Jump to content

பாலியல் அடிமையாக பிடித்து வைக்கப்பட்ட பெண்ணின் துயர்மிகு கதை


Recommended Posts

பாலியல் அடிமையாக பிடித்து வைக்கப்பட்ட பெண்ணின் துயர்மிகு கதை

யசிதி பெண்

ஒருவர் கடத்தப்பட்டிருக்கிறார், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இந்த துயரங்களிலிருந்து தப்பி புது வாழ்வை ஒரு புது நாட்டில் தொடங்கும் போது, அங்கு அவரது பழைய நினைவுகள் துரத்தினால் எப்படி இருக்கும்?

வடக்கு இராக்கில் யசிதி மக்கள் நிறைந்து வாழும் பகுதியிலிருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகளால் பிடித்து செல்லப்பட்ட பெண் தம் வலி மிகுந்த அனுபவத்தை பிபிசியிடம் பகிர்ந்துள்ளார்.

பதினான்கு வயதில் கடத்தப்பட்டேன்

தமது 14 வயதில் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்ட அஷ்வக், நூறு டாலர் பணத்திற்கு அபு ஹுமம் என்பவரிடம் பாலியல் அடிமையாக விற்கப்பட்டு இருக்கிறார். அவர் மட்டும் அல்ல அவருடன் ஏறத்தாழ ஆயிரம் பெண்கள் விற்கப்பட்டு இருக்கிறார்கள்.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட அவர் மூன்று மாத போராட்டத்திற்கு பின் அங்கிருந்து தப்பி ஜெர்மனி வந்திருக்கிறார்.

ஆனால், ஜெர்மன் வீதியில் ஒரு நாள் இரவு மீண்டும் அபு ஹுமமை சந்தித்து இருக்கிறார்.

நான் துயர்மிகு நினைவுகளிலிருந்து தப்ப நினைத்தேன். ஆனால், அந்த துயரத்திற்கு யார் காரணமோ, அவரை ஜெர்மனில் சந்தித்தேன்.

 

 

வலி துரத்தும் வாழ்வு

"பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு கார் என் அருகே நின்றது. அந்த காரில் முன் இருக்கையில் அபு ஹுமம் அமர்ந்து இருந்தார். என்னிடம் ஜெர்மனியில் பேச தொடங்கினார், 'நீ அஷ்வக் தானே என்றார் ? அச்சத்தில் என் உடல் நடுங்க தொடங்கிவிட்டது. 'இல்லை... நீ யார் என்றேன்?. ஆனால், அவர், 'உறுதியாக நீ தான் அஷ்வக். நான் அபு' என்றார்" என்று பிபிசியிடம் அந்த நிகழ்வை விளக்குகிறார்.

மேலும் அவர், "பின் என்னிடம் அரபியில் உரையாட தொடங்கினார். நான் எங்கே வசிக்கிறேன், யாருடன் இருக்கிறேன் என அனைத்தும் அவருக்கு தெரியும் என்றார்."

பலர் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்டிருக்கிறார்கள்

"இப்படி ஒரு சூழ்நிலை எனக்கு ஜெர்மனியில் நிகழும் என்று நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. என் நாட்டைவிட்டு, என் பெற்றோரைவிட்டு என் துயரத்தை மறக்க... கடக்க ஜெர்மனி வந்தேன். ஆனால், அங்கும்அந்த துயரம் துரத்தியது" என்றார்

பின் இந்த நிகழ்வை அஷ்வக் போலீஸிடம் கூறியதாக ஜெர்மன் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகிறார். இராக்கில் தமக்கு ஏற்பட்ட அச்சமூட்டும் நிகழ்வையும் கூறி இருக்கிறார்.

அபு தன்னை சந்தித்த இடம் அருகே இருக்கும் பல்பொருள் அங்காடியின் சிசிடிவி கேமிரா வையும் போலீஸிடம் ஆய்வு செய்ய சொல்லி இருக்கிறார். ஆனால், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார் அஷ்வக்.

"நான் இது தொடர்பான நடவடிக்கைக்காக இரண்டு மாதங்கள் காத்திருந்தேன். ஆனால், எதுவுமே நடக்கவில்லை"

ஆஸ்திரேலிய முயற்சி

அபுவை மீண்டும் சந்திக்க நேர்ந்துவிடும் என்ற அச்சத்தில் இருந்த அஷ்வக், அங்கிருந்து மீண்டும் வடக்கு இராக் வந்திருக்கிறார்.

பாலியல் அடிமையாக பிடித்து வைக்கப்பட்ட பெண்ணின் கதைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

மீண்டும் கல்வியை தொடர வேண்டும் என்பது அஷ்வக்கின் விருப்பம். ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பால் மீண்டும் கடத்தப்படுவோம் என்ற அச்சம் அவருக்கும், அவர் குடும்பத்திற்கும் இருக்கிறது. அதனால், அவர் இப்போது இருக்கும் குர்திஸ்தான் பகுதியிலிருந்து வெளியேறவே விரும்புகிறார்கள்.

ஆனால், ஜெர்மனி செல்வதில் அவர்களுக்கு விருப்பம் இல்லை. ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான முயற்சியில் அவர்கள் இருக்கிறார்கள்.

https://www.bbc.com/tamil/global-45313322

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.