Jump to content

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி செய்திகள்


Recommended Posts

தோனி தன் அவுட்டை ரிவியூ செய்ய முடியாமல் போனது: ராகுலை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

 

 

 
rahuljpg

ராகுல். | ஏ.எப்.பி.

ஆப்கான் அணிக்கு எதிராக ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியை இந்திய அணி டை செய்ததற்கு நடுவரின் 2  தீர்ப்புகள் பிரதான காரணமானது.

ஒன்று தோனி தவறாக எல்.பி.தீர்ப்பளிக்கப்பட்டார், இன்னொன்று தினேஷ் கார்த்திக் எல்.பி.தீர்ப்பு என்று முக்கியக் கட்டத்தில் இரண்டு தவறான தீர்ப்புகள் வழங்கப்பட்டதில் இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்தது.

 
 

முன்னதாக கே.எல்.ராகுல் அருமையான இன்னிங்ஸுக்குப் பிறகு ரிவர்ஸ் ஸ்வீப்பில் ரஷீத் கான் பந்தைக் கோட்டைவிட்டு எல்.பி.ஆனார். அதோடு போகாமல் தினேஷ் கார்த்திக்குடன் ஆலோசித்து ரிவியூ செய்தார், ஆனால் தீர்ப்பு மாறவில்லை. இவர் விரயம் செய்ததால் பிற்பாடு தேவைப்படும்போது அதுவும் தோனிக்கு தேவைப்படும்போது ரிவியூ இல்லாமல் போய் விட்டது.

இதனையடுத்து போட்டி முடிந்த பிறகு ராகுல் கூறியதாவது:

ஒரு ரிவியூ மட்டுமே இருக்கும் போது அது ஒரு இக்கட்டான விஷயமே. இப்போது நினைக்கும் போது ரிவியூ கேட்டிருக்கக் கூடாது என்று தோன்றுகிறது. வெளியில் பட்டதாகத் தெரிந்தது, எனவே ஒரு சான்ஸ் பார்க்கலாம் என்று முடிவெடுத்தது தவறாகப் போய்விட்டது.

இப்போது ரிவியூவை ரிவியூ செய்யும் போது நாம் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. பந்து மந்தமாகி திரும்பவும் ஆரம்பிக்கும் போது மிடில் ஆர்டர் வீரர்களுக்கு கடினமாகிப் போனது. தினேஷ் நன்றாக ஆடினார், கடைசியில் ஜடேஜா, தீபக் நன்றாக போராடினர், என்று கூறினார் ராகுல்.

ஆனால் நெட்டிசன்கள் அவர் ரிவ்யூவுக்காக அவரை மன்னிப்பதாக இல்லை:

தர்மேஷ்: இங்கிலாந்திலும் ரிவியூக்களை விரயம் செய்ததில் ராகுல் புகழ்பெற்றவர். சுயநலவாத வீரர்..

அபிஷேக் குமார்: லெஜண்ட்கள் தங்களைக் காக்க ரிவியூ பயன்படுத்துவர் ஆனால் ராகுல் எடுத்த ரிவியூ இரண்டு பேட்ஸ்மென்களை அவுட் ஆக்கியுள்ளது.

அபூர்வ் டாங்க்கே: இந்தியா நல்ல நிலையில் இருந்த போது ராகுல் ரிவியூவை விரயம் செய்தார். ரிவியூவை விரயம் செய்து விட்டால் நடுவரை விமர்சிக்கும் உரிமையை இழக்கிறோம்.

ராய்ஜாய்: மிடில் லெக் ஸ்டம்ப்களை காட்டிக் கொண்டு ரிவர்ஸ் ஸ்வீப் செய்து தான் அவுட் என்று தெரிந்தே ரிவியூ செய்து விரயம் செய்தார் ராகுல். அதன் பிறகு மோசமான அம்பயரிங்.

இவ்வாறு ராகுலை வறுத்தெடுத்துள்ளனர் நெட்டிசன்கள்.

 

https://tamil.thehindu.com/sports/article25045471.ece

 

2 ரன் அவுட்கள், மேலும் 2 விஷயங்களைக் குறிப்பிட்டு அபராதம் கட்ட விரும்பவில்லை: வெற்றி பறிபோனது குறித்து தோனி

 
 
dhonijpg

தோனி ஆட்டமிழந்து செல்கிறார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று ஆப்கான் அணிக்கு எதிராக சற்றும் எதிர்பாரா விதமாக தோனியிடம் கேப்டன்சி கொடுக்கப்பட்டது. இது கேப்டனாக அவரது 200வது போட்டியாகும். இது தோனி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளிக்க ஆப்கன் அணியோ ஆட்டத்தை டை செய்து இந்திய ரசிகர்களுக்கே அதிர்ச்சியளித்தது.

கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்கத் திராணியில்லாமல் ஜடேஜா ஆட்டமிழக்க ஆப்கான் அணி ஒரு அபார டை போட்டியில் வரலாற்றில் இடம்பெற்றது. ஆப்கான் அணியை தோனி மனம்திறந்து பாராட்டினார்.

 

தோனி, தினேஷ் கார்த்திக்கு எல்.பி.தீர்ப்பு அபத்தமாக அமைந்தது, இரண்டுமே லெக் திசையில் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளாகும், ரிவியூ இல்லை. என்ன செய்வது, பொதுவாக ரிவியூவை நம்பாதவர் தோனி. நடுவர் தீர்ப்புத்தான் இறுதி என்று நம்புபவர், நடுவரின் இரண்டு தவறான தீர்ப்புகளை பரிசளிப்பு நிகழ்ச்சியிலேயே கூறிவிடும் அளவுக்கு ‘கூல்’ தன்மையை இழந்து விட்டாரா என்று தெரியவில்லை.

இந்த ஆட்டம் குறித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு மைக்கைப் பிடித்த தோனி கூறியதாவது:

ஆப்கன் அணியின் கிரிக்கெட் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தத் தொடரில் முதலிலிருந்தே அவர்கள் ஆடிய ஆட்டத்தைப் பார்க்கும் போது மதிக்கத்தக்கதாக உள்ளது. இந்த ஒரே அணிதான் தகுதியுடன் வரிசைப்படி முன்னேற்றம் கண்டுள்ளது.

நன்றாகப் பேட் செய்தார்கள், அவர்கள் எப்படி பீல்ட் செய்தார்கள், பவுல் செய்தார்கள் என்பது மிகப்பிரமாதம்.

நாங்கள் தவறாக ஆடினோம் என்று கூறவரவில்லை. முக்கிய வீர்ர்களுக்கு ஓய்வு அளித்து விட்டோம் இது கொஞ்சம் ஆட்டம் தொடங்கும் முன்பே குறைபாடாக அமைந்தது. ஃபுல் லெந்தில் ஸ்விங் ஆகாத போது வேகப்பந்து வீச்சாளர்கள் பேக் ஆஃப் லெந்த்துக்கு மாறியிருக்க வேண்டும் என்பது முக்கியம். இதில்தான் 5-6 ஓவர்களை விட்டுவிட்டோம்.

அதே போல் பேட்டிங்கில் ஷாட் தேர்விலும் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். இரண்டு ரன் அவுட்கள் வேறு. மேலும் 2 பிற விஷயங்கள் உள்ளன, அதைப்பற்றி பேசி நான் அபராதம் விதிக்கப்பட விரும்பவில்லை.

நாம் தோற்காமல் போட்டி டை ஆனது மோசமானாது என்று கூற முடியாது.

இவ்வாறு கூறினார். தோனி. இரண்டு விஷயங்களைக் கூறி அபராதம் கட்ட விரும்பவில்லை என்று கூறியது தனக்கும், கார்த்திக்கிற்கும் தவறாக நடுவர் எல்.பி.தீர்ப்பு வழங்கியதைத்தான் என்று தெரிகிறது.

 

https://tamil.thehindu.com/sports/article25045304.ece

 

 

பவுலிங்க் பண்றியா ..இல்ல பவுலர மாத்தட்டுமா...? - குல்தீப்பை கிண்டல் செய்த தோனி

 
 
indikjpg

ஆசியக் கோப்பை போட்டியில்  இந்தியா பாகிஸ்தான்  இடையே நடந்த போட்டியில், தோனி மற்றும் குல்தீப் யாதவ்வுக்கு இடையே நடந்த உரையாடல்  வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுடனான ஆட்டத்தில் இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்கள் எடுக்க ஆட்டம் டை ஆனது. இந்தத் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்தது ஆப்கானிஸ்தான்.

 
 

அப்போது பந்து வீசிய குல்தீப் பீல்டிங்கில் சில மாற்றங்களை செய்யுமாறு தோனியிடம் கூறினார். ஆனால் தோனி அதனை மறுத்துவிட்டார்.

தொடர்ந்து தனது கருத்தை கூறிய குல்தீப்பிடம் தோனி, பவுலிங்க் பண்றியா ..இல்ல பவுலர மாத்தட்டுமா...? என்று கிண்டலாக கேட்பார்.

ஸ்டெம்புக்கு பின்னாலிருந்து தோனி கூறிய இந்த வார்த்தைகள்தான் தற்போது சமூக வலைதளங்களில் பலரும் வீடியோ வடிவில் பகிர்ந்து வருகின்றனர்.

 

https://tamil.thehindu.com/sports/article25046016.ece

 

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply

இறுதிப் போட்டிக்குள் நுழையப் போகும் அணி எது - முதலில் களமிறங்குகிறது பங்களாதேஷ்

 

14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் ஆறாவதும் இறுதியுமான போட்டி பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் துபாயில் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது. 

asia1.jpg

நடந்து முடிந்த  'சுப்பர் 4' சுற்றின் ஐந்து போட்டிகளிலும் புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி முதலிடத்திலும் (05 புள்ளிகள்), பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும் (02 புள்ளிகள்), பங்களாதேஷ் அணி மூன்றாமிடத்திலம் (02 புள்ளிகள்), ஆப்கானிஸ்தான் அணி நான்காவது இடத்திலும் (01 புள்ளி) உள்ளது.

இத் தொடரில் இந்திய அணியைப் பொறுத்தவரையில் இதுவரை தோல்வியை காணாத பலம்பொருந்திய அணியாக உள்ளது. அதன்படி தான் எதிர்கொண்ட  மூன்று 'சுப்பர் 4' போட்டிகளில் இரண்டு போட்டியில் வெற்றியையும், ஒரு போட்டியை சமநிலையிலும் முடித்துள்ளது. இதனால் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு இலகுவாக நுழைந்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளை இத் தொடரில் பொறுத்தவரையில் இதுவரை தலா நான்கு போட்டிகளை எதிர்கொண்டுள்ளன. இதில் 2 போட்டிகளில் வெற்றியையும் 2 போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளன.

ஆகவே இவ்விரு அணிகளுக்குமிடையில் இன்று இடம்பெறவுள்ள இப் போட்டியானது வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற போட்டியாக மாத்திரம் அமையாமல், அரையிறுதிக்கு நுழையப் போகும் அடுத்த அணி எது என்பதை தீர்மானிக்கின்ற போட்டியாக அமைந்துள்ளது.

ஆகவே இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி எதிர்வரும் 28 ஆம் திகதி துபாயில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் பலப்பரீட்சை நடத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரையில் லீக் தொடரில் தான் எதிர்கொண்ட இரண்டு போட்டிகளில் வெற்றியையும், மேலும் சுப்பர் 4 சுற்றின் மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியையும் ஒரு போட்டியை சமநிலையிலும் முடித்துள்ளது. 

இதனால் ஆப்கானிஸ்தான் அணி புள்ளிகளின் அடிப்படையில் நான்காவது இடத்தை பிடித்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

http://www.virakesari.lk/article/41212

Link to comment
Share on other sites

239 ஓட்டத்துக்குள் சுருண்டது பங்களாதேஷ் ; வெற்றியிலக்கு 240

 

 
 

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் தீர்மானம் மிக்க போட்டியில் பங்களாதேஷ் அணி 48.5 ஆவது ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 239 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

toss.jpg

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதற்கிணங்க ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் சவுமிய சர்க்கார் களமிறங்கி ஆடிவர அணி ஐந்து ஒட்டங்களை பெற்றுக் கொண்டபோது தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

1.jpg

அதன்படி 2.5 ஆவது ஓவரில் சவுமிய சர்க்கார் எதுவித ஓட்டமுமின்றி டக்கவுட் முறையில் ஜுனேட் கானினுடைய பந்து வீச்சில் பகர் ஜமானிடம் பிடிகொடுத்து வெளியேற, அடுத்து வந்த மொமினுல்ஹக்கும் 5 ஓட்டத்துடன் ஷாஹீன் அஃப்ரிடியின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

இவரின் ஆட்டமிழப்பையடுத்து லிட்டன் தாஸ் 6 ஓட்டத்துடன் ஜுனேட் கானின் பந்து வீச்சில் போல்ட் முறையில ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணி 4.2 ஓவர்களுக்கு 12 ஓட்டத்துடன் நிலை தடுமாறி நின்றது.

எனினும் இவர்களின் வெளியேற்றத்தை தொடர்ந்து முஷ்பிகுர் ரஹிம் மற்றும் மொஹமட் மிதுன் ஜோடி சேர்ந்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர்.

அதன்படி 14.3 ஆவது ஓவரில் 50 ஓட்டங்களை பெற்ற பங்களாதேஷ் அணி, தொடர்ந்தும் இவர்களின் நிதான ஆட்டத்தினால் விக்கெட் இழப்பின்றி 24.1 ஆவது ஓவரில் 100 ஓட்டத்தை கடந்தது. ஆடுகளத்தில் மிதுன் 37 ஓட்டத்துடனும், ரஹிம் 49 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந் நிலையில் 25.1 ஆவது ஓவரில் ரஹும் 68 பந்துகளை எதிர்கொண்டு தனது 30 ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்த மறுமுனையில் மிதுன் 28.4 ஆவது ஓவரில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசி அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

mithun.jpg

நிதானமாக ஆடிவந்த இவர்கள் இருவரும் சற்று அதிரடி காட்ட ஆரம்பிக்க பங்களாதேஷ் அணி 32.2 ஆவது ஒவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களை பெற்றது. இருப்பினும் மிதுன் 60 ஓட்டங்களுடன் 33.4 ஆவது பந்தில் ஹசான் அலியினுடைய பந்தில் 60 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, அவரையடுத்து களம்புகுந்த இம்ருல் கைஸ் 9 ஓட்டத்துடன் ஆட்டமிந்தார்.

இதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணி 40 ஓவர்களுக்கு ஐந்து விக்கெட்டினை இழந்து 187 ஓட்டங்களை பெற்றது. ஆடுகளத்தில் மாமதுல்லா 6 ஒட்டத்துடனும், ரஹிம் 94 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

எனினும் அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரிப்புக்கு வலுசேர்த்த ரஹிம் 41.4 ஆவது ஓவரில் 9 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 99 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.

அதன்பின் மாமதுல்லாவுடன் ஜோடி சேர்ந்தாடி வந்த மெய்டி ஹசானும் 12 ஓட்டத்துடன் ஜுனேட் கானுடைய பந்து வீச்சில் ஆட்டமிழக்க அணித் தலைவர் மொஷ்ரபி மோர்டாசா களமிறங்கி ஆடி வர பங்களாதேஷ் அணி 230 ஓட்டங்களை பெற்றபோது மாமதுல்லா 25 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இறுதியில் பங்களாதேஷ் அணி 48.5 ஆவது ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 239 ஓட்டங்களை பெற்றது. இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியிலக்காக 240 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

out.jpg

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ஜுனேட் கான் 4 விக்கெட்டுக்களையும், ஷாஹீன் அஃப்ரிடி, ஹசன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் ஷாதெப் கான் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

http://www.virakesari.lk/article/41231

Link to comment
Share on other sites

போட்டி ‘டை’ ஆனதால் கதறி அழுத சிறுவனை ஆறுதல் படுத்திய ஆப்கானிஸ்தான் வீரர்கள்

 

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் ‘டை’ ஆனதால் கண்ணீர் விட்டு கதறிய சிறுவனுக்கு ரஷித் கான், ஷேசாத் ஆறுதல் கூறினார்கள். #INDvAFG #AsiaCup2018

 
 
போட்டி ‘டை’ ஆனதால் கதறி அழுத சிறுவனை ஆறுதல் படுத்திய ஆப்கானிஸ்தான் வீரர்கள்
 
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்தியா தோல்வியை நோக்கிச் சென்றது.

கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ரஷித் கான் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் போட்டி ‘டை’யில் முடிந்தது. கடைசி ஓவரை சந்தித்த ஜடேஜா முதல் பந்தில் ரன்ஏதும் அடிக்கவில்லை. 2-வது பந்தை பவுண்டரிக்கு தூக்கினார். இதனால் கடைசி நான்கு பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது. 3-வது பந்தில் ஜடேஜா ஒரு ரன்னும், 4-வது பந்தில் கலீல் அகமது ஒரு ரன்னும் எடுத்தனர்.
 

இதனால் ஸ்கோர் 252 என சமநிலைப் பெற்றது. கடைசி இரண்டு பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தை ஜடேஜா சந்தித்தார். கைவசம் விக்கெட் இல்லாததால் ரசிகர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர். ஜடேஜா ஒரு ரன் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி ‘டை’ ஆனது.

201809261949245265_1_sikhfan-s._L_styvpf.jpg

இந்நிலையில் ஜடேஜா அவுட் ஆனவுடன் மைதானத்தில் இருந்த ஒரு சீக்கிய சிறுவன் மிகவும் கவலையடைந்து அழுதான். இக்காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையடுத்து அச்சிறுவனை நேரில் சந்தித்து ஆப்கானிஸ்தான் வீரர்களான ரஷித் கான் மற்றும்  முகமது ஷேசாத் ஆகியோர் அறுதல் கூறினார்கள்.

அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. சிறுவனுக்கு ஆறுதல் கூறிய ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 

 

Link to comment
Share on other sites

தீர்க்கமான போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பங்களாதேஷ்

 

 
 

14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் தீர்மானம் மிக்க போட்டியில் முஸ்தாபிர் ரஹ்மான் வீழ்த்திய 4 விக்கெட்டுக்களின் துணையுடன் பாகிஸ்தான் அணியை 202 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி, 37 ஓட்டங்களினால் வெற்றயீட்டிய பங்களாதேஷ் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. 

pakista3.jpg

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி 48.5 ஆவது ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 239 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

பங்களாதேஷ்  அணி சார்பில் ரஹிம் 99 ஓட்டத்தையும், மொஹமட் மிதுன் 60 ஓட்டத்தையும் மாமதுல்லா 25 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

rahim1.jpg

240 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வந்த பாகிஸ்தான் அணி 18 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள மூன்று விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

அதன்படி பகர் ஜமான் மற்றும் பாபார் அசாம் தலா ஒரு ஓட்டத்துடனும் அணித் தலைவர் சப்ராஸ் அஹமட் 10 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

pakistan4.jpg

இதன் பின்னர் இமாம் உல்ஹக்குடன் மலிக் ஜோடி சேர்ந்தாடி வர பாகிஸ்தான் அணி 10 ஓவர்கள் நிறைவில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 37 ஓட்டங்களை பெற்றது. ஆடுகளத்தில் மலிக் 14 ஓட்டத்துடனும், இமாம் 8 ஓட்டத்துடனும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடி வர 13.2 ஆவது ஓவரில் அணி 50 ஓட்டங்களை கடந்தது.

pakistan2.jpg

இவர்கள் இருவரும் இணைந்து அணிக்காக சிறந்ததொரு இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தபோதிலும் 20.1 ஆவது ஓவரில் மலிக் 30 ஓட்டத்துடனும் ருபெல் ஹுசேனின் பந்தினை அடித்தாடினார். எனினும் மோர்டாஸாவின் அற்புதமான பிடியெடுப்பு காரணாக ஆட்டமிழந்து களம்விட்டு நீங்கினார்.

pakistan1.jpg

rubel.jpg

இவரின் வெளியேற்றத்தை தொடர்ந்து களமிறங்கிய ஷெடப் கானும் 4 ஓட்டத்துடன் சவுமிய சர்க்காரின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 25.1 ஆவது ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 94 ஓட்டங்களை பெற்றது.

அதன் பின் இமாமுடன் ஜோடி சேர்ந்து அஷிப் அலி துடுப்பெடுத்தாடி வர வீழ்ச்சியிலிருந்து பாகிஸ்தான் மீண்டெழுந்தது. எனினும் 39.2 ஆவது ஓவரில் அணி 165 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை அஷிப் அலி 31 ஓட்டத்துடன் மெய்டி ஹசானுடைய பந்து வீச்சில் ஆட்டமிழக்க, ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய இமாம் உல்ஹாக்கும் 83 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

imam.jpg

இதனால் பாகிஸ்தான் அணி 40.5 ஆவது ஓவரில் 167 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. தொடர்ந்தும் அடுத்தடுத்த ஆட்டமிழப்பு காரணமாக பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 37 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.

bang.jpg

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் முஸ்தாபிர் ரஹ்மான் 4 விக்கெட்டுக்களையும், மெய்டி ஹசான் 2 விக்கெட்டுக்களையும், ருபெல் ஹுசேன், மாமதுல்லா மற்றும் சவுமிய சர்க்கார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

இந்த வெற்றியின் மூலம் பங்களாதேஷ் அணி எதிர்வரும் 28 ஆம் திகதி துபாயில் இடம்பெறவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/41236

Link to comment
Share on other sites

ஆசியக்கோப்பை: பிரமாத பவுலிங், பீல்டிங்கில் பாகிஸ்தானை வெளியேற்றி ஃபைனலில் வங்கதேசம்

 

 

 
bangladesh

வெற்றி நடைபோடும் கேப்டன் மஷ்ரபே. | ஏ.எஃப்.பி.

அபுதாபியில் நடைபெற்ற ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று கடைசி போட்டியில் வங்கதேசத்திடம் தோற்று பாகிஸ்தான் வீட்டை நோக்கி நடையைக் கட்டியது.

டாஸ் வென்று பேட்டிங் எடுத்த வங்கதேச அணி 12/3 என்ற நிலையிலிருந்து மொகமது மிதுன் (60), முஷ்பிகுர் ரஹிம் (99) ஆகியோரது அற்புதமான 144 ரன் கூட்டணியில் முனைப்புடன் அணியை நிலைப்படுத்த 48.5 ஓவர்களில் 239 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இது வெற்றிக்கான ரன் இல்லைதான், ஆனாலும் வெற்றிபெற முடியாததை வெற்றிக்கான இலக்காக மாற்றுவதில்தான் ஓர் அணியின் திறமையும் முனைப்பும் உள்ளது, அந்த வகையில் வங்கதேசம் அபாரமான பீல்டிங், காற்றுப்புகா இறுக்கமான பவுலிங் ஆகியவை மூலம் பாகிஸ்தானை 202/9 என்று வெளியேற்றி இறுதியில் இந்திய அணியைச் சந்திக்கிறது.

     
 
 
 

இந்தத் தொடர் முழுதுமே பீல்டிங் படுமோசமாக அமைந்தது பாகிஸ்தானுக்கு, ஸ்பூனில் சாப்பிட்டாலும் கையில் சாப்பிட்டாலும் உணவு வாய்க்குச் செல்லும் முன் நழுவ விட்டுவிடுவார்கள் போலிருக்கிறது.

வங்கதேச அணி அதன் முக்கிய வீரர்களான தமீம் இக்பால், ஷாகிப் அல் ஹசன் ஆகியோரை காயத்துக்கு இழந்துள்ள நிலையில் இந்த வெற்றி மிக முக்கியமானது.

ஆப்கான் அணிக்கு மிகப்பிரமாதமான தொடராக ஆசியக் கோப்பை அமைய, பாகிஸ்தானுக்கோ மறக்க வேண்டிய துர்சொப்பனமானது ஆசியக் கோப்பை.

இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் தொலைக்காட்சி கணக்கீடுகளுக்கு போதுமான ‘மைலேஜ்’ தரவில்லை, அது எதிர்பார்த்த அளவில் வாணவேடிக்கையாகாமல், புஸ்வாணம் ஆகியது. ஆகவே கிரிக்கெட் பைத்திய நாடுகளான இந்தியா-வங்கதேசம் மோதினால்தான் ஏதாவது ‘மைலேஜ்’ பார்க்க முடியும் என்று தெரிகிறது.

புதிது புதிதாக ‘வைரி’களை உருவாக்கிக் கொண்டே போக வேண்டாமா? அந்தவகையில் இந்தியா-வங்கதேச இறுதிப் போட்டி.

ஜுனைத், முஷ்பிகுர் ரஹிம், மிதுன் அபாரம்:

மொகமது ஆமிரின் பந்து வீச்சில் திடீரென ஒரு தாக்கம் குறைய அவருக்குப் பதில் இன்னொரு இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜுனைத் கானை அணியில் சேர்த்தனர். அவர் தன்னைச் சேர்த்ததற்கு நன்றிக்கடனாக அபாரமாக வீசி 8 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

junaidjpg

அசத்திய ஜுனைத் கான். | ஏ.எஃப்.பி.

 

சவுமியா சர்க்காருக்கு சில பந்துகளை முன்னால் வந்து ஆடுமாறு வீசிவிட்டு திடீரென தோள்பட்டை உயரத்துக்கு ஒருஎகிறு பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசினார், இதனால் புல் ஷாட் ஆடத் திணறிய சவுமியா கொடியேற்றினார் ஆன் திசையில் கேட்ச் ஆனது. பிறகு லிட்டன் தாஸுக்கு ரவுண்ட் த விக்கெட்டில் விளையாட முடியாத ஒரு பந்தை வீசி பவுல்டு செய்தார்.

மொமினுல் ஹக் 5 ரன்களில் இருந்த போது ஷாஹீன் ஷா அப்ரீடி அதிவேகமாக ஒரு பந்தை உள்ளே கொண்டு வர ஒன்றும் செய்ய முடியவில்லை ஆஃப் ஸ்டம்ப் பறந்து சென்று விழுந்தது. 12/3.

இதற்கிடையே இன்னிங்சில் 10வது ஓவரில் பாக். இடது கை ஸ்பின்னர் மொகமது நவாஸ், மொகமது மிதுனுக்கு வீசிய ஒரு பந்தை மிதுன் கால்காப்பில் வாங்க பெரிய சப்த முறையீடு எழுந்தது. நடுவர் தெளிவாக நாட் அவுட் என்றார். பார்க்கும் போதே வெளியில் சென்ற பந்து என்று சாதாரணக் கண்களுக்கே தெரிந்தது.

இது பவுலர் உட்பட பாகிஸ்தானின் 11 வீரர்களுக்கும் தெரியவில்லையா என்ன என்பது புரியவில்லை, அனைவரும் கூடி ரிவியூ செய்தனர். ஆனால் பந்து கால்காப்பில் படும்போது கால் லெக்ஸ்டம்புக்கு வெளியே இருந்தது. விதிப்படியே நாட் அவுட், அங்கேயே ரிவியூ முடிந்தது.

ஆனால் மொகமது மிதுன், முஷ்பிகுர் ரஹிம் 144 ரன்கள் கூட்டணி அமைத்தனர், அனைத்தையும் விட மூளையை உபயோகப்படுத்தி ஆடினர். 116 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் இன்னொரு சதத்துக்கான அனைத்து தகுதிகளையும் உடைய இன்னிங்ஸாக அமைய, சத வாய்ப்பு பறிபோனது. ஷாஹின் ஷா அஃப்ரீடியின் பந்தில் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் சர்பராஸிடம் கேட்ச் கொடுத்து 99 ரன்களில் வெளியேறிய முதல் வங்கதேச வீரர் என்ற எதிர்மறை சாதனைக்கு உரியவரானார்.

mushfiqurjpg

முஷ்பிகுர்-மிதுன். | ஏ.பி.

 

தொடக்கத்தில் அற்புதமாக வீசிய ஜுனைத் கான் இறுதி ஓவர்களையும் கட்டுக்கோப்புடன் வீசி 9-1-19-4 என்று அபாரமான பவுலிங்கை நிகழ்த்தினார். ஜுனைத் கான், அப்ரீடியை தலா 4 ஓவர்களில் சர்பராஸ் கட் செய்ய ஹசன் அலிக்கு சரியான தொடராக அமையவில்லை அவர் முதல் ஓவரிலேயே 7 ரன்களைக் கொடுத்ததோடு 60 ரன்களை மொத்தமாக விட்டுக் கொடுத்தார். ஷதாப் கானின் பந்து வீச்சும் (1/52) மிடில் ஓவர்களில் கைகொடுக்கவில்லை. முஷ்பிகுர், மொகமது மிதுன் நன்றாக ஆடினர். சர்பராஸ் அகமடின் கேள்விக்குரிய கேப்டன்சியும் ஒரு காரணம். தேவையான போது ஸ்லிப் இல்லை, பந்து எட்ஜ் ஆகிச் சென்றது, தேவையற்ற தருணத்தில் ஸ்லிப் வைக்கப்பட்டது. மேலும் வெகு சீக்கிரத்திலேயே சர்பராஸ் ரன்தடுப்பு களவியூகத்துக்கு மாறி விட்டார்.

34வது ஓவரில் ஹசன் அலி 60 ரன்கள் எடுத்த மிதுனை வீழ்த்தினார். இம்ருல் கயேஸ் சோபிக்கவில்லை 9 ரன்களில் ஷதாப் கானிடம் வெளியேறினார். முஷ்பிகுர், மஹ்முதுல்லா இணைந்து 30 ரன்கள் கூட்டணி அமைத்தனர், மஹ்முதுல்லா 25 ரன்களில் ஜுனைத்கானிடம் பவுல்டு ஆனார். முஷ்பிகுர் ரஹிம் 6வது விக்கெட்டாக வெளியேற வங்கதேசம் 250 ரன்களை எட்ட முடியாமல் 239 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மெஹதி ஹசன், மஷ்ரபே முறையே 12, 13 ரன்கள் பங்களிப்புச் செய்தனர்.

முஸ்தபிசுர் முன்னிலை வகிக்க, வங்கதேச அபார பவுலிங், பீல்டிங்

240 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு ஃபகார் ஜமான் மீண்டும் அதிர்ச்சியளித்தார். முதல் ஓவரிலேயே தங்களது சிறந்த ஸ்பின்னர் மெஹதி ஹசனை மோர்டசா கொண்டு வர 5வது பந்தை சற்றே மேலேறி வந்து ஃபகார் ஜமான் மிட் ஆனில் அடிக்க, வலுவான ஷாட்தான் ஆனால் அங்கே ரூபல் ஹுசைன் மிக அருமையான, அசாதாரணமான கேட்சை எடுக்க ஃபகார் ஜமான் அதிர்ச்சியுடன் வெளியேறினார்.

அடுத்த ஓவரிலேயே இன்னொரு அதிர்ச்சிக் காத்திருந்தது, பார்மில் உள்ள பாபர் ஆஸம் 1 ரன்னில் முஸ்தபிசுர் பந்து ஒன்று ‘சுர்’ என்று வர எல்.பி.ஆகி வெளியேறினார். நல்ல வேளையாக ரிவியூ செய்து காலிசெய்யவில்லை. சர்பராஸ் இறங்கி 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்து முஸ்தபிசுர் பந்தை சரியாக ஆடாமல் எட்ஜ் செய்ய விக்கெட் கீப்பர் டைவ் அடித்து அருமையான கேட்சை எடுத்தார். 18/3 என்று மோசமான தொடக்கம் கண்டது.

இமாம் உல் ஹக், ஷோயப் மாலிக் இணைந்து சுமார் 17 ஓவர்களில் 67 ரன்கள் என்ற மந்தமான கூட்டணி அமைத்தனர். ஷோயப் மாலிக் 51 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்திருந்த போது ரூபல் ஹுசைன் பந்தை மிட்விக்கெட் மேல் லேசாகத் தூக்கி விட நினைத்தார், ஆனால் அங்கு மஷ்ரபே மோர்டசா பிரமிக்க வைக்கும் ஒரு கேட்சை எடுத்தார், இதுதான் திருப்பு முனையாக அமைந்தது. இதுதான் அந்த கவனம் என்பது, எதிரணியினர் நிலைப்பெறும் போது கூட உருவாகும் வாய்ப்புகளை தட்டிப் பறிப்பதுதன் சிறந்த அணிகளின் திறமையாகும். வங்கதேசம் நேற்று அப்படித்தான் ஆடியது.

ஷதாப் கான் 24 பந்துகள் கிரீசில் நின்று 4 ரன்கள் எடுத்து வெறுப்படைந்த, வெறுப்பேற்றிய இன்னிங்சில் சவுமியா சர்க்காரிடம் நடையைக் கட்டினார். பாகிஸ்தான் 25 ஓவர்கள் முடிந்த பிறகு 94/5.

பிறகு இமாம் உல் ஹக், அபாய ஆசிப் அலி இணைந்து 71 ரன்கள் கூட்டணி அமைத்தனர். இமாம் உல் ஹக் 105 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 83 ரன்கள் எடுத்தாலும் முஷ்பிகுர் ரஹிம் ஆடியது போல் புத்திசாலித்தனமாக ஆடவில்லை, அனாயசமான சவுகரியத்துடனும் ஆடவில்லை, ஆசிப் அலி, மெஹதி ஹசன் மிராஜின் டாட்பால்களைக் கண்டு பொறுக்க மாட்டாமல் மேலேறி வந்தார் பந்து அவரை ஏமாற்றி கீப்பரிடம் செல்ல லிட்டன் தாஸ் ஸ்டம்பிங் செய்தார். இமாம் உல் ஹக்கும் ரன் விகிதம் கட்டுக்குள் இருக்கும் போதே மஹ்முதுல்லா பந்தை மேலேறி வந்து தூக்க நினைத்து ஸ்டம்ப்டு ஆனார். ஆசிப் அலிக்கு ஒரு முக்கிய கேட்சை விட்டு மோர்டசாவின் முறைப்புக்கு ஆளான கீப்பர் லிட்டன் தாஸ் 2 ஸ்டம்பிங்குகள் மூலம் ஈடுகட்டினார்.

mustaizurjpg
 

ஹசன் அலி, மொகமது நவாஸ் ஆகியோரை முஸ்தபிசுர் கழற்றி 10-2-43-4 என்று உலகின் சிறந்த பினிஷிங் பவுலர் தான் தானோ என்று நினைக்கும்படி செய்தார், மெஹதி ஹசன் 10 ஓவர்1 மெயன் 28 ரன் 2 விக்கெட். ரூபல் ஹுசைன் மஹ்முதுல்லா, சவுமியா சர்க்கார் என்று அனைவருமே மிகவும் டைட்டாக வைத்திருந்தனர், அருமையான பீல்டிங், கேட்சிங் என்று வங்கதேச அணி இறுதிக்குள் நுழையும் தீவிரத்துடன் ஆட, படுமோசமான ஆசியக் கோப்பைத் தொடர் பாகிஸ்தானுக்கு மறக்க வேண்டிய பயங்கரசொப்பனமாக மாறிவிட்டது. ஆட்ட நாயகன் முஷ்பிகுர் ரஹிம்.

https://tamil.thehindu.com/sports/article25054563.ece

Link to comment
Share on other sites

ஆசியக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் சகிப் அல் ஹசன்

Shakib Al Hasan
 

பங்களாதேஷ் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் சகிப் அல் ஹசன், உபாதை காரணமாக இந்திய அணிக்கு எதிரான ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட மாட்டார் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

 

சகிப் அல் ஹசனின் இடதுகை சுண்டுவிரலில் ஏற்பட்டிருந்த உபாதை தீவிரமடைந்துள்ள காரணத்தால்,நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் அவர் விளையாடவில்லை. எனினும், பங்களாதேஷ் அணி நேற்றைய போட்டியில் வெற்றிபெற்று, ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன்போது சகிப் அல் ஹசனின் உபாதையை கட்டுப்படுத்தி அவரை அணியில் இணைக்கும் முயற்சிகளை நிர்வாகம் மேற்கொண்ட போதும் அது பயணளிக்கவில்லை.

இதன்காரணமாக, இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் சகிப் அல் ஹசன் விளையாடமாட்டார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி நாடு திரும்பவுள்ள சகிப் அல் ஹசனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அவர் சுமார் ஆறு வாரங்கள் அளவில் ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் அக்ரம் கான் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“கடந்த திங்கட்கிழமை சகிப் அல் ஹசனின் ஸ்கேன் பரிசோதனை மாதிரிகள் கிடைத்தன. இதில் அவரது உபாதை தீவிரமாகியுள்ளமை தெரிந்தது. அவரை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட வைப்பதற்கு எமது உடற்கூற்று ஆலோசகர் திஹான் சந்திரமோகன் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். எனினும், சகிப்பின் உபாதை மேலும் தீவிரமானது. அவரால் துடுப்பாட்ட மட்டையை சரியாக பிடிக்க முடியவில்லை. இதனால் அவருக்கான மேலதிக சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.  சகிப்புக்கு சுமார் 6 வாரங்கள் ஓய்வு தேவைப்படும் என நினைக்கிறேன் என்றார்.

 

 

சகிப் அல் ஹசன் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற முத்தரப்பு தொடரில், இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது உபாதைக்குள்ளானார். பின்னர், அவரது உபாதையில் சில குழறுபடிகள் இருந்த போதும், இலங்கையில் நடைபெற்ற சுதந்திரக் கிண்ணத் தொடரின் இறுதிக்கட்ட போட்டிகளில் பங்கேற்றார். தொடர்ந்து நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான T20 தொடர் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முழுமையான தொடரிலும் விளையாடினார்.

எனினும், ஆசியக் கிண்ணத் தொடருக்கு முன்னர் சத்திரசிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாகவும், 20-30 சதவீதமளவில் மாத்திரமே உடற்தகுதி இருப்பதாகவும் சகிப் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கிரிக்கெட் சபை அவரிடம் கலந்துரையாடி, ஆசிய கிண்ணத்துக்கு பிறகு சத்திரசிகிச்சை செய்துக்கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தது. இதன்படி விளையாடிய சகிப் தற்போது மீண்டும் உபாதைக்கு முகங்கொடுத்துள்ளார்.

உபாதைக்குள்ளாகியுள்ள சகிப் அல் ஹசன் எதிர்வரும் ஒக்டோபர் 21ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவதும் சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

நான் தூங்கி 6 நாட்களாகின்றன என்றால் நம்பவா போகிறார்கள்?: பாக். கேப்டன் சர்பராஸ் வேதனை

 

 
sarfraz

சர்பராஸ் அகமட். | ஏ.எஃப்.பி.

ஆசியக் கோப்பை பலிவாங்கியதில் இலங்கை கேப்டன் மேத்யூஸ் முன்னிலை வகிக்க, அடுத்ததாக வரிசையில் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமட் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் ஆப்கன் அணிக்கு இனிய நினைவுகளை அளிக்க மாறாக பாகிஸ்தானுக்கு மறக்க வேண்டிய துர்சொப்பனமாகியுள்ளது. தோல்வி, வெற்றி பிரச்சனையல்ல, ஆனால் விளையாடிய விதம் சுத்த மோசமாக இருந்தது, போர்க்குணத்துக்குப் பெயர் பெற்ற பாகிஸ்தான் அது எதுவுமற்று சரணடைந்தது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

 

குறிப்பாக சர்பராஸ் அகமடின் கேப்டன்சி கோளாறுகள் கடுமையாக விவாதிக்கப்பட்டு வருவதால் அவர் தலை (மை)யின் மேல் கத்தித் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவரது பேட்டிங் பார்ம் குறித்தும் கடும் கேள்விகள் எழுந்தன, காரணம் சாம்பியன்ஸ் டிராபியில் இலங்கைக்கு எதிராக அரைசதம் கண்ட பிறகு அவரது சராசரி 17.2. அன்று தீப்பொறி பறக்கும் செய்தியாளர்கள் கேள்விகளுக்கிடையே சர்பராஸ் சிக்கிய போது அவர் கூறியதாவது:

“இதோ பாருங்கள், கேப்டன்சி அழுத்தம் என்பது சாதாரணமல்ல. பாகிஸ்தான் கேப்டன்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் அழுத்தம் உண்டு. இதில் பேட்டிங்கிலும் ஆடாமல் அணியும் தோல்வி தழுவும்போது அழுத்தம் அதிகரிக்கவே செய்யும்.

உள்ளபடியே கூற வேண்டுமெனில் கடந்த 6 இரவுகளாக நான் உறங்கவில்லை என்றால் யாராவது நம்பவா போகிறார்கள்? ஆனால் இதுதான் வாழ்க்கையின் ஓர் அங்கம். இது தொடரவே செய்யும். ஆனால் இதற்காக உடனே பதற்றப் பொத்தானை எச்சரிக்கை மணியை ஒலிக்க வேண்டிய அவசியமில்லை” என்றார்.

விராட் கோலி, ஜோ ரூட்டுக்கு அடுத்தபடியாக 3 வடிவங்களிலும் அதிகப்போட்டிகளில் ஆடுபவராக இருக்கிறார் சர்பராஸ் இதனால் பணிச்சுமை அதிகமா என்று கேட்ட போது, “எனக்கு ஓய்வு அளிப்பது பற்றி நான் முடிவெடுக்க முடியாது, அணித்தேர்வுக்குழுதான் முடிவெடுக்க வேண்டும். அது என் வேலையல்ல. என் கடன் பணி செய்து கிடப்பதே. நான் விளையாடுவேன், விளையாடிக் கொண்டேயிருப்பேன்” என்றார் சர்பராஸ் அகமட்.

https://tamil.thehindu.com/sports/article25060479.ece

 

 

நெஞ்சங்களை வென்றெடுத்த ஆப்கன் அணி: தோனியை அடுத்து சேவாக் உள்ளிட்டோர் ‘ட்வீட்டாரம்’

 

 
afghan

படம்.| ஏ.எப்.பி.

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் தோனி கூறியது போல் உண்மையில் ஆப்கானிஸ்தான் அணிதான் சிறப்பாக ஆடியது. ஆடிய 5 போட்டிகளிலுமே வென்றிருக்க வேண்டியது, நாளை இந்திய அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் கதிகலக்க களமிறங்கியிருக்க வேண்டிய அணி அது.

பாகிஸ்தான் அகதிகள் முகாமில் வளர்ந்தவர்கள் ஆப்கான் வீரர்கள், தாலிபனியம், அமெரிக்க ஆக்ரமிப்பு, கண்டதே காட்சி கொண்டதே கோலம் ஆட்சி என்று பயங்கரமான் ஒரு சூழலில் வந்து ஒரு அணி மற்ற அணிகளை கதிகலக்கியது பெரிய பாராட்டுகளையும் கவனக்குவிப்பையும் பெற்றுள்ளது.

 

இந்நிலையில் அந்த அணியின் ஆசியக் கோப்பை ஆட்டம் குறித்து முன்னாள் வீரர்கள், சிலர் ட்வீட்டாராம் தந்துள்ளனர்:

டாம் மூடி: ஆப்கன் கிரிக்கெட் சங்க அதிகாரிகள் இன்னொரு முறை தங்கள் அணி ஆட்கொள்ள வேண்டிய சக்தி என்பதை நிரூபித்துள்ளனர். 3 போட்டிகளில் சுலபமாக வென்றிருப்பார்கள். உலகக்கோப்பையில் எவ்வளவு அணிகள் ஆடப்போகிறது. என்பதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

சஞ்சய் மஞ்சுரேக்கர்: அவர்கள் ஆடிய 5 போட்டிகளிலுமே வென்றிருக்க வேண்டியது. யார் ஆசியக் கோப்பையை வென்றாலும் இந்த ஆசியக் கோப்பை ஆப்கான் அணியின் ஆட்டத்துக்காகவே நினைவில் தக்கவைக்கப்படும்.

சேவாக்: நம்ப முடியாத போட்டி, நினைவில் கொள்ள வேண்டிய டை. அவர்கள் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார்கள். அவர்கள் கிரிக்கெட் வரலாற்றில் பெருமைக்குரிய ஒரு தருணம்.

ஷாகித் அப்ரீடி: ஆப்கான் அணியிடமிருந்து தனித்துவமான ஆட்டம். என்ன மாதிரியான கிரிக்கெட்! அதுவும் உலகத்தரம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக!

ரஸல் ஆர்னால்ட்: டீம் ஆஃப் தி ஏஷியா கப். வாழ்த்துக்கள் ஏசிபி, இவர்களை நிறைய பிடித்திருக்கிறது.

லஷ்மண்: இது சிறப்பான நாளாகும் ஆப்கன் கிரிக்கெட் அணிக்கு. இது நினைவுச்சின்னத்துக்கு உகந்த ஆட்டம், தொடர், ஒவ்வொரு ஆப்கான் வீரரும் தங்கள் உறுதி மற்றும் போர்க்குணத்துக்காக பெருமைப்பட வேண்டிய ஆட்டம். இந்த ஆப்கான் அணியில் ஏதோ ஒன்று ஸ்பெஷலாக உள்ளது. ஆசியக் கோப்பையில் கவர்ந்திழுத்த அணி.

தீப்தாஸ்குப்தா: ஆப்கான் கிரிக்கெட் ரசிகராக இருப்பதென்றால் அதற்கு உறுதியான நரம்புகள் வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஆனால் அந்தநாள் ஷஜாத்துக்குச் சொந்தமானது.

ஹேமங் பதானி: ஆப்கானிஸ்தான் இறுதிக்குச் செல்லாதது எவ்வளவு பெரிய ஏமாற்றம். இந்தத் தொடரின் 2 சிறந்த அணிகள் சுவாரசியமான, விறுவிறுப்பான ஆட்டத்தைக் கொடுத்துள்ளனர்.

மொகமத் கயீஃப்: ஆப்கானிஸ்தான் இந்தப் புகழ்ச்சிக்குத் தகுதியான அணியே. டைதான், ஆனால் நம்ப முடியாத அளவுக்கு அவர்கள் சிறப்பாக ஆடினார்கள். அவர்கள் அணியில் ரியல் வின்னர்கள் உள்ளனர்.

https://tamil.thehindu.com/sports/article25058903.ece

 

 

இந்திய அணியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்: பாகிஸ்தான் வீரர் ஷோயிப் மாலிக் கருத்து

 

 
shoaib%20malik

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிடம், பாகிஸ்தான் அணி படுதோல்விகளை சந்தித்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கூட அந்த அணி போராடியே வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் பாகிஸ் தான் அணியின் பேட்டிங்கை விட பந்து வீச்சு கடும் பின்னடைவை சந்தித்துள்ளளது. இந்நிலையில் அந்த அணியின் மூத்த வீரரான ஷோயிப் மாலிக் கூறியதாவது:

அணியை கட்டமைப்பதற்கு நேரம் தேவை. ஆனால் பயம் கொள்வதற்கோ, வீரர்களை மாற்று வதற்கோ இது நேரம் இல்லை. அதிக அளவிலான வீரர்களை மாற்றினால், புதிய வீரர்கள் செட்டில் ஆவதற்கும் நேரம் தேவை.

 

இந்திய கிரிக்கெட் அமைப்பு முறைகளை நாம் பார்க்க வேண்டும், அவர்கள் எந்த முறையில் வீரர்களை முன்னேற்றுகிறார்கள் என்பதையும் காண வேண்டும். அணி நிர்வாகம், கேப்டன், தேர்வுக் குழுவினர் தேர்வு செய்த வீரர் களுக்கு நம்பிக்கையை கொடுக்க வேண்டும்.

போட்டி முடிவடைந்த பிறகு எங்களது அறைக்கு வாரிய தலைவர் வருகை தந்து, எங்களுக்கு நம்பிக்கையை கொடுத் தார். சிறந்த ஆட்டத்தை கொடுக்க வேண்டும் என அவர், எங்களிடம் கேட்டுக் கொண்டார். இத்தகைய விஷயங்கள் விளையாட்டில் நடை பெறும். அணியில் வீரர்களிடம் நம்பிக்கை குறைந்துள்ளது என் பதை மறுக்கவில்லை.

இந்திய அணியுடன் ஒப்பிடும் போது நமது வீரர்களுக்கு உள்ள அனுபவத்தின் வித்தியாசத்தை யாரும் புறக்கணிக்க முடியாது. ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் எந்த வகையில் பந்து வீசுகிறார்கள் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். பல போட்டிகளில் விளையாடிய வீரர் கள் மற்றும் தங்களுடன் விளை யாடும் இளம் வீரர்களிடம் இருந்து மட்டுமே எங்களது வீரர்களால் கற்றுக் கொள்ள முடியும். 200 போட்டிகளில் விளையாடியவர்கள் 5 முதல் 10 ஆட்டங்களில் விளை யாடியவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள முடியாது என்பது இல்லை. யாரும் யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.

அணியில் நீங்கள் மூத்த வீரராக இருந்தால், உங்களது பணி சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவது மட்டும் கிடையாது. இளம் வீரர் களுக்கு உதவ வேண்டும், அவர் களுக்கு நம்பிக்கையை கொடுக்க வேண்டும். வெற்றி தேடிக்கொடுப் பது எப்படி கடமையோ, அதே போன்று இளம் வீரர்களுக்கு உதவி செய்வதும் கடமைதான். இது நிகழ்ந்தால் அதன் பின்னர் அணி சரியான பாதையில் பயணிக்கும்.

இவ்வாறு ஷோயிப் மாலிக் கூறினார்.

https://tamil.thehindu.com/sports/article25054902.ece

Link to comment
Share on other sites

பாகிஸ்தானை விட அபாயகரமான வங்கதேசத்துடன் பைனலில் நாளை இந்தியா மோதல்: வரலாறு யார் பக்கம்; இதுவரை வங்கத்துடன் நடந்த போட்டிகள் ஒரு பார்வை

 

 
in

ரோஹித் சர்மா, ஷிகர் தவண்: கோப்புப்படம்

ஆசியக் கோப்பையை இந்திய அணி 7-வது முறையாக வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியஅணி வங்கதேசத்தை நாளை எதிர்கொள்கிறது.

பாகிஸ்தானைக் காட்டிலும் அபாயகரமான அணியான வங்கதேசம் எதிர்பாராத நேரத்தில் வலுவான அணிகளுக்கே அதிர்ச்சித் தோல்வி அளிக்கும் வல்லமை படைத்தது. சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி பைனலுக்கு வங்கதேசம் முன்னேறியதே சிறந்த சான்றாகும்.

       
 
 
 

ஆனால், வரலாற்றை சற்றுப்புரட்டிப் பார்த்தால், இதுவரை பலமுறை பல்வேறு இறுதிப்போட்டிகளில் வங்கதேசத்தை இந்திய அணி சந்தித்து அதில் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் ஆசியக் கோப்பையில் இரு அணிகளும் இதுவரை 10 முறை மோதியுள்ள அதில் 9 முறை இந்திய அணி வென்றுள்ளது, வங்கதேசம் ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது.

ஆசியக் கோப்பையில் இதுவரை 6 முறை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது, இந்தப் போட்டியில் வென்றால் 7-வது முறையாக வென்ற அணி என்ற பெருமையைப் பெறும்.

அதேசமயம், வங்கதேசம் 3-வது முறையாக பைனலுக்கு முன்னேறுகிறது. இந்த முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்று வெறியுடன் இருக்கிறது. அந்த அணியின் முக்கிய வீரர்கள் தமிம் இக்பால், சஹிப் அல் ஹசன் இருவர் காயத்தால் விலகியுள்ளபோதிலும் வங்கதேசம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இவர்கள் இல்லாததும் ஒருவிதத்தில் அந்த அணிக்கு பலவீனம் என்பதையும் மறந்துவிட முடியாது.

இந்தியஅணியைப் பொருத்தவரை விராட் கோலி இல்லாமல் ரோஹித் சர்மா தலையில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றத் தீவிரமாக இருக்கிறது. இங்கிலாந்தில் டெஸ்ட், ஒருநாள் தொடரையும் இழந்து வந்த இந்திய அணிக்கு ஆசியக்கோப்பை கிடைத்தால், காயங்களுக்கு இதமான மருந்திட்டதாக அமையும். அடுத்துவரும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை கூடுதல் உற்சாகத்துடன் எதிர்கொள்ளும்.

ஹாங்காங் அணிக்கு எதிராக முதல் போட்டியில் மோசமாக விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டனர். குறிப்பாக ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கி வெற்றிகளுக்குக் காரணமாக இருந்து வந்துள்ளனர்.

rohitjpg
 

இருவரும் தலா ஒருசதம் அடித்து, நல்ல ஃபார்மில் உள்ளனர். ரோஹித் சர்மா 269 ரன்கள் எடுக்க தவண் 327 ரன்களில் முதலிடத்தில் உள்ளார். ஆனால், நடுவரிசை பேட்டிங்தான் மிகுந்த கவலைக்கிடமாக இருக்கிறது.

பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் தொடக்கம் சிறப்பாக இருந்த நிலையில் நடுவரிசை சிறப்பாக விளையாடவில்லை. தோனி, ராயுடு,மணிஷ் பாண்டே, ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இருந்து இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை.

அதிலும் வலுவான வீரர் தோனி இருக்கிறார் என்ற ஆறுதல் மட்டுமே பட்டுக்கொள்ள வேண்டியதுதான் ஆனால் இதுவரை ரன்சேர்க்கவில்லை. ஆதலால், பைனலிலும் நடுவரிசை வீரர்கள் சொதப்பிவிடாமல் விளையாட வேண்டியது அவசியம்.

பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், பும்ரா, யஜூவேந்திர சாஹல் ஆகியோர் சிறப்பாகவே பணியைச் செய்கின்றனர்.

வங்கதேச அணியைப் பொருத்தவரை முஸ்தாபிஜுர் ரஹ்மான், ருபெல் ஹூசைன், மெஹதி ஹசன் மிராஸ் ஆகியோர் பந்துவீச்சில இன்னும் மோர்தசா,, மகமத்துல்லா ஆகியோர் இருக்கிறார்கள், மிதுன் அன்று பாகிஸ்தானுக்கு எதிராக 12/3 என்ற நிலையில் முஷ்பிகுருடன் இணைந்து இருவரும் 144 ரன்கள் கூட்டணி அமைத்தனர் மிதுன் 60 ரன்களுக்கு மிகச்சிறப்பாக ஆடினார்.

bdesh-759jpg
 

2015-லிருந்து கோபம்

கடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக நோபால் கொடுக்கப்பட்டதில் இருந்தே அந்த அணியினர் ஆறாத ரணத்துடனே இருக்கிறார்கள். அதை ஒவ்வொரு முறையும் உலக அரங்கில் இந்திய அணி முக்கிய ஆட்டங்களில் தோற்கும் போது கிண்டல் செய்துதங்கள் மகிழ்ச்சியைத் தீர்த்துக்கொண்டனர்.

குறிப்பாக, 2016-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் வங்கதேசத்தை ஒரு ரன்னில் இந்திய அணி வீழ்த்தியது. ஆனால், மேற்கிந்தியத் தீவுகளிடம் இந்திய அணி தோற்றபோது, வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹிம் மகிழ்ச்சி தெரிவித்து சமூக ஊடகங்களில் கொண்டாடினார்.

indjpg
 

இலங்கையில் நடந்த நிடாஹாஸ் கோப்பையிலும் இந்திய அணியை பழிதீர்க்கக் காத்திருந்தனர் வங்கதேச அணியினர். ஆனால், கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் இந்தியாவுக்கு எதிராக நாகின்டான்ஸ் ஆட முடியாமல் போனது.

ஒரு நாள், டி20, டெஸ்ட் ஆகிய அனைத்து விதமான போட்டிகளிலும் கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து இந்திய அணியை வங்கதேசத்தால் வீழ்த்த முடியவில்லை.

2016-ஆசியக்கோப்பை

2016-ம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த ஆசியக்கோப்பை இறுதிப் போட்டியில் மழை பெய்தகாரணத்தால் போட்டி 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. 15 ஓவர்களில் வங்கதேச அணி 5 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் சேர்த்தது. 121 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. தவண் 60ரன்களும், கோலி 41 நாட்அவுட், தோனி 20 ரன்களுடன் வெற்றிக்கு வித்திட்டனர். இந்த போட்டியிலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கணக்கில் கோப்பையை வெல்ல முடியாமல் வங்கதேசம் புழுங்கியது.

நிடாஹாஸ் கோப்பை டி20

இலங்கையில் நடந்த நிடாஹ்ஸ் கோப்பை டி20 போட்டியில் தொடக்கம் முதலே வங்கதேச அணி எதிரணிகளை கிண்டல் செய்வதும், ஜெயித்து விட்டால் பாம்பு நடனம் ஆடுவதையும் வழக்கமாக வைத்திருந்தனர். இதனால், ஒரு போட்டியில் இலங்கை அணியினருக்கும், வங்கதேச அணியினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்துக்கும் பின்பும் வங்கதேச வீரர்கள் மாறவில்லை.

danjpg
 

இந்தியாவையும் வென்று பாம்பு நடனம் ஆட வேண்டும் என்ற தீர்மானத்தோடு இருந்தனர், ஆனால், இறுதிப்போட்டியில் நடந்ததே வேறு. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. 169 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தினேஷ் கார்த்திக் 26 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

ஆக இதற்கு முன் நடந்த ஆசியக் கோப்பை, நிடாஹாஸ் பைனலில் இந்திய அணியே வென்றுள்ளது சாதகமான அம்சம். ஆசியக் கோப்பையிலும் இந்தியஅணி 9 முறையும், வங்கதேசம் ஒருமுறையும் மட்டுமே வென்றுள்ளது. வரலாற்றை மாற்ற வங்கதேசம் கடுமையாக முயற்சிக்கும், அதன் ஜம்பம் பலிக்குமாஎன்பது நாளைத் தெரியும்.

இந்திய நேரப்படி மாலை 5 மணிக்குப் போட்டி தொடங்கும்.

https://tamil.thehindu.com/sports/article25060254.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

நெஞ்சங்களை வென்றெடுத்த ஆப்கன் அணி: தோனியை அடுத்து சேவாக் உள்ளிட்டோர் ‘ட்வீட்டாரம்’ 

 

 
afghan

படம்.| ஏ.எப்.பி.

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் தோனி கூறியது போல் உண்மையில் ஆப்கானிஸ்தான் அணிதான் சிறப்பாக ஆடியது. ஆடிய 5 போட்டிகளிலுமே வென்றிருக்க வேண்டியது, நாளை இந்திய அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் கதிகலக்க களமிறங்கியிருக்க வேண்டிய அணி அது.

பாகிஸ்தான் அகதிகள் முகாமில் வளர்ந்தவர்கள் ஆப்கான் வீரர்கள், தாலிபனியம், அமெரிக்க ஆக்ரமிப்பு, கண்டதே காட்சி கொண்டதே கோலம் ஆட்சி என்று பயங்கரமான் ஒரு சூழலில் வந்து ஒரு அணி மற்ற அணிகளை கதிகலக்கியது பெரிய பாராட்டுகளையும் கவனக்குவிப்பையும் பெற்றுள்ளது.

 

இந்நிலையில் அந்த அணியின் ஆசியக் கோப்பை ஆட்டம் குறித்து முன்னாள் வீரர்கள், சிலர் ட்வீட்டாராம் தந்துள்ளனர்:

டாம் மூடி: ஆப்கன் கிரிக்கெட் சங்க அதிகாரிகள் இன்னொரு முறை தங்கள் அணி ஆட்கொள்ள வேண்டிய சக்தி என்பதை நிரூபித்துள்ளனர். 3 போட்டிகளில் சுலபமாக வென்றிருப்பார்கள். உலகக்கோப்பையில் எவ்வளவு அணிகள் ஆடப்போகிறது. என்பதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

சஞ்சய் மஞ்சுரேக்கர்: அவர்கள் ஆடிய 5 போட்டிகளிலுமே வென்றிருக்க வேண்டியது. யார் ஆசியக் கோப்பையை வென்றாலும் இந்த ஆசியக் கோப்பை ஆப்கான் அணியின் ஆட்டத்துக்காகவே நினைவில் தக்கவைக்கப்படும்.

சேவாக்: நம்ப முடியாத போட்டி, நினைவில் கொள்ள வேண்டிய டை. அவர்கள் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார்கள். அவர்கள் கிரிக்கெட் வரலாற்றில் பெருமைக்குரிய ஒரு தருணம்.

ஷாகித் அப்ரீடி: ஆப்கான் அணியிடமிருந்து தனித்துவமான ஆட்டம். என்ன மாதிரியான கிரிக்கெட்! அதுவும் உலகத்தரம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக!

ரஸல் ஆர்னால்ட்: டீம் ஆஃப் தி ஏஷியா கப். வாழ்த்துக்கள் ஏசிபி, இவர்களை நிறைய பிடித்திருக்கிறது.

லஷ்மண்: இது சிறப்பான நாளாகும் ஆப்கன் கிரிக்கெட் அணிக்கு. இது நினைவுச்சின்னத்துக்கு உகந்த ஆட்டம், தொடர், ஒவ்வொரு ஆப்கான் வீரரும் தங்கள் உறுதி மற்றும் போர்க்குணத்துக்காக பெருமைப்பட வேண்டிய ஆட்டம். இந்த ஆப்கான் அணியில் ஏதோ ஒன்று ஸ்பெஷலாக உள்ளது. ஆசியக் கோப்பையில் கவர்ந்திழுத்த அணி.

தீப்தாஸ்குப்தா: ஆப்கான் கிரிக்கெட் ரசிகராக இருப்பதென்றால் அதற்கு உறுதியான நரம்புகள் வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஆனால் அந்தநாள் ஷஜாத்துக்குச் சொந்தமானது.

ஹேமங் பதானி: ஆப்கானிஸ்தான் இறுதிக்குச் செல்லாதது எவ்வளவு பெரிய ஏமாற்றம். இந்தத் தொடரின் 2 சிறந்த அணிகள் சுவாரசியமான, விறுவிறுப்பான ஆட்டத்தைக் கொடுத்துள்ளனர்.

மொகமத் கயீஃப்: ஆப்கானிஸ்தான் இந்தப் புகழ்ச்சிக்குத் தகுதியான அணியே. டைதான், ஆனால் நம்ப முடியாத அளவுக்கு அவர்கள் சிறப்பாக ஆடினார்கள். அவர்கள் அணியில் ரியல் வின்னர்கள் உள்ளனர்.

https://tamil.thehindu.com/sports/article25058903.ece

 

 

 

முற்றிலும் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

7 வது முறையாக ஆசிய கிண்ணத்தினை கைப்பற்றிய இந்தியா :

September 28, 2018

India_13.jpeg?resize=770%2C433

இன்று நடைபெற்ற ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது. இந்தியாவுக்கும் பங்களாதேசுக்குமிடையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி தளத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி 48.3 ஓவரில் 223 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதனையடுத்து 223 என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 227 ஓட்டங்களைப் பெற்று 7 வது முறையாக ஆசிய கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது.

india-ap-1538164916.jpg?zoom=3&resize=33

 

http://globaltamilnews.net/2018/97554/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.