Jump to content

உலக நிகழ்வுகள்.....திருநங்கை பாலியல் தொழிலாளி கொலை - போராடும் மக்கள்


Recommended Posts

திருநங்கை பாலியல் தொழிலாளி கொலை - போராடும் மக்கள்

கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.

பாலியல் தொழிலாளி கொலை

பாலியல் தொழிலாளி கொலைபடத்தின் காப்புரிமைAFP

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பெருவியன் திருநங்கை பாலியல் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர் தனது வாடிக்கையாளரிடம் திருட வந்த திருடர்களிடமிருந்து அவரை காப்பாற்ற முயற்சித்தபோது கொள்ளையர்கள் அவரை தாக்கி உள்ளனர். கொலையான பாலியல் தொழிலாளியின் பெயர் வனிஸா. அவருக்கு நீதி கேட்டு மக்கள் போராடி வருகின்றனர்.

Presentational grey line

பொருளாதார தடையை நீக்கு

பொருளாதார தடையை நீக்குபடத்தின் காப்புரிமைEPA

அமெரிக்கா தம் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை நீக்கும்படி இரான் சர்வதேச நீதிமன்றத்தை நாடி உள்ளது. இரான் வழக்கறிஞர் மெசன் மெஹாபி இரான் பொருளாதாரத்தை சிதைக்கும் நோக்குத்துடன் அமெரிக்கா செயல்படுவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

Presentational grey linePresentational grey line

ஊபரில் 500 மில்லியன் டாலர் முதலீடு

ஊபரில் 500 மில்லியன் டாலர் முதலீடுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான டொயோடா ஊபர் நிறுவனத்தில் 500 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உள்ளது. ஊபர் நிறுவனம் மோசமான நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் இந்த முதலீடானது நிறுவனத்தின் மதிப்பை 72 பில்லியன் டாலர்கள் வரை உயர்த்தும்.

Presentational grey linePresentational grey line

காலராவை கட்டுப்படுத்த தொழில்நுட்பம்

காலராவை கட்டுப்படுத்த தொழில்நுட்பம்

ஏமன் நாட்டில் காலராவை கட்டுப்படுத்தும் விஷயத்தில் புதிய தொழில்நுட்பமானது பேருதவி புரிந்துள்ளது. எந்த இடத்தில் காலரா பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை தொழில்நுட்பம் கொண்டு கணிக்கும் முறைதான் இப்படியான நல் விளைவுகளை தந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 50,000 பேருக்கு காலரா பரவியது. ஆனால், இப்போது 2500 பேருக்கு மட்டுமே காலரா உள்ளது.

Presentational grey line

ஒன்பது வயது சிறுவனை கிண்டல்

ஒன்பது வயது சிறுவனை கிண்டல்படத்தின் காப்புரிமைCBS

ஓரினச் சேர்க்கை விருப்பம் கொண்டவராக இருப்பதற்காக நான்கு நாட்களாக ஒன்பது வயது சிறுவனை கேலி செய்ததால் அந்த சிறுவன் தன்னைதானே மாய்த்துக் கொண்டுள்ளான். தற்கொலை செய்து கொண்டுள்ள சிறுவனின் பெய்ர் ஜமெல் மயில்ஸ். ஜமெலின் தாய் லியா, "தன்னை தானே மாய்த்துக்கொள்ளும்படி தன்னுடன் படிக்கும் சக மாணாவர்கள் கூறியதாக ஜமெல் அவன் மூத்த சகோதரியிடம் கூறி உள்ளான்" என்கிறார். இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

https://www.bbc.com/tamil/global-45326867

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.