Jump to content

‘உலகின் அதிவேக மனிதன் உசைன் போல்ட்’ கால்பந்து வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறல்


Recommended Posts

‘உலகின் அதிவேக மனிதன் உசைன் போல்ட்’ கால்பந்து வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறல்

 

 

 
usain%20bolt

பயிற்சியில் உசைன் போல்ட். | ஏ.எப்.பி.

உலகின் அதிவேக மனிதன், ஒலிம்பிக் தங்கங்கள் வென்ற நாயகன், உசைன் போல்ட் கூட தன்னால் தொழில்பூர்வ கால்பந்தாட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால் இந்த வாரத்தில் ஒரு அமெச்சூர் அணியுடன் அவர் முதல் போட்டியில் களமிறங்க வாய்ப்பிருப்பதால் கடுமையாக தன் உடற்தகுதியை மேம்படுத்த போராடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

8 முறை ஒலிம்பிக் சாம்பியனான உசைன் போல்ட்டுக்கு ஆஸ்திரேலியாவின் செண்ட்ரல் கோஸ்ட் மரைனர்ஸ் அணி அவரது கால்பந்து கனவை நிறைவேற்ற வாய்ப்பளித்துள்ளது. இதனையடுத்து தன் உடற்தகுதியை அதிகம் எதிர்பார்க்கும் கால்பந்தாட்டத்துக்காக மேம்படுத்த கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் உசைன் போல்ட்.

சிட்னி நகருக்கு வடக்குப்பகுதியில் உள்ள கோஸ்போர்டில் தன் அணியின் மற்ற வீரர்களுடன் சரிசமமாகத் திகழ போராடி வருகிறார்.

சிறிது உடற்பயிற்சிக்குப் பின் கொஞ்சம் ஜாக்கிங் போனார், பிறகு பந்துகளை அடிக்கும் பயிற்சியில் ஈடுபட்டார். அவர் பந்துகளை பாஸ் செய்வது சரியாக இருந்தாலும், அவரால் எதிர்பார்ப்புக்கு இணங்க ஓட முடியவில்லை என்கிறது அணி நிர்வாகம்.

usain%20bolt2jpg

உசைன் போல்ட். | ஏ.எப்.பி.

 

கால்பந்தாட்டத்துக்கான உடற்தகுடி இல்லாததால் மற்ற வீரர்களை விட உசைன் போல்ட் விரைவில் களைப்படைந்து ஓய்வுக்குச் சென்று விடுகிறார்.

நிறுத்தி நிறுத்தி ஆட வேண்டியதால் தனக்கு அது பெரும் போராட்டமாக இருப்பதாக உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.

“பெரிய சவால் என்னவெனில் நின்று பிறகு கொண்டு செல்ல வேண்டும், பிறகு நிற்க வேண்டும் என்ற முறை எனக்கு போராட்டமாக இருக்கிறது, ஸ்பீட் பிக் செய்ய வேண்டும் பிறகு குறைக்க வேண்டு, பிறகு மீண்டும் ஸ்பீட் எடுக்க வேண்டும் என்பது எனக்கு பழக்கமில்லாத ஒன்று, ஆனாலும் எல்லாமே பயிற்சிதான், இதற்கு நான் தயாராகிவிட்டேன். இப்போது வழிமுறைகளக் கற்று விட்டேன், இனி இப்படியே மேம்படுத்த வேண்டியதுதான்” என்றார் உசைன் போல்ட்.

குறித்த காலத்தில் ஏ-லீக் வீரராக உசைன் போல்ட்டைக் களமிறக்க மரைனர்ஸ் அணி தயாராக உள்ளது.

சீசனுக்கு முந்தைய நட்பு முறை கால்பந்தட்டம் வரும் வெள்ளியன்று நடைபெறுகிறத், அதில் முதல் முறையாக ஒரு போட்டி சார்ந்த ஆட்டத்தில் களம் காணவுள்ளார் உசைன் போல்ட். ஆனால் இதில் பதிலி வீரராக களம் காணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிளப் பயிற்சியாளர் மைக் முல்வி கூறும்போது, “வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் சில நிமிடங்கள் அவர் ஆடுவார் என்றே கருதுகிறேன்” என்றார், இந்த நட்பு முறை ஆட்டம் பே-டிவியில் நேரலையாக ஒளிபரப்பாகிறது உசைன் போல்ட் இதில் ஆடுவதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பயிற்சியாளர் மேலும் கூறுகையில், “அவர் நன்றாக ஆடுகிறார், ஆனால் நாங்கள் அவரைச் செய்யச் சொல்லும் விஷயங்களை அவர் கடந்த சில ஆண்டுகளாகச் செய்ததில்லை என்பதுதான். அத்லெட்டிக் போட்டிகளுக்கிடையே கால்பந்து ஆடியிருக்கிறார், அவருக்கு ஒரு அடிப்படையான கால்பந்து திறமை உள்ளது. அதில் பிரச்சினையில்லை. ஆனால் கால்பந்தாட்டத்துக்குரிய வேகத்தில் ஆட வேண்டும். இதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும்” என்றார் முல்வி.

ஆனால் கால்பந்தாட்டத்தை ஒரு ‘கை’ பார்த்துவிடுவது என்று அவர் தீவிரமாக உள்ளார் என்கின்றன ஆஸ்திரேலிய கால்பந்தாட்ட வட்டாரங்கள்.

https://tamil.thehindu.com/sports/article24801106.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.