Jump to content

காணி அபகரிப்புக்கு எதிராக- முல்லைத்தீவில் மாபெரும் பேரணி!!


Recommended Posts

முல்லைத்தீவில் இன்று பாரிய போராட்டத்துக்கு அழைப்பு

 

Mullaithivu-300x200.jpgமகாவலி அதிகார சபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்ற முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவில் இன்று பாரிய கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இன்று காலை 11 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் நோக்கிய பேரணி ஆரம்பமாகி, தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான தென்னமரவாடி, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய இடங்களில் சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு காணிகளைப் பகிர்ந்தளித்துள்ள மகாவலி அதிகாரசபை, அங்கு சிங்களக் குடியேற்றங்களை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

மகாவலி எல் வலயத் திட்டத்தின் கீழ், 2000 ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டு, வெளியிடங்களைச் சேர்ந்த 6000 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.

மகாவலி எல் வலயத் திட்டம் முன்னெடுக்கப்படும் பகுதியை பூர்வீகமாகக் கொண்டு ஒருவர் கூட இந்தத் திட்டத்துக்குள் உள்ளடக்கப்படவில்லை.

மகாவலி எல் வலயத் திட்டம் என்ற பெயரில், முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரியே இன்றைய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அத்துடன் இந்தப் போராட்டத்தில பெருமளவில் அணிதிரளுமாறும் அழைப்பு விடுத்துள்ளன.

http://www.puthinappalakai.net/2018/08/28/news/32575

Link to comment
Share on other sites

காணி அபகரிப்புக்கு எதிராக- முல்லைத்தீவில் மாபெரும் பேரணி!!

 
 

5-1-780x405.jpg

 

 
 

மகா­வலி எல் வல­யம் ஊடாக முல்­லைத்­தீவு மக்­க­ளின் காணி­கள் அப­க­ரிக்­கப்­ப­டு­வ­தைத் தடுத்து நிறுத்­தக் கோரி முல்­லைத்­தீ­வில் சற்றுமுன்னர் மாபெரும் பேரணி ஆரம்பமானது.

முல்­லைத்­தீவு பிட­பிள்யூ சந்­தி­யில் ஆரம்­பிக்கப்பட்டுள்ள பேரணி முல்­லைத்­தீவு மாவட்ட செய­ல­கத்­தை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது.

4-5.jpg3-4.jpg

https://newuthayan.com/story/11/காணி-அபகரிப்புக்கு-எதிராக-முல்லைத்தீவில்-மாபெரும்-பேரணி.html

Link to comment
Share on other sites

மகாவலியின் ஊடான, தமிழரின் நிலப்பறிப்பிற்கு எதிராக மக்கள் திரண்டனர்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிரான 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 

மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருணாட்டுக்கேணி ஆகிய கிராமங்களில் தமிழ் மக்களின் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்களை மகாவலிஅதிகார சபை வழங்கியுள்ளது.

இதேபோல் மகாவலி அதிகாரசபை தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர் என குற்றம் சாட்டி , அதனால் மகாவலி நீர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தேவையில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் தொல்லியல் அடையாள சிதைப்பு, கலை, கலாச்சார, பண்பாட்டு சிதைப்பு ஆகியவற்றை உடன் நிறுத்தவேண்டும். தமிழர் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள தென்னிலங்கைச் சிங்கள மீனவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காணி உத்தரவு பத்திரங்களை உடன் இரத்துச் செய்யவேண்டும். என்ற 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Mullai-mahavali6.jpg?resize=800%2C600Mullai-mahavali5.jpg?resize=800%2C600Mullai-mahavali4.jpg?resize=800%2C600Mullai-mahavali3.jpg?resize=800%2C600Mullai-mahavali2.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2018/93093/

Link to comment
Share on other sites

முல்லைத்தீவில் மாபெரும் பேரணி! அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்

மகாவலி எல் வல­யம் ஊடாக முல்­லைத்­தீவு மக்­க­ளின் காணி­கள் அப­க­ரிக்­கப்­ப­டு­வ­தை தடுத்து நிறுத்­தக் கோரி முல்­லைத்­தீ­வில் சற்றுமுன்னர் மாபெரும் பேரணி ஆரம்பமானது.

முல்­லைத்­தீவு பி.டபிள்யூ சந்­தி­யில் ஆரம்­பிக்கப்பட்டுள்ள குறித்த பேரணி முல்­லைத்­தீவு மாவட்ட செய­ல­கத்­தை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது.

இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.

 

சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்துமாறு கோரி பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை இன்று போராட்டம் நடைபெறும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பேரணியின் போது மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கையளிக்குமாறு மாவட்ட செயலரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

 

 

மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரை நேரில் சந்தித்த இணைத்தலைவர்கள் ஆறு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய குறித்த மகஜரை கையளித்துள்ளனர்.

கோரிக்கைகள்..

 

  1. மகாவலித் திட்டத்தின் நன்மை, தீமைகள், சவால்கள் மற்றும் சிக்கல் தன்மைகளை கருத்திற் கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற மகாவலி திட்டச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறும் வடக்கின் ஏனைய பகுதிகளில் விஸ்தரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவுகளை கைவிடுமாறும் தங்களை வினையமுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
  2. கொக்கிளாய், கொக்கத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கெணி கடற்கரையில் சட்டவிரொதமாக தங்கியிருக்கும் சிங்கள மீனவர்களுக்கு மகாவலி அதிகார சபையால் வழங்கப்பட்டுள்ள காணி அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக மீளப் பெற வேண்டும்.
  3. 1984 வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு சொந்தமான, நீதிக்கு புறம்பாக சிங்கள மக்களுக்கு பிரித்து வழங்கப்பட்ட 2000 வாழ்வாதார நிலங்கள் அதன் உண்மையான உரிமையாளர்களான தமிழ் மக்களுக்கு மீள வழங்க வேண்டும்.
  4. தமிழர்களின் மரபுரிமையை திட்டமிட்டு சீரழிக்கும் நோக்குடன் மாவட்ட அரசாங்க அதிகாரிகளையும் கிராமிய அமைப்புக்களையும் கலந்துரையாடாது வரலாற்று திரிபை ஏற்படுத்தும் நோக்கோடு தன்னிச்சையாக செயற்படும் தொல்லியல் திணைக்களத்தின் நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.
  5. வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக பிரிக்கும் நோக்கோடு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வடகிழக்கு எல்லைக் கிராமங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேங்ஙந்களை உடன் நிறுத்த தவறும் பட்டசத்தில் அது இன நல்லிணக்கத்தை மிக மோசமாக பாதிககும்.
  6. ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு இயற்கைப் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நந்திக்கடல், நாயாற்றுக் களப்புக்கள் மீண்டும் சட்ட ரீதியாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட்ட வேண்டும்.

 

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

புகைப்படங்கள் - யது

 

https://www.tamilwin.com/community/01/191900?ref=imp-news

Link to comment
Share on other sites

முல்லைத்தீவு பறிபோனால் தமிழ்தேசம் பறிபோகும் ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் !

 

 
 

2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் மகிந்த ராஜபக்ச தான்  தமிழ் இன அழிப்பினை செய்ததார். அவருடைய ஆட்சியனை வீழ்த்தினால் தமிழ்மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதை மட்டுமல்ல பொறுப்புக்கூறலும் நிச்சயமாக கிடைக்கும். என தழிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

kajendhirakumar.jpg

ஒரு சர்வதேச விசாரணை கூட கிட்டும் என்று மக்களை நம்பவைத்து இந்த ஆட்சியினை மாற்றியதன் பின் இன்று இந்த நல்லாட்சி என்று எம்மவர்கள் கூறியதன் பின்பும் இன அழிப்பின் முக்கியமான அங்கம் நிலப்பறிப்பு இப்போதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இவ்வாறு இருந்தால் எம்மக்கள் ஆழமாக சிந்திக்க தொடங்கவேண்டும் இது ஒரு ஆட்சி சம்மந்தப்பட்ட விடயமா? அல்லது இன அழிப்பு சம்மந்தப்பட்ட விடயமாக இது ஒரு இனஅழிப்பு சம்மந்தப்பட்ட விடயமாக இருந்தால் ஒரு ஆட்சியனை விழுத்தினால் புதிய ஆட்சி வந்தால் இனஅழிப்பினை தடுக்கலாமா என்று நாங்கள் கேள்வி எழுப்பவேண்டும் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் எமக்கு  நன்மை கிடைக்கும் என்று நம்பி இன்று நடுத்தெருவில் நிற்கின்றோம்.

அப்படியாக இருந்தால் இந்த ஏமாற்றத்திற்கு தொடர்ச்சியாக நடைபெறும் இனஅழிப்பிற்கு பின்னால் இருக்க்கூடிய தத்துவத்தை அந்த கொள்கையினை நாங்கள் சரியாக விளங்கிக்கொள்ளவேண்டும்  சிங்களவர்களை பொறுத்தமட்டில் இந்த இலங்கை தீவு சிங்களபௌத்த நாடு அவர்களுக்குத்தான் சொந்தம் என்று நிகைக்கின்றார்கள்.

இன்று வடகிழக்கில் தமிழர் ஒரு தேசமாக வாழக்கூடாது என்பதில் அவர்கள் மிகத்தெளிவாக இருக்கின்றார்கள்.இது ஆட்சி சம்மந்தப்பட்ட விடயம் அல்ல அவர்கள் இனம் சார்ந்த அடிப்படைக்கொள்கை எந்த நபர் மாறினாலும் அந்த கொள்கை ஒன்று தமிழ் தேசத்தினை பொறுத்தமட்டில் நாங்கள் போராடினால் எங்கள் உரிமைகளை பெறலாம் எதோ 16 இல தீர்வு 17 இல தீர்வு 18இல தீர்வு என்றும் இப்போது 19 இல தீர்வு வரும் என்று கூறு தமிழர்களை ஏமாற்றக்கூடாது நாங்கள் இதில் தெளிவாக இருக்கவேண்டும்.

மணலாறு மண் பறிபோனல் தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம் தென்தமிழ் தேசத்தினை பறித்துக்கொண்டிருக்கின்றார்கள் அது முடிவிற்கு வர இருக்கின்றது அந்த தேசத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு மணலாறு நிலத்தொடர்பை சிதைக்க அது நிச்சயமாக உறுதிபடுத்தப்படும்.

தமிழ் இனத்தினையும் தமிழ்தேசத்தினையும் பொறுத்தவரையில் இது முல்லைத்தீவு மண்ணை சார்ந்த பிரச்சனை அல்ல தமிழ்தேசத்தினை சார்ந்த பிரச்சனை தமிழரின் இருப்பு சார்ந்த பிரச்சனை இந்த இடத்தில் தமிழர்களின் ஆழத்தினை புரிந்து கொள்ளாமல் நடந்துகொள்வோமாக இருந்தால் இந்த இனம் அழியும். 

முல்லைத்தீவு மண் பறிபோனல் மணலாறு மண் பறிபோனல் தமிழ்தேசம் பறிபோனதற்கு சமம் என்பதை விளங்கிக்கொண்டு போராடுகின்ற அனைத்து மக்களும் அணிதிரண்டு இந்த இனஅழிப்பிற்கு எதிராக தொடர்ந்தும் நம்பி ஏமாறாமல் நாங்கள் செயற்படாமல் இருக்கும் வரைக்கும் இந்த இனம் அழியும் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் அந்த தடுப்பிற்கு முதல் புள்ளியாக இது அமையவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/39298

Link to comment
Share on other sites

வடகிழக்கின் குடிப்பரம்பலை மாற்ற தெளிவான நடவடிக்கைகள்; சித்தார்த்தன்

 

 
 

பெரும்பான்மை தலைமைகள் மிகத்தெளிவான கொள்கையுடன் வடகிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மண்ணை முழுமையாக குடிப்பரம்பலை மாற்றும்  நோக்கில்  செயற்படுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினரும் தமிழீழ விடுதலை கழகத்தின்  தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார் .

sitharthan.jpg

முல்லைத்தீவில் இன்றையதினம் இடம்பெற்ற மகாவலி  திட்டத்தினூடான நில ஆக்கிரமிப்புக்கு எதிரான  மாபெரும்  போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த நாடு சுதந்திரமடைந்த நாள்தொடக்கம் பெரும்பான்மை தலைமைகள் மிகத்தெளிவான கொள்கையுடன் வடகிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மண்ணை முழுமையாக குடிப்பரம்பலை மாற்றவேண்டும் என்ற நோக்கத்துடன் அம்பாறையில் கல்ஓயா திட்டத்தில் ஆரம்பித்து சுதந்திரம் அடைந்தவுடன் அன்றைய பிரதமராக இருந்த டி.எஸ்.செனனாயக்க அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு அது இன்றுவரை தொடர்ந்து 70 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.

இந்த வெலிஓயா திட்டம் மூலம் எங்கள் தாயகபூமியை இரண்டு கூறாக ஆக்கிவிடலாம் என்ற ஒரு நினைப்பில் இந்த அரசாங்கமும் இதற்கு முன்னர் இருந்த அரசாங்கமும் நடவடிக்கையினை எடுத்துவருகின்றது இந்தபேரணியில் உள்ள மக்களை கண்டால் அவர்கள் நினைப்பினை மாற்றிக்கொள்வார்கள்.

இவ்வளவு பெருந்திரளான மக்கள் எங்கள் நிலங்களை பறிகொடுக்கமாட்டோம் என்று மிகத்தெளிவாக தமிழர்கள் கூறுகின்றார்கள் என்பதை அரசிற்கு மாத்திரம் அல்ல உலகிற்கும் காட்டியுள்ளோம்.

இதனை இந்த அரசு உணர்ந்து கொண்டு உடனடியாக இந்த திட்டத்தினை நிறுத்தவேண்டும் என்ற இந்த அமைப்பின் கோரிக்கையுடன் நாங்களும் இணைந்து கொள்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/39301

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கி செய்யாததை, அகிம்சை செய்யும்....

செய்ய முடியும்... ?

Link to comment
Share on other sites

தன்னெழுச்சியான போராட்டம் மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு  தீர்வு காண முடியும் சிவசக்தி ஆனந்தன் 

 

அரசியல் கட்சியினை தாண்டி தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் மூலம் தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு  தீர்வு காண முடியும்  என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

sivasakthi_anandhan.jpg

முல்லைத்தீவில் இன்றையதினம் இடம்பெற்ற மகாவலி அதிகாரசபையின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராடடத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், 

இந்த மகாவலி எல் வலயம் தொடர்பில் மூன்று கட்டங்களாக அண்மைக்காலத்தில் தமிழ்மக்களின் காணிகளுக்கு சிங்கள மக்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. மகிந்த ஆட்சிகாலத்தில்  இரண்டாயிரம் ஏக்கருக்கு மேல்  வழங்கப்பட்ட காணிகளுக்கு தற்போதைய ஜனாதிபதியினால் அதற்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக வெலிஓயா பிரதேசத்தினை சேர்ந்த மக்களுக்கு தமிழ்மக்களின் பிரதிநிதிகளுடன் வவுனியாவில் நடமாடும் சேவை ஊடாக அதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தமாதம் 6ஆம் திகதி 8 சிங்கள மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஜனாதிபதியின் செயலணி கூட்டத்தில் ஜனாதிபதி மகாவலி எல் வலயத்திற்கு கீழ் காணி அனுமதிப்பத்திரம் வழங்கியதற்கான ஆதாரம் உங்களிடம் என்ன இருக்கின்றது என்று சவால் விட்டு பேசியுள்ளார். 

அங்கே கலந்து கொண்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது முல்லைத்தீவு மாவட்டத்தில மகாவலி எல் வலயத்திற்கு கீழ் எட்டுப்பேருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஆறுமாத காலத்திற்குள் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட இருக்கின்றது என்ற செய்தியனை அங்கு சொல்லாமல் 

கடந்த மூன்றரை ஆண்டுகாலம் இந்த ஆட்சிக்கு சகலவளிகளிலும் அரசினை பாதுகாத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

எமது பிரதிநிதிகள் இவ்வாறு இருந்தால் மக்களின் காணிப்பிரச்சனை காணாமல் போன பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது ஆகவே இன்றைய மக்கள் போராட்டம் போல் தொடர்ச்சியாக அரசியல்கட்சியினை தாண்டி தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் மூலம்தான் தீர்வு காணப்படவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/39308

Link to comment
Share on other sites

மகாவலி அதிகாரசபைக்கு மக்களை மீளக்குடியேற்றவோ புதியவர்களை குடியேற்றவோ இடமளிக்க முடியாது -மாவை

 

 
 

மகாவலி அதிகார சபைக்கு நீர்வலங்குதற்கு அதிகாரம் இருக்கலாம் ஆனால் மக்களை மீள குடியேற்றுவதற்கோ புதியவர்களை குடியேற்றுவதற்கோ இடமளிக்க முடியாது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். 

 

மகாவலி திட்டம் ஊடாக தமிழர்களின் பிரதேசங்களில் சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்றுவதற்கு அரசு நீண்டகாலமாகவே திட்டமிட்டு இருந்து காமினி திஸநாயக்க அமைச்சராக இருந்தபோது வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களில் அதன் ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பிரச்சனை இன்று நேற்று ஆரம்பித்த விடயம் அல்ல அமைச்சர் காமினி திஸநாயக்காவின் திட்டப்படி நாற்பதாயிரம் சிங்கள குடும்பங்களை முல்லைத்தீவில் குடியேற்றுவதுதான்  அந்த ஆவணம் எங்களிடம் இருக்கின்றது. ஒரு இலட்சம் ரூபா ஒவ்வொரு குடம்பத்திற்கும் கொடுக்கும் திட்டம் அந்த நாட்களில் எங்கள் தலைவர்கள் நடத்திய போராட்டங்கள் பேச்சுக்களினால் அந்த நாட்களில் மூவாயிரம் குடும்பங்களுடன் அது நிறுத்தப்பட்டுள்ளது. அல்லது இந்த பிரதேசம் முழுக்கசிங்கள தேசமாக மாறி இருக்கும் .

இப்போது ஆறாயிரம் சிங்கள மக்கள் குடியேறியுள்ளதாக அறிவித்துள்ளார்கள். இதுபற்றி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியிடம் சம்மந்தனும் நானும் திட்டவட்டமாக சொன்னோம். நீர்பாசனத்திற்காக நீரினை வழங்குவது பிரச்சனை இல்லை அதோடு தென்னிலங்கை மக்களை நீங்கள் குடியேற்றக்கூடாது என்று வாதாடி இருக்கின்றோம். அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

சில நாட்களுக்கு முன்னர் மயிலிட்டியில் ஜனாதிபதிக்கு முன்னாள் மகாவலியினை பற்றி நான் பேசினேன். நேற்றும் ஜனாதிபதி செயலகத்தில் நாங்கள் பேசினோம் .நீங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றீர்கள் என்று பேசினோம். அவர் உடனடியாக மகாவலி சபை தலைவருடம் தொலைபேசியில் பேசினார். எங்களிடம் சொல்லி இருக்கின்றார் தான் நேரடியாகவே வந்து மகாவலி அபிவிருத்தி தலைவர்கள் சொல்லுவது சரியா அல்லது கூட்டமைப்பு நாங்கள் சொல்லுவது சரியா என்று பார்ப்பேன் அப்படி தவறுகள் இடம்பெற்று  வெளியில் இருந்து 

குடியேற்றப்படுபவர்களை நான் தடுத்து நிறுத்துவேன் என்று நேற்றும் வாக்குறுதி தந்துள்ளார் அவர் இங்க வந்து பார்த்தால் பார்க்கட்டும் 

இன்று வடக்கில் படையினரால் மட்டுமல்ல பல அமைப்புக்களினால் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது அமைப்புக்கள் வந்து தங்களுக்கு சொந்தமானது என்று அறிக்கை விடுகின்றார்கள். இதனை மாற்றி அமைக்கவேண்டும் மகாவலி சபைக்கு நீர்வளங்குதற்கு அதிகாரம் இருக்கலாம் ஆனால் மக்களை மீள குடியேற்றுவதற்கோ புதியவர்களை குடியேற்றுவதற்கோ இடமளிக்கக்கூடாது என்று நாங்கள் திட்டவட்டமாக சொல்லி வைக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/39304

 

 

நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக வெறுமனே இருக்கவில்லை பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம்; சிவமோகன்

 

நாங்கள் இந்த மண்ணின் பாராளுமன்ற உறுபினர்களாக வெறுமனே பாராளுமன்றில் இருக்கவில்லை பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் தெரிவித்தார்.

sivamohan.jpg

முல்லைத்தீவில் இன்றையதினம் இடம்பெற்ற மகாவலி அதிகாரசபையின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராடடத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், 

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இங்கு மேற்கொள்ளப்படும்  ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டம் நீண்டகாலமாக கூரிக்கொண்டிருந்த நிலையில் இன்று வெடித்துள்ளது.

மகாவலி அபிவிருத்தி சபையின் ஊடாக தமிழ்மக்களின் காணிகள் அபகரித்துக்கொண்டிருந்தமை அனைவருக்கும் தெரிந்த ஒன்று நாங்கள் இந்த மண்ணின் பாராளுமன்ற உறுபினர்களாக வெறுமனே பாராளுமன்றில் இருக்கவில்லை அண்மையில் கடற்தொழில் பிரச்சனை வந்தபோது விமல் வீரவன்சவுடன் வாக்குவாதாத்தில் ஈடுபட்டு எமது உரிமையினை நிலைநாட்டியுள்ளோம்.

நேற்றையதினம் ஜனாதிபதியிடம் இந்த கருத்தினை தெரிவித்த போது அதாவது எட்டுபேருக்கு அண்மையில் மகாவலி அதிகாரசபை ஊடாக தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கபட்டு  கொடுக்ப்பட்டுள்ளது என்று சொன்னோம். 

அவர் நேரடியாக தொலைபேசியில் மகாவலி சபையிடம் தொடர்பு கொண்டபோது அவர்கள் சொல்கின்றார்கள் இல்லை என்று அப்போது நாங்கள் சொன்னோம் இல்லை காணிகள் கொடுக்ப்பட்டது உண்மை என்றுசொன்னோம் எங்களுக்கு முன்னாலே அறிவித்தல் கொடுத்திருந்தார்.

அதுகொடுத்திருந்தாலோ கொடுக்காமல் விட்டிருந்தாலோ இத்துடன் நிறுத்திவிட்டு என்னை சந்தியுங்கள் என்று சொல்லியிருந்தார் சந்தித்து கதைத்த பின்னர்தான் அதற்கான முடிவு எடுக்கப்படும் என்று அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

நாங்கள் சந்தர்ப்பங்களை பாவிக்காமல் இல்லை அடுத்த சந்திப்பு ஒக்டோபர் 3 ஆம் திகதி கிடைக்க இருக்கின்றது புதுக்குடியிருப்பு படையினரின் ஆக்கிரமிப்பு, வட்டுவாகல் காணிப்பிரச்சனை சொல்லி இருக்கின்றோம் எனவே ஒன்டோபர் மாதம் ஜனாதிபதியுடன் கிடைத்த சந்தர்பத்தை சரிவர பயன்டுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/39312

 

 

எம்மை நிம்மதியாக வாழ விடுங்கள் ; சீண்டிப் பார்க்காதீர்கள் - ரவிகரன்

 

 
 

தமிழர்கள் நாங்கள் இலங்கையின் பிரஜைகள் என்றால் எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள், எங்களை சீண்டிப் பார்க்காதீர்கள் என்று வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களகுடியேற்றங்களை தடுத்து நிறுத்த கோரி இன்று முல்லைத்தீவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

RAVIKARAN.jpg

தமிழர்களின் பூர்வீக நிலங்களை பல வடிவங்களினூடாக இன்று அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதாவது வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், சட்டவிரோத மீன்பிடியாளர்கள் என்ற வகையிலே அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இது அனைத்தையும் ஜனாதிபதி அறிந்தும் அறியாதது போல் இருக்கிறார்.

எங்களுடைய மண் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த தருவாயில் எங்களுடைய இளைஞர்கள் புத்திஜீவிகள் இணைந்து இந்த மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றீர்கள். மேலும் ஏற்கனவே மீனவர்களுடைய போராட்டம் இதற்கு ஆரம்ப புள்ளியிட்டது என்பதனை யாரும் மறுக்கமுடியாது சுமார் அந்த போராட்டத்திலும் இரண்டாயிரத்துக்கு மேற்ப்பட்ட மீனவர்கள் ஒன்றுகூடி தங்களுடைய எதிப்பு நடவடிக்கையை முன்னெடுத்து எங்களுடைய தலைவர்களுடன் சேர்ந்து  அமைச்சர் ஒருவர்  இங்கு வந்து அதற்கான  ஒரு தீர்வை வழங்கிவிட்டு சென்றாரே தவிர அதற்கான நடவடிக்கையை இன்னும் மேற்கொள்ளவில்லை.

நேற்றைய தினம் கூட எங்களுடைய இளைஞர்களுடன் திரண்டு நாயாற்று பாலத்தடியில் நாங்கள் நின்றிருந்தோம் அந்த இளைஞர்கள் நின்ற நேரம் காணி அளவிட வந்திருந்தால் கட்டி வைத்திருப்போம் என்று சொல்லுகிறேன் ஏனென்றால் இது எங்களுடைய நிலங்கள்.

எங்களுடைய இடத்தை அபகரிக்க வேண்டும் என்று அரசாங்கத்தினுடைய தலைவர்கள் தயவு செய்து என்ன வேண்டாம் எங்களுடைய மண்ணை நாங்கள் காப்பதற்காகவே இப்படியான ஒரு போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.  

ஆகவே தமிழர்கள் நாங்கள் இலங்கையின் பிரஜைகள் என்றால் எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள், எங்களை சீண்டிப் பார்க்காதீர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/39309

 

 

கூட்டமைப்பு எந்த ஒரு வேளையிலும் மக்களை ஏமாற்றாது ; சாந்தி 

 

 

கூட்டமைப்பு எந்த ஒரு வேளையிலும் மக்களை ஏமாற்றாது மக்களை பிழையான வழிக்கு திசைதிருப்பாது மக்களின் நின்மதியான வாழ்விற்கு எப்போதும் குரல் கொடுக்கும்  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார் .

sandhi.jpg

முல்லைத்தீவில் இன்றையதினம் இடம்பெற்ற மகாவலி அதிகாரசபையின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராடடத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், 

மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ஆக்கிரமிக்கப்படுகின்ற இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் 1984 ஆம் ஆண்டு விரட்டி அடிக்கப்பட்டு வித்தியானந்தா கல்லூரியில் வந்தபோது அன்றில் இருந்து இன்று வரை இந்த மக்களுடன் நாங்கள் இரத்த உறவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறு பூர்வீகமாக வாழ்ந்த மண்ணை அபிவிருத்தி என்பது மக்களுக்கு நல்ல வாழ்வாதாரங்களை கொடுக்கவேண்டுமே தவிர மக்களுக்கு வலியாக மிகவும் மகா பெரிய வலியாக அமைந்த இந்த திட்டம் எதிர்க்கப்படவேண்டியது.

இவ்வாறான ஆக்கிரமிப்பு எங்களுக்கு தேவையில்லை நில விடுவிப்பிற்காகத்தான் எவ்வளவோ உயிர்களை சொத்துக்களை இழந்துள்ளோம் எனவே இந்த திட்டம் உடனடியாக நிறுத்தப்படுவதற்கு அரசிற்கு குரல் கொடுத்து திட்டத்தினை நிறுத்துவதற்கு ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவோம்.

கூட்டமைப்பு எந்த ஒரு வேளையிலும் மக்களை ஏமாற்றாது மக்களை பிளையான வழிக்கு திசைதிருப்பாது மக்களின் நின்மதியான வாழ்விற்கு எப்போதும் குரல் கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/39310

Link to comment
Share on other sites

இனி பிரபாகரன் இல்லை! முல்லைத்தீவில் தாய் ஒருவரின் குமுறல்

 

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி, நம்பி நாங்கள் வாக்களித்தோம். இன்று அந்த வீடு இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இனிமேல் நாங்கள் நம்புவதற்கு பிரபாகரனும் இல்லை என முல்லைத்தீவைச் சேர்ந்த சிவம் அக்கா என்னும் தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பை மீண்டும் நம்புகின்றோம், எங்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வையுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகாவலி அதிகார சபைக்கு எதிராக முல்லைத்தீவில் இன்றைய தினம் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எங்களுக்கு சொந்தமான நிலங்கள் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கேட்பதற்கு ஆட்கள் இல்லாத நிலையில் நாங்களும் நிலங்களை பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

கொக்குத்தொடுவாய் எனது சொந்த கிராமம். அங்கு தான் நான் பிறந்து வளர்ந்தேன். எமக்கு சொந்தமான ஒரு காணி கொக்குத் தொடுவாயில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மற்றொரு காணி கோட்டைக்கேணி பகுதியில், 2 ஏக்கர் காணி 30 வருடங்கள் நாங்கள் இடம்பெயர்ந்திருந்ததால் பராமரிக்க முடியாமல் காடாக மாறியுள்ள நிலையில் அது வனவள திணைக்களத்திற்குரிய காணியாக அடையாளப்படுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

எரிஞ்சகாடு பகுதியில் எமக்கு கொடுக்கப்பட்ட நீர்ப்பாசனக் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக எமக்கு காணிகளைக் கொடுத்தார்கள் அந்தக் காணிகள் வெறும் உவர்க் காணிகள் அங்கு ஒரு போகத்தில் கூட நெல்லை அறுவடை செய்யவில்லை.

ஆனால் எங்களுடைய சொந்த நிலத்தில் குடியிருக்கும் சிங்கள மக்கள் குளத்திலிருந்து நீரைப் பெற்று வருடத்தில் 2 போகம் விவசாயம் செய்கிறார்கள்.

நாங்கள் அவர்களிடம் கூலிக்கு வேலைக்கு செல்கிறோம். தொழில் செய்வதற்கு வசதியும் இல்லை. நிவாரணம், சமுர்த்தி போன்ற அரச உதவிகளும் இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி, நம்பி நாங்கள் வாக்களித்தோம். இங்கிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் எதற்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்பினோம்? எங்களுடைய எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பீர்கள் என நம்பியே அனுப்பினோம்.

ஆனால் நாங்கள் நம்பி வாக்களித்த வீடு இன்று பிரிந்து கிடக்கிறது. இனிமேலாவது எங்கள் பிரச்சினைகளை தீர்த்து வையுங்கள். நாங்கள் நம்புவதற்கு இனிமேல் பிரபாகரனும் இல்லை. உங்களைத்தான் இப்போதும் நம்பியிருக்கிறோம். இனிமேலாவது தீர்வினை பெற்றுக்கொடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.tamilwin.com/community/01/191949?ref=imp-news

Link to comment
Share on other sites

 

நம்புவதற்கு இனிமேல் பிரபாகரனும் இல்லை – வீடு பிரிந்து கூரை பந்துவிட்டது – நிழல் தேடுகிறோம்…

http://globaltamilnews.net/2018/93185/

Link to comment
Share on other sites

முல்லைத்தீவில் தமிழர்களுக்காக போராடிய சிங்கள அருட்தந்தை

 

தமிழ் மக்களின் வாழ்விட பூமியான வடக்கு, கிழக்கு மகாவலி திட்டம் என்ற பெயரில் பறிக்கப்படுவதாக தென் பகுதியை சேர்ந்த கத்தோலிக்க மத குருவான அருட்தந்தை ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.

மகாவலி எல் வலயத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றத்திட்டத்தை எதிர்த்து நேற்று முல்லைத்தீவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

 

இந்த அழிவை தடுத்து நிறுத்த வேண்டும். தென் பகுதி மக்கள் மகாவலி எல் வலயத்தின் குடியேற்றம் தொடர்பான அழிவின் உண்மையை அறியாதிருக்கலாம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள விரும்புகிறோம்.

எனினும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் மகாவலி எல் வயலத்தின் ஊடாக குடியேற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் வடக்கு, கிழக்கு என்ற தமிழர்கள் வாழ்விட பூமி அவர்களுக்கு இல்லாமல் போகும் அனர்த்தத்திற்கு எதிராக தென் பகுதி மக்களும் வடக்கு பகுதி மக்களுடன் இணைந்து போராட வேண்டும் என்று நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

மகாவலி எதிர்ப்பு தமிழ் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள போராட்டத்தில் தமிழ், சிங்களம் என அனைத்து வறிய மக்களும் ஒன்றாக இணைந்திருப்பது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக கருத முடியும்.

மகாவலி எல் வலயத்தில் பல வருடங்களுக்கு முன்னர் 6 ஆயிரம் சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. 1988ஆம் ஆண்டு முதல் சட்டமாக அமுலுக்கு வந்த இந்த மகாவலி வலயத்தில், வெலி ஓயா பிரதேசம் சிங்கள குடியேற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பணம் சிங்கள குடியேற்றத்திற்கு மாத்திரமே செலவிடப்பட்டுள்ளமை மிகவும் பயங்கரமானது.

தமிழ் மக்களின் வாழ்விட பூமியான வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்ய இந்த 3ஆயிரம் மில்லியன் ரூபாய் பயன்படுத்தப்படவில்லை என்பதை வெலிஓயாவை அண்மித்த பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிங்கள குடியேற்றங்கள் மூலம் எம்மால் காணமுடிகிறது.

இதனால், மகாவலி எல் வலய திட்டத்தை மக்கள் விரோத திட்டம் என பெயரிடுவது மட்டுமல்லாது, அதனை திரும்ப பெற வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.

கருநாட்டுகேணி, கொக்குதொடுவாய், கொக்கிளாய் போன்ற பகுதிகளில் உள்ள தமிழ் மீனவர்களின் காணிகள் பறிக்கப்பட்டு வருவதுடன், அவர்கள் தொழில் செய்யும் உரிமையும் பறிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் மக்களின் வாழ்விட பூமி பாதுகாக்கப்பட வேண்டும். இதனால், மகாவலி எல் வலயம் அதற்கு பின் நடைமுறைப்படுத்தப்பட உள்ள கே வலயம் ஜெ வலயங்களில் குடியேற்றங்கள் மூலம், வடக்கு மற்றும் அதனை அண்மித்த தீவுகள் அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றன.

ஆரம்பத்திலேயே அனைத்து மக்களும் இணைந்து இதனை இடைநிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம் எனவும் அருட் தந்தை ஜிவேந்திர தெரிவித்துள்ளார்.

 

https://www.tamilwin.com/community/01/192020?ref=home-latest

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.