Jump to content

ரொஹிங்கியா முஸ்லீம்கள் மேல் நடப்பது இனக்கொலை என்றால், ஈழத்தமிழர் மீது நடந்தது என்ன ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரொஹிங்கியா முஸ்லீம்கள் மேல் நடப்பது இனக்கொலை என்றால், ஈழத்தமிழர் மீது நடந்தது என்ன ?

பர்மாவில் சிறுபான்மை முஸ்லீம்களுக்கெதிராக பெளத்த பேரினவாதிகள் கடந்தவருடத்திலிருந்து ஒரு திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டு வருகிறார்கள். நொபெல் சமாதானப் பரிசுக்குச் சொந்தக்காரரான ஆன் சாங்க் சுகி தலமையிலான பர்மிய அரசும், ராணுவமும், பெKளத்த மதகுருமாரின் துணையுடன் இந்த திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள்.

வங்கத்தேசத்து வம்சாவளியினரான சிறுபான்மை ரொஹிங்கியா முஸ்லீம்கள் தமக்கெதிராக பெளத்த பேரினவாதம் தொடுத்துவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்ககளிலிருந்து தம்மைப் பாதுகாக்கும் நோக்குடன் ஆயுத ரீதியிலான எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்க, இதைச் சாட்டாக வைத்துக்கொண்டு பர்மிய அரசு தனது ராணுவத்தை முற்றான இனவழிப்பு ஒன்றில் ஏவிவிட்டுள்ளது. 

கிராமம் கிராமமாக அழிக்கப்பட்ட ரொஹிங்கியாக்கள், ஈழத்தமிழரைப் போன்றே கூட்டுப் பாலியல் வன்புணர்வு, சித்திரவதை, கூட்டான படுகொலை, சொத்தழிவு என்று பல வழிகளில் பர்மிய அரசால் துன்புறுத்தப்பட, சுமார் 700,000 வரையான ரொஹிங்கியா அகதிகள் வங்கதேசத்தினுள் தஞ்சம் புகுந்துள்ளார்கள்.

சீனாவின் செல்லப்பிள்ளையான பர்மாவின் நடவடிக்கைகளைக் கண்டும் பேசாமலிருந்த ஐ. நா உற்பட்ட சர்வதேசம் இப்போது இதுபற்றி பேச ஆரம்பித்திருக்கிறது.

பர்மாவில் நடப்பது ஒரு திட்டமிடப்பட்ட இனவழிப்புத்தான் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள ஐ. நா, இந்த இனவழிப்பில் முன்னின்று நடத்தியவர்களான  பர்மிய ராணுவத் தளபதிகளின் பிரதானி , ஐந்து பர்மிய ராணுவத் தளபதிகள் மற்றும் உயர் அரச அதிகாரிகளை இனம்கண்டு , வர்கள் மீது இனவழிப்பு, போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கெதிரான குற்றம் போன்றவற்றினூடாக வழக்குத் தொடுப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றது.

செய்மதிப் படங்கள் மூலம் எடுக்கப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில், சிவிலியன்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள், சிறுவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள், கூட்டான பாலியல் வன்புணர்வுகள், கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டமை போன்ற பல அக்கிரமங்களை சேகரித்து வைத்திருக்கும் ஐ. நா வின் கண்காணிப்பாளர் குழு, சுமார் 10,000 வரையான முஸ்லீம்கள் கடந்த ஒருவருடத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது.

பயங்கரவாதிகள் மீதான எதிர்ப்பு நடவடிக்கையை மட்டுமே தாம் மேற்கொண்டதாக பர்மிய ராணுவம் கூறியதை முற்றாக மறுத்துள்ள ஐ. நா, இவ்விடயம் தொடர்பாக சர்வதேச கிரிமினல் நீதிமன்றில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்யவும் முடிவெடுத்துள்ளது.

தமது நடவடிக்கைகளின் முதற்படியாக, பர்மிய ராணுவத்தளபதியை உடனடியாகப் பதவி இறங்குமாறு கோரியுள்ளதோடு, அரச அதிகாரிகளின் இவ்விசாரணை தொடர்பான மெத்தனப் போக்கையும் கடுமையாகக் கண்டித்துள்ளது.

சரி, பர்மாவில் நடப்பது இனவழிப்புத்தான், சந்தேகம் வேண்டாம். அப்படியானால் இன்றுவரை ஈழத்தில் நடப்பது என்ன? இன்று பர்மிய அரசும் ராணுவமும் செய்வதற்கும் சிங்களப் பேரினவாதம் ஈழத்தில் செய்வதற்கும் என்ன வேறுபாடு? இன்று ஒருவருடத்தினுள்ளேயே பர்மாவை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கும் சர்வதேசன், இன்றுவரை, 9 வருடங்கள் கழிந்தபின்னும், சிங்களப் போர்க்குற்றவாளிகளை தொடர்ந்தும் ஆதரித்து வருவதன் நோக்கம் என்ன? வெறும் 10,000 முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு ஒருவருடத்தினுள் கொக்கரிக்கும் ஐ. நா, 150,000 தமிழர்கள் 2 வருடகாலத்தில் வன்னியின் கொலைக்களங்களில் கொன்றொழிக்கப்பட்டபோது பேசாமல், மெள்னமாக அரங்கேறிக்கொண்டிருந்த இனக்கொலையை ஆதரித்ததன் நோக்கமென்ன? எல்லாம் ஒரே காரணம்தான், இந்தியா என்னும் இனக்கொலையின் பொஅங்குதாரி ஐ. நா வையும் சர்வதேசத்தையும் தனது பிராந்திய பலத்தினைக் காட்டி எட்டவே வைத்திருந்ததுதான்.

ஆனாலும், எமது தலைவர்கள் என்ன செய்கிறார்கள் ? பர்மாவில் நடப்பது இனவழிப்பு என்று பேசப்படும் இத்தறுவாயிலாவது எமக்கு நடந்ததும் இதுதான், ஆகவே எமக்கும் நீதி தாருங்கள் என்று கேட்கமுடியாமல் இருப்பது ஏன்? எதிர்கட்சித் தலைவர், பாராளுமன்ற பதவி என்று இன்றும் இனக்கொலையாளிகளின் அணுரசணையில் இருந்துகொண்டு இனவழிப்பை மறைக்கத் துணைபோவது ஏன்?
சாணக்கியம் சாணக்கியம் என்று 70 ஆண்டுகளாக நாம் கூறிவரும் எமது புலமை, இப்போதாவது காண்பிக்கப்பட வேண்டாமா?
இனக்கொலை நடந்து ஒருவருடத்திற்குள் பர்மிய முஸ்லீம்களால் தமது அழுகுரலை ஐ. நா வில் ஒலிக்கச் செய்து நீதி கேட்க முடியுமென்றால், 9 வருடம் கடந்தும் நாம் இதுவரை என்னத்தைச் செய்தோம் என்று எம்மை நாமே கேள்வி கேட்கும் தருணமிது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ragunathan said:

9 வருடம் கடந்தும் நாம் இதுவரை என்னத்தைச் செய்தோம் என்று எம்மை நாமே கேள்வி கேட்கும் தருணமிது

ஒம்போது வருடங்களாக போராடி உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் , Land Cruiser Prado Sahara V8 உம் ,எதிர்கட்சி தலீவர் பதவியும் பெற்றுள்ளோம்
இது போதாதா ...?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.