Jump to content

தயாளு அம்மாள் திடீர் சுகவீனம்.. மருத்துவமனையில் அனுமதி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

à®®à¯à®à¯à®à¯à®¤à¯ திணறலà¯

தயாளு அம்மாள் திடீர் சுகவீனம்.. மருத்துவமனையில் அனுமதி.

திடீர் உடல்நல குறைவு காரணமாக, தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தயாளு அம்மாளுக்கு 82 வயதாகிறது. சிறிது காலமாகவே அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதனால் கருணாநிதி கட்சியிலிருந்து ஒதுக்க ஆரம்பித்த காலத்திலேயே தயாளு அம்மாளுக்கும் உடல் நலம் சரியில்லாமல் போனது.

கருணாநிதி சென்னை, காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி கொண்டிருந்தபோது தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வந்தார். அப்போதும் அவர் வீல் சேரில்தான் அழைத்து வரப்பட்டார்.

எனினும், ஸ்டாலின் வேட்பு மனுதாக்கல் செய்தபோது தயாளு அம்மாள் விபூதி வைத்து ஆசி கூறி அனுப்பினார். இந்நிலையில், நேற்றிரவு தயாளு அம்மாளுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சென்னை ஆயிரம் விளகுகு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தயாளு அம்மாளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து ராஜாத்தி அம்மாள், மகள்கள் செல்வி, கனிமொழி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.

கருணாநிதி மறைவுக்குப் பின் பெரும் சோகத்தில் இருந்த குடும்பத்தினர். ஸ்டாலினுக்கு கிடைத்த புதிய பொறுப்பையடுத்து, நேற்றுதான் அதிலிருந்து விடுபட முயன்றார்கள். ஆனால் தற்போது தயாளு அம்மாவின் உடல்நலம் அறிந்து மீண்டும் அக்குடும்பத்தார் சோகம் நிறைந்து காணப்படுகின்றனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/dhayallu-ammal-allowed-apollo-hospital-due-respiratory-problem-328484.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.