Jump to content

'இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை மியான்மர் எதிர்கொள்ள வேண்டும்' - ஐ.நா.


Recommended Posts

'இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை மியான்மர் எதிர்கொள்ள வேண்டும்' - ஐ.நா.

2016 முதல் 2017 ஆம் ஆண்டு வரை மியான்மரில் உள்ள ரக்கைன் மாநிலத்தில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான வன்முறை மற்றும் பிற குற்றங்கள் தொடர்பாக மியான்மர் நாட்டின் முக்கிய ராணுவத் தலைவர்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) அமைப்பு அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

மியான்மர்படத்தின் காப்புரிமைREUTERS

கிட்டத்தட்ட ஏழு லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் கடந்த ஆண்டு மியான்மரில் இருந்து வெளியேறிருப்பதாக கூறும் மனித உரிமை அமைப்புகள், ஆயிரக்கணக்கோனோர் இறந்துவிட்டதாக கூறுகின்றன.

நூற்றுக்கணக்கான நேர்காணல்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில் ரோஹிஞ்சா இன மக்களுக்கு எதிராக இதுவரை நடைபெற்ற வன்முறைகளுக்கு எதிராக கடுமையான கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மிக மோசமான அச்சுறுத்துல்களை விடுத்ததற்கு இணையான நடவடிக்கைகளை மியான்மர் ராணுவம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ள ஐ.நா அறிக்கை, குறிப்பிட்ட ஆறு உயர் ராணுவ அதிகாரிகள் இது தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளது.

வன்முறைகளைத் தடுக்க தலையிட தவறிய, மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சியை இந்த அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ள ஐ.நா அறிக்கை, ரோஹிஞ்சா முஸ்லிம் மக்களை மிக மோசமாக நடத்திய மியான்மர் நாடு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.

மியான்மர்படத்தின் காப்புரிமைAFP/ GETTY IMAGES

தனது நடவடிக்கைகள் அனைத்தும், தீவிரவாதத்திற்குக்கும் ஊடுருவலுக்கும் எதிரானது என மியான்மர் அரசு தொடர்ந்து கூறிவருகிறது.

ஆனால், ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் குற்றச்செயல்கள் அதிர்ச்சியூட்டுவதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது.

"கண்மூடித்தனமாக செய்யப்பட்ட கொலைகளையோ, கூட்டு பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் மீதான தாக்குதல், கிராமங்களை எரித்தல் போன்ற ராணுவத்தின் வன்முறைகளை அவர்களால் நியாயப்படுத்த முடியாது" என்று ஐ.நா அறிக்கை கூறுகிறது.

ஐ.நா சுமத்தும் குற்றச்சாட்டுகள் என்ன?

2016 முதல் 2017 ஆம் ஆண்டில் ரக்கைன் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறையால் அருகிலுள்ள வங்கதேசத்திற்கு ஏறத்தாழ ஏழு லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தங்கள் உயிரை காத்துக் கொள்ளவும், வன்முறையிலிருந்து தப்பிக்கவும் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தனர்.

மியான்மர்படத்தின் காப்புரிமைAFP

வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தவர்களில் 40 சதவீதம் பேர் 18 வயதிற்கும் உட்பட்டவர்கள் என்கின்றன சர்வதேச உதவி அமைப்புகள். இவர்கள் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை தேவைப்படுவதாகவும் கூறுகின்றன அந்த அமைப்புகள்.

ரோஹிஞ்சா மக்கள் மீதான மியான்மரின் நடவடிக்கைகளை தெளிவான இன சுத்திகரிப்பு என்று ஐ.நா. குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது, ரோஹிஞ்சா முஸ்லிம் மக்களை மிக மோசமாக நடத்திய மியான்மர் நாட்டை, ஐ.நா. பாதுகாப்புக் குழு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த 130 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் ஐ.நாவை வலியுறுத்தினார்கள்.

மியான்மர்படத்தின் காப்புரிமைREUTERS Image captionஆங் சாங் சூச்சியுடன் கைகுலுக்கும் ராணுவ கமாண்டர்-இன்-தலைவர் மிங் ஆங் ஹ்லைங்

ஐ.நா யார் மீது குற்றம் சுமத்துகிறது?

ஐ.நா. முகமை பல ராணுவ உயரதிகாரிகளை பட்டியலிட்டுள்ளது.

பொதுவாக, மியான்மர் ராணுவம் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாகவே கருதப்படுகிறது.

அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ், ராணுவத்தின் மீது சிவிலியன் அதிகாரிகளுக்கு குறைந்த அளவிலான அதிகாரமே உள்ளது. . ஆனால், சிவிலியன் அதிகாரிகள் தங்களுடைய செயல்கள் மற்றும் நடவடிக்கைகளால் லும், ரோஹிஞ்சாக்கள் மீதான குற்றங்களைக் நடத்தினார்கள் என்று ஐ.நா அறிக்கை கூறுகிறது.

மியான்மர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டதில்லை என்றபோதிலும், வங்கதேசம் அந்த நீதிமன்றத்தில் உறுப்பினர் என்பதால், இந்த விவகாரத்தை அது விசாரிக்கமுடியும்

https://www.bbc.com/tamil/global-45321652

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.