Jump to content

உலகசாதனைக்கு இன்னும் 7 விக். தான்; தன்னைக் கடந்த பிறகு ஜேம்ஸ் ஆண்டர்சனை முறியடிக்கப் போவது யார்?: கிளென் மெக்ரா பதில்


Recommended Posts

உலகசாதனைக்கு இன்னும் 7 விக். தான்; தன்னைக் கடந்த பிறகு ஜேம்ஸ் ஆண்டர்சனை முறியடிக்கப் போவது யார்?: கிளென் மெக்ரா பதில்

 

 
anderson

ஜேம்ஸ் ஆண்டர்சன். | படம்.| ஏ.பி.

டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ரா. இவரது விக்கெட்டுகள் எண்ணிக்கை 563. ஜேம்ஸ் ஆண்டர்சன் இதனைக் கடந்து உலகின் அதிசிறந்த வேகப்பந்து வீச்சாளராக இன்னும் 7 விக்கெட்டுகளே தேவை.

இந்தியா-இங்கிலாந்து தொடரின் 4வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்டனில் வரும் வியாழனன்று தொடங்க இருக்கிறது, இன்னமும் ஒரு டெஸ்ட் உள்ளது என்பதால் கிளென் மெக்ராவை 2வது இடத்துக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் தள்ளி விடுவார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் பரவலாக எதிர்பார்க்கின்றனர்.

 

2007-ல் கிளென் மெக்ரா தன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வை முடித்துக் கொள்வதாக அறிவித்த போது 563 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை எட்டி வரலாறு படைத்தார்.

இந்நிலையில் டெய்லி மெய்லில் கிளென் மெக்ரா கூறுபோது, “ஜிம்மி ஆண்டர்சன் மீது எனக்கு நிரம்ப.. நிரம்ப மரியாதை உள்ளது. அவருக்கு என் வாழ்த்துக்கள், ஒருமுறை என் 563 விக்கெட்டுகள் சாதனையை அவர் கடந்து விட்டால் அவரை முறியடிக்க யாராலும் முடியாது என்றே நான் கருதுகிறேன்.

சாதனைகள் எப்போதும் பெருமைக்குரியவையே, உலகில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறேன் என்பது எனக்கு பெருமையாகவே உள்ளது. ஆனால் எந்த ஒரு உச்சமும் கடக்கப் பட வேண்டியதே.

mcgrathjpg
 

ஜிம்மி ஆண்டர்சன் என்னைக் கடந்து சென்றால் அதுவும் எனக்குப் பெருமையே. எந்த நாட்டிலிருந்து வந்தாலும் வேகப்பந்து வீச்சாளர் ஒன்றுபட வேண்டும்.

என்னைக் கடந்த பிறகு அவர் எங்கு போய் நிறுத்துகிறார் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். இந்தக் காலத்து கிரிக்கெட்டின் தன்மையும், ஏகப்பட்ட டி20 கிரிக்கெட்டுகளும் ஆடப்பட்டு வரும் நாளில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை உடைக்கவே முடியாது என்றே தோன்றுகிறது.

வேகப்பந்து வீச்சாளராக இருப்பது மிகவும் கடினமான பணியாகும். களத்துக்கு வெளியே நாங்கள் மேற்கொள்ளும் கடினம் உழைப்பு மக்களுக்கு தெரியாது. மற்றவர்களைக் காட்டிலும் நாங்கள்தான் களத்துக்கு வெளியே உழைப்பதில் வலியை அதிகமாக உணர்கிறோம்.

15 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்னமும் டாப்பில் இருக்கிறார். ஏகப்பட்ட ஓவர்களை வீசியுள்ளார், இது அவரது உழைப்பையும் மன உறுதியையும் வெளிப்படுத்துகிறது.

ஆண்டர்சன் ஒரு உயர்தரப் பவுலர் என்று நான் எப்போதுமே கூறிவந்திருக்கிறேன். இரு தரப்பிலும் பந்துகளை ஸ்விங் செய்பவர். இது மரபான ஸ்விங் பவுலிங் என்றாலும் அது ஒரு கலை. நிறைய பவுலர்கள் இவரைப்போல் இல்லை. இவரை விட்டால் நான் வாசிம் அக்ரமை மட்டும்தான் கூறுவேன். அவரும் கிரிக்கெட்டின் கிரேட்.

இப்போதைக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு இளைஞர் போல் குதூகலத்துடன் வீசுகிறார். வெயிட் போடவில்லை. எப்போதும் போல் தாகத்துடனும் வலுவுடனும் வீசுகிறார்.

நான் கூட 1000 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்ற தாகத்துடன் தான் கடைசி வரை இருந்தேன். ஆனால் மேட்ச் முடிந்த பிறகு வீட்டுக்குச் சென்று படுத்து எழுந்த போது எனக்கு அது முக்கியமாகப் படவில்லை. 124 போட்டிகளுக்குப் பிறகு அந்தத் தொடர் முடிந்தவுடன் ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்தேன்” என்றார் மெக்ரா.

https://tamil.thehindu.com/sports/article24792282.ece

Link to comment
Share on other sites

557 விக்கெட்டுகளில் 361 விக்கெட்டுகள் இங்கிலாந்திலேயே: ஆண்டர்சன் சிறந்த பவுலரா?- மெக்ரா கூறுவது என்ன?

 

 
sachin-anderson

2007 இங்கிலாந்து தொடரில் ஆண்டர்சன் பந்தை தூக்கி புல்ஷாட் அடிக்கும் சச்சின் டெண்டுல்கர். | ஏ.எஃப்.பி.

இன்னும் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கிளென் மெக்ராவை முறியடித்து உலகிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தவுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் வீட்டில் புலி வெளியில் எலி என்பது போன்ற விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஆண்டர்சன் இதுவரை எடுத்த 557 விக்கெட்டுகளில் 361 விக்கெட்டுகள் இங்கிலாந்தில் எடுக்கப்பட்டவையே.

 
 

இதனை முன்னிறுத்தி ஆஸி. வேகப்பந்து லெஜண்ட் கிளென் மெக்ராவிடம் கேள்வி எழுப்பிய போது, டெய்லி மெய்லுக்காக அவர் கூறியது: “பந்துகள் ஸ்விங் ஆகும் சூழ்நிலைகளில் அவர் மிகச்சிறந்த பவுலர். ஆனால் ஸ்விங் ஆகாத நிலைமைகளில் அவர் கூட்டத்தோடு கூட்டமாக வீசும் ஒரு வீச்சாளராக இருந்து வருகிறார்.

ஆனால் இத்தகைய நிலை அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் இருந்தது, பிறகு அவர் தன் திறமைகளை வளர்த்துக் கொண்டதன் மூலம் வெளிநாடுகளிலும் திறமைகளை வெளிப்படுத்தத் தொடங்கினார்.

இங்கிலாந்தில் ட்யூக்ஸ் பந்தில் அவர் கில்லாடி. ஆனால் வெளிநாடுகளில் கூகபரா பந்துகள் அவர் விருப்பத்துக்கு ஸ்விங் ஆகாது, அப்போது அவர் அதை ஸ்விங் செய்வது பற்றிக் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. கூகபரா பந்தில் அவர் நன்றாக வீச முடியவில்லை. அதனை அவர் கற்றார், இப்போது அவருக்கு இதில் பிரச்சினையில்லை என்றே கருதுகிறேன்.

எனவே அதிக விக்கெட்டுகள் பட்டியலில் எனக்கு மேலே இருக்கும் முரளிதரன், ஷேன் வார்ன், அனில் கும்ப்ளேவுக்கு நெருக்கமாக வர முடியும். எனது சாதனையைக் கடந்த பிறகு அடுத்த இலக்கு ஆண்டர்சனுக்கு 600 விக்கெட்டுகளாக இருக்கும். அது உண்மையில் ஒரு பிரமிக்கத்தக்க சாதனைதான்.

அதன் பிறகு அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளில் இருக்கிறார். அதையும் நெருங்க முடியும். ஆனால் ஷேன் வார்னின் 708, முரளிதரனின் 800 ஆகியவற்றை நெருங்குவது கடினம்” என்றார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் இரு அணிகளுக்கு எதிராக 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பவுலர்களில் இடம்பெற்றுள்ளார், அதில் குறிப்பாக அவர் ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு எதிராக முறையே 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஷேன் வார்ன், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் முரளிதரன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.

https://tamil.thehindu.com/sports/article24792841.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.