல’ வரும் கபளீகரம்


Recommended Posts

‘மெல்ல’ வரும் கபளீகரம்
Menaka Mookandi /

நிகழ்காலத்தில், நாம் வாழும் இந்த நொடி, பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார மாற்றங்களைக் கண்டுவருகிறது. காலமும் இடைவெளியும், நகரம், கிராமம் என்றில்லாமல், மாற்றங்கள் பலவற்றை உருவாக்கி வருகின்றது.  

image_3f2ec0baa9.jpg

இவ்வாறான மாற்றங்களால், எமது நாட்டுக்குள்ளேயே இரண்டு உலகங்களைக் காணும் பாக்கியம் கிட்டியுள்ளது எனலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவ்விரு உலகங்களில் ஒன்றை, மகிழ்வுடன் கண்ணோக்க முடியாது. காரணம், அந்த உலகத்தில், வறுமை, வேதனை, பசி, பட்டினியென, பல்வேறு பிரச்சினைகளுடன் வாழும் மக்களைத் தான் காணக்கிட்டும். மறுபுறம், வானுயர்ந்த கட்டடங்கள், எண்ணிலடங்காத வாகனங்கள், கஷ்டமென்பதே தெரியாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களைக் காணலாம். இவ்விரு உலகங்களுக்கும் இடையிலான இடைவெளியை, எவராலும் அடைக்க முடியாதளவுக்குப் பரந்து காணப்படுகிறது.   

இவ்வாறான நிலைமைக்கு மத்தியில், இலங்கை மற்றுமொரு பாரிய இனப்பரம்பல் மாற்றத்தைக் கண்டு வருகின்றதென்பதைப் பற்றித்தான், இங்கு நான் விவரிக்க முனைகிறேன். வடக்கில், பிரதானமாக முல்லைத்தீவு மாவட்டத்தில், மாகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துமாறு கோரி, முல்லைத்தீவில் நேற்று முன்தினம், மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியொன்று நடத்தப்பட்டதென்பதை அனைவரும் அறிவர்.   

ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு நடத்திய இந்தப் பேரணியின் போது, வடக்குக்கான மகாவலித் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமென, ஜனாதிபதியிடம் மகஜர் கையளிக்கப்பட்டதோடு, குறித்த அபிவிருத்தித் திட்டத்தால், முல்லைத்தீவின் கொக்கிளாய் உட்பட 34 தமிழ்க் கிராமங்கள் பறிபோகக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.   

இவ்வாறான பிரச்சினையானது, வடக்கில் குறிப்பாக முல்லைத்தீவில் மாத்திரமன்றி, வடக்கின் ஏனைய பிரதேசங்களிலும் மேலதிகமாக கிழக்கு மாகாணத்திலும் எதிர்நோக்கப்படுகிறது. தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள மற்றும் முஸ்லிம் குடியேற்றங்கள், முஸ்லிம் பிரதேசங்களில் தமிழ் மற்றும் சிங்களக் குடியேற்றங்களென, அன்றாடம் இவ்வாறான குடியேற்றப் பிரச்சினைகள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன. இப்பிரச்சினையால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், இவ்வாறான பிரச்சினைகளுக்கே உரிய மாகாணங்களாகவும் அனைவராலும் அறியப்படும் அளவுக்கு, மாற்றுக் குடியேற்றங்கள் அரங்கேறி வருகின்றன.   

image_28c85cf1c0.jpg

ஆனால், இவ்வாறான குடியேற்றங்கள் மற்றும் இனப் பரம்பல்கள், அவ்விரு மாகாணங்களில் மாத்திரம் இடம்பெற்று வருவதில்லை என்பதே உண்மை. எங்களது நாட்டைப் பொறுத்தவரையில், தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களென, நாங்கள் எங்களுக்குள்ளேயே இடங்களை மாற்றிக் குடியேற்றங்களை மேற்கொள்வது உள்வீட்டுப் பிரச்சினையாகவே பார்க்கப்படும். ஆனால், நாட்டுக்கு வெளியிலிருந்து வந்து, எமது நாட்டில் குடியேறி, நான்கு இனத்தவர்களுக்கு மேலதிகமாக ஐந்தாவதாகவோ அல்லது ஆறாவதாகவோ ஓரினம் பரவலடைவதென்றால், அது எமது மொத்த நாடும் எதிர்நோக்கும் பிரச்சினையில்லையா?   

இன்று எமது நாட்டின் பிரதான நகரமான கொழும்புக்குள் காலடி எடுத்து வைத்தால், எமது நாட்டுக்கே உரித்தான தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களைப் பார்க்கக் கிடைப்பதை விட, சீனர்கள், கொரியர்கள், மியான்மார் நாட்டினரையே அதிகமாகப் பார்க்கக் கிடைக்கின்றது. கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபடுவோர், அலுவலகப் பணிகளில் பங்காற்றுவோரென மாத்திரமில்லாமல், கொழும்பிலுள்ள பிரபல சர்வதேசப் பாடசாலைகளுக்குச் சென்று பார்த்தால், அங்கு கல்வி கற்கும் மாணவர்களின் 75 சதவீதமானவர்களாக, சீனர்கள் மற்றும் கொரியர்களாகவே காணப்படுகின்றனர். இது தான், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திகள் கொண்டுவந்திருக்கும் பாரிய மாற்றமாகும்.   

image_0ace6af173.jpg

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பணியாற்றுவதற்காக, 6,338 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவற்றில் 3,329 வெற்றிடங்கள், மத்திய அரசினால் நிரப்பப்பட வேண்டியுள்ளதாகவும் ஏனைய 3,009 வெற்றிடங்களை, மாகாண அரசு நிரப்பவேண்டி உள்ளதாகவும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்குரிய தகைமை, வடக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு இல்லாமையால், வெளி மாவட்டங்களிலிருந்து பணியாளர்களை வரவழைத்து, அவ்வெற்றிடங்களை நிரப்பவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், உரிய தகைமையுள்ளவர்கள், வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவதால், உரிய மாவட்டங்களுக்குள்ளேயே அவ்வேலைவாய்ப்புகளைப் பகிர்ந்தளிக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.   

இதேவேளை, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, வேலைவாய்ப்பற்றுள்ள இளைஞர் - யுவதிகளுக்கு வழங்க, வெற்றிடங்கள் இல்லையென்றும், ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்கக்கூடிய சில அரச நிறுவனங்களில், மூவாயிரத்துக்கும் அதிகமானோர் பணியாற்றுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.   
அத்துடன், இலங்கையிலுள்ள தனியார் நிறுவனங்களில், பாரியளவு வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் வெளிநாடுகளுக்குச் சென்று உழைப்பதிலும் பார்க்க, இவ்வாறான நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் பணியாற்ற முடியுமென்றும் கூறியிருந்த அமைச்சர், இருப்பினும் எமது நாட்டு இளைஞர், யுவதிகள், இங்கு பணியாற்றுவதைக் கௌரவக் குறைவாகக் கருதுவதாகவும், வேலைவாய்ப்பை வழங்க முன்வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்ைமயில் பலர் இல்லையென்றும், இதனால், சீனா, இந்தியா, மியான்மார் போன்ற நாடுகளிலிருந்து வரவழைத்து வேலைவாங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.   

அமைச்சரது இந்தக் கருத்துத் தொடர்பில் அவதானிக்குமிடத்து, அதில் உண்மையில்லை என்று கூறிவிட முடியாது. காரணம், வடக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால், அங்கு காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு, போதியளவு இளைஞர் - யுவதிகள் இல்லையென்றில்லை. இருப்பினும், அங்கு வேலைவாய்ப்பற்றுள்ளவர்களில் பலருக்கு, முதலமைச்சர் கூறியதைப் போன்று தகைமையில்லை அல்லது தகைமையிருந்தும், தன்மானம் மற்றும் கௌரவப் பிரச்சினையால், சில தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை என்பதே உண்மை.   

image_883ab55cfa.jpg

இதுவே, கொழும்பிலும் நடக்கிறது. கட்டுமானப் பணிகள், சுத்திகரிப்புப் பணிகள் மற்றும் சில நிர்மாணப் பணிகளில் ஈடுபடுவதற்கு, வேலைவாய்ப்பற்றிருக்கும் இலங்கையின் இளைஞர் - யுவதிகள் விரும்புவதில்லை. இவ்வாறான தொழில்களுக்கு, அதிக சம்பளம் கிடைக்கின்ற போதிலும், தன்மானம் மற்றும் கௌரவப் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்கள் எவரும் இவ்வாறான பணிகளில் ஈடுபட முன்வருவதில்லை. இதனால், இவ்வாறான பணிகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்திலுள்ள நிறுவனங்களும் அரசாங்கமும், வெளிநாடுகளிலிருந்தேனும் ஊழியர்களை வரவழைத்து, பணிகளை இனிதே நிறைவுசெய்யவே முயல்கின்றது.   

இதனால் தான், இன்று கொழும்பு நகரம், வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்துக்கு உள்ளாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் அவர்கள், எங்கு சென்றாலும் அவர்கள், எதிலும் அவர்களென, சீனர்களும் கொரியர்களும், மியான்மியர்களுமென, கொழும்பில் முன்னெடுக்கப்படும் பாரிய மற்றும் சிறியரக அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்திலும், அவர்களே நிரம்பியுள்ளனர். இது, வடக்கு, கிழக்கு உட்பட ஏனைய மாவட்டங்களுக்கும் வியாபிக்கும் நாள் தொலைவிலில்லை.   

இது இவ்வாறிருக்க, மலையகத்தையும் குறிப்பாக தோட்டத் தொழில்களைச் செய்வதிலும், வெகு விரைவில் வெளிநாட்டவர்களை எதிர்ப்பார்க்கலாமென்ற நிலைமையொன்றும், தற்போது உருவாகி வருகின்றது. தோட்டத் தொழிலாளர்களாகப் பணியாற்றுவதில், இளைஞர் - யுவதிகள் காண்பித்துவரும் வெறுப்பு, அவர்களை நகரங்கள் நோக்கி நகரச் செய்கின்றது. இதனால், தோட்டத் தொழிலாளர்களாகப் பணியாற்றக்கூடிய ஆள்புலம் இல்லாமல் போகின்றது. தற்காலத்திலும், சில தோட்டங்கள் இந்தப் பிரச்சினையை எதிர்நோக்கித்தான் வருகின்றன.

இதனால், இப்பிரச்சினையை முழுமையாக எதிர்கொள்ளும் போது, அதிலிருந்து தவிர்த்துக் கொள்வதற்காக, முன்னைய அரசாங்கத்திலிருந்து பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதில் பிரதானமாக, வியட்னாம் நாட்டைச் சேர்ந்தவர்களைத் தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துவருவதற்குரிய பேச்சுகளும் அடிபட்டுக்கொண்டிருக்கின்றன. இருப்பினும், இது தொடர்பான இறுதி முடிவுகளோ அல்லது அறிவிப்புகளோ, இதுவரை வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.   

 

இவற்றையெல்லாம் நோக்கும் போது, மாற்றங்களும் மன எண்ணங்களும், எங்களை எங்கு கொண்டுபோய் சேர்த்துக்கொண்டிருக்கின்றன என்பதை, எம்மால் உணர முடியாதிருந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. எமக்குள்ளே நாம் சண்டையிட்டுக்கொண்டும் போர்க்கொடி ஏந்திக்கொண்டும் இருக்கின்றோமே தவிர, அதிலிருந்து விடுபட்டு, எம்மைச்சூழ என்ன நடந்துகொண்டிருக்கின்றதென்பதை உணர மறந்துவிடுகிறோம்.   

மாற்றங்கள், அபிவிருத்திகள் என்பவை எமக்கு எவ்வளவு முக்கியமோ, அதைவிட, எமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதும் முக்கியம். கொழும்பிலிருந்து தெற்கை நோக்கி, குறிப்பாக காலி, ஹம்பாந்தோட்டை வரை வியாபித்திருக்கும் வெளிநாட்டுப் பணியாளர்களின் இருப்பு, ஏனைய மாவட்டங்களை நோக்கி நகரும் காலம் வெகு தொலைவிலில்லை. தொழிலற்று, வாழ முடியாத நிலைமையில் சிக்கித் தவிப்பதை விட, கிடைக்கும் தொழிலைத் தற்காலிகமாகவேனும் செய்துவந்தால், இந்த நிலைமை தோன்றுவதற்கோ அல்லது இனியும் வியாபிப்பதற்கோ வாய்ப்பில்லை அல்லவா?

அன்று சுதந்திரம் வேண்டுமென்பதற்காக வெளிநாட்டவர்களை விரட்டியடித்த நாம், இன்று எதற்காக அதே வெளிநாட்டவர்களை வரவழைத்துக்கொண்டிருக்கிறோம் என்பது குறித்துச் சிந்திக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இனியேனும் விழித்துக்கொள்வோம்; எமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வோம்.   

படப்பிடிப்பு: ஷெஹான் குணசேகர    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மெல்ல-வரும்-கபளீகரம்/91-220995

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.