Jump to content

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி செய்திகள்


Recommended Posts

‘ஈகோ’-வை சோதித்த தோனி: பொறியில் சிக்கி வீழ்ந்த ஷாகிப் அல் ஹசன்

 

 
dhoni

தோனி, ரோஹித்.

துபாயில் நேற்று வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற ஆசியக் கோப்பை சூப்பர்-4 சுற்று போட்டியில் தோனி தன் கேப்டன்சி அனுபவத்தின் மூலம் ரோஹித் சர்மாவுக்கு முக்கியக் கட்டத்தில் உதவினார்.

வங்கதேச அணி 9 ஓவர்கள் முடிவில் 31/2 என்று தடுமாறியது. அப்போது 10வது ஓவரில் நேற்றைய ஆட்ட நாயகன் ரவீந்திர ஜடேஜாவை ரோஹித் சர்மா பந்து வீச அழைத்தார்.

 
 

ஷாகிப் அல் ஹசன் 8 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆடிவந்த நிலையில் இவரும் முஷ்பிகுர் ரஹீமும் ஜோடி சேர்ந்தால் வங்கதேசத்துக்கு அது பெரிய அனுகூலம் என்று இந்திய அணியினர் அறிந்திருந்தனர்.

ஜடேஜா தன் முதல் ஓவரின் 2வது பந்தை நோ-பாலாக்கினார். அடுத்த ப்ஃரீ ஹிட் பந்தை ஜடேஜா வைடு ஆஃப் ஸ்டம்பில் வீச ஷாகிப் அல் ஹசன் பளார் என்று அறைந்து கவர் பவுண்டரிக்கு அனுப்பினார்.

அடுத்த பந்தையும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயிருந்து ஷாகிப் அல் ஹசன் ஸ்வீப் ஆட தினேஷ் கார்த்திக்கினால் அங்கு தடுக்க முடியவில்லை மீண்டும் பவுண்டரி. ஜடேஜாவின் 3 பந்துகளில் 9 ரன்கள்.

அப்போதுதான் தோனியின் கேப்டன்சி அனுபவம் இந்திய அணிக்கு, கேப்டன் ரோஹித் சர்மாவுக்குக் கைகொடுத்தது.

shakibjpg

ஆட்டமிழந்து செல்லும் ஷாகிப் அல் ஹசன். | ஏ.எஃப்.பி.

 

2 பவுண்டரிக்குப் பிறகு ரோஹித் சர்மாவை அழைத்த தோனி பேக்வர்ட் ஸ்கொயர் லெக்கில் ஷிகர் தவணை நிறுத்துமாறு ஆலோசனை வழங்கினார். ஜடேஜாவிடம் இன்னும் சற்று வெளியே வீச அறிவுறுத்தினார் தோனி. கொஞ்சம் புல் லெந்த், மீண்டும் ஸ்வீப் ஆடினார் ஷாகிப் அல் ஹசன் அங்கு நேராக தவண் கையில் பந்து கேட்ச் ஆனது. பொறியில் சிக்கினார் ஷாகிப் அல் ஹசன், ஷாகிபின் ஈகோவை தோனி சோதித்தார், அவரும் பொறியில் சிக்கினார்.

அந்த நேரத்தில் இன்னொரு ஸ்வீப் ஷாட்டை ஷாகிப் ஆடியிருக்க கூடாது, ஆனால் ஷாகிப் அல் ஹசனின் ஈகோவை தோனி சோதிக்க அவரும் அதில் சிக்கினார். ஜடேஜாவும் அருமையாக கொஞ்சம் தள்ளி வீசினார்.

என்ன ஒரு அசாத்தியமான கணிப்பு தோனியிடம் என்று ரோஹித் சர்மா வியந்திருக்கலாம், ஜடேஜா வியந்திருக்கலாம், இதுதான் கேப்டன்சி அனுபவம் என்பதை தோனி நிரூபித்தார்.

https://tamil.thehindu.com/sports/article25013337.ece

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாக் எதிர் ஆப்கான் மட்ச்சைப் பொறுத்தமட்டில் அனுபவம் வென்றது என்டுதான் சொல்ல வேண்டும்.ஆப்கான் முதல் 30 ஓவரில் ரெஸ்ட் மட்ச் மாதிரி விளையாடியது.300 ரன்னை அசாட்டாக அடித்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

ராஜா fielding set பன்னா அது ராங்கா போனதில்ல ?

ரோஹித் சர்மாவுக்கு உதவிய தோனி: அவுட்டான ஷாகிப் அல் ஹசன் - வைரலாகும் வீடியோ

Link to comment
Share on other sites

`அன்பைப் பரப்புங்கள்..!' - இந்திய தேசியகீதம் பாடிய பாகிஸ்தான் ரசிகரின் வைரல் வீடியோ

3338_thumb.jpg
 

ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டியின்போது, இந்திய தேசியகீதத்தைப் பாடி சமூக வலைதளவாசிகள் மனதில் இடம்பிடித்துவிட்டார் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர். 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ரசிகர்

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆகியக் கோப்பை கிரிக்கெட் தொடர், துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம்  அணிகள் தகுதிபெற்றன. முன்னதாக, செப்டம்பர் 19-ம் தேதியன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது இந்தியா. 

 

 

இந்த நிலையில், அன்றைய போட்டியின்போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் செய்திருந்த செயல், கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் வெகுவாக இடம்பிடித்துவிட்டது. பொதுவாக, போட்டி தொடங்குவதற்குமுன்பு மோதும் அணிகளின் தேசியகீதங்கள் இசைக்கப்படுவது வழக்கம். அதேபோல், அன்றைய போட்டியிலும் இரு நாட்டு தேசியகீதங்களும் இசைக்கப்பட்டன. அப்போது, இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, பாகிஸ்தான் அணியின் ரசிகர் ஒருவர், இந்திய தேசிய கீதத்தை உரத்த குரலில் பாடியிருக்கிறார். தான் பாடுவதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். கழுத்தில், பாகிஸ்தான் தேசியக்கொடியை அணிந்திருந்த நிலையில், இந்திய தேசிய கீதத்தைப் பாடிய அந்த நபரை அருகில் இருந்த சக ரசிகர்கள் ஆச்சர்யமாகவும், ஆர்வமாகவும் பார்ந்து வியந்தனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே 5,000 ஷேர்களைக் கடந்துவிட்டது. 

இதையடுத்து, தேசியகீதத்தைப் பாடிய நபர் யார் என்ற தேடல்படலம் ஆரம்பமானது. வீடியோவில் இருப்பவர் அடில் தாஜ் (adil taj) என்பது தெரியவந்தது. அதன் பின்னர், இது குறிந்து அவரிடம் கேட்டதற்கு, `வீடியோவில் இருப்பது நான்தான். சமூக வலைதளத்தில் வீடியோவை ஷேர் செய்ததற்கு நன்றி. அமைதி மட்டுமே. எந்த முட்டாள்தனமான போர்களும் வேண்டாம். அன்பைப் பரப்புங்கள்!' என்று கூறினார்.

https://www.vikatan.com/news/sports/137706-a-pakistani-who-sang-a-song-during-the-india-pakistan-cricket-match.html

 

Link to comment
Share on other sites

ஆச்சரியகரமான திறமை கொண்ட ஆப்கான் ஆடுவதைப் பார்ப்பது என்ன பேறு- ஷாகித் அப்ரீடி மனப்பூர்வ பாராட்டு

 

 
afridi

அப்ரீடி. | கோப்புப் படம். | அகிலேஷ் குமார்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்கானிஸ்தான் ஆட்டத்தை பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரீடியே விதந்தோதி உளப்பூர்வமாகப் பாராட்டியுள்ளார்.

இமாம் உல் ஹக், பாபர் ஆசம் கூட்டணிக்கு பிறகு கடைசியில் ஷோயப் மாலிக் கடைசி ஓவரில் 10 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து வெற்றி தேடித்தந்தார்.

 

ஆனால் ஆப்கான் அணி பாகிஸ்தான் அணியை தண்ணி குடிக்க வைத்தது. முதலில் பேட்டிங்கில் தங்களது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோரை எட்டியது பிறகு தங்கள் முழு ஈடுபாட்டையும் காட்டி பாகிஸ்தானை வீழ்த்த ஆடியது, கடைசியில் பாகிஸ்தான் போராடித்தான் வெல்ல முடிந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் வீரரான ஷாகித் அப்ரீடியே ஆப்கான் ஆட்டத்தைப் பார்ப்பது என்ன பேறு என்று பாராட்டியுள்ளார்.

இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:

இந்த வரபிரசாதத் திறமை கொண்ட ஆப்கான் அணியின் ஆட்டத்தைப் பார்ப்பது என்ன ஒரு பேறு. குறுகிய காலத்தில் பிரமிக்க வைக்கும் முன்னேற்றம் கண்டுள்ளனர். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆட்கொள்ள வேண்டிய ஒரு சக்தி. கிரிக்கெட் உலகம் இவர்களை எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார் அப்ரீடி.

ஹர்ஷா போக்ளே கூறும்போது, “ஆப்கான் அணியிடமிருந்து கொஞ்சம் அனுபவமின்மை வெளிப்பட்டது. ஆனால் நன்றாக ஆடினர். இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் தேவை” என்று பதிவிட்டுள்ளார்.

https://tamil.thehindu.com/sports/article25015424.ece

 

 

கடும் நெருக்கடி கொடுத்து அச்சுறுத்திய ஆப்கான்: பல கேட்ச்களை விட்டும் பாகிஸ்தான் ‘எஸ்கேப்’ வெற்றி

 

 
malik

வெற்றியைக் கொண்டாடும் ஹசன் அலி, வெற்றி பெறச் செய்த ஷோயப் மாலிக். | ஏ.எப்.பி.

அபுதாபியில் நேற்று நடைபெற்ற மற்றொரு சூப்பர் 4 ஆட்டத்தில் ஆப்கான் அணி பாகிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது, ஆனால் பாகிஸ்தான் கடைசியில் பரபரப்பான முறையில் 3 பந்துகள் மீதமிருக்க வெற்றியை ஈட்டி கிரேட் எஸ்கேப் ஆனது.

டாஸ் வென்ற ஆப்கான் கேப்டன் அஷ்கர் ஆப்கான் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார், பிறகு ஹஷ்மதுல்லா ஷாகிதியுடன் (97 நாட் அவுட்) இணைந்து 94 ரன்கள் முக்கிய கூட்டணி அமைக்க ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. இது சவாலான இலக்காகும். பாகிஸ்தான் அணி இலக்கை விரட்டிய போது 194/4 என்று 42வது ஓவரில் இலக்கை நோக்கி திணறி வந்தது, ஆனால் ஷோயப் மாலிக் 51 ரன்கள் எடுக்க அந்த அணி 49.3 ஓவர்களில் 258/7 என்று போராடி வெற்றி பெற்றது. ரஷீத் கான் மீண்டும் சிறப்பாக வீசி 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 
 

ஆப்கன் அணி செய்த பெரிய தவறு அனுபவமற்ற அஃப்தாப் ஆலமிடம் கடைசி ஓவரை கொடுத்தது. மாறாக அங்கு அனுபவமிக்க ஷோயப் மாலிக் கிரீசில் நிற்கிறார், கடைசி 5 பந்துகளில் 10 ரன்கள் தேவை, ஏனெனில் முதல் பந்தை மாலிக் அடிக்காமல் விட்டு விட்டார். ஆனால் அடுத்த பந்தை ஷார்ட் ஆக வீச சற்றே வேகம் குறைந்த பந்தாகவும் போக ஷோயப் மாலிக் விடுவாரா, டீப் ஸ்கொயர் லெக் மேல் சிக்சர் பறந்தது. நல்ல பந்து அல்ல.

அடுத்த பந்து யார்க்கர் முயற்சி செய்தார், ஆனால் லெக் ஸ்டம்பில் ஓவர் பிட்ச் ஆக ஃபைன் லெக்கில் பவுண்டரி அடித்தார் ஷோயப் மாலிக், 43 பந்துகளில் அரைசதம், அதைவிட முக்கியம் கிரேட் எஸ்கேப், பாகிஸ்தான் வெற்றி பெற்றது. அப்தாப் ஆலம் முகத்தை கைகளால் மூடிக் கொண்டார்.

இலக்கை விரட்டும் போது பாகிஸ்தானுக்கு பேரடியாக ஃபகர் ஜமான் டக் அவுட் ஆனார். முஜீப் உர் ரஹ்மான் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். ஆனால் ரிவியூ செய்திருந்தால் அது நாட் அவுட், அது ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆன பந்து அது. அதன் பிறகு பாபர் ஆஸம் (66 ரன்கள் 94 பந்து 4 பவுண்டரி 1 சிக்ஸ்), இமாம் உல் ஹக் (80 ரன், 104 பந்துகள் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸ்) இணைந்து 2வது விக்கெட்டுக்காக 154 ரன்களைச் சேர்த்தனர்.

முதலில் இமாம் உல் ஹக், பாயிண்டில் தட்டி விட்டு ரன் எடுக்க முயன்றார். ஆனால் ஆப்கான் வீரர் நஜ்புல்லா பந்தை எடுத்து ஓட்டத்திலேயே த்ரோ செய்ய ரன்னர் முனையில் நேரடியாக ஸ்டம்பைத் தாக்க ரன் அவுட் ஆனார். 4 ரன்கள் சென்ற பிறகு 66 ரன்கள் எடுத்த பாபர் ஆஸம், ரஷீத் கானின் லெக் பிரேக் பந்தில் பீட்டன் ஆக பந்து விக்கெட் கீப்பரிடம் செல்ல ஷஸாத் ஸ்டம்ப்டு செய்தார். 3வது நடுவருக்குச் சென்ற தீர்ப்பாகும் அது.

158/3 என்ற நிலையில் ஆப்கான் கண்களில் ஒளி தெரிந்தது. ஹாரிஸ் சொஹைல் (13), ஷோயப் மாலிக் இணைய ஸ்கோர் 194 ரன்களுக்கு வந்தது. ஆனால் ஹாரிஸ் சொஹைல் அப்போது முஜீப் கூக்ளிக்கு கேட்ச் ஆகி வெளியேறினார். கேப்டன் சர்பராஸ் அகமது 8 ரன்களில் குல்பதின் நயீபின் எங்கு வேண்டுமானாலும் அடிக்க வேண்டிய புல்டாஸில் பவுல்டு ஆனார். ஆசிப் அலி அடுத்ததாக ரஷீத் கான் பந்தை லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து 7 ரன்களில் வெளியேற 46.3 ஓவர்களில் 226/6 என்று பாகிஸ்தான் தடுமாறியது. மொகமது நவாஸ் 1 சிக்சருடன் 8 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ரஷீத் கானிடம் பவுல்டு ஆக பாகிஸ்தான் 48.3 ஓவர்களில் 242/7 என்று தோல்வி பயம் கண்டது, ஆனால் ஷோயப் மாலிக் கடைசியில் எல்லோர் ஓவரும் முடிய அப்தாப் ஆலமின் அனுபவமின்மையை தன் அனுபவத்தினால் முறியடித்து வெற்றி பெறச் செய்தார். முஜீப் உர் ரஹ்மான் 10 ஓவர்கள் 33/2, ரஷீத் கான் 46/3.

பாகிஸ்தானின் மோசமான பீல்டிங், ஷாகிதி, கேப்டன் அஷ்கரின் அபாரக் கூட்டனி:

 

 

shakidijpg

97 நாட் அவுட், ஆப்கன் வீரர் ஷாகிதி. | ஏ.பி.

 

முன்னதாக பாகிஸ்தான் பந்து வீசிய போது பீல்டிங் அதற்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. ஷாஹீன் அப்ரீடி முதல் ஒருநாள் போட்டியில் ஆட வாய்ப்பு கிடைத்தது, ஆனால் இவர் பந்து வீச்சில் 3 கேட்ச்கள் விடப்பட்டன, இவரே 2 கேட்ச்களை விட்டார். 10 ஓவர்கள் 38 ரன்கள் 2 விக்கெட். ஆனால் நல்ல ஊடுருவும் பந்துகளை வீசும் திறமை கொண்டவர் என்பது தெரிகிறது. மொத்தம் 5 கேட்ச்கள் முக்கியத் தருணங்களில் ட்ராப்.

ஆப்கான் அணி மொகமது ஷஜாத், இஷானுல்லா மூலம் மந்தமான தொடக்கம் கண்டு 9 ஓவர்களில் 26 ரன்கள்தான் எடுத்தது. ஷஜாத் 20 ரன்களிலும் இஷானுல்லா 10 ரன்களிலும் வெளியேற 31/2 என்ற நிலையில் ரஹ்மத் ஷா (36), ஷாகிதி இணைந்து 63 ரன்கள் கூட்டணி அமைத்தனர். அப்போது மொகமது நவாஸிடம் ரஹ்மத் ஷா வெளியேற ஸ்கோர் 94/3 என்று இருந்தது. அதன் பிறகு கேப்டன் அஷ்கர் ஆப்கான், ஷாகிதியுடன் இணைந்து மேலும் 94 ரன்களைச் சேர்த்தனர். ஆக 31/2 என்பதிலிருந்து 180/3 என்று உயர்ந்தது ஆப்கான்.

ஹசன் அலி, ஷாகிதியை நோ-பாலில் பவுல்டு செய்து வீணாக்கினார். கடைசி ஓவரில் 13 ரன்களை விளாசினாலும் ஷாகிதியினால் சதம் அடிக்க முடியவில்லை 97 நாட் அவுட் என்று இருந்தார்.

வெற்றிக்காகப் போராடிய வகையில் ஆப்கான் இன்று உணர்வு ரீதியாக வென்றதாகவே கருதப்படலாம். பாகிஸ்தான் அணி கேட்ச்களைக் கோட்டைவிட்டு, மிஸ்பீல்ட் செய்து கடைசியில் இமாம் உல் ஹக், பாபர் ஆஸம், ஷோயப் மாலிக் ஆகியோரால் எஸ்கேப் வெற்றியைத்தான் பெற முடிந்தது, ஷோயப் மாலிக் ஆட்ட நாயகன்.

https://tamil.thehindu.com/sports/article25013668.ece

Link to comment
Share on other sites

131 ஆவது போட்டியில் பலப்பரிட்சை நடத்தும் இந்தியா – பாகிஸ்தான்

 

ind-vs-pak-match.jpg

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் சுப்பர்- 4 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா அணி பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரிட்சை நடத்துகிறது.

டுபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள இப் போட்டியில், இந்தியா அணிக்கு ரோஹித் சர்மாவும், பாகிஸ்தான் அணிக்கு சப்ராஸ் அஹமட்டும் தலைமை தாங்கவுள்ளனர்.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த போட்டியில் இந்தியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், இந்தியா அணியை வீழ்த்தும் முனைப்புடன் பாகிஸ்தான் அணி இன்று களமிறங்குகின்றது.

இருப்பினும் இந்தியா அணியின் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு சமநிலையில் இருப்பதால் இந்த போட்டியிலும் வெற்றிபெற்று கிண்ணத்தை வெல்லும் முனைப்புடனும் விளையாடவுள்ளது.

இரு அணிகளும் மோதும் 131 ஆவது போட்டியாக இது அமையவுள்ளது. இருப்பினும் நடைபெற்று முடிந்த 130 போட்டியில் இந்தியா 53 போட்டிகளிலும், பாகிஸ்தான் 73 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.

அத்துடன் இப்போட்டியில் 4 விக்கெட்களை பெற்றால் ஒருநாள் போட்டியில் 100 விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்திய அணியின் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இணைந்துகொள்வார்.

அதேவேளை இன்னும் 2 விக்கெட்களை வீழ்த்தும் பட்சத்தில், சுழற் பந்து வீச்சாளர் சஹால் 50 விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலிலும் இணைந்துகொள்வார்.

மேலும் இப் போட்டி பாகிஸ்தான் அணி தலைவர் சப்ராஸ் அஹமட்டிற்கு 50 ஆவது ஒருநாள் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/131-ஆவது-போட்டியில்-பலப்பரி/

Link to comment
Share on other sites

இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முன்னேறுவது யார்?: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை; மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் ரோஹித் சர்மா குழுவினர்

 

 
rohitjpg

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறின. லீக் சுற்றில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் பலம் குறைந்த ஹாங்காங் அணிக்கு எதிராக கடைசி வரை போராடியே 26 ரன்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

இதையடுத்து ‘சூப்பர் 4’ சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி நேற்று முன்தினம் வங்கதேசத்துடன் மோதியது. இதில் 174 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி 82 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா 104 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் விளாசினார்.

 

மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவண் 40, அம்பதி ராயுடு 13, தோனி 33 ரன்கள் சேர்த்தனர். பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா அற்புதமாக செயல்பட்டு 4 விக்கெட்களை வீழ்த்தினார். அவருக்கு உறுதுணையாக பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் செயல்பட்டனர்.

இந்நிலையில் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் பரம வைரியான பாகிஸ்தான் அணியுடன் இன்று துபாயில் மீண்டும் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெறும்.

இதனால் ரோஹித் சர்மா குழுவினர் கவனமாக செயல்படக்கூடும். முதல் ஆட்டத்தை தவிர்த்து மற்ற இரு ஆட்டங்களிலும் இந்திய அணி குறைந்த அளவிலான இலக்கையே துரத்தி வெற்றி கண்டிருந்தது. அதிலும் இந்த இரு ஆட்டத்திலும் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கையே தேர்வு செய்தது.

எதிரணியை குறைந்த ரன்களுக்குள் சுருட்டி, அதன் பின்னர் பேட்டிங்கில் தொய்வில்லாமல் விளையாடி விரைவாக இலக்கை எட்டுவதை இந்திய அணி சிறப்பாக செய்திருந்தது. வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுமார் 13 ஓவர்களையும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக சுமார் 21 ஓவர்களையும் மீதம் வைத்து வெற்றியை வசப்படுத்தியிருந்தது இந்திய அணி. இதனால் இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என கருதப்படுகிறது.

விராட் கோலி இல்லாத நிலையில் இந்திய அணியின் பேட்டிங் வலுவாகவே உள்ளது. பொதுவாக ரன்கள் குவிக்க சிரமமாக இருந்து வரும் துபாய் ஆடுகளத்தில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாகவே பேட் செய்து வருகின்றனர். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கடும் சோதனைக்கு உள்ளான ஷிகர் தவண் இந்தத் தொடரில் ரன்வேட்டை நிகழ்த்தி வருகிறார். ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த ஷிகர் தவண், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டங்களில் முறையே 46 மற்றும் 40 ரன்கள் எடுத்து சிறந்த பங்களிப்பை வழங்கினார்.

அதேவேளையில் ரோஹித் சர்மா ஹாங்காங் அணிக்கு எதிராக குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த போதிலும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக அரை சதங்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார். அதிலும் ரோஹித் சர்மா விரைவாக ரன்கள் சேர்த்த விதம், எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி அளிக்கவும் தவறவில்லை.

இதுபோன்று நடுகள வரிசையில் அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். இதில் அம்பதி ராயுடு, ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரை சதம் அடித்திருந்தார். பார்மில் உள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். மூத்த வீரரான தோனி, வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4-வது வீரராக களமிறங்கி 37 பந்துகளை எதிர்கொண்டு 33 ரன்கள் சேர்த்தார். களத்தில் அவர், சிறிது நேரம் செலவிட்டுள்ளது அணியின் பேட்டிங்கை வலுப்படுத்த உதவுக்கூடும்.

லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை குறைந்த ரன்களுக்குள் சுருட்டுவதற்கு காரணமாக இருந்த கேதார் ஜாதவ், மீண்டும் மேஜிக் செய்யக்கூடும் என கருதப்படுகிறது. அவருடன் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா மற்றும் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் கூட்டணியும் பாகிஸ்தான் பேட்டிங் வரிசைக்கு சவால் கொடுக்கக்கூடும். மேலும் தொடக்க ஓவர்களில் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் வேகக்கூட்டணி பாகிஸ்தான் வீரர்களுக்கு தொல்லை கொடுக்க ஆயத்தமாக உள்ளனர்.

சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முதல் ஆட்டத்தில் ஹாங்காங் அணியை எளிதாக வென்ற நிலையில் 2-வது ஆட்டத்தில் இந்திய அணியிடம் படுதோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து ‘சூப்பர் 4’ சுற்றில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடுமையாக போராடி வென்றது. 258 ரன்கள் இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு கடைசி 3 ஓவர்களில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அனுபவ வீரரான ஷோயிப் மாலிக் கடைசி வரை நிலைத்து நின்று விளையாடி வெற்றி தேடிக்கொடுத்தார்.

அஃப்தாப் ஆலம் வீசிய கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தை வீணடித்த ஷோயிப் மாலிக் 2-வது பந்தை பவுண்டரிக்கும், அடுத்த பந்தை சிக்ஸருக்கும் விளாச 49.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி இலக்கை எட்டியது. வெற்றிக்கான இன்னிங்ஸை விளையாடிய ஷோயிப் மாலிக் 43 பந்துகளில், 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முன்னதாக இமாம் உல் ஹக் 80, பாபர் அசாம் 66 ரன்கள் சேர்த்து சிறந்த அடித்தளம் அமைத்து கொத்திருந்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்திருந்தது.

பேட்டிங்கில் இவர்கள் 3 பேரும் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கலாம். தொடக்க வீரர்களில் ஒருவரான பஹர் ஸமான் இந்தத் தொடரில் ரன்கள் சேர்க்க கடுமையாக திணறி வருகிறார். ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24 ரன்கள் சேர்த்த அவர், அடுத்த இரு ஆட்டங்களிலும் ரன் கணக்கை தொடங்கும் முன்பே ஆட்டமிழந்தார். இதனால் அவர், நெருக்கடியுடன் களமிறங்குகிறார்.

இதேபோல் பந்து வீச்சில் முகமது அமிரின் சமீபத்திய பார்மும் அணியை கவலையடையச் செய்துள்ளது. உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் முகமது அமிர், கடைசியாக விளையாடிய 10 ஆட்டங்களில், சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டிருந்தார். அந்த ஆட்டத்தில் 3 விக்கெட்களை கைப்பற்றிய அவர், அதன் பின்னர் நடைபெற்ற 9 ஆட்டங்களில் மொத்தமாக 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

மற்ற வேகப்பந்து வீச்சாளர்களான ஹசன் அலி, உஸ்மான் கான் ஆகியோரும் ஆசிய கோப்பை தொடரில், லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினர். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த முகமது அமிர், இன்றைய ஆட்டத்தில் இழந்த பார்மை மீட்க முயற்சிக்கக்கூடும்.

https://tamil.thehindu.com/sports/article25019652.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

ஆப்கானிஸ்தானுடன் வங்கதேசம் இன்று மோதல்

 

 
rashid%20khanjpg

ரஷீத் கான். | படம்: சந்தீப் சக்சேனா.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று அபுதாபியில் மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளுக்குமே இந்த ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்திக்கும் அணி இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழக்கக்கூடும். சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணி முதல் ஆட்டத்தில் இந்திய அணியிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அதேவேளையில் ஆப்கானிஸ்தான் அணி, 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் வீழ்ந்திருந்தது.

 

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பேட் செய்த ஹஸ்மதுல்லா ஷாகிதி, அஸ்கர் ஆப்கன் ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். சுழற்பந்து வீச்சாளர்களான ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி ஆகியோர் வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://tamil.thehindu.com/sports/article25019654.ece

Link to comment
Share on other sites

ஆரம்பமாகிறது 'சுப்பர்- 4' சுற்றின் 3,4 ஆவது போட்டி ; வாய்ப்பினை தக்க வைக்கும் அணி எது?

 

14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர்- 4' சுற்றில் இன்று இரண்டு போட்டிள் இடம்பெறவுள்ளன.

'சுப்பர்- 4' சுற்றில் மொத்தம் 6 போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதில் நான்கு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடி, முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற 'சுப்பர்- 4' சுற்றின் முதல் போட்டியில் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றிருந்தது.

இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின இதில் பாகிஸ்தான் அணி 26 ஓட்டங்களினால் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

இந் நிலையில் இன்று மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 'சுப்பர் -4' சுற்றின் மூன்று, நான்காவது போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியையும் (துபாய்), ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணியையும் (அபுதாபி) எதிர்கொள்கிறது.

cric.jpg

இந்திய, பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் இவ் இவரு அணிகளும் கடந்த போடடியின் போது வெற்றயீட்டிமையினால் இப் போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிச் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பினை பெற்றுக்கொள்ளும்.

அதன்படி இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றயீட்டிய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியை பொறுத்தவரையில் கடைசிப் போட்டியின் போது இவ்விரு அணிகளும் தோல்வியை தழுவிக் கொண்டமையினால் இப் போட்டி முக்கியமானதொரு போட்டியாக அமையுள்ளது. 

இப் போட்டியில் தோல்வியைத் தழுவிக் கொள்ளும் அணி தொடரிலிருந்து வெளியேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி இன்று இடம்பெறவுள்ள போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றயீட்டிய பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட  தீர்மனித்துள்ளது.

http://www.virakesari.lk/article/41022

Link to comment
Share on other sites

பிளேயிங் லெவனில் மாற்றமில்லாமல் களமிறங்கும் இந்தியா! - இரண்டாவது முறையாகப் பேட்டிங் தேர்வுசெய்த பாகிஸ்தான்! #INDvPAK

 
 
 

இந்திய அணிக்கெதிரான ஆசியக் கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றுப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்தியா  பாகிஸ்தான்

Photo Credit: ICC

 

 

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றுப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் இந்திய அணி, பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது. அந்த வெற்றிக்கு இந்திய அணியின் பந்துவீச்சு முக்கியக் காரணமாக அமைந்தது. புவனேஷ்வர் குமார், கேதர் ஜாதவ், பும்ரா தொடர்ச்சியாகச் சிறப்பாக பந்து வீச, இந்திய அணி பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது. இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டும் சம பலத்துடன் இருக்கிறது. பாகிஸ்தான் அணியை பொறுத்த வரை பந்துவீச்சில் பலமாக இருந்தாலும் பேட்டிங்கில் பெரும்பாலும் மாலிக்கை சார்ந்துதான் உள்ளது.

டாஸ்
Photo Credit: BCCI

இன்றைய போட்டி, கடைசியாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய அதே துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கு சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை எளிதில் வீழ்த்தியது. ஆனால் ஆஃப்கானிஸ்தான் பாகிஸ்தான் அணிக்குத் தோல்வி பயத்தைக் காட்டிவிட்டது. இறுதிவரை பரபரப்பாகச் சென்ற அந்தப் போட்டியில் பாகிஸ்தான் கடைசி ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பேட்டிங்கை  தேர்வு செய்தது. வங்கதேச அணிக்கெதிராக விளையாடிய அதே பிளேயிங் லெவனுடன் இந்திய அணி களமிறங்குகிறது. பாகிஸ்தான் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஹரீஸ் சொஹைல் மற்றும் உஸ்மான் கான் ஆகியோருக்குப் பதிலாக முகமது ஆமீர் மற்றும் சதாப் கான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். `பேட்டிங்கிற்குச் சாதகமான இந்த மைதானத்தில் முதல் பேட் செய்வது எளிதாக இருக்கும். இன்றைய போட்டியில் 250 ரன்களுக்கு மேல் குவிப்போம் என்று நம்புகிறேன்’ என பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது கூறினார். 

https://www.vikatan.com/news/sports/137793-india-vs-pakistan-match-in-asia-cup-cricket.html

7.png&h=42&w=42

21/0 * (7.1/50 ov)

 

25.png&h=42&w=42

23/2 * (6.5/50 ov)
Link to comment
Share on other sites

பதிலடி கொடுக்குமா பாகிஸ்தான்?; இந்தியாவுக்கு வெற்றியிலக்கு 238

 

இந்திய அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் மூன்றாவது போட்டியில் மலிக்கின் பொறுப்பான ஆட்டத்தின் துணையுடன் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்டினை இழந்து 237 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

pak.jpg

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் அஹமட்  நஸீர் முதலில் களமிறங்குவதற்கு தீர்மானித்தார். அதன்றிணங்க பாகிஸ்தான் அணியின் இமாம் உல்ஹாக் மற்றும் பகர் ஜமான் ஆகியோர் களமிறங்கி ஆடிவர பாகிஸதான் அணி 24 ஓட்டத்துக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

அதன்படி 7 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் இமாம் 10 ஓட்டத்துடன் சாஹலின் பந்து வீச்சிழ் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேற பாபர் அசாம் ஆடுகளம் புகுந்தார்.

chal.jpg

இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து ஆடிவர பாகிஸ்தான் அணி 10 ஓவருக்கு இரண்டு விக்கெட்டுக்களை பறிகொடுத்து 28 ஓட்டத்தை பெற்றுக் கொண்டது. ஆடுகளத்தில் பகர் ஜமான் 12 ஓட்டத்துடனும் அசாம் 1 ஓட்டத்துடனும் ஆடி வந்தனர். 

எனினும் அணியின் ஓட்ட எண்ணிக்கை 55 ஆக இருக்கையில் பாகிஸ்தான் அணியின் இரண்டாவது விக்கெட்டும் தகர்க்கப்பட்டது. அதற்கிணங்க 31 ஒட்டங்கள‍ை பெற்றுக்கொண்ட பகர் ஜமான் குல்தீப் யாதவ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேற அசாம் 9 ஓட்டத்துடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதனால் பாகிஸ்தான் அணி 15 ஆவது ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 58 பெற்றது. இதனையடுத்து மலிக்  மற்றும் அணித் தலைவர் சப்ராஸ் அகமட் களமிறங்கி ஜோடி சேர்ந்தாடி வர அணியின் ஓட்ட எண்ணிக்கை வலுவான நிலைக்கு சென்றது.

malik.jpg

27.1 ஆவது ஓவரில் அணி 100 ஓட்டங்களை தொட இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை துல்லியமாக எதிர்கொண்டாடி வந்த மலிக் 34.5 ஆவது ஓவரில் அரைசதம் கடக்க, தொடர்ந்து சப்ரஸ், மலிக்கின் இணைப்பாட்டம் 100 ஓட்டங்களை தாண்டியது.

malik1.jpg

எனினும் பாகிஸ்தான் அணி 38.5 ஆவது ஓவரில் 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டபோது தனது நான்காவது விக்கெட்டினையும் பறிகொடுத்தது. அதன்படி சப்ரஸ் 44 ஓட்டத்துடன் குல்தீப் யாதவ்வின் பந்து வீச்சில் ரோஹித் சர்மாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து அஸீப் அலி களம் நுழைந்து ஆடி வர பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டத்தை பெற்றது. 42 ஆவது ஓவருக்காக புவனேஸ்வர் குமார் பந்துப் பறிமாற்றம் மேற்கொள்ள அசீஸ் அந்த ஓவரை துவம்சம் செய்தார் அதன்படி 1 ஆறு ஒட்டம், 1 நான்கு ஓட்டம், மீண்டும் 1 ஆறு ஓட்டத்தை அடுத்தடுத்து விளாசி தள்ளினார். 

43.1 ஆவது ஓவரில் பாகிஸ்தான் அணி 203 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, போட்டியில் சிறப்பாக ஆடிவந்த மலிக் 78 ஓட்டத்துடன் பும்ராவின் பந்து வீச்சில் தோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேற அதிரடி காட்டி வந்த அசீஸும் 21 பந்துகளை எதிர்கொண்டு 30 ஓட்டத்துடன் சஹலுடைய பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

இறதியாக பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 237 ஓட்டத்தை பெற்றுக்கொண்டது. 

ஆடுகளத்தில் மொஹம் நவாஸ் 15 ஓட்டத்துடனும் ஹசன் அலி 2 ஓடத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். இதன் மூலம் இந்திண அணிக்கு வெற்றியிலக்காக 238 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

kuldeep.jpg

இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் சஹால், குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

http://www.virakesari.lk/article/41035

 

 

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Sportler und Text

 

Link to comment
Share on other sites

ஆப்கானுக்கு 250 என்ற வெற்றியிலக்கை நிர்ணயித்தது பங்களாதேஷ்

 

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர்' சுற்றின் நான்காவது போட்டியில் இம்ருல் கைஸ் மற்றும் மாமதுல்லாவின் சிறந்த இணைப்பாட்டம் காரணமாக பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டினை இழந்து  249 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

ban1.jpg

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணித் தலைவர் மொஷ்ரபி மோர்டாசா முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். அதற்கிணங்க ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் ஹுசைன் ஷான்டோ ஆகியோர் களம் நுழைந்தனர்.

இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து 16 ஓட்டங்களை பெற்றுக் கொண்டபோது அணியின் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது. அதன்படி 4 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ஹுசைன் ஷான்டோ 6 ஓட்டத்துடன் அத்தாப் ஆலமின் பந்து வீச்சில் ரஹ்மத்திடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த மொஹமட் மித்துனும் 2 ஓட்டத்துடன் முஜிபுர் ரஹ்மானின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ.முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

aff.jpg

இதனையடுத்து ரஹும் களமிறங்க அவருடன் இணைந்து ஜோடி சேர்ந்து ஆடிவந்த லிட்டன் தாஸ் நிதானமாக துடுப்பாட்டத்த‍ை வெளிப்படுத்த அணியின் ஓட்ட எண்ணிக்கை சீரானது.

முதல் 10 ஓவரில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட்டுக்களை பறிகொடுத்து 34 ஓட்டத்தை பெற்றது. ஆடுகளத்தில் லிட்டன் தாஸ் 21 ஓட்டத்துடனம் ரஹிம் 5 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வர 13.2 ஆவது ஓவரில் அணி 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

எனினும் ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் புயல் பந்துப் பறிமாற்றம் மேற்கொள்ள பந்தை கையில் எடுக்க பங்களாதேஷ் அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரிய ஆரம்பித்தது. அதற்கிணங்க சிறப்பாக ஆடி வந்த லிட்டன் தாஸ் 41 ஓட்டத்துடன் ரஷித் கானின் பந்து வீச்சில் இஹசனுல்லாஹ் ஜெனட்டிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரின் வெளியேற்றத்தையடுத்து களம் நுழைந்த ஷகிப் அல் ஹசனும் எதுவித ஓட்டமுமின்றி ரன்னவுட் முறையில் ஆட்டமிழக்க ரஹும் அவரின் வழியை பின்பற்றி ரன்னவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனால் பங்களாதேஷ் அணி 20.5 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 87 ஓட்டங்களை பெற்றது. அதன்பின் இம்ருல் கைஸுடன் மாமதுல்லா ஜோடி சேர்ந்தாடி வர அணியின் ஓட்ட எண்ணிக்கை 97 ஆக இருந்தபோது 25.2 ஆவது பந்தில் மாமதுல்ல ஒரு நான்கு ஓட்டத்தை விளாச  அணியின் ஓட்ட எண்ணிக்கை 100 ஐ கடந்தது. 

இவர்கள் இருவரும் இணைந்து பொறுப்புடன் இணைந்து ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களின் பந்துகளை நான்கு திசைகளிலும் அடித்தாட 44.1 ஆவது பந்தில் அணி 197 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை மாமதுல்லா ஒரு 6 ஓட்டத்தை விளாச அணியின் ஓட்ட எண்ணிக்கை 200 ஐ கடந்தது.

45.1 ஆவது பந்தில் இம்ருல் கைஸ் அரை சதம் கடந்தார். எனினும் 46.2 ஆவது ஓவரில் மாமதுல்லா 77 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை அத்தாப் ஆலமின் பந்து வீச்சில் ரஷித் கானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, அவரையடுத்து களமிறங்கிய அணித் தலைவர் மொஷ்ரபி மோர்டாசா 10 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இறுதியாக பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றியிலக்காக 250 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது. 

ஆடுகளத்தில் இம்ருல் கைஸ் 72 ஓட்டத்துடனும், மெய்டி ஹசான் 5 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அத்தாப் ஆலம் 3 விக்கெட்டினையும், முஜிபுர் ரஹ்மான் மற்றும் ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

http://www.virakesari.lk/article/41036

Link to comment
Share on other sites

இது நிச்சயம் அவுட்! மீண்டும் அதில் தான் கிங் என்பதை நிரூபித்த டோனி

 

ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது டோனியின் ரிவ்யூ கணிப்பு மீண்டும் சரியாக இருந்ததால், அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4-ல் இன்றைய போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து தொடர்ந்து ஆடி வரும் இந்திய அணி சற்று முன் வரை 19.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 100 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறத

View image on Twitter
 
 

?Bowler Not Convinced
?Captain Not Convinced
?Umpire Not Convinced
?MS Dhoni Convinced
?Umpire Convinced

Dhoni Review System Gave India It's Wicket Today. ???#INDvPAK #INDvsPAK #PAKvIND #PAKvsIND

 

இந்நிலையில் இப்போட்டியின் போது, வழக்கமாக டோனியின் ரிவ்யூ கணிப்பு சரியாகியுள்ளது. அதாவது ஆட்டத்தின் 8-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் சஹால் வீசினார்.

அதை பாகிஸ்தான் அணி வீரரான இமாம் உல் ஹக் எதிர்கொண்டார். அப்போது பந்தானது அவரது கால்காப்பில் பட்டது.

இதனால் எல்பிடபில்யூ கேட்கப்பட்டது. ஆனால் நடுவர் அவுட் இல்லை என்று கூறியதால், டோனி உடனடியாக ரிவ்யூ கேட்கும் படி ரோகித்திடம் கூறினார்.

 

அது ரிவ்யூவில் அவுட் என்று தெரியவந்ததால், இந்திய வீரர்கள் அனைவரும் டோனியை பாரட்டினார். எப்போதுமே டோனி ரிவ்யூ கேட்டால் சரியாக இருக்கும், அந்த வகையில் இந்த முறையும் டோனியின் ரிவ்யூ கணிப்பு சரியாக இருந்ததால், இதை அவரது ரசிகர்கள் இணையத்தில் டிரண்டாக்கி வருகின்றனர்.

https://news.lankasri.com/cricket/03/188603?ref=home-latest

Link to comment
Share on other sites

பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

 

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் மூன்றாவது போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் தவானின் சிறப்பான ஆரம்ப துடுப்பாட்டம் காரணமாக இந்திய அணி 9 விக்கெட்டுக்களினால் இலகுவாக வெற்றியை ஈட்டியது.

dawan2.jpg

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணித் தலைவர் சப்ராஸ் அஹமட் முதலில் துடுப்பெடுத்ததாடுவதற்கு தீர்மானித்தார். 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 237 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் சார்பில் மலிக் 78 ஓட்டத்தையும், சப்ராஸ் அஹமட் 77 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக்கொண்டனர்.

safraz.jpg

238 என்ற வெற்றியிலக்கனை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்டாக்காரர்களான அணித் தலைவர் ரேஹாகித் சர்மா ஆகியோரின் சிறந்ததொரு ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணிப் பந்துவீச்சாளர்களின் பந்துகளை இவர்கள் இருவரும் இணைந்து பந்தாட விக்கெட்டுக்களை வீழ்த்த பந்து வீச்சாளர்கள் வகுத்த வியூகங்கள் அனைத்தையும் இவர்கள் உடைத்தெறிந்தனர். 

30 ஓவர்களின் அணி 179 ஒட்டங்களை விக்கெட் இழப்பின்றி பெற்றுக் கொள்ள ரேஹித் சர்மா 91 பந்துகளை எதிர்கொண்டு 84 ஓட்டத்துடனும் தவான் 90 பந்துகளை எதிர்கொண்டு 94 ஓட்டத்துடனம் ஆடுகளத்திலிருந்தனர். 

32.1 ஆவது ஓவரில் ரோஹித் சர்மா 94 ஓட்டங்களை பெற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 7000 ஆயிரம் ஓட்டங்களை தொட்டார். இவரையடுத்து ஆரம்பத்திலிருந்து அதிரடி காட்ட வந்த தவான் 32.2 ஆவது பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசியதன் மூலம் சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 15 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

dawan.jpg

தொடர்ந்தும் அதே ஓவரில் நான்காவது பந்தில் ஒரு 6 ஓட்டத்தையும் இறுதிப் பந்தில் ஒரு 4 ஓட்டத்தையும் விளாசி 100 பந்துகளில் 16 நான்கு ஓட்டங்கள் 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 114 ஓட்டத்துடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 

இதனால் இந்திய அணி 210 ஓட்டங்களை பெற்றபோது, முதலாவது விக்கெட் வீழ்த்தப்பட்டது. தவானின் வெளியேற்றத்தையடுத்து அம்பத்தி ராயுடு ஆடுகளம் நுழைந்தார்.

மறுமுனையில் போட்டியில் ஆரம்பத்திலிருந்து தவானுக்கு பக்கபலமாக இருந்து ஆடிவந்த அணித் தலைவர் ரோஹித் சர்மா 106 பந்துகளை எதிர்கொண்டு 35.2 ஆவது ஓவரில் சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 19 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

rohith.jpg

இறுதியாக இந்திய அணி 39.3 ஓவரில் பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 238 என்ற வெற்றியிலக்கினை கடந்து, 9 விக்கெட்டுக்களினால் இலகுவாக வெற்றயீட்டியது.

ரோஹித் சர்மா 119 பந்துகளை எதிர்கொண்டு 4 ஆறு ஒட்டங்கள், 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலா 111 ஓட்டத்துடனம் ரயுடு 12 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

அத்துடன் இந்திய அணி சுப்பர் 4 சுற்றில் எதிர்கொண்ட இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/41040

Link to comment
Share on other sites

பதிலடி கொடுத்த பங்களாதேஷ் ; தொடரிலிருந்து வெளியேறுகிறது ஆப்கானிஸ்தான்

 

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சுப்பர் 4 சுற்றின் நான்காவது போட்டியில் பங்களாதேஷ் அணி மூன்று ஓட்டங்களினால் வெற்றியீட்டி ஆப்கானிஸ்தான் அணியை தொடரிலிருந்து வெளியேற்றியுள்ளது.

ban2.jpg

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணித் தலைவர் மொஷ்ரஃப் மோர்டாசா முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். அதன்படி பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 249 ஓட்டத்தை பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் சார்பில் இம்ருல் கைஸ் 72 ஓட்டத்தையும், மாமதுல்ல 74 ஓட்டத்தையும் லிட்டன் தாஸ் 41 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக்கொண்டனர்.

250 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிங்கிய ஆப்கானிஸ்தான் சார்பில் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக மொஹமட் ஷாஜாத் மற்றும் இஷ்சனுல்லா ஜனாத் ஆகியோர் களமிறங்கி ஆடிவர ஆப்கானிஸ்தான் அணி 4.1 ஓவரில் 20 ஓட்டங்களை பெற்றிருந்தபோது தனது முதல் விக்கெட்டினை பறிகொடுத்தது. அதன்படி ஜனாத் 8 ஓட்டத்துடன் ரஹ்மானின் பந்து வீச்சில் ஹசேனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து களம்புகுந்த ரஹ்மத் ஷாவும் ஒரு ஓட்டத்துடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழக்க அடுத்து ஆடுகளும் நுழைந்த ஹஷ்மத்துல்லா ஷஹதியுடன் ஷாஜாத் ஜோடி சேர்ந்தாட அணியின்  ஒட்ட எண்ணிக்கை சீரானது.

aff2.jpg

எனினும் 24.4 ஆவது ஓவரில் ஷாஜாத் மாமதுல்லாவின் பந்து வீச்சில் 53 ஓட்டத்துடன் போல்ட்முறையில் ஆட்டமிந்து வெளியேற அணித தலைவர் அஸ்கர் ஆப்கன் களமிங்கி ஷஹாதியுடன் ஜோடி சேர்ந்து 39 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை மோர்டாசாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

asgar.jpg

அதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ஒட்டங்களை பெற்றிருந்தது. இதனையடுத்து 43.3 ஆவது ஓவரில் ஷஹாதி 71 ஓட்டங்களுடன் மோர்டாசாவின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிந்து வெளியேற மொஹமட் நபியும், சாமிமுல்லா ஷேவாரியும் ஜோடி சேர்ந்தாடி வந்தனர்.

hasma.jpg

இந் நிலையில் 45.1 ஆவது ஓவரில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 200 ஆக அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து 47 ஆவது ஓவரல் ஆப்கானிஸ்தான் அணி 219 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள வெற்றிக்கு 18 பந்துகளில் 31 ஓட்டங்கள் தேவை என்றிருந்தது.

ஆடுகளத்தில் நபி 25 ஓட்டத்துடனும் ஷேவாரி 16 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். இதையடுத்து 48.2 பந்தில் நபி ஒரு 6 ஓட்டத்தை விளாச ஆட்டம் சூடு பிடித்தது. எனினும் நபி அடுத்த பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இறுதி ஓவரில் வெற்றிக்காக 8 ஓட்டங்கள் தேவைப்பட ஆப்கானிஸ்தான் அணியால் 4 ஓட்டத்தை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

அதன்படி ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்டினை இழந்து 246 ஓட்டத்தை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இதன்மூலம் பங்களாதேஷ் அணி மூன்று ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் மோர்டாசா, ரஹ்மான் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், சஹிப் அல்ஹசன், மாமதுல்லா தலா ஒரு விக்கெட்டினையும்  வீழ்த்தினர்.

banf.jpg

நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை தழுவியமையினால் அடுத்த சுற்றுக்கு நுழைவதற்கான வாய்ப்பினை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/41041

Link to comment
Share on other sites

தோனி ரிவ்யூ சிஸ்டம்: பாராட்டிய நெட்டிசன்கள்

 

 
hbnpng
DhoniDRSjpg
hbnpng
DhoniDRSjpg

துபாயில் நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட்  சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில்  வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது, 8-வது ஓவரை சாஹல் வீசினார். அந்த ஓவரின்  கடைசிப் பந்தை இமாம் உல் ஹக் முன்னாள் வந்து தடுத்து ஆட முயன்றார். அப்போது பந்து பேட்டின் மீது பட்டது.

 

இதனைத் தொடர்ந்து தோனி அவுட் கேட்டார்.  ஆனால் நடுவர் வழங்கவில்லை. இமாம் உல் ஹக் அதிக தூரம் முன்னாள் வந்து ஆடியதால் பந்து ஸ்டெம்பைத் தாக்காமல், ஸ்டெம்புக்கு மேலே சென்று வீடுமோ என்ற சந்தேகத்தில் பந்துவீச்சாளர் சாஹலுக்கும், கேப்டன் ரோஹித் சர்மாவிற்கும் சந்தேகம் இருந்தது.

ஆனால் விக்கெட் கீப்பர் தோனி சற்று யோசிக்காமல் டிஆர்எஸ் முறையயைக் கேட்க ரோஹித் சர்மாவிடம் கூறினார்.  இதனைத் தொடர்ந்து இமாம் உல் ஹக் அவுட் என்று அறிவிக்கப்பட்டது.

ரோஹித், சாஹால் கள நடுவர் என அனைவரும் மறுத்தும் அது அவுட் என்று தோனி டி ஆர்எஸ் கேட்கச் சொன்னது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. தோனியின் கண நேர அந்த தன்னிச்சையான முடிவை முகமத் கைஃப் உள்ளிட்ட மூத்த வீரர்கள் பலரும் பாராட்டினர்.

இதனைத் தொடர்ந்து 'தோனி ரிவ்யூ சிஸ்டம்'  (Dhoni Review System) இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் டிரெண்டிங் ஆனது.  நெட்டிசன்களும் தோனியைப் பாராட்டி பதிவிட்டனர்.

அவற்றில் சில:

Naveen Ponting

‏உனக்கு கம்ப்யூட்டர்ல தான் டா DRS..எனக்கு கண்ணே DRS ~ எம்.எஸ்.தோனி

Suresh Ponraj

‏ DRS பயன்பாட்டில் இந்தியா மட்டும் 50% வெற்றிகரமாக கொண்டு போய் இருக்காங்க உண்மை என்னன்ன...

அது மத்தவங்களுக்கு தான் Decision Review System

இந்தியாவைப் பொறுத்தவரை Dhoni Review System

puthu nellu

எல்லாம் மாறிடுச்சி ஆனா இது மட்டும் இன்னும் மாறல சிவாஜி பட டெம்ப்ளேட் DhoniReviewSystem

Anbarasan

‏தட் ஈஸ் தோனி! சாஹல் ஓவரின் கடைசிப் பந்தில் இமாம் உல் ஹக் பேட்டில் பந்து பட, அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. தோனியோ ரிவ்யூ கேட்டுப் பார் என தலை அசைத்து சிக்னல் கொடுக்க, தேர்ட் அம்பயர் ரிவ்யூ செய்ய, இமாம் அவுட். பத்து ரன்னில் இமாம் வெளியேறினார். தல ராக்ஸ்!

https://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

இந்திய அணியை ஆப்கான் வீழ்த்த வாய்ப்புள்ளதா? ஒரு பார்வை

 

 
indian%20team

படம். | ஏ.எஃப்.பி.

நாளை நடைபெறும் ஆப்கானுக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டி வெற்றுப் போட்டியாக இருந்தாலும் ஆப்கான் அணி மிகவும் பொறுப்பாக, சீரியஸாக ஆடவே முயற்சிக்கும். இந்திய அணியைப் பொறுத்தவரையில் இன்னொரு வெற்றியுடன் கிளீனாக இறுதிக்குள் நுழைவதை முனைப்பாக கொண்டிருக்கும்.

ஆப்கானிஸ்தானின் ஸ்பின் மூவர் கூட்டணியான ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், மொகமது நபி ஆகியோர் நினைத்தால் அன்றைய தினத்தில் எந்த ஒரு அணியையும் தங்களது துல்லியமான பந்து வீச்சினால் கவிழ்க்கும் திறமை கொண்டவர்கள்.

 

இந்திய வீரர்கள் முன்னைப்போல் ஸ்பின் பந்து வீச்சை அவ்வளவு சிறப்பாக ஆடுவதில்லை, ரோஹித் சர்மாவே லெக்ஸ்பின்னுக்குத் திணறுபவர், சில முறை ஆட்டமிழந்திருப்பவர், கோலியின் ஸ்பின் பலவீனத்தை ஐபிஎல் முதலாகவே பார்த்து வருகிறோம் இப்போது இங்கிலாந்து தொடரில் மொயின் அலியிடம் மடிந்ததையும் நேதன் லயனிடம் ஆஸி.யிலும் சமீபத்தில் இந்தியாவிலும் திணறியதைப் பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் ஒன்று மேலதிக ஆக்ரோஷமாக ஆடப்போய் விக்கெட்டுகளை இந்திய அணி இழக்கலாம். அல்லது மேலதிக எச்சரிக்கையின் காரணமாகவும், பம்மலாட்டம் மூலமாகவும் காலியாக வாய்ப்புள்ளது, எனவே இதை ஆப்கான் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

2வதாக இந்திய மிடில் ஆர்டர்கள் இதுவரை சரியான சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. அம்பாத்தி ராயுடு மட்டுமே கொஞ்சம் பார்மில் உள்ளார். மற்றபடி கேதார் ஜாதவ், தோனி, கார்த்திக், ஆகியோருக்கு அதிக ஓவர்கள் பேட் செய்ய வாய்ப்பு கிடைப்பதில்லை.. இந்நிலையில் நாளை முஜிபுர், ரஷீத் இணைந்து தவணையும், ரோஹித்தையும் விரைவில் வீழ்த்திவிட்டால், இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலில்லாமல் ஆடுமா என்பது சோதிக்கப்படவில்லை.

3வதாக இது வெற்றுப் போட்டியாக இருப்பதால் இந்திய அணி தன் பெஞ்ச் வலுவைச் சோதிக்கும் முயற்சியில் கலீல் அகமட், மணீஷ் பாண்டே, தீபக் சாஹர் என்று சோதனை முயற்சி மேற்கொண்டால் ஆப்கான் இவர்களுக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது, இதன் மூலம் இந்திய அணியை மட்டுப்படுத்தும் வாய்ப்புள்ளது.

இவையெல்லாம் நடக்குமா என்பது நாளைய போட்டி தொடங்கிய பிறகுதான் தெரியும், ஆனால் இந்த வாய்ப்புகள் ஆப்கானுக்கு எதிரான போட்டியையும் ரசிகர்களுக்கு சுவாரசியமாக்கியுள்ளது.

https://tamil.thehindu.com/sports/article25031002.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

 

ஆசிய கிண்ண தொடரின் இரண்டாவது சுற்றில் இடம்பெற்ற 5 ஆவது போட்டியில் பாகிஸ்தானை இந்தியா ஊதித்தள்ளியது.

 

ஆசிய கிண்ண தொடரின் இரண்டாவது சுற்றில் இடம்பெற்ற 6 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தானை பழி தீர்த்த பங்களாதேஷ்.

Link to comment
Share on other sites

ரஷீத் கான் விளையாட முடியாத பவுலரெல்லாம் ஒன்றுமில்லை: வெற்றிக்குப் பிறகு மஹ்முதுல்லா பேச்சு

 

 
mahmudhullah

மஹ்முதுல்லா. | ஏ.எஃப்.பி.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று 87/5 என்ற நிலையிலிருந்து வங்கதேச வீரர்கள் மஹ்முதுல்லா, இம்ருல் கயேஸ் 128 ரன்கள் கூட்டணி அமைத்தது வெற்றிக்கு இட்டுச் சென்றது.

இந்த கூட்டணியில் இவர்கள் செய்த மிகப்பெரிய காரியம் என்னவெனில் ரஷீத் கானின் ஓவரில் விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் ஆடியதுதான்.

 

ரஷீத்தின் கடைசி 3 ஓவர்களில் அவரை அடித்து ஆடினர். மஹ்முதுல்லா மிட்விக்கெட் மேல் 2 சிக்சர்களை ரஷீத் கானை அடித்தார், கடைசி ஓவரில் இம்ருல் கயேஸ் ரிவர்ஸ் ஸ்வீப்பில் நான்கு ரன் அடித்தார்.

3 ரன் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் மஹ்முதுல்லா கூறும்போது, “ரஷீத் கான் தனிச்சிறப்பான பவுலர்தான், ஆனால் ஆடமுடியாத பவுலரெல்லாம் இல்லை. முந்தைய போட்டியில் அவருக்கு எதிராக கவனக்குறைவுடன் ஆடினேன்.

ஆனால் இந்தப் போட்டியில் ரஷீத் கானுக்கு விக்கெட்டை கொடுக்கக் கூடாது என்று நானும் இம்ருலும் முதலிலேயே முடிவெடுத்து விட்டோம்.

கடைசி வரை நிற்பது என்று முடிவுகட்டினோம். இலக்கை எட்டினோம். சிந்திக்க நேரமில்லை. 4 நாட்களில் 3 போட்டிகளில் ஆடியுள்ளோம். நான் அவரை விளையாடிய போது வெறுமையான மனநிலையில் எதிர்கொண்டேன்.

ரஷீத்துக்கு எதிராக இடது கை வீரரை களத்தில் முன்னிறுத்துவது என்பது எங்களது திட்டம், இம்ருல் கயேஸ் ஒத்துழைத்தார், அவர் ஊரிலிருந்து வந்து இப்படியொரு ஆட்டத்தை ஆடினார் நேற்று. அதுவும் இந்த் உஷ்ணத்தில்...மேலும் அவர் தொடக்க வீரர், 6ம் நிலையில் இறங்கி இப்படியொரு ஆட்டம் உண்மையில் தனிச்சிறப்பானது” என்றார்.

https://tamil.thehindu.com/sports/article25029401.ece

Link to comment
Share on other sites

ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்: வெற்றியை தொடரும் முனைப்பில் இந்திய அணி

 

 
4bb044d5P1541271mrjpg

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. சூப்பர் 4 சுற்றில் நேற்றுமுன்தினம் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. ஷோயிப் மாலிக் 78, சர்ப்ராஸ் அகமது 44, பஹர் ஸமான் 31, ஆசிப் அலி 30 ரன்கள் சேர்த்தனர்.

கடைசி கட்டத்தில் ஜஸ்பிரித் பும்ரா அபாரமாக பந்து வீசியதால்பாகிஸ்தான் அணியின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்த முடிந்தது. கடைசி 7 ஓவர்களில் பாகிஸ்தான் அணி வெறும் 38 ரன்களையே சேர்த்திருந்தது. பும்ரா 10 ஓவர்களை வீசி 2 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். அவர், வீசிய 39 பந்துகளில் ரன்கள் ஏதும் சேர்க்கப்படவில்லை.

 

238 ரன்கள் இலக்குடன் பேட்செய்த இந்திய அணி 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. ஷிகர் தவண் 100 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகளுடன் 114 ரன்களும், ரோஹித் சர்மா 119 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 111 ரன்களும் விளாசினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 210 ரன்கள் குவித்து மிரளச் செய்தது. 9 விக்கெட்கள் வித்

தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு சூப்பர் 4 சுற்றில் 2-வது வெற்றியாக அமைந்தது.  முதல் ஆட்டத்தில் இந்திய அணி, வங்கதேசத்தையும் தோற்கடித்திருந்தது.

இந்த இரு வெற்றிகளின் மூலம் இந்திய அணி வரும் 28-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. இந்தத் தொடரில் தோல்வியை சந்திக்காமல் வலம் வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. ஏற்கெனவே இறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி நிர்வாகம் நடுகள வீரர்களின் திறனை சோதித்து பார்க்கக்கூடும் என கருதப்படுகிறது.

மேலும் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் இந்திய அணி தனது ஆதிக்கத்தைத் தொடரச்செய்வதில் முனைப்பு காட்டக்கூடும். நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டுவரும் ஆப்கானிஸ்தான் அணி, சூப்பர் 4 சுற்றில் இரு ஆட்டங்களிலும் வெற்றியை நூலிழையில் தவறவிட்டிருந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் வெற்றியை தாரை வார்த்த ஆப்கானிஸ்தான் அணி, நேற்று முன்தினம் சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராக, மீண்டும் ஒரு முறை கடைசி ஓவரில் தோல்வியை சந்தித்தது.

250 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் முஸ்டாபிஸூர் ரஹ்மான் வீசிய அந்த ஓவரில் ஆப்கானிஸ்தான் அணியால் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஆப்கானிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தாலும் தங்கள் செயல் திறனால் ரசிகர்களின் மனதை வென்றுள்ளனர். இழப்பதற்கு இனிமேல் ஏதும் இல்லை என்பதால் வலுவான பேட்டிங், பந்து வீச்சை கொண்ட இந்திய அணிக்கு எதிராக இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி கூடுதல் துணிச்சல் உடன் செயல்பட்டு தொடரை சிறப்பான வகையில் நிறைவு செய்ய முயற்சி செய்யக்கூடும்.

ரஷீத் கான், முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான் ஆகியோரை உள்ளடக்கிய சுழற்பந்து கூட்டணி இந்திய பேட்டிங் வரிசையை சோதனைக்கு உட்படுத்தக்கூடும். இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால் இந்திய அணியில் உள்ள சில வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படக்கூடும் என கருதப்படுகிறது. முக்கியமாக புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்குவது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்கக்கூடும்.

இவர்களுக்கு பதிலாக சித்தார்த் கவுல், தீபக் ஷகார் அல்லது கலீல் அகமது ஆகியோர் இடம் பெற வாய்ப்புள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரையில் தொடக்க ஜோடி மாற்றப்பட வாய்ப்பு இல்லை.

327 ரன்கள் விளாசி உள்ள ஷிகர் தவண், 269 ரன்கள் குவித்துள்ள கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் தங்களது ரன் வேட்டையை தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் 116 ரன்கள் சேர்த்துள்ள அம்பதி ராயுடும் தொடரக்கூடும்.

ஆப்கானிஸ்தான் அணி போதியஅனுபவமின்மையால் ஆட்டத்தின் அழுத்தமான தருணங்களை கையாள்வதில் தடுமாற்றம் காண்கிறது. இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால் வலுவான சுழற்பந்து வீச்சு சேர்க்கையை கொண்டுள்ள அந்த அணியிடம் இருந்து வெற்றி நழுவுவதற்கான வாய்ப்புகள் குறையக்கூடும்.

ரோஹித் சர்மா 7 ஆயிரம் ரன்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இலக்கை விரட்டும் போது இந்திய தொடக்க ஜோடிகளில் இதற்கு முன்னர் கடந்த 2009-ம் ஆண்டு ஹாமில்டனில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கவுதம் காம்பீர், சேவக் ஜோடி 201 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது.

பாகிஸ்தானுக்கு எதிராக இதற்கு முன்னர் இந்திய தொடக்க ஜோடி (கங்குலி-சச்சின்) சேர்த்த அதிக ரன்கள் 159 ஆகவே இருந்தது. இந்த சாதனையை கடந்துள்ள ரோஹித்-தவண் கூட்டணி, ஆசிய கோப்பை வரலாற்றில் தொடக்க விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணியை அதிக விக்கெட்கள் (9 விக்கெட்கள்) வித்தியாசத்தில் முதன்முறையாக இந்திய அணி   வீழ்த்தியுள்ளது.

ரோஹித் சர்மா 94 ரன்களை கடந்த போது, ஒருநாள் போட்டியில் 7,000 ரன்களைக் குவித்த 9-வது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். மேலும் இந்த மைல்கல் சாதனையை விரைவாக எட்டிய 5-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவர், 181 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை எட்டியுள்ளார். இந்த வரிசையில் ஹசிம் ஆம்லா (150), விராட் கோலி (161), டி வில்லியர்ஸ் (166), கங்குலி ஆகியோர் (174) முதல் 4 இடங்களில் உள்ளனர்.

https://tamil.thehindu.com/sports/article25034516.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

பலம் பொருந்திய இந்திய அணிக்கு சவால் விடுமா ஆப்கான்?

 

14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் ஐந்தாவது போட்டியில் இன்று பலம்பெருந்திய இந்திய அணியை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.

india.jpg

அதன்படி இன்று மாலை 5.00 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

நடந்து முடிந்த 'சுப்பர் 4' சுற்றில் இந்திய அணி எதிர்கொண்டு இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டி, இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. ஆகையால் இன்று இடம்பெறவுள்ள இந்திப் போட்டி இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

இதேவேளை நடந்து முடிந்த சுப்பர் 4' சுற்றின் இரண்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை தழுவிக்கொண்ட காரணத்தினால், ஆப்கான் அணி தொடரிலிருந்து வெளியேறுவது உறுதியாகிவிட்டது.

எனினும் இன்றைய போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/41146

Link to comment
Share on other sites

தோனிக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு: 696 நாட்களுக்குப் பின் அசத்தல்: டாஸ்வென்றது ஆப்கன்

 

 
ms-dhoni-

எம்எஸ்தோனி: கோப்புப்படம்

696 நாட்களுக்குப் பின் எம்.எஸ். தோனி மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு கேப்டன்பொறுப்பு ஏற்றுள்ளார்.

துபாயில் ஆசியக்கோப்பைப் போட்டி நடந்து வருகிறது. சூப்பர்-4 சுற்றில் இன்று ஆப்கானிஸ்தான்அணியுடன் இந்திய அணி மோதுகிறது. லீக் ஆட்டங்களில் வென்று, சூப்பர்-4 சுற்றில்2 போட்டிகளில் வென்றுஇந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. ஆதலால், இன்றைய போட்டிமுக்கியத்துவமில்லாத போட்டியாகவே கருதப்படுகிறது.

 

ஆதலால், இன்றைய ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவணுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால், கேப்டன் பொறுப்பு தோனியிடம் ஒப்படைக்கப்பட்டது. கேப்டன் பதவியை ராஜினாமா செய்து 696 நாட்களுக்குப் பின் மீண்டும் தோனி இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்புடன் களத்தில் இறங்கியதுரசிகர்களுக்கு உற்சாகம் தரும் விதத்தில் இருந்தது.

அதுமட்டுமல்லாமல், தோனி கேப்டன் பொறுப்பேற்று விளையாடும் 200-வது போட்டியாகும். மேலும்இன்றைய போட்டியில் ரோகித் சர்மா, தவண், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல் ஆகியோருக்கு ஓய்வுஅளிக்கப்பட்டது.

Dhoni%20DRSjpg
 

தோனி இதுவரை 199 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பு ஏற்றுள்ளார். அதில் 110 போட்டிகளில்இந்திய அணி வெற்றியும், 74 தோல்விகளும் அடைந்துள்ளது. 4 போட்டி டை ஆகவும், 11 போட்டிகள் முடிவுஇல்லாமல் நின்றது. ஒட்டுமொத்தத்தில் தோனியின் கேப்டன்ஷிப்பில் வெற்றியின் வகிதம் 55.28 சதவீதமாகும்

அதற்குப்பதிலாக ராகுல், கலில் அகமது, மணிஷ் பாண்டே, சித்தார்த் கவுல் ஆகியோருக்குவாய்ப்புஅளிக்கப்பட்டது. டாஸ்வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்திய அணியைப் பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர்களாக ராயுடுவும், கே.எல்ராகுலும் தொடக்கவீரர்களாகக் களம் இறங்கலாம். தோனி 3-வது வீரராகவும், அதைத் தொடர்ந்து ஜாதவ், ஜடேஜாகளமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://tamil.thehindu.com/sports/article25038976.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

 

40.png&h=42&w=42

64/0 * (10.3/50 ov)
 
Link to comment
Share on other sites

ஷஹ்சாத், நபியின் அதிரடியால் சரிவிலிருந்து மீண்டது ஆப்கான் ; வெற்றியிலக்கு 253 

 

 

இந்தியாவுக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் ஐந்தாவது போட்டியில் ஷஹ்சாத் மற்றும் நபியின் அதிரடி ஆட்டத்தினால் சரிவிலிருந்து மீண்டெழுந்த ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு வெற்றியிலக்காக 253 ஓட்டங்களை நிர்ணயித்தது.

sahathi2.jpg

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கர் ஆப்கான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதற்கிணங்க மொஹமட் ஷஹ்சாத், ஜாவேத் அஹ்மடி ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக களமிறங்கி சிறந்ததோர் இணைப்பாட்டத்தை பெற்றுக் கொண்டனர்.

toss.jpg

மொஹமட் ஷஹ்சாத்தி இந்திய அணிப் பந்து வீச்சாளர்களின் பந்துகளை பறக்கவிட்டு அதிரடிக் காட்ட மறுமுணையில் ஜாவேத் அஹ்மடி நிதானமாக இவருக்கு தோள்கொடுத்தாடி வந்தார்.

இதனால் 8.1 ஆவது ஓவரில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 48 ஆக இருந்தபோதும் ஷஹ்சாத்தி அடுத்தடுத்து இரு நான்கு ஓட்டங்களை விளாச அணியின் ஓட்ட எண்ணிக்கை 50 ஐ கடந்தது. இதனைத் தொடர்ந்து அதிரடி காட்டி வந்த ஷஹ்சாத்தி 8.5 ஆவது ஓவரில் 37 பந்துகளை எதிர்கொண்டு அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

எனினும் 12.4 ஆவது ஓவரில் ஜடேஜாவின் பந்து வீச்சில் ஜாவேத் அஹ்மடி 5 ஓட்டத்துடன் தோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேற, ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரியத் தொடங்கின.

அதன்பிரகாரம் ரஹ்மத் ஷா 3 ஒட்டத்துடனும், ஹஷ்மத்துல்லா ஷஹதி மற்றும் அணித் தலைவர் அஸ்கர் ஆப்கான் ஓட்டம் எதுவும் பெறாது டக்கவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

இதனால் ஆப்கானிஸ்தான் அணி 15.3 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 82 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடி வந்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய குல்பாடின் நாய்ப்புடன் ஜோடி சேர்ந்தாடி வந்த ஷஹ்சாத்தி, 28.1 ஆவது ஓவரில் 1 நான்கு ஓட்டத்தை விளாசி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது 5 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

shathi.jpg

இந் நிலையில் 28.4 ஆவது ஓவரில் குல்பாடின் நாய்ப் 15 ஓட்டத்துடன் சாஹருடைய பந்தில் ஆட்டமிழந்து வெளியேற ஆப்கானிஸ்தான் அணி 33.4 ஆவது ஓவரில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை கடந்தது.

எனினும் 37.5 ஆவது ஓவரில் அதிரடியாக ஆடிவந்த ஷஹ்சாத்தி 7 ஆறு ஓட்டங்கள், 11 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 124 ஓட்டத்துடன் கேதர் யாதவினுடைய பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறியதையடுத்து மொஹமட் நபி மற்றும் நஜிபுல்லா ஸத்ரான் ஜோடி சேர்ந்தாடி வர ஆப்கானிஸ்தான் அணி 40 ஓவர்களில் 6 பறிகொடுத்து 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

43.3 ஆவது ஓவரில் 45 பந்துகளை எதிர்கொண்டு ஆடிவந்த நபி சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 12 ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அதன்பின்னர் அணியின் ஓட்ட எண்ணிக்கை 226 இருக்கும் போது நஜிபுல்லா ஸத்ரான் 20 ஓட்டத்துடன் ஜடேஜாவின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க ரஷித்கான் ஆடுகளம் நுழைந்தார்.

nabi.jpg

இந் நிலையில் போட்டியில் அதிரடி காட்டி வந்த மொஹமட் நபி 56 பந்துகளில் 4 ஆறு ஒட்டங்கள், 3 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 64 ஓட்டத்துடன் கலீலுடைய பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்மூலம் இந்திய அணிக்கு வெற்றியிலக்காக 253 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

ஆடுகளத்தில் ரஷித் கான் 12 ஓட்டத்துடனும், அத்தாப் ஆலம் 2 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டுக்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களையும், கலீல் அஹமட், தீபக் சாஹர் மற்றும் கேதர் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

http://www.virakesari.lk/article/41164

Link to comment
Share on other sites

வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை  சமநிலையில் முடிந்தது ஆட்டம்

 

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான 14 ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4 சுற்றின் ' ஐந்தாவது போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

raydu.jpg

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதற்கிணங்க ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 252 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக மொஹமட் ஷஹ்சாத் 124 ஓட்டத்தையும், மொஹமட் நபி 64 ஓட்டத்தையும் பெற்றுக் கொண்டனர்.

253 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ராகுல் மற்றும் ராயுடு ஆகியோர் களமிறங்கினர்.

இவர்கள் இருவரும் இணைந்து நல்லதொரு இணைப்பாட்டத்தை பெற்றுக் கொடுக்க அணியின் ஓட்ட எண்ணிக்கை விக்கெட் இழப்பின்றி வேகமாக அதிகரித்தது. 

ஆப்கானிஸ்தான் அணிப் பந்து வீச்சாளர்களின் பந்துகளை நான்கு திசையில் அடித்தாட 15.2 ஓவரில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 100 ஐ தொட்டது. அதன்பின்னர் அதிரடியாக துடுப்பெடுத்தாடி வந்த ராயுடு 43 பந்துகளை எதிர்கொண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 8 ஆவது அரை சதம் விளாக, மறுமுனையில் ராகுல் 55 பந்துகளை எதிர்கொண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது இரண்டாவது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

raydu1.jpg

இவர்கள் இருவருமாக இணைந்து 110 ஓட்டங்களை பெற்றுக் கொண்டபோது இந்திய அணி 17.1 ஓவரில் தனது முதல் விக்கெட்டினை இழந்தது. அதன்படி ராயுடு 57 ஓட்டத்துடன் நபியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து செல்ல ராகுலும் 20.3 ஆவது ஓவரில் 60 ஓட்டங்களுடன் ரஷித் கானின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து களறிங்கிய தோனியும், தினேஷ் கார்த்திக்கும் ஜோடி சேர்ந்து ஆடி வர அணியின் ஓட்ட எண்ணிக்கை 142 ஆக இருக்கும் போது தோனி 8 ஓட்டத்துடன் ஜாவேத் அஹ்மடியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்.யூ. முறையில் ஆட்டமிழக்க மணீஷ் பாண்டே களமிறங்கினார். 

எனினும் மணீஷ் பாண்டே 8 ஓட்டத்துடன் அத்தாப் ஆலமின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதையடுத்து தினேஷ் கார்த்திக்குடன், கேதர் யாதவ் ஜோடி சேர்ந்தாடிவர இந்திய அணி 36.2 ஆவது ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை பெற்றது.

இதன் பின்னர் கேதர் யாதவ் 19 ஓட்டத்துடனும், தினேஷ் கார்த்திக் 44 ஓட்டத்துடனும், தீபக் சஹார் 12 ஓட்டத்துடனும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 44.5 ஓவரில் 226 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டினை இழந்து தடுமாறத் தொடங்கியது. 

இந் நிலையில் ஜடேஜாவும் குல்தீப் யாதவும் ஜோடி சேர்ந்தாட வெற்றி வாய்ப்பு இந்தியா பக்கம் திரும்பியது. எனினும் குல்தீப் யாதவ் மற்றும் சித்தார் கவூல் ரன்அவுட் முறையில் ஆட்டமிழக்க ஆட்டம் சூடுபிடித்தது.

இதனால் இந்திய அணிக்கு ஒரு விக்கெட் மாத்திரம் கைவசமிருக்க 6 பந்துகளுக்கு 7 ஓட்டங்கள் என்ற நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து 2 பந்துகளுக்கு 1 ஓட்டம் என்ற நிலை வந்தபோது ரஷித் கானின் பந்தை ஜடேஜா உயர்த்தி அடிக்க நஜிபுல்லா அதனை பிடியெடுத்து ஜடேஜாவை ஆட்டமிழக்க செய்தார்.

naib.jpg

ஆகையால் இந்திய அணி 50 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து, ஆப்கானிஸ்தான் அணி பெற்றுக் கொண்ட 252 ஓட்டத்தையே பெற்றது. இதனால் இப் போட்டி வெற்றிதோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.

http://www.virakesari.lk/article/41169

Link to comment
Share on other sites

'விதிப்படி'யா நடந்தது? 2 தவறான தீர்ப்பு: தோனி கேப்டன்சியில் ஆப்கானுடன் பரபரப்பு ‘டை’

 

 
rashid%20khanjpg

டை ஆனதை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய ஆப்கான் வீரர்கள். | ஏ.எஃப்.பி.

இந்திய-ஆப்கான் போட்டியின் வெற்றி தோல்விகள் எந்த அணியையும் பாதிக்காது என்ற வெற்று போட்டியாகப் போன நிலையில் சுவாரசியம் கூட்ட இந்திய அணி நிர்வாகம் தோனியிடம் கேப்டன்சியை அளித்து ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’  ‘டிஆர்பி’-வர்த்தக சுவாரசியத்தை, ஒரு கட்டமைக்கப்பட்ட சுவாரசியத்தை, உருவாக்கியது.

எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்று விதியின் மீது நம்பிக்கை உள்ளவர் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனானது எப்படி என்ற கேள்வியை ஒருவரும் அவரிடம் எழுப்பவில்லை. மாறாக அவரது வெற்றியின் ரகசியமே அவரது இந்த விதிமீதான நம்பிக்கைதான் என்று சுனில் கவாஸ்கர் பாராட்டுப் பத்திரம்வேறு வழங்கிவிட்டார்!!

     
 

டாஸ் வென்ற ஆப்கான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்கள் எடுக்க ஆட்டம் டை ஆனது. 110/0 என்ற நிலையிலிருந்து ரஷீத் கான், மொகமது நபி, அப்தாப் ஆலம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதையடுத்து வரிசையாகச் சரிந்து ‘விதிப்படி’ ட்ரா ஆனது.

தோனிக்கும், தினேஷ் கார்த்திக்கிற்கும் நடுவர் நாட் அவுட்டை அவுட் கொடுத்ததை தோனி ‘விதிப்படி’ என்று ஏற்றுக் கொள்வாரா?

நாம் குறிப்பிட்டது போலவே இந்தியாவின் நடுவரிசை வீரர்கள் மீண்டும் சொதப்ப கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ரஷீத் கான் கடைசி ஓவரை வீசினார்.ஜடேஜா ஸ்ட்ரைக். முதல் பந்தை டீப் மிட்விக்கெட்டில் அடித்தார் ரன் ஓடவில்லை, காரணம் எதிர்முனையில் கலீல் அகமட்.

அடுத்த பந்தை ஸ்லாக் ஸ்வீப்பை மிகச்சரியாக ஆடி பவுண்டரி விளாசினார் ஜடேஜா. ஆனால் 3வது பந்தில் ஸ்கொயர் லெக்கில் தட்டிவிட்டு சிங்கிள் எடுத்தார், கலீல் ஸ்ட்ரைக்கு வந்தார், இந்த சிங்கிள் சமயோசிதமானது அல்ல. அடுத்த பந்து கலீல் என்ன வீசினார் என்றே கலீல் அகமதுவுக்குத் தெரியவில்லை, மட்டையின் உள்விளிம்பில் பட்டு செல்ல 1 ரன்னை எடுத்தார். ஸ்கோர் சமன் ஆனது. ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ரஷீத் கான் வீசிய உள்ளே வந்த பந்தை புல் ஆட நினைத்து கொடியேற்றினார், மிட்விக்கெட்டில் ஸத்ரான் கேட்ச் எடுக்க ஆப்கான் வீரர்கள் ஆட்டம் டை ஆனதில் கொண்டாட்டத்தைப் போட, இந்திய அணியினர் ஏமாற்றமடைந்தனர்.

jadejajpg

படம். | ஏ.பி.

 

நடுவரின் இரண்டு அபத்த தீர்ப்புகள்:

கே.எல்.ராகுல், அம்பாத்தி ராயுடு 110 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஆனால் 2 ரிவியூக்களும் தீர்ந்த நிலையில் 17 பந்துகளில் தடுமாறி 8 ரன்கள் எடுத்த தோனி ஜாவேத் அகமதி பந்தை பிளிக் ஆடப் பார்த்து கால்காப்பில் வாங்கினார். நடுவர் கிரிகரி பிராத்வெய்ட் கையை உயர்த்தினார், லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்து அது. அதே போல் தினேஷ் கார்த்திக் 66 பந்துகளில் 44 ரன்களுடன் அணியை வெற்றிக்கு இட்டுச் செல்லும் நேரத்தில் மொகமது நபி பந்தில் காலில் வாங்கினார், பந்து லெக் ஸ்டம்பில் பிட்ச் ஆகி, லெக் ஸ்டம்பில்தான் தாக்கமும், ஆனால் இதுவும் லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தாகும். நாட் அவுட்டை அவுட் என்றார் கிரிகரி பிராத்வெய்ட். இந்த இரண்டு தீர்ப்புகள் இந்திய அணிக்கு ஆப்பு வைத்தது என்றால் மிகையாகாது.

மணீஷ் பாண்டே 15 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அடித்து நொறுக்க வேண்டிய பந்தை எட்ஜ் செய்து ஷசாத்திடம் கேட்ச் ஆகி வெளியேறினார். கால்கள் சுத்தமாக நகரவேயில்லை.

dhonijpg

தோனி ஆட்டமிழப்பு. | படம்: ஏ.பி.

 

கேதார் ஜாதவ் 2 பவுண்டரிகளுடன் 26 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆடிவந்த போது ரன்னர் முனையில் முஜீப் உர் ரஹ்மான் கையில் பட்டு பந்து ஸ்டம்பில் பட எதிர்முனை பேட்ஸ்மெனைப் பார்த்து அவர் நின்று கொண்டு இடது கையால் கிரீசிற்குள் மட்டையை வைக்க முயன்றார். ரன் அவுட்.

அப்தாப் ஆலம் கடைசி ஓவருக்கு முதல் ஓவரில் 6 ரன்களையே விட்டுக் கொடுத்தது வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தது. இந்த ஓவரில் நல்ல யார்க்கர்களை வீசினார் ஆப்கான் பீல்டிங்கும் கைகொடுத்தது. இதனால் குல்தீப் யாதவ், சித்தார்த் கவுல் இருவரும் ரன் அவுட் ஆகினர். அபாயகரமான 3வது ரன்னிற்காக ஓடி ரன் அவுட். சித்தார்த் கவுல், ஷாகிதியின் நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார்.

விரட்டலில் முதல் 8 ஓவர்களில் ரஷீத் கான் களத்தில் இல்லை, அவர் தசைப்பிடிப்பு காரணமாக இல்லை, பிறகு இந்திய ஸ்கோர் கிட்டத்தட்ட 100 ரன்களை நெருங்கும் வரையிலும் ரஷீத் கான் கொண்டு வரப்படவில்லை. பிறகு ராகுலை வீழ்த்தினார். கடைசி பந்தில் ஜடேஜாவை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.

முன்னதாக ராகுலும், ராயுடுவும் பிரமாதமாக ஆடினர். அம்பாத்தி ராயுடு 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 49 பந்தில் 57 ரன்கள் எடுத்து நபியிடம் வெளியேறினார். ராகுல் 66 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து ரஷீத் கானிடம் ரிவர்ஸ் ஸ்வீப்பில் தேவையில்லாமல் எல்.பி.ஆகி, தேவையில்லாமல் ரிவியூவையும் விரயம் செய்து வெளியேறினார்.

ஷசாத்தின் அசாத்திய சதம்; நபியின் அதிரடி

முன்னதாக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அருமையாக ஆடியது, தொடக்க வீரர் ஷஸாத் இதுவரையிலும் அதிக டாட்பால்களை விட்டுக் கொண்டிருந்தவர். நேற்று வெளுத்துக் கட்டினார், அவருக்கு தீபக் சாஹரின் லெந்த் நிரம்பப் பிடித்திருந்தது. அவர் 6வது விக்கெட்டாக அவுட் ஆகும் போது ஸ்கோர் 180. இவரது தனிப்பட்ட ஸ்கோர் 124. இதில் 11 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் அடங்கும். 88 பந்துகளில் சதம் அடித்தார். இவர் சதம் அடிக்கும் போது ஆப்கான் ஸ்கோர் 4  விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள்தான். ஒருமுறை ஷாகித் அப்ரீடி இந்தியாவுக்கு எதிராக ஜாகீர் கான், பாலாஜி, கும்ப்ளே, ஹர்பஜன் ஆகியோர் அடங்கியப் பந்து வீச்சைப் புரட்டி எடுத்து 45 பந்துகளி சதம் எடுத்தார் அப்போது பாகிஸ்தான் ஸ்கோர் 131 ஆக இருந்தது. இதுநடந்தது 2005ல்.

shazadjpg

சதம் எடுத்த ஆட்ட நாயகன் ஷஸாத். | படம். | ஏ.பி.

 

புவனேஷ்வர், பும்ரா ஆகியோரில் ஒருவரையாவது வைத்துக் கொண்டிருக்கலாம், சாஹலும் இல்லை, இதனால் புகுந்து விளையாடினார் ஷஸாத். முதல் போட்டியை ஆடும் தீபக் சாஹரை ஸ்ரீகாந்த் வர்ணனையில் புகழ்ந்தார், ஆனால் அவரை கடுமையாக அடித்து நொறுக்கினார் ஷஸாத். அந்த லெந்தில் வீசக்கூடாது, 4 ஒவர் பவுலரையெல்லாம் 50 ஒவருக்குக் கொண்டு வந்தால் அப்படித்தான் ஆகும். ஜடேஜாவையும் வெளுத்தார் ஷஸாத், லாலிபாப் 'பவுலர்' (sic) கேதார் ஜாதவ்வையும் பொளந்து கட்டினார். குல்தீப் யாதவ்வை மட்டும் தடவினார்.

வேகப்பந்து வீச்சை ஷஸாத் புரட்டி எடுக்க தோனி வழக்கம் போல் தன் ஸ்பின் உத்திக்கு மாறினார், அது கை கொடுத்தது ஜடேஜா வீச ஜாவேத் அகமதி ஸ்டம்ப்டு ஆனார். பிறகு ரஹ்மத் ஷா பவுல்டு ஆனார்.

குல்தீப் யாதவ் இந்தத் தொடரில் பார்மில் இருக்கும் ஆப்கான் கேப்டன் அஷ்கர் ஆப்கான், ஷாகிதி இருவரையும் டக்கில் காலி செய்தார். 37 பந்துகளில் ஷஸாத் அரைசதம் கண்டார், ஷஸாத்துக்கு ராயுடு ஒரு கேட்ச் விட்டதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாவது 50 ரன்கள் 51 பந்துகளில்தான் வந்தது, ஒரு அவுட் தீர்ப்பை ரிவியூ மூலம் கடந்தார் ஷஸாத், கடைசியில் 116 பந்துகளில் 11 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 124 ரன்கள் எடுத்து ஜாதவ்விடம் அவுட் ஆனதில் நிச்சயம் ஏமாற்றமடைந்திருப்பார். ஸத்ரான் (20), ரஷீத் கான் (12) ஆகியோர் ஸ்டாண்ட் கொடுக்க மொகமது நபி 56 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 64 ரன்களுக்கு 48வது ஓவரில்ட் ஆட்டமிழக்க ஆப்கான் அணி மீண்டும் 250 கடந்து 252 ரன்கள் எடுத்தது. சாஹர் 4 ஓவர்கள் 37  ரன் 1 விக்கெட். ஜடேஜா 3 விக்கெட், குல்தீப் 2 விக்கெட். ஜாதவ் 7-27-1.

ஆட்ட நாயகனாக மிகச்சரியாக மொகமது ஷஸாத் தேர்வு செய்யப்பட்டார்

 

https://tamil.thehindu.com/sports/article25045245.ece

 

 

Link to comment
Share on other sites

‘ஃபைனலில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?’ - சூப்பர் 4 சுற்றில் பாக்., வங்கதேசம் இன்று மோதல் 

 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ‘சுப்பர் 4’ சுற்றில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள்  இன்று மோதுகின்றன.

கிரிக்கெட்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஃபைனலில் இந்தியாவுடன் மோதப்போகும் அணி எது என்பதைத் தீர்மானிக்கும் ‘சூப்பர் 4’ சுற்றின் கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. சர்ஃப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி, லீக் சுற்றில் ஹாங்காங் அணியுடன் வெற்றி, இந்தியாவுடன் தோல்வி கண்டது. புள்ளிகள் அடிப்படையில் அந்த அணி ‘சுப்பர் 4’ சுற்றுக்குத் தகுதிபெற்றது. இந்தச் சுற்றில், ஆப்கானிஸ்தானைப் போராடி வென்றது. இந்த மேட்ச் இறுதி ஓவர் வரை சென்றது. அதற்கு அடுத்த போட்டியில், இந்தியாவிடம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கத்துக்குட்டி அணிகளுக்கு இடையே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவுடன், இரண்டு போட்டிகளிலும் மரண அடி வாங்கியது. இந்திய வீரர்களின் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் பந்துவீச்சாளர்கள் திணறினர்.

 

 

மோர்தசா தலைமையிலான வங்கதேசம் அணி, லீக் சுற்றுப்போட்டியில் இலங்கை அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழத்தி வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில், ஆப்கானிஸ்தானுடன் 136 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. புள்ளிகளின் அடிப்படையில் ‘சூப்பர் 4’ சுற்றுக்குத் தகுதிபெற்றது. இந்தச் சுற்றில் இந்தியாவுடன் தோல்வி, ஆப்கானிஸ்தானுடன் வெற்றி என இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்கிறது. இன்று நடைபெறும் ‘சூப்பர் 4’சுற்றின் கடைசிப் போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

https://www.vikatan.com/news/sports/138047-asia-cup-2018-pakistan-vs-bangladesh-fights-today.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.