Jump to content

திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின் - அதிகாரபூர்வ அறிவிப்பு


Recommended Posts

தி.மு.க பொதுக்குழு கூட்டம் தொடங்கியது! #LiveUpdates

 

* திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கருணாநிதி, வாஜ்பாஜ், சோம்நாத் சாட்டர்ஜி மற்றும் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

* சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

* சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார் மு.க.ஸ்டாலின். துரைமுருகன், கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோரும் அண்ணாஅறிவாலயத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.

 

 

மு.க.ஸ்டாலின்

* சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள தி.மு.க பொதுக்குழுவில் பங்கேற்க க.அன்பழகன் வருகை.

* தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு செல்வதற்கு முன் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார் மு.க.ஸ்டாலின். கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்தினார். அறிவாலயம் செல்வதற்கு முன் தாயார் தயாளு அம்மாளிடம் ஸ்டாலின் ஆசி பெற்றார்.

 

 

தி.மு.க

* தி.மு.க பொதுக்குழு கூட்டம்  ஸ்டாலின் தலைமையில் தொடங்குகிறது. திமுக தலைவராக ஸ்டாலின் பெயர் இன்று முறைப்படி அறிவிக்கப்படுகிறது.பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 2,500 பொதுக்குழு உறுப்பினர்களும், 700 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர். சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட மொத்தம் 5000 பேர் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தி.மு.க பொதுக்குழுக் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறு. இந்தக் கூட்டத்தில், தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார்.

ஸ்டாலின்


உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தி.மு.க தலைவர் கருணாநிதி, சிகிச்சை பலனின்றி கடந்த 7-ம் தேதி காலமானார். இதையடுத்து, தி.மு.க தலைவர் பதவி காலியானதால், புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, தி.மு.க தலைவர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், காலியாக உள்ள தி.மு.க தலைவர் பதவிக்கு, மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்செய்தார். அதேபோல, பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல்செய்தார். மேற்கண்ட பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல்செய்ய முன்வராததால், தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று நடைபெறும் பொதுக்குழுவில் தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார்.

https://www.vikatan.com/news/tamilnadu/135258-dmk-general-council-meeting-mk-stalin-going-to-announced-as-a-party-leader.html

Link to comment
Share on other sites

திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின் - அதிகாரபூர்வ அறிவிப்பு

திமுக தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சென்னையில் இன்று நடைபெற்ற திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.

அவரை தவிர வேறு யாரும் போட்டியிடாததால் மு.க.ஸ்டாலின் திமுக வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகம் இன்று நடைபெற்ற திமுக பொது குழு கூட்டத்தில் அறிவித்தார்.

 
 

இதன்மூலம் 50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் இரண்டாவது தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்.

திமுக தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின்

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைந்ததையொட்டி  காலியாக இருந்த கட்சி தலைவர் பதவிக்கு ஞாயிற்றுக்கிழமையன்று மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின்.

திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் திமுக தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதை கொண்டாடி வருகின்றனர்.

Presentational grey line

களத்தில் இருக்கும் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன் அண்ணா அறிவாலயத்தில் இப்போது இருக்கும் சூழ்நிலையை விவரிக்கிறார்

இன்று காலை சுமார் 9 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்த ஸ்டாலின் மேடைக்கு கீழே துரைமுருகன் மற்றும் பிற திமுக நிர்வாகிகளுடன் அமர்ந்தார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் வாசித்த பிறகு பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. பின்பு திமுக தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.

திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின் - அதிகாரபூர்வ அறிவிப்பு

அன்பழகனின் அறிவிப்புக்கு பிறகு மேடைக்கு வந்தார் ஸ்டாலின். ஸ்டாலின் தலைவர் அறிவிப்பு நிகழ்ந்தவுடன் வெளியே கூடியிருந்த திமுக தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், வாழ்த்து கோஷங்களை எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பின்னர் திமுகவின் பொருளாளராக துரைமுருகன் அறிவிக்கப்பட்டார்.

கூட்டத்தில் பேசிய திருச்சி சிவா கருணாநிதிக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என தெரிவித்தார்

Presentational grey line

தலைவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, "கட்சி தொண்டர்களின் விருப்பப்படி சென்னையில் 5-ந் தேதி பேரணி நடத்த உள்ளோம். கருணாநிதி இல்லை என்பதால் தான் தி.மு.க.வை காப்பாற்ற களம் இறங்கி உள்ளோம். தி.மு.க.வில் என்னை சேர்க்கவில்லை என்றால் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும்" என்று கூறி இருந்தார்.

https://www.bbc.com/tamil/india-45327563

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களின் பின்பு  உதயநிதி ஸ்டாலின்  திமுகவின் தலைவராகத் தெரிவு செய்யப்படலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

சில வருடங்களின் பின்பு  உதயநிதி ஸ்டாலின்  திமுகவின் தலைவராகத் தெரிவு செய்யப்படலாம்.

அதற்கு பல வருடங்கள் பிறகு அவரின்ட பேரன் தேர்வு செய்யப்படலாம் ?

Link to comment
Share on other sites

திமுக தலைவரானார் ஸ்டாலின்: உற்சாகத்தில் கட்சித் தொண்டர்கள் (புகைப்பட தொகுப்பு)

சென்னையில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து அறிவிக்கப்பட்டவுடன் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின் - அதிகாரபூர்வ அறிவிப்பு

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைந்ததையொட்டி காலியாக இருந்த கட்சி தலைவர் பதவிக்கு ஞாயிற்றுக்கிழமையன்று மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த 50 ஆண்டுகளாக திமுகவின் தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த சூழலில், அக்கட்சியின் இரண்டாவது தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார்.

திமுகவின் தலைவரான ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டத்தை அக்கட்சி தொடர்கள் கொண்டாடியதை விளக்கும் புகைப்பட தொகுப்பு.

திமுக தலைவரானார் ஸ்டாலின்: உற்சாகத்தில் கட்சித் தொடர்கள் திமுக தலைவரானார் ஸ்டாலின்: உற்சாகத்தில் கட்சித் தொடர்கள் திமுக தலைவரானார் ஸ்டாலின்: உற்சாகத்தில் கட்சித் தொடர்கள் திமுக தலைவரானார் ஸ்டாலின்: உற்சாகத்தில் கட்சித் தொடர்கள் திமுக தலைவரானார் ஸ்டாலின்: உற்சாகத்தில் கட்சித் தொடர்கள்

திமுக தலைவரானார் ஸ்டாலின்: உற்சாகத்தில் கட்சித் தொடர்கள் திமுக தலைவரானார் ஸ்டாலின்: உற்சாகத்தில் கட்சித் தொடர்கள்

 

https://www.bbc.com/tamil/india-45330750

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.