Jump to content

“ 35 ” ஐ எட்டிப்பிடிக்கும் மலிங்க - முற்றுப்புள்ளி வைப்பாரா? தொடர்வாரா?


Recommended Posts

“ 35 ” ஐ எட்டிப்பிடிக்கும் மலிங்க - முற்றுப்புள்ளி வைப்பாரா? தொடர்வாரா?

 

 

தலை முடியில் ஆங்காங்கே பொன்னிறமும் கறுப்பு நிறம் கலந்த முடியுடன் சிங்கத்தைப் போன்ற பார்வையுடன் இலக்கை நேக்கிப் பார்த்தபடி எதிரணியை திணறடிக்கும் நோக்குடன் ஓடிவரும் யோக்கர் மன்னன் லசித் மலிங்க இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிடைத்த வரம். 

malinga99.jpg

வேகப்பந்து வீச்சாளர்களுக்கே உரிய ஆக்ரோஷமான வேகமும், பந்து வீச்சில் வேறெந்த பந்து வீச்சாளர்களும் கையாண்டிராத வித்தியாசமான பாணியும், தனது யோக்கர் பந்து வீச்சின் மூலம் தலைசிறந்த துடுப்பாட்டக்காரர்களுக்கு கிரிக்கெட்டில் அச்சுறுத்தலாக விளங்கிய இலங்கை அணியின் இருபதுக்கு 20 போட்டிகளின் முன்னாள் தலைவரும் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்தை இலங்கைக்கு வென்றுகொடுத்த தலைவருமான நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலங்கவின் 35 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.

awgkNK-aZB2G3VcvExDcJjl72eJkfbmt4t8yenIm

டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு

malinga4.jpg

1983 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி பிறந்த லசித் மலிங்க தனது 20 ஆவது வயதில், 2004 ஜூலை மாதம் 3 ஆம் திகதி இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கிரிக்கெட் உலகில் காலடி எடுத்து வைத்தார்.

அப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் லசித் மலிங்க வேகப் பந்து வீச்சில் தனது புதிய யுக்தியை சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு வெளிக்காட்டி 14 ஓவர்களை மாத்திரம் வீசினார். 

இதில் மூன்று ஓவர்களுக்கு ஓட்டம் எதையும் கொடுக்காது தடுத்ததுடன் அந்த இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார். 

இந்த இன்னிங்ஸில் மலிங்க லீமனை எல்.பி.டபிள்யூ.முறையில் ஆட்டமிழக்க செய்ததன் மூலம் தனது விக்கெட் தகர்ப்புக்களை ஆரம்பித்தார்.

இதையடுத்து அப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் தனது யோக்கர் பந்து வீச்சின் மூலம் அவுஸ்திரேலிய வீரர்களை நிலைகுலைய வைத்த மலிங்க, 15.1 ஓவர்களை வீசி 42 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இருப்பினும் டெஸ்ட் கிரக்கெட் வரலாற்றில் அதிகளவாக சாதிக்காத லசித் மலிங்க, துடுப்பாட்டத்தில் 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 37 இன்னிங்ஸில் 275 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளதுடன் இவரின் ஓட்ட எண்ணிக்கை சராசரி 11.45 ஆகும்.

அத்துடன் 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மலிங்க 59 இன்னிங்ஸில் 3349 ஓட்டங்களைக் கொடுத்து 101 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளதுடன், டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சில் மலிங்கவின் பெறுதி 50 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள் என்பதுடன் இவரது சராசரி 33.15 ஆகும். 

உபாதை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட மலிங்க, கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிராக ஆரம்பமான மூன்றாவது டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்ஸில் 30 ஓவர்களுக்கு 119 ஓட்டங்களை கொடுத்து மூன்று விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டார். 

இந்த போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியிருந்தது. இப் போட்டியே மலிங்கவின் இறுதி டெஸ்ட் போட்டியாக அமைந்தது. 

ஒருநாள் கிரிக்கெட் வரலாறு

malinga5.jpg

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகளவாக பேசப்படாத லசித் மலிங்க, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தை தனது துல்லியமான யோக்கர் பந்து வீச்சின் மூலம் தக்க வைத்துக் கொண்டார். 

கடந்த 2004 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசிய கிண்ணத்தின் நான்காவது போட்டி இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கிடையில் (UAE) தம்புள்ளையில் ஜூலை மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்றது. இப் போட்டியே மலிங்க களம்புகுந்த முதல் ஒருநாள் போட்டியாகும்.

தனது கன்னிப் போட்டி என்பதனால் மலிங்க அப் போட்டியில் துடுப்பாட்டத்தில் 5 ஓட்டங்களையும் பந்து வீச்சில் 10 ஓவர்களுக்கு 39 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டினை மாத்திரேமே பெற்றுக் கொண்டார். அந்த வகையில் ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணியின் தலைவர் குராம் கானை போல்ட் முறையில் ஆட்டமிழக்க வைத்து ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை ருஷிக்க ஆரம்பித்தார்.

அடுத்தடுத்து மலிங்கவுக்கு பல போட்டிகள் பல்வேறு அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுக் கொடுக்க விக்கெட்டுக்களை பதம் பார்ப்பதில் இவருக்கு மோகம் அதிகரித்தது. 

அந்த வகையில் பந்து வீச்சில் தனக்கென தனியான ஒரு பாணியையும் யோக்கர் முறையினூடாக எதிரணியின் துடுப்பாட்டக் காரர்களுக்கு அச்சுறுத்தலையும் காண்பித்த மலிங்க தான் யார் என்பதை 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக கிண்ணப் போட்டியின் போது நிரூபித்துக் காட்டினார்.

இதன்படி 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையேயான போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெறுவதற்கு 32 பந்துகளுக்கு 5 விக்கெட்டுக்கள் கைவசமிருக்க 4 ஓட்டங்கள் மாத்திரமே தேவ‍ை என்ற நிலையில் இருந்தது.

malinga1.jpg

இருப்பினும் மலிங்க தென்னாபிரிக்க அணிக்கு இறுதித் தருவாயில் பாரிய சிம்மசொப்பனமாகத் திகழந்து அரங்கில் பார்வையாளர்கள் மத்தியில் ஆராவாரத்தை அதிகரித்தார். அந்த வகையில் அவர் தென்னாபிரிக்க அணியின் அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுக்களை தகர்த் தெறிந்து, ஹெட்ரிக் சாதனையும் புரிந்தார். எனினும் இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி அபார நெருக்கடிக்கு மத்தியில் வெற்றி கொண்டது. 

204 ஒருநாள் பேட்டிகளில் விளையாடிய லசித் மலிங்க, துடுப்பாடத்தில் 102 இன்னிங்ஸுகளில் களமிறங்கி 496 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளார். இதில் அவரது அதிகப்படியான ஓட்டம் 56 ஆகும். 

பந்து வீச்சில், 204 போட்டிகளில் 198 இன்னிங்ஸுகளில் 8 ஆயிரத்து 705 ஓட்டங்களை கொடுத்து 301 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். ஒருநாள் போட்டியில் பந்து வீச்சில் மலிங்கவின் பந்துவீச்சுப்பெறுதி 38 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்கள் என்பதுடன் இவரது சராசரி 28.92 ஆகும். 

இறுதியாக லசித் மலிங்க 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியே இவரின் இறுதி ஒருநாள் போட்டியாக அமைந்தது. இப் போட்டியில் 8 ஓவர்கள் பந்து வீசிய மலிங்க 35 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட் மாத்திரம் கைப்பற்றினார்.

ஒருநாள் தொடரில் இதுவரை அதிகளவான ஹெட்ரிக் சாதனைகளை நிகழ்த்திய வீரர் என்ற சாதனையும் மலிங்கவையே சாரும். அதன்படி கடந்த 2007 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிராகவும் 2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் அதே ஆண்டில் கென்ய அணியுடனான போட்டிகளின் போதும் ஹெட்ரிக் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாறு

கடந்த 2004 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் சபை கிரிக்கெட் ரசிகர்களுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டும் ஜூன் மதம் 6 ஆம் திகதி இங்கிலாந்து மண்ணில் இடம்பெற்ற இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டியே மலிங்கவின் முதலாவது இருபதுக்கு 20 போட்டியாகும். 

malinga3.jpg

இந்த போட்டியில் மலிங்க மூன்று ஓவர்களை வீசி 25 ஓட்டங்களை கொடுத்த போதும் அவரால் விக்கெட்டுக்களை தகர்க்க இயலாமல் போனது, இருப்பினும் அடுத்தடுத்து இடம்பெற்ற பல இருபதுக்கு 20 போட்டிகளில் தனது யோக்கரின் திறமையை நிரூபித்துக்காட்டி எதிரணியின் வீரர்களுக்கு பந்து வீச்சில் சிம்மசொப்பனமாக திகழ்ந்தார் மலிங்க.

கடந்த 2014 ஆம் ஆண்டில் பங்களாதேஷில் இடம்பெற்ற இருபதுக்கு 20 தொடரின் இறுதிப் போட்டிக்கு தலைமை தாங்கிய மலிங்க இந்திய அணியை வெற்றிகொண்டு இலங்கையின் இருபதுக்கு 20 உலக கிண்ணத்தை கைப்பற்றும் கனவையும் நனவாக்கி காட்டினார். 

அத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற இருபதுக்கு 20 போட்டியின் போது 24 ஓட்டங்களை க‍ெடுத்து அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றி ஹெட்ரீக் சாதனையும் புரிந்துள்ளார்.

mainga2.jpg

68 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ள லசித் மலிங்க 1780 ஓட்டங்களை கொடுத்து 90 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இதில் மலிங்கவின் பெறுதி 31 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள் என்பதுடன் இவரது சராசரி 19.77 ஆகும். 

இறுதியாக மலிங்க கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியே இவரின் இறுதி இருபதுக்கு 20 போட்டியாகும். இதில் மலிங்க 4 ஓவர்களுக்கு 31 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டினை மாத்திரம் கைப்பற்றினார்.

ஏனைய போட்டிகள்

மலிங்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரமல்ல இந்தியன் பிரீமியர் லீக், அவுஸ்திரேலிய பிக்பாஸ், மேற்கிந்தியத் தீவுகள் லீக் போட்டிகள் உட்பட பல சர்வதேச லீக் போட்டிகளிலும் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் அடிக்கடி உபாதைக்குள்ளாவதும் அவர்களின் பந்து வீச்சின் வேகம் காலப் போக்கில் குறைவடைவதும் வழக்கமான ஒரு விடயம். இதற்கு லசித் மலிங்கவும் விதிவிலக்கல்ல.

காலப் போக்கில் மலிங்கவுக்கு எற்பட்ட உபாதைகள் என்பவற்றின் காரணமாக மலிங்கவின் பந்து வீச்சும் சரிவை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அதன்படி அவரின் பந்துவீச்சில் முன்னைய வேகமும் துல்லியமும் இல்லாமையின் காரணமாகவும்  மலிங்க அணியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன் கிண்ணத் தொடரின் போது இலங்கை அணிக்காக சேவையாற்ற இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்களால் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்ட மலிங்கவினால் அத் தொடரில் பந்து வீச்சிலும் களத்தடுப்பிலும் தேர்வாளர்கள் எதிர்பார்த்த சேவையை அவரால் வழங்க முடியாமல் போனது. 

அது மாத்திரமன்றி மீண்டும் இவர் திறமை மீது நம்பிக்கை வைத்த இலங்கை தெரிவுக்குழு இலங்கையில் நடைபெற்ற சிம்பாப்வே, இந்தியாவுடனான தொடர்களுக்கு தெரிவு செய்யப்பட்டார். ஆனால் இத்தொடர்களில் கூட அவர் தன்னை நிரூபித்துக் காட்டுவதை தவறவிட்டார். 

ஐந்து போட்டிகள் கொண்ட இந்தியத் தொடரில் 39 ஓவர்களை வீசி 243 ஓட்டங்களை கொடுத்து மூன்று விக்கெட்டுக்களை மாத்திரம் கைப்பற்றியதன்  மூலம் தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததா என்ற சந்தேகம் அவரின் மனதிலும் ரசிகர்களின் மனதிலும் தோன்றியது.

எனினும் இம் மாதம் தென்னாபிரிக்க அணியுடன் நடைபெற்ற இருபதுக்கு - 20 போட்டியில் லசித் மலிங்க களமிறங்க வாய்ப்புள்ளதாக திலான் சமரவீர தெரிவித்தார். இருப்பினும் அதுவும் சாத்தியப்படவில்லை.

இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெறவுள்ள ஆசியக்கிண்ண தொடரின் போது, இலங்கை கிரிக்கெட் அணியின் குழாமில் மலிங்க இணைத்துக் கொள்ளப்படலாம் என தெரிவுக்குழுவின் தலைவர் கிரஹாம் லெப்ரோய் தெரிவித்துள்ளார்.

malinga7.jpg

எவ்வாரெனினும் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் மலிங்கவின் கிரிக்கெட் பயணம் முற்றுப் புள்ளியாக அமையுமா? அல்லது அவரது கிரிக்கெட் வாழ்க்கை தொடருமாவென....

http://www.virakesari.lk/article/39279

Link to comment
Share on other sites

மாலிங்கவுக்கு வித்தியாசமாக வாழ்த்துக் கூறிய சச்சின் டெண்டுல்கர்

Malinga-and-Sachin.jpg Image courtesy - cricketcountry
 

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவுக்கு இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

 

 

நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க இன்று (28) தனது 35வது பிறந்த தினத்தை கொண்டாடி வருகின்றார். எனவே, இவருக்கு இலங்கை ரசிகர்கள் மாத்திரமன்றி சர்வதேச மட்டத்தில் உள்ள மாலிங்க ரசிகர்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரையில், வித்தியாசமான பாணியில் பந்து வீசும் லசித் மாலிங்க, யோர்க்கர்” பந்துகளை வீசுதில் தனித்துவமான திறமையை கொண்டவர். சச்சின் டெண்டுல்கர் உட்பட உலகின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களை, தனது வேகத்தால் கட்டுப்படுத்தியவர் மாலிங்க என்றால் அது மிகையாகாது.

சச்சின் டெண்டுல்கர் மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் எதிர் எதிர் அணிகளுக்காக விளையாடியுள்ளனர்அத்துடன் .பி.எல். தொடரில் இருவரும் இணைந்து 5 வருடங்கள் மும்பை அணிக்காக ஒரே உடைமாற்றும் அறையை பகிர்ந்து கொண்டவர்கள். எனவே, இவர்களுக்கு இடையிலான நெருக்கமும் அதிகம்.

இந்நிலையில் இன்று பிறந்த தினத்தை கொண்டாடும் லசித் மாலிங்கவுக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் சமுக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே சச்சின் டெண்டுல்கர், பிறந்தநாள் கொண்டாடும் மாலிங்கவுக்கு சற்று நகைச்சுவையாக வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவரின் வாழ்த்தில், “மாலிங்கவின் பந்து வீச்சை எதிர்த்து துடுப்பெடுத்தாடுபவர்களுக்கு நான் எப்பொழுதும் கூறுகிறேன். அவரது தலைமுடியை பார்க்காதீர்கள். பந்தை பார்த்து துடுப்பெடுத்தாடுங்கள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

 

 

 

When it came to batting against #LasithMalinga, I always said ... baal ko nahin, ball ko dekho (don't look at the hair, look at the ball). ? Happy birthday, my friend.

லசித் மாலிங்கவின் சிகை அலங்காரம் ஏனைய வீரர்களை விட சற்று வித்தியாசமானது. கிரிக்கெட்டில் இவரது சிகை அலங்காரம் பிரபலமான ஒன்று. கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட வரும் ரசிகர்களில் பலர் இவரை போன்ற சிகை அலங்காரத்தை, செயற்கையாக செய்துகொண்டு மைதானத்துக்கு வருவதை நாம் அதிகமாக பார்க்க முடியும்.  

இதனால் மாலிங்கவின் சிகை அலங்காரத்தை கலாய்க்கும் விதமாகவே, இவ்வாறான வாழத்துச் செய்தியினை சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துள்ளார்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.