Jump to content

எங்களுடன் ஒரு டெஸ்ட்டில் விளையாடுவதே நேர விரயம் என்று இங்கிலாந்து நினைத்தது; வென்று காட்டினோம்: சனத் ஜெயசூரியா


Recommended Posts

எங்களுடன் ஒரு டெஸ்ட்டில் விளையாடுவதே நேர விரயம் என்று இங்கிலாந்து நினைத்தது; வென்று காட்டினோம்: சனத் ஜெயசூரியா

 

 
sanath

1996 உலகக்கோப்பையை வென்று இலங்கை அணி தங்களை எதிர்கொண்டு ஆட்கொள்ள வேண்டிய சக்தியாக உலக அணிகளுக்குச் சவால் விடுத்துக் கொண்டிருந்த தருணம். ரணதுங்கா கேப்டன்சியில் பிரமாதமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த காலம்.

மேலும், இலங்கை அணியைக் கண்டாலே அனைவருக்கும் ஒரு பயம் கலந்த எரிச்சலும், தேவையற்ற ஏளனமும் இருந்த காலக்கட்டம். ஜெயசூரியா, ரொமேஷ் கலுவிதரன, அரவிந்த டிசில்வா ஆகியோர் எதிரணியை கதிகலங்கச் செய்து கொண்டிருந்தனர், பந்து வீச்சில் முரளிதரன் ஒரு பேரச்சுறுத்தலாகத் திகழ்ந்த காலம். அப்போது உலகக்கோப்பையை வென்று 2 ஆண்டுகள் ஆனபின்பு கூட இலங்கையை இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அழைக்கவில்லை, ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடருக்கு அழைத்தது.

   
 

ஏனெனில் இந்தத் தொடருக்கு முன்பாகத்தான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்று பின் நிலையிலிருந்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அதனால் வீரர்களும் உண்மையில் களைப்படைந்தே இருந்தனர்.

லண்டன் ஓவலில் ஆகஸ்ட் 27ம் தேதி இந்த டெஸ்ட் தொடங்கி கடைசியில் இங்கிலாந்தைப் புரட்டி எடுத்து அனைவரும் மூக்கில் விரல் வைக்கும் வெற்றியைப் பெற்றது இலங்கை. சனத் ஜெயசூரியா 213 ரன்களையும் அரவிந்த டி சில்வா 152 ரன்களையும் எடுக்க முரளிதரன் 220 ரன்களுக்கு 16 இங்கிலாந்து விக்கெட்டுகளைக் கைப்பற்ற முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைக் குவித்த இங்கிலாந்து ஒரே டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது.

muralijpg
 

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 445 ரன்கள் எடுக்க இலங்கை அணி 591 ரன்கள் குவித்து அதிர்ச்சியளித்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 181 ரன்களுக்குச் சுருண்டது, முத்தையா முரளிதரன் 65 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளைச் சாய்த்தார். வெற்றிக்குத் தேவையான 37 ரன்களை 5 ஓவர்களில் ஜெயசூரியா முடித்தார்.

அந்தப் போட்டிகுறித்து அதே நாளான இன்று தி கிரிக்கெட் மந்த்லி இதழுக்காக நடந்த கலந்துரையாடலில் இலங்கை, இங்கிலாந்து அணி வீரர்கள் அந்தப் போட்டியை நினைவு கூர்ந்தனர்.

இதில் ஜெயசூரியா கூறியதாவது:

அப்போது எங்களுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுவதைக் கூட நேர விரயம் என்று இங்கிலாந்து நினைத்தது போலும். நாங்கள் ஏதோ பித்துப் பிடித்த நபர்கள் என்றும் அனாயாச மட்டை சுழற்றிகள், கன்னாபின்னாவென்று அடிப்பவர்கள் என்ற பெயர் இருந்தது, ஆனால் எங்களுக்கு அது அப்படியல்ல.

இந்தப் போட்டிக்கு முன்பாக நான் சரியாக ஆடவில்லை. என்னுடைய பார்ம் கொஞ்சம் ஏற்ற இறக்கமாக இருந்தது. ஆனால் கேப்டன், துணை கேப்டன் என் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தனர். இங்கிலாந்து அணியினரும் என்னை வெறும் அனாயாச மட்டைச் சுழற்றி, டெஸ்ட் போட்டிகளில் தாங்க மாட்டார் என்றெல்லாம் கருத்து கூறிவந்ததும் எனக்கு உத்வேகமூட்ட இந்த டெஸ்ட்டில் நிரூபிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

நல்ல கிரிக்கெட்டை ஆடினோம், உண்மையான கிரிக்கெட் ஷாட்களை ஆடினோம். துணைக்கண்டத்தில் ஏதாவது புதியன எழுந்தால் அவர்கள் உடனே வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்கி விடுகின்றனர். ஆனால் நாம் செய்வதையே அவர்கள் திரும்பிச் செய்யும் போது அது உடனடியாக ‘பெரிய விஷயம்’ என்று பேசப்படும். அவற்றையெல்லாம் நாம் மண்டையில் ஏற்றிக் கொள்வதில்லை. எங்கள் பணி அவர்களைப் புண்படுத்தும் விதமாக பந்துகளை அடிக்க வேண்டும் என்பதே.

தாறுமாறாகவெல்லாம் அடிக்கவில்லை. நல்ல பந்து வீச்சுக்கு மரியாதை கொடுத்துத்தான் ஆடினோம். அந்தப் பிட்சில் பவுன்ஸ் கணிக்க முடியாததாக இருந்தது. அரவிந்த டி சில்வாவின் பலம் புல் ஷாட், அவர் அதனை ஆடிக்கொண்டேயிருந்தார். ஒரு பக்கத்தில் நீளமான பவுண்டரி அந்த பவுண்டரியை கிளியர் செய்வது கடினம். நான் அப்போதெல்லாம் சிங்கிள் எடுத்து டிசில்வாவிடம் ஸ்ட்ரைக்கைக் கொடுத்து விடுவேன். காஃப் என் கால்களுக்குள் பந்தை ஸ்விங் செய்து கொண்டிருந்தார். நான் அவற்றை நிதானமாகவே எதிர்கொண்டேன்.

aravindaPNG
 

அரவிந்த டி சில்வா, என்ன மாதிரியான பேட்ஸ்மென். ஒரே பந்தில் அவர் சிங்கிளுக்கும் ஆடுவார், அதே பந்தை பவுண்டரிக்கும் அனுப்புவார், அவர் போன்ற ஒரு திறமைசாலி இருந்ததில்லை இனியும் எங்களுக்குக் கிடைக்கப் போவதில்லை.

இவ்வாறு ஜெயசூரியா அந்த டெஸ்ட் போட்டியை நினைவுகூர்ந்தார்.

https://tamil.thehindu.com/sports/article24794153.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.