Jump to content

கவிதையாய் ஒரு வாழ்க்கை வாழும் இமயமலை மக்கள்


Recommended Posts

“ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம் அதன் அடிவாரம் ஒரு வீடு” - கவிதையாய் வாழ்க்கை வாழும் மக்கள்

à®à®µà®¿à®¤à¯à®¯à®¾à®¯à¯ வாழà¯à®à¯à®à¯ வாழà¯à®®à¯ à®à®®à®¯à®®à®²à¯ à®®à®à¯à®à®³à¯

"ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம் அதன் அடிவாரம் ஒரு வீடு உன் கைகோர்த்து என் தலைசாய்க்க அங்கு வேண்டுமடா என் கூடு"

இந்த வரிகளை அப்படியே உங்கள் மனக்கண்ணில் நிறுத்துங்கள் நினைத்துப் பார்க்கும் போதே மனதில் மழை பெய்கிறது அல்லவா? நிஜத்தில் அப்படியான வாழ்வை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு மக்கள்.

இப்பூவுலகில் அதிக உயரத்தில் இருக்கும் வசிப்பிடங்களில் இமயமலையில் அமைந்திருக்கும் இந்த பள்ளத்தாக்கும் ஒன்று.

தரிசான மலைகள், பாம்புபோல ஊர்ந்து செல்லும் ஆறுகள், பாலை போல காட்சித் தரும் குளிர்ச்சியான நிலப்பரப்பு என வேறொரு உலகத்திற்கு சென்றது போல இருக்கிறது ஸ்பிட்டி வேலி.

தபால் நிலையம்

இப்படியான நிலப்பரப்பில் வசிக்கும் ஒருவரது ஆன்மா எவ்வளவு நெகிழ்வுடன் இருக்கும்? அந்த நெகிழ்ச்சி வார்த்தைகளாக உருப்பெற்றால்... அப்படியான வார்த்தைகளை கொண்டு எழுதப்பட்ட வார்த்தைகளை சுமந்து செல்ல அங்கு செயல்படுகிறது ஒரு தபால் நிலையம்.

கவிதையாய் வாழ்க்கை வாழும் இமயமலை மக்கள்படத்தின் காப்புரிமைSANDIPAN DUTTA

கடல் மட்டத்திலிருந்து 4,440 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஹிக்கிம் கிராமத்தில் இருக்கிறது அந்த தபால் நிலையம். அங்கு சிறு சிறு குழுக்களாக இருக்கும் கிராமத்தை இந்த உலகத்துடன் இணைப்பது அந்த தபால் நிலையம்தான்.

அந்த தபால் நிலையம் தொடங்கப்பட்ட 1983 ஆம் ஆண்டிலிருந்து அங்கு போஸ்ட்மாஸ்டராக இருக்கிறார் ரின்சென் செரிங்.

தபால் நிலையம்படத்தின் காப்புரிமைSANDIPAN DUTTA

அவர், "சாலைகள் மிகமோசமானதாக இருக்கும். வாகனங்கள் செல்ல முடியாது. கடிதங்களை சுமந்துக் கொண்டு நடந்து செல்ல வேண்டும். பனிப்பொழிவின் காரணமாக குளிர்காலங்களில் அடிக்கடி இந்த தபால் நிலையம் மூடப்படும்" என்கிறார்.

Spti Valleyபடத்தின் காப்புரிமைSANDIPAN DUTTA

இங்கிருந்து ஸ்பிட்டி பள்ளத்தாக்கு தலைநகரான கஸாவுக்கு சென்று வர 46 கிலோ மீட்டர் பயணம். இரண்டு தபால் ஊழியர்கள் கடிதங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்கிறார்கள்.

ஐந்து கிராமம், ஒரு பள்ளி

ஹிக்கிம் தபால் நிலையத்தை சார்ந்து இருக்கும் நான்கு, ஐந்து கிராமங்களில் மக்கள் தொகை குறைவுதான். கைபேசி சேவை இருக்கிறதென்றாலும், எல்லா நேரத்திலும் அது செயல்படாது. இணைய வசதி இன்னும் சென்று சேரவில்லை.

ஐந்து கிராமம், ஒரு பள்ளிபடத்தின் காப்புரிமைSANDIPAN DUTTA

இங்கு இருக்கும் கிராமங்களில் ஒன்று கோமிக். 4,587 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இண்ட கிராமம். இங்கு 13 வீடுகள் மட்டுமே உள்ளன. ஒரு பள்ளி இருக்கிறது. அங்கு ஐந்து மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள். பழைய மடாலயம் ஒன்று உள்ளது, சிறு விவசாயபரப்பும் உள்ளது. அங்கு பார்லி மற்றும் பச்சை பட்டாணி விவசாயம் நடைபெறுகிறது.

பெளத்த நம்பிக்கை

கடும் பனிப்பொழிவின் காரணமாக ஆண்டுக்கு ஆறு மாதங்கள் ஸ்பிட்டி பள்ளதாக்குக்கும் வெளி உலகுக்குமான தொடர்பு துண்டிக்கப்படும்.

Spiti Valley

à®à®µà®¿à®¤à¯à®¯à®¾à®¯à¯ வாழà¯à®à¯à®à¯ வாழà¯à®®à¯ à®à®®à®¯à®®à®²à¯ à®®à®à¯à®à®³à¯

இங்குள்ள மக்கள் பெளத்தத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்தியாவின் பழைய மடாலயம் இங்கு உள்ளது. சிலர் இதனை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.

https://www.bbc.com/tamil/india-45327558

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி...ஆதவன்..!

அவுஸ்திரேலிய நாட்டுப் பகிதினகளில் செய்வது போலச் செய்தாலென்ன?

இங்கெல்லாம் ஒரு பொது இடத்தில்...பொதுவாக எல்லா வீடுகளுக்கும்...சமனான இடத்தில் தபால் பெட்டிகளை வைத்து விடுவார்கள்!

சனங்கள்...தங்களுக்கு நேரமிருக்கும் போது....வந்து எடுத்துக் கொள்வார்கள்!

79290229-bruny-island-tasmania-australia

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.