Jump to content

சதோச வளாகத்தில் இது வரை 126 மனித எச்சங்கள் மீட்பு


Recommended Posts

சதோச வளாகத்தில் இது வரை 102 மனித எச்சங்கள் மீட்பு

 

 
 

மன்னார் 'சதோச' வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்காக அகழ்வுகள் மேற்கொன்ட சமயத்தில் சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்ப்டதை தொடர்ந்து குறித்த வளாத்தில் இன்று திங்கட்கிழமையுடன் 58 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.

IMG_8542.JPG

குறித்த அகழ்வு பணியானது கடந்த 24 திகதி வெள்ளிக்கிழமை பகலுடன் நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று திங்கட்கிழமை வழமை போல் விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இது வரை குறித்த வளாகத்தில் 102 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 95 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு சுமார்  440 ற்கும் மேற்ப்பட்ட பைகளில் இலக்கம் இடப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

IMG_8554.JPG

தொடர்ச்சியாக அப்புறப்படுத்தப்படும் மனித எச்சங்கள் குறித்த வளாகத்திலேயே சுத்தப்படுத்தப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டுகின்றது.

இந்நிலையில் கடந்த ஒரு சில நட்களாக வானிலை மாற்றம் காரணமாக மழை பெய்யும் என்பதால் குறித்த வளாகத்தின் முன் பகுதியானது முழுவதும் தார்ப்பால் இட்டு மூடப்பட்டுள்ளது.

IMG_8559.JPG

தற்போது வளாகத்தின் மைய பகுதியில் உள்ள மனித எச்சங்களே மீட்க்கப்பட்டு வருகின்றது.

மழை பெய்யும் பட்சத்தில் குறித்த வளாகமானது முழுமையாக மூடப்படும்  நிலை ஏற்படும் என தெரியவருகின்றது.

http://www.virakesari.lk/article/39207

Link to comment
Share on other sites

 

மன்னாரில் இது வரை 102 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன (வீடியோ )

மன்னார் ‘சதோச’ வளாகத்தில் புதிய கட்டிடம் அமைப்பதற்காக அகழ்வுகள் மேற்கொன்ட சமயத்தில் சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாத்தில் இன்று திங்கட்கிழமை(27) 58ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. குறித்த அகழ்வு பணியானது கடந்த 24 திகதி வெள்ளிக்கிழமை மதியத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து இன்று வழமை போல் விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.

இது வரை குறித்த வளாகத்தில் 102 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 95மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு 440ற்கும் மேற்பட்ட பைகளில் இலக்கம் இடப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதி மன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக அப்புறப்படுத்தப்படும் மனித எச்சங்கள் குறித்த வளாகத்திலேயே சுத்தப்படுத்தப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டுகின்றது.இந்த நிலையில் கடந்த ஒரு சில நட்களாக வானிலை மாற்றம் காரணமாக மழை பெய்யும் என்பதால் குறித்த வளாகத்தின் முன் பகுதியானது முழுவதும் தரப்பால் இடப்பட்டு மூடப்பட்டுள்ளது.

தற்போது வளாகத்தின் மைய பகுதியில் உள்ள மனித எச்சங்களே மீட்;கப்பட்டு வருகின்றது. மழை பெய்யும் பட்சத்தில் குறித்த வளாகமானது முழுமையாக மூடப்படும் நிலை ஏற்படும் என தெரிய வருகின்றது.

IMG_8548.jpg?resize=800%2C451

IMG_8544.jpg?resize=800%2C450IMG_8553.jpg?resize=800%2C450

http://globaltamilnews.net/2018/92963/

Link to comment
Share on other sites

மன்னார் புதைகுழி – குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா இராணுவம்

 

brigadier-sumith-atapattu-300x200.jpgமன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாரிய மனிதப் புதைகுழி தொடர்பாக சிறிலங்கா இராணுவம் மீது யாரும் குற்றம்சாட்டவில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

மன்னாரில் சதொச வளாகத்தில் பாரிய மனிதப் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, அதிலிருந்து எலும்புக்கூடுகளையும் மனித உடல் எச்சங்களையும் மீட்கின்ற பணிகள் சுமார் இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உள்ளிட்ட 90இற்கும் அதிகமான எலும்புக்கூடுகள் இந்தப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எனினும் கொல்லப்பட்டவர்கள் யார் என்றோ, இவர்கள் எப்படிக் கொல்லப்பட்டார்கள், யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதோ இன்னமும் தெரியவில்லை.

எலும்புக்கூடுகள் அடங்கிய புதைகுழியில், ஆட்களை அடையாளம் காணக் கூடிய உடைகள் உள்ளிட்ட வேறு எந்த தடயப்பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டுள்ள சடலங்களுடன் சிறிலங்கா படையினர் தொடர்புபடவில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக இராணுவத்துக்கும் இந்தப் புதைகுழிக்கும் எந்த தொடர்பும் இல்லை. யாருமே சிறிலங்கா இராணுவத்தைக் குற்றம்சாட்டவுமில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/08/27/news/32566

Link to comment
Share on other sites

மன்னார் புதைகுழியின் மர்மம் வெளிச்சத்திற்குவருமா?

 

 
 

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற பகுதியில் காணப்படும் பாரிய புதைகுழியொன்றிலிருந்து மீட்கப்பட்ட உடல்களை  அடையாளம் காணும் நடவடிக்கையில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையின் வடமேற்கு நகரமான மன்னாரில் இதுவரை 100ற்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

2009 இல் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய மனித புதைகுழியிது.

26 வருடகால யுத்தத்தின் போது  ஒரு இலட்ச்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இவ்வருட ஆரம்பத்தில் புதிய கட்டிடமொன்றிற்காக நிலத்தை அகழும் பணிகள் இடம்பெற்றவேளை மனிதஎலும்புக்கூடுகளை கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்து நீதிமன்றம் குறிப்பிட்ட பகுதியை முற்றாக அகழுமாறு உத்தரவிட்டது.

இந்த முழு பகுதியையும் இரண்டாக பிரிக்கலாம் ஒரு பகுதியில் ஒழுங்கான விதத்தில் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன,மற்றைய பகுதியில்  ஒழுங்கற்ற விதத்தில் புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகளை காணமுடிகின்றது என்கிறார் இப்பகுதியில் பணிகளை மேற்கொண்டுள்ள நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் ராஜ் சோமதேவ.

somadeva.jpg

இவர் களனி பல்கலைகழகத்தை சேர்ந்த தடயவியல்  தொல்பொருள் ஆய்வாளர்.

இன்னமும் அகழவேண்டிய பகுதிகள் உள்ளன இதன் காரணமாக மேலும் பல எலும்புக்கூடுகள் மீட்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தனது குழுவினர் மீட்ட மனித எச்சங்களில் ஆறு சிறுவர்கள் உடையவை எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

தமிழர்கள் அதிகமாக வாழும் மன்னாரில் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டவர்கள் யார்? இவர்களை யார் எப்போது கொலை செய்தார்கள் என்பது மர்மமான விடயமாக காணப்படுகின்றது.

ஆதாரங்களை எவரும் சிதைப்பதை தடுக்கும் விதத்தில் உள்ளுர் காவல்துறையினர் அந்த பகுதிக்கு பாதுகாப்பு அளித்துள்ள நிலையில் உள்ளுர் நிபுணர்கள் மண்டையோடுகளையும் எலும்புகளையும் மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மனித எச்சங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத விதத்தில் அவர்கள் தங்கள் நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.

கொல்லப்பட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு உதவக்கூடிய விதத்தில் ஆடைகளோ வேறு பொருட்களோ இதுவரை மனித புதைகுழியலிருந்து மீட்கப்படவில்லை.

 

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது மன்னார் நகரம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அதேவேளை தமிழ் கிளர்ச்சிக்காரர்கள் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.

புதைகுழிக்குள் உடல்கள் காணப்படும் விதம் குறித்து நிபுணர்கள் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர்.

உடல்கள் காணப்படும் விதம் குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம் அது முற்றிலும் குழப்பமானதாக காணப்படுகின்றது இரண்டு அடுக்குகளில் எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன என்கின்றார் சோமதேவ.

மனித எச்சங்களை மீட்டதும்,அவர்கள் அதனை நீதிமன்றத்திடம் சேர்க்கின்றனர், அகழ்வுப்பணிகள் முற்றாக முடிவடைந்ததும்; அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும்.

புதைகுழிக்குள் மீட்கப்பட்டவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை பேராசிரியர் சோமதேவவும் அவரது குழுவினரும் இன்னமும் உறுதிசெய்யவில்லை.

இதுவரையில் எவர்மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் முடிவின் பின்னர் பல மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திருகேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்குள் 94 மனித எச்சங்கள் காணப்பட்டன.

2014 இல் இவை மீட்கப்பட்ட போதிலும் இன்று வரை அவை குறித்த தெளிவான விபரங்கள் முடிவுகள் எவையும் வெளியாகவில்லை.

இலங்கை படையினரும் தமிழ்பிரிவினைவாதிகளும் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என  மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் அரசாங்கம் பொதுமக்கள் கொல்ல்ப்பட்டமை காணாமல்போனமைக்கும் படையினருக்கும் இடையில் தொடர்பில்லை என தெரிவித்து வருகின்றது.

இதேவேளை இலங்கையின் காணாமல்போனவர்களிற்கான அலுவலகம் மன்னார் புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கான நிதியின் ஒரு பகுதியை வழங்குகின்றது.

மன்னார் புதைகுழி குறித்து முழுமையான விசாரணை அவசியம் என காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவிக்கின்றார்

காணாமல்போனோரை கண்டுபிடிக்க முயல்வதும்  அவர்கள் எந்த சூழலில் காணாமல்போனார்கள் என்பதை  உறவினர்களுக்கு தெரிவிப்பதுமே தங்கள் அலுவலகத்தின் முக்கிய பணி என்கின்றார் பீரிஸ்

காணாமல்போனோரை தேடும் பணிகளின் ஒரு பகுதியாக பாரிய மனித புதைகுழிகளை தேடும் நடவடிக்கை அமைகின்றது எனவும் தெரிவிக்கும் அவர்  மனித புதைகுழிகளுக்குள் காணாமல்போனவர்கள் உள்ளனரா என்பதை ஆராய்வதும் தங்கள் பணி என்கிறார்.

கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிகள் தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்காததன் காரணமாக  இந்த புதைகுழி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற சந்தேகம் தமிழ் மக்களின் மனதில் எழுந்துள்ளது.

மன்னாரில் மோதல்காலத்தில் கட்டுப்பாட்டுப்பகுதியை நோக்கி செல்லமுயன்ற வேளை பல தமிழர்கள் காணாமல்போனார்கள் என்கிறார் மன்னார் மறைமாவட்டத்தின் குருமுதல்வர்  விக்டர் சூசை தெரிவிக்கின்றார்.

மோதல்களின் போது இந்தியாவிற்கு படகுகளில் தப்பி செல்ல முயன்ற பல தமிழர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர் காணாமல்போனார்கள் என்ற குற்றச்சாட்டும் காணப்படுகின்றது என அவர் தெரிவிக்கின்றார்.

மன்னார் புதைகுழிகள் அகழப்பட்ட ஆரம்ப நாட்களில் அந்த பகுதிக்கு சென்றதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அவர்கள் சிறுவர்களின் எலும்புக்கூடுகளை கூட கண்டுபிடித்துள்ளனர் என்பதை அறிகின்றோம்,இவர்கள் யார் எவ்வாறு இவர்கள் மரணத்தை தழுவினார்கள் என்பதை நாங்கள் கண்டறியவேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை புதைகுழியில் காணப்படும் உடல்களுக்கும் படையினருக்கும் இடையில் தொடர்பிருக்கலாம் என தெரிவிக்கப்படுவதை இராணுவம் நிராகரிக்கின்றது.

நிச்சயமாக இந்த புதைகுழிக்கும் படையினருக்கும் இடையில் எந்த தொடர்புமில்லை,இதுவரை எவரும் அந்த குற்றச்சாட்டுகளை சுமத்தவுமில்லை என்கின்றார் இராணுவபேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து

எனினும் இலங்கை அரசாங்கம் தனது கடந்த காலங்களை உரிய விதத்தில் அணுக விரும்பினால் மனித புதைகுழிகளை விசாரணை செய்வதன் மூலம் காணாமல்போனவர்கள் குறித்த விவகாரத்திற்கு  நேர்மையான தீர்வை காண முயலவேண்டும் என தமிழ் சமூகத்தை சேர்ந்த பலர் தெரிவிக்கின்றனர்

mannar_grave6.jpg

நன்றி- பிபிசி

 

தமிழில் - வீரகேசரி இணையம்.

http://www.virakesari.lk/article/39300

Link to comment
Share on other sites

மன்னாரில் 59 ஆவது தடவையாக மனித எலும்புக்கூடுகள் அகழ்வு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

மன்னார் ‘சதோச’ வளாகத்தில் தொடர்சியாக சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்;கப்பட்டு வருகின்ற நிலையில் 59 ஆவது தடவையாக இன்று செவ்வாய்க்கிழமை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் துறை போராசிரியர் தலைமையில் இடம் பெற்ற இந்த அகழ்வு பணியில் தற்போது வரை சுமார் 102 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.அவற்றில் 95 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக காணப்படும் 7 மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் இன்று இடம் பெற்ற போதும் குறித்த மனித எச்சங்களுக்கு கீழேயும் , மேலேயும் அதிகளவிலான மனித மண்டையோடுகள் காணப்படுவதனால் அப்புறப்படுத்தும் பணிகளை முழுவதுமாக முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

தற்போது வரை குறித்த வளாகத்திலேயே மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் சுத்தப்படுத்தப்பட்டு அடையாளப் படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டுகின்றது.குறித்த மனித புதை குழி தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆராய்வதற்கான உயர் மட்;ட கலந்துரையாடல் இவ்வார இறுதிக்குள் இடம் பெறவுள்ளதாக தெரிய வருகின்றது.

IMG_8769.jpg?resize=800%2C450IMG_8770.jpg?resize=800%2C450IMG_8771.jpg?resize=800%2C450IMG_8780.jpg?resize=800%2C450IMG_8781.jpg?resize=800%2C450IMG_8782.jpg?resize=800%2C450

http://globaltamilnews.net/2018/93119/

Link to comment
Share on other sites

மன்னாரில் 111 மனித எலும்புக்கூடுகள்!

 

skeletons-720x450.jpg

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வு நடவடிக்கையில் இதுவரை 111 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மன்னார் சதொச வளாகத்தில் கடந்த மூன்று மாத காலமாக முன்னெடுக்கப்படும் அகழ்வு நடவடிக்கையில் குறித்த மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் ஏழு மனித எலும்புக்கூடுகள் குழந்தைகளினுடையதென தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றில் பல உடற்கூற்று பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அதேவேளை, இன்று (வியாழக்கிழமை) 61ஆவது நாளாகவும் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்கின்றன.

விசேட சட்டவைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ஆகியோர் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மன்னார் சதொச வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் கட்டட வேலைக்காக மண்ணை அகழ்ந்த போது மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவ்விவகாரம் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, நீதவான் உத்தரவிற்கமைய கடந்த மே மாதம் முதல் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

காலநிலை சீர்கேடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக குறித்த பகுதியின் 27 சதவீதமான பிரதேசமே தற்போது வரை அகழப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மன்னாரில்-111-மனித-எலும்புக/

Link to comment
Share on other sites

மன்னாரில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 114 எலும்புக்கூடுகளில் 12 சிறுவர்களினுடையது

 

 
 

மன்னாரில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 114 எலும்புக்கூடுகளில் 12 சிறுவர்களினுடையது

மன்னார் ச.தொ.ச கட்டட தொகுதி புதைகுழியில் தொடர்ந்தும் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுவரும் நிலையில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 114 எலும்புக்கூடுகளில் 12 சிறுவர்களினுடையது என்று நீதிமன்ற மருத்துவ அதிகாரி எஸ். ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த எலும்புக்கூடுகள் தொடர்ந்து அறையப்பட்டு வருவதாகவும், இவற்றின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக கலிபோர்னியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மன்னார் நீதிபதி பிரபாகரனின் அறிவுறுத்தலில் அகழ்வாராய்ச்சி மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் குழு ஒன்று சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

http://www.samakalam.com/செய்திகள்/மன்னாரில்-இதுவரை-கண்டுபி/

Link to comment
Share on other sites

ஆடைகளின்றி மீட்கப்படும் மனித எலும்புக் கூடுகளால் மன்னார் மக்கள் மத்தியில் அச்சம்

 

 
 

 

மன்னார் சதோச வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

IMG_9079.jpg

மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும் தொடர்ச்சியாக புதிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறாக புதிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமையினால் அகழ்வு பணிகள் முடிவின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இன்று 62 ஆவது தடவையாக குறித்த வளாகத்தில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

IMG_9070.jpg

விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் இதுவரை குறித்த வளாகத்தில் 111 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 97 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன..

மேலதிகமாக காணப்படும் 14 மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள்  இடம்பெறுகின்ற போதும் குறித்த மனித எச்சங்களின் கீழ் மேலும் அதிகளவிலான மனித மண்டையோடுகள் காணப்படுவதனால் அப்புறப்படுத்தும் பணிகளை முழுவதுமாக முடிப்பதில் தாமதம் காணப்படுகின்றது.

ஆனாலும் இதுவரை 111 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டாலும் 97 மனித எச்சங்கள் மீட்கப்பட்டாலும் குறித்த வளாகத்தில் இருந்து மீட்க்கப்பட்ட தடைய பொருட்கள் குறைவாகவே காணப்படுகின்றன.

IMG_9061.jpg

இது வரை வட்ட வடிவிலான உலோகப்பொருட்கள் மாலை போன்ற ஒரு சில தடைய பொருட்களே மீட்கப்பட்டுள்ளன.

இது வரை 4 தொடக்கம் 5 அடி வரை  அகழ்வுகள் இடம் பெற்றிருந்தாலும் இது வரை  துணிகளோ அல்லது ஆடைகளுடன் சம்மந்தப்பட்ட எந்த விதமான தடைய பொருட்களும் கிடைக்கவில்லை என்பது சந்தோகத்திற்குறியதாக காணப்படுகின்றது.

சடலங்களாக புதைக்கப்பட்ட போது ஆடையில் காணப்படும் தடையப்பொருட்கள் எவையும் கண்டு பிடிக்கப்படாத நிலையில்  புதைக்கப்பட்ட உடல்கள் நிர்வாண நிலையில் புதைக்கப்பட்டிருக்களாம்? என மக்கள் மத்தியில் சந்தோகம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/39651

Link to comment
Share on other sites

மன்னாரில் தொடரும் மர்மம்!- மனித புதைக்குழிக்குள் இருந்து வெட்டு தழும்புடன் மண்டை ஓடு

 

photo-5-720x450.jpg

மன்னாரில் தொடர்ந்து 66ஆவது நாளாக மனித எச்சங்களின் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அங்கிருந்து வெட்டு தழுப்புகளுடனான மண்டை ஓடொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மனித புதைக்குழி பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ள நிலையில், தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எச்சமானது இச்சந்தேகங்களை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளன.

குறித்த மண்டையோட்டில் காணப்படும் வெட்டு தழும்பானது பிரோத பரிசோதனையின் போது ஏற்பட்டதா? அல்லது கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதா போன்ற பல்வேறு கோணங்களில் சிந்திக்க வைத்துள்ளது.

மன்னார் சதொச வளாகத்தில் தொடர்சியாக இன்று (வியாழக்கிழமை) 66ஆவது நாளாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மற்றும் எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றன.

விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதுவரை குறித்த வளாகத்திலிருந்து 120 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 114 மனித எலும்புக்கூடுகள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

photo-2.jpg

http://athavannews.com/மன்னாரில்-தொடரும்-மர்மம்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது குறித்து சமூக..மண் மக்கள் நலம் சார் அமைப்புக்கள் சர்வதேச ஊடகங்களைக் கூட்டி ஒரு கவனயீர்ப்பை உருவாக்க வேண்டும்.  வெளிநாட்டு தூதுவர்கள் மனித உரிமை அமைப்புப் பிரதிநிதிகளுக்கும்.. இந்த இடத்திற்கு விஜயம் செய்து கண்காணித்துச் செல்ல கோர வேண்டும். ஐநா மனித உரிமை பேரவையில்.. இது குறித்த ஆவணம் முறையாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். குறிப்பாக வடக்கு மாகாண சபை இதனை முன்னெடுக்க வேண்டும்.

இப்படியே விட்டால்.. இதுவும்.. நீதி இன்றி நீர்த்துப்போகச் செய்யப்பட்டு விடும். செம்மணி போல. 

Link to comment
Share on other sites

மன்னாரில் தொடர்ச்சியாக கண்டு பிடிக்கப்படும் மனித எச்சங்கள் :

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

மன்னார் ‘சதோச’ வளாகத்தில் தொடர்சியாக அகழ்வு பணிகள், மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தும் பணிகள் மற்றும் அப்புறபடுத்தும் பணிகள் என பல்வேறு கட்டமாக தொடர்ச்சியாக ; இடம் பெற்று வருகின்றது. அந்தவகையில் இன்று புதன் கிழமை (12) 69 ஆவது தடவையாக விசேட சட்டவைத்திய அதிகாரியின் தலைமையில் ; இடம் பெற்று வருகின்றது.

இன்றைய நிலவரப்படி 126 மனித எச்சங்கள் மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மீட்கப்படாத அடையாளப்படுத்தப்பட்டுள்ள மனித எச்சங்களை அகழ்வு செய்யும் பணி இடம் பெற்று வருவதாக அறிய முடிகின்றது.

அத்துடன் குறித்த புதை குழிப் பகுதியானது மழை மற்றும் வேகமான காற்று காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு பகுதி மூடப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_9230.jpg?resize=800%2C450IMG_9242.jpg?resize=800%2C450IMG_9243.jpg?resize=800%2C450

http://globaltamilnews.net/2018/95354/

Link to comment
Share on other sites

இலங்கை: மன்னாரில் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படும் மனித எச்சங்கள்

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

கண்டு பிடிக்கப்படும் மனித எச்சங்கள்

தொடர்சியாக சந்தேகத்துக்குரிய மனித எச்சங்கள் புதிதாக மீட்கப்பட்டும் அடையாளப்படுத்தப்பட்டும் வருகின்றன.

இன்று வியாழக்கிழமை 70வது தடவையாக குறிப்பிட்ட வளாகத்தில் அகழ்வுப் பணிகள் நடைபெறுகின்றன.

சிறப்பு சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் தடயவியல் ஆய்வுகளுக்கான மூத்த பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினர் இணைந்து அகழ்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அகழ்வுப் பணிகளுக்கு ஏற்ப தற்போதைய நிலையில் நூற்றுக்கும் அதிகமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு மன்னார் நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மீட்கப்படாமல் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மனித எச்சங்களை அகழ்வு செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.

கண்டு பிடிக்கப்படும் மனித எச்சங்கள்

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்களின் மனித உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் மழை மற்றும் வேகமான காற்று காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் குறிப்பிட்ட மனித புதைக்குழி பகுதிக்குள் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு பகுதி பாலித்தீன் தாளால் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் விற்பனை நிலையம் ஒன்றை அமைப்பதற்கான பணிகள் கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டன.

அந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை, மன்னார் பகுதி வீடு ஒன்றில் கொட்டியபோது அதில் மனித எச்சங்கள் இருந்ததாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இலங்கைஇலங்கை

அதன் பின்னர் மன்னார் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கடந்த மே மாதம் 28 ஆம் தேதி முதல் முறையாக அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை தொடர்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-45511119

Link to comment
Share on other sites

மன்னர் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு – கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் :

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_9254.jpg?resize=800%2C450

 

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் தொடர்சியாக மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக போராசிரியர் தலைமையில் மன்னார் ‘சதொச’ வளாகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக அடையாளப் பபடுத்தப்படும் மனித எலும்புக்கூடுகளை அப்புறப்படுத்தும் மற்றும் ஆய்வு செய்யும் பணி இடம் தொடர்ந்தும் பெற்றுவருகின்றது.

இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற அகழ்வு பணியின் போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம்? என சந்தேகத்தை ஏற்படுத்தகூடிய மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

கைகள் இரண்டும் நெருக்கமாக பிணைக்கப்பட்ட நிலையிலும் கால்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று குறுக்காக பிணைக்கப்பட்ட விதத்திலும் மிகவும் நெருக்கத்துக்குள் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.

குறித்த மனித எலும்புக்கூடு கை , கால்கள் கட்டப்பட்ட நிலையையில் புதைக்கப்படதா? அல்லது மத சடங்குகளின் அடிப்படையில் புதைக்கப்பட்டதா? என்பது தொடர்பாக எந்த வித ஊகிப்புக்களும் தற்போது மேற்கொள்ள முடியவில்லை.

-எனினும் இது வரை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மற்றும் புதைக்கப்பட்ட நிலை மூலமாக குறித்த மனித உடல்கள் சாதாரண நிலையில் புதைக்கப்பட்டவை என நிச்சயம் ஏற்று கொள்ள முடியாத விடயமாக காணப்பட்டாலும் இறுதிக்கட்ட பரிசோதனையின் பின்னரே தெரிய வரும்.

இன்று வெள்ளிக்கிழமை(14) 71 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. இதுவரை 126 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 120 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டு, பொதி செய்யப்பட்டு, நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_9245.jpg?resize=800%2C450  IMG_9255.jpg?resize=800%2C4501536894932849_IMG_9251.jpg?resize=800%2C

http://globaltamilnews.net/2018/95568/

Link to comment
Share on other sites

தமிழர் பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூடுகள்!!

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

 

https://www.tamilwin.com/community/01/193358?ref=home-feed

Link to comment
Share on other sites

மன்னாரில் கொத்துக் கொத்தாக மனித எலும்புக்கூடுகள் மீட்பு-அச்சத்தில் மக்கள்

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_9453.jpg?resize=800%2C450

 

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றது. மன்னார் மவட்ட நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக பேராசிரியர் தலைமையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக அடையாளப் படுத்தப்படும் மனித எலும்பக்கூடுகள் அப்புறப்படுத்தும் மற்றும் ஆய்வூசெய்யும் பணிகள் இடம் பெற்று வருகின்றது.

இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமைக்கு பின்னர் இன்று திங்கட்கிழமை ( 17 ) மீண்டும் 72 ஆவது வது தடவையாக அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்களாம்? என சந்தேகத்தை ஏற்படுத்தகூடிய மனித எலும்புக்கூடு ஒன்று அடையாளப் படுத்தப்பட்டிருந்தது.

குறித்த மனித எலும்புக்கூடு அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய (17) அகழ்வு பணியின் போதும் அதே போன்று கை கால்கள் கட்டப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம்? என சந்தேகத்தை ஏற்படுத்த கூடிய மூன்றுக்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வெளிவரும் மனித எச்சங்கள் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மிகவும் கொடுரமாக காணப்படுகின்றது.

மீட்கப்படும் மனித எச்சங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் கொத்து கொத்தாக புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடரும் அகழ்வு பணிகளின்போதும் மேலும் மனித எச்சங்கள் மீட்கப்படலாம் என தெரிகின்றது
எனவே அகழ்வு பணிகளை விரைவு படுத்தும் வகையில் இன்றைய அகழ்வு பணியின் போது மேலதிகமாக சட்ட வைத்திய அதிகாரி மற்றும் உத்தியோகஸ்தர்கள் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

 IMG_9456.jpg?resize=800%2C450IMG_9458.jpg?resize=800%2C450IMG_9464.jpg?resize=800%2C450

http://globaltamilnews.net/2018/96028/

Link to comment
Share on other sites

மன்னார் சதொச வளாக மனித எலும்புக்கூடுகள் மீட்பு தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் கருத்து

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று (19) புதன் கிழமை 74 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. மன்னார் மவட்ட நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக பேராசிரியர் ராஜ் சோம தேவ ஆகியோரின் தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.

இந்தநிலையில் இன்று இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்று ஊடகவியலாளர்களுக்கு காலை 11 மணியளவில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ கருத்து தெரிவித்தார்.
மன்னார் ‘சதொச’ வளாகத்தில் இன்று புதன் கிழமையுடன்(19) 74 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது எனவும் குறித்த வளாகத்தில் இருந்து இது வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது 136 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதெனவும் அவற்றில் மீட்கப்பட்ட 130 மனித எலும்புக்கூடுகள் மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அகழ்வு பணிகள் இடம் பெறும் தினங்களில் காலை 10.30 மணி தொடக்கம் 11.30 மணி வரைக்கும், மாலை 3.30 மணி தொடக்கம் 4.30 மணி வரைக்கும் ஊடகவியலாளர்கள் அகழ்வு பணி இடம் பெறும் வளாக்ததிற்குள் சென்று தமது கடமையை மேற்கொள்ள முடியும்.

-ஒவ்வெரு புதன் கிழமையும் காலை 10.30 மணி முதல் 11 மணி வரையில் வாராந்த பதிவுகள் ஊடகங்களுக்கு கருத்தாக வழங்கப்படும் என சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மேலும் தெரிவித்தார்.

DSC_0037.jpg?resize=800%2C534DSC_0043.jpg?resize=800%2C534DSC_0067.jpg?resize=800%2C534

http://globaltamilnews.net/2018/96250/

Link to comment
Share on other sites

இலங்கை மன்னார் மனித புதைகுழி: "எவ்வளவு நீளம் செல்லும் என்பது தெரியாது"

இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் தோண்டப்படும் மனித புதைகுழி எவ்வளவு தூரம் நீண்டு செல்லும் என்பதைத் தன்னால் கூற முடியாது என தோண்டும் பணிகளை முன்னெடுத்து செல்லும் சிறப்பு சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இலங்கை

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தும் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன. 74ஆவது முறையாக இன்று (19) புதன்கிழமையும் அகழ்வுப் பணிகள் நடந்தன. இதுவரை 136 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

சிறப்பு சட்ட மருத்துவ நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் மனித எலும்பு கூடுகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் தடயவியல் ஆய்வுகளுக்கான மூத்த பேராசிரியர் ராஜ் சோம தேவாவுடன் அவரின் குழுவினரும் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அகழ்வுப் பணிகளைத் துரிதப்படுத்த மேலதிகமாக உத்தியோகஸ்தர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

சமிந்த ராஜபக்ச Image captionசமிந்த ராஜபக்ச

மன்னார் மனித புதைகள் குழி குறித்து சமிந்த ராஜபக்சவுடன் பிபிசி தமிழ் பேசியது.

கை,கால்கள் கட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சில எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் உண்மை உள்ளதா?

''கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததாக யார் சொன்னது, அல்லது எதனடிப்படையில் ஊடகங்களில் இந்தத் தகவல்கள் வெளியாகின என்பது எனக்குத் தெரியாது.

இதற்கு எவ்வித சான்றும் இல்லை. ஊடகங்கள் தமக்குத் தேவையானதை பிரசுரிக்கின்றன. எனினும், உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். இதன் உண்மைத் தன்மையை நான் ஊடகங்களுக்குக் கூறத் தயாராக இருக்கிறேன். இதில் எதனையும் மறைக்கும் தேவை இல்லை. புதன்கிழமைகளில் ஊடகங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக வந்து பார்வையிட முடியும். மீட்கப்படும் எலும்பு கூடுகளின் புகைப்படங்களைப் பார்த்து, ஒவ்வொருவரும் தமது கருத்துக்களைக் கூற முடியும். அதனை நிறுத்த முடியாது. எனினும், இதன் தலைமை விசாரணையாளராக, நானே இறுதி அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த அறிக்கையில் முழுமையான விவரங்களை துல்லியமான தகவல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, கைகள், கட்டப்பட்டிருந்ததாகவோ, ஊடகங்களில் வெளியிடப்படும் சந்தேகங்களுக்கோ இந்த சந்தர்ப்பத்தில் என்னால் பதிலளிக்க முடியாது.''

இலங்கை

இந்தப் பணி எந்த நிலையில் இருக்கிறது? விசாரணைக்கு வெளிநாட்டு உதவி பெறப்பட்டுள்ளதா?

''எலும்புக் கூடுகளை மீட்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளோம். இதில் முக்கியமான பகுதிகளை அடையாளப்படுத்தி சேகரித்து வருகிறோம். இவற்றை மிகவும் வெளிப்படையாக செய்து வருகிறோம். நீதிமன்ற நீதவான் முன்னிலையில்தான் இந்தப் பணி நடக்கிறது. நீதிபதியும் குறிப்பெடுத்து வருகிறார். மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் நீதிமன்றப் பொறுப்பில் வைக்கப்படுகின்றன. இரண்டாம் கட்டமாகவே, ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. தோண்டும் பணிகள் நிறைவடைந்த பின்னரே இதுகுறித்த ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன''.

''இவற்றை சோதனை செய்ய நீண்ட நாட்கள் தேவைப்படும். அதில் ஒருசில சோதனைகளை இப்போதே ஆரம்பிக்க யோசித்துள்ளோம். இதில் ஒரு பரிசோதனையை வெளிநாட்டில் செய்ய உத்தேசித்துள்ளோம். அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட, நிபுணத்துவம்வாய்ந்த நிறுவனமொன்றில் இதனை நடத்த யோசித்தோம். இந்த யோசனையை நீதிமன்றத்தில் முன்வைத்தோம். இதற்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில் மாதிரிகளை புளோரிடாவிற்கு அனுப்பிவைப்போம்.''

மனித எலும்புகள் தோண்டப்படும் இடம் எவ்வாறு தோற்றமளிக்கிறது?

மனிதப் புதைகுழியைப் போல் இருக்கிறதா? மயான பூமியைப் போல இருக்கிறதா?

''மக்களின் சம்பிரதாயபூர்வ, மத அடிப்படையில் உடல்களை அடக்கம் செய்யும்போது அதில் ஒரு ஒழுங்குமுறை இருக்கும். ஒன்றன் மேல் ஒன்றாக ஒருபோதும் உடல்கள் புதைக்கப்படுவதில்லை. ஆனால் இந்த இடத்தில் ஒன்றன்மேல் ஒன்றாக உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. புகைப்படங்களில் இவற்றை உங்களால் அவதானிக்க முடியும்.''

இலங்கை

''மயான பூமியில் உடல்கள் புதைக்கப்படுவதைப் போன்ற அமைப்பிலும் ஒரு இடம் இருக்கிறது. ஒழுங்கற்ற முறையில், ஒன்றன் மேல் ஒன்றாக புதைக்கப்பட்ட எலும்பு கூடுகள் இருப்பதையும் அடையாளம் கண்டுள்ளோம். இந்தப் பகுதி குறித்தே அதிக கவனம் செலுத்துகிறோம்.''

ஒழுங்கற்ற விதத்தில் எலும்புக் கூடுகள் காணப்படுவதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தக் காரணமாக அமைந்திருக்கிறதா?

''இந்த புதைகுழி மன்னாரில் இருக்கிறது. இலங்கையில் மன்னார் என்பது அதிக பிரச்சினைகள் இருந்த இடம். இதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது. இதனைப் பார்க்கும் ஒருவருக்கு அவரது கருத்தைக் கூற முடியும். எனினும், தலைமை விசாரணையாளராக ஆய்வுகள் முடிந்த பின்னரே எனது இறுதி முடிவைக் கூற முடியும். இவற்றை நேரில் கண்ட சாட்சியங்கள் இல்லை. வேறு எந்த சான்றுகளும் இல்லை''.

''எனவே இதன் பின்னணி என்ன? என்ன நடந்தது என்பது குறித்து? தேடியறிய வேண்டும். இவற்றுக்கு விடை காண்பதே எனக்குள்ள பொறுப்பு. இதற்குத் தேவையான அனைத்து விசாரணைகளையும் நான் முன்னெடுப்பேன். முழுமையான விசாரணையின் பின்னர் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன்.'' என்றார்.

இலங்கை

இந்த விசாரணைகளை முடிக்க எவ்வளவு காலம் எடுக்கும்?

''அதனைக் கூற முடியாது. இந்த புதைகுழியின் ஒரு எல்லையை மட்டுமே அடையாளம் கண்டுள்ளோம். இது எவ்வளவு தூரம் விரிந்துள்ளது என்பதை எம்மால் இன்னும் கண்டறிய முடியவில்லை. தோண்டும் பணிகள் மட்டுமே தற்போது முன்னெடுக்கப்படுகிறன. மிகவும் கவனமாக இந்தப் பணியை செய்கிறோம். சில நேரம் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு எலும்புக்கூடுகளை மட்டுமே எடுக்கக் கூடியதாக இருக்கிறது.''

''காரணம், இவற்றை சிறுசிறு துண்டுகளாக சேகரிக்க வேண்டியிருக்கிறது. இவற்றை விஞ்ஞானபூர்வமாகவே செய்துவருகிறோம். இன்னும் நிறைய எலும்புக் கூடுகள் தோண்டியெடுக்க வேண்டியுள்ளது. எவ்வளவு தூரம் இது நீண்டு செல்கிறது என்பது எனக்கே தெரியாது. எனவே, தோண்டும் பணிகள் எப்போது நிறைவுக்கு வரும் என்பதைக் கூற முடியாது. முதலில் தோண்டும் பணிகள் நிறைவடைய வேண்டும். அதன்பின்னரே ஆய்வுகளையும், சோதனைகளையும் நடத்தி இறுதி முடிவுக்கு வர முடியும்'' என்றார்.

இலங்கை

மன்னார் மனித புதை குழியின் அகழ்வு பணிகள் நடக்கும் தினங்களில் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் செய்தியாளர்கள் அகழ்வு பணி நடக்கும் வளாக்ததிற்குள் சென்று தமது கடமையை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை தோறும் காலை 10.30 மணி முதல் 11 மணி வரையில் தகவல்களும், வாராந்த அறிக்கையும் ஊடகங்களுக்கு வழங்கப்படும் என தலைமை விசாரணையாளரான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-45576226

Link to comment
Share on other sites

மன்னார் அகழ்வுப் பணிகள் 75ஆவது நாளாகவும் நீடிப்பு!

 

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில் இன்று 75ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் இடம்பெறுகின்றன.

மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், அகழ்வுப் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் இன்றைய தினம் மேலதிக பணியாளர்கள் அகழ்வுப் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதுவரைக்கும் குறித்த வளாகத்தில் இருந்து 136 மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 130 மனித எலும்புக்கூடுகள் மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

மன்னார் மவட்ட நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ மற்றும் களனி பல்கலைகழக பேராசிரியர் ராஜ் சோம தேவ ஆகியோரின் தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மன்னார்-அகழ்வுப்-பணிகள்-75/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை தொடர்பில் சரியான சர்வதேசக் கவனம் செலுத்தப்பட்டு சர்வதேச நீதி நியாயங்களின் கீழ் இவை விசாரிக்கப்படாது விடின்.. எம்பிலிப்பிட்டிய மனிதப் படுகுழிகள் போல இவையும் கால வெள்ளத்தில்.. படம் காட்டிக் காட்டியே கரையச் செய்யப்படும். இந்த எலும்புக்கூடுகளுக்குப் பின்னால் உள்ள அநியாயங்களுக்கு நீதி நியாயம் என்பது அப்படியே சாகடிக்கப்பட்டு அவையும் புதைக்கப்பட்டு விடும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.