Jump to content

குறைந்த அளவு மதுபானம் அருந்துவது உடல்நலத்திற்கு நல்லதா?


Recommended Posts

குறைந்த அளவு மதுபானம் அருந்துவது உடல்நலத்திற்கு நல்லதா?

லௌரல் லிவிஸ்பிபிசி

ஒவ்வொரு நாளும் ஒரு குவளை ஒயின் குடிப்பது ஆரோக்கியமானது என நினைத்துகொண்டு குடிப்பவர்களா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு ஒரு தீய செய்தி.

மதுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆல்கஹால் குடிப்பதில் பாதுகாப்பான நிலை என்று எதுவுமே இல்லை என்பதை காட்டுகின்ற முந்தைய ஆய்வை லான்செட்டில் வெளியாகியுள்ள உலக அளவில் நடத்தப்பட்ட பெரியதொரு புதிய ஆய்வு உறுதி செய்துள்ளது.

மிதமான அளவு மது குடிப்பதால் இதய நோய்கள் வராமல் பாதுகாக்கலாம் என்பதை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால், புற்றுநோய் மற்றும் பிற நோய்கள் வருகின்ற ஆபத்து இத்தகைய பாதுகாப்பை விட அதிகமாக இருப்பதை இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ள பல அம்சங்களால், இது வரை நடத்தப்பட்ட ஆய்வுகளில், இந்த ஆய்வின் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது என்று இந்த ஆய்வின் ஆசிரியர் தெரிவித்துள்ளார்,

மிதமான மது அருந்துதலால் ஆபத்து

மது குவளையோடு பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நோய்களால் உலக நாடுகளில் ஏற்படும் சுமை பற்றி ஒருங்கிணைந்த முறையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 1990 முதல் 2016 வரை 195 நாடுகளில் பயன்படுத்தப்பட்ட ஆல்ஹகால் நிலைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டன.

15 முதல் 95 வயது வரையானவர்களின் தரவுகளை பகுத்தாய்வு செய்தபோது, மது குடிக்காதவர்களை, ஒரு நாளைக்கு ஒரு முறை (10 கிராம் ஆல்கஹால்) மது அருந்துபேவர்களோடு ஆய்வாளர்கள் ஒப்பிட்டு பார்த்தனர்.

மது குடிக்காத ஒரு லட்சம் பேரில் 914 பேருக்கு புற்றுநோய் அல்லது உட்காயம் போன்ற ஆல்கஹாலால் உருவாகின்ற உடல்நல பிரச்சனைகள் தோன்றியதை ஆய்வாளர்கள் கண்டனர்.

ஒரு நாளுக்கு ஒரு முறை (10 கிராம் ஆல்கஹால்) மது குடிப்பவர்களில் இத்தகைய உடல்நல பிரச்சனைகளை பெற்று கூடுதலாக 4 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை (20 கிராம் ஆல்கஹால்) மது குடித்தவர்களில் கூடுதலாக 63 பேர் உடல்நல பாதிப்புக்களை ஓராண்டில் பெற தொடங்கியிருந்தனர். ஒரு நாளைக்கு 5 முறை (50 கிராம் ஆல்கஹால்) மது குடித்தவர்களில் கூடுதலாக 338 பேருக்கு உடல் நல பிரச்சனைகள் தோன்றியிருந்தன.

தூங்கும் பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பொது மருத்துவராக பணியாற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் ஆய்வாளரும், இந்த ஆய்வை மேற்கொண்ட ஆசிரியர்களில் ஒருவருமான பேராசிரியர் சோனியா சாசானா இது பற்றி கருத்து தெரிவிக்கையில், "ஒரு நாளைக்கு ஒரு முறை மது அருந்தினாலும், சிறியதொரு ஆபத்து அதிகரிப்பு காணப்படுகிறது. பிரிட்டன் மக்கள்தொகையோடு கணக்கிடும்போது, இதுவொரு பெரிய எண்ணிக்கை. இதில் பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே குடிப்பவர்கள் அல்ல" என்று தெரிவித்திருக்கிறார்.

உடல்நலம் அளவீடு மற்றும் திறனாய்வு நிறுவனத்தை சேர்ந்த இந்த ஆய்வின் முன்னிலை ஆசிரியரான மேக்ஸ் கிரிஸ்வோல்டு, "சில சூழ்நிலைகளில் ஆல்கஹாலின் பாதுகாப்பு திறனை முந்தைய ஆய்வுகள் கண்டறிந்திருந்தன. ஆனால், எந்த அளவு ஆல்கஹால் குடித்தாலும், ஆல்கஹாலோடு தொடர்புடைய ஒருங்கிணைந்த உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதை கண்டறிந்துள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார்.

"ஆல்கஹால் குடிப்பதற்கும், புற்றுநோய், உட்புண்கள் மற்றும் தொற்று நோய்களுக்கும் இடையிலான உறுதியான தொடர்பு, ஆல்கஹால் இதய நோய்க்கு வழங்குகின்ற பாதுகாப்பு பயன்களை மிஞ்சிவிடுகின்றன என்பதை எமது ஆய்வில் கண்டறிந்துள்ளோம்" என்று அவர் கூறியுள்ளார்,

"ஒரு நாளைக்கு ஒரு முறை என்று ஆல்கஹாலை கொஞ்சமாக குடிக்கும்போது சற்று குறைவாக இருக்கும் உடல்நல ஆபத்துகள், மக்கள் அந்த ஆல்கஹால் அளவை அதிகரிக்கும்போது மேலும் விரைவாக அதிகரிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மது குடிக்கும் பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

2016ம் ஆண்டு ஒருவர் மது குடிக்க வேண்டிய அளவுகளை குறைத்து பிரிட்டன் அரசு பரிந்துரைத்தது. ஆண்களும், பெண்களும் வாரத்திற்கு 14 யூனிட்டுக்கு அதிகமாக குடிக்க கூடாது என்று அது கூறியது. இந்த அளவு ஓரளவு வலிமையுடைய 6 பின்ட்ஸ் பீருக்கும் 7 கிளாஸ் ஒயினுக்கு சமமானதாகும்.

ஆனால், எந்த அளவிலான ஆல்கஹாலும் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும் என்று அப்போது இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரியாக இருந்த பேராசிரியர் டேமி சாலி டேவிஸ் தெரிவித்திருந்தார்.

முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசுமுத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு

ஆல்கஹால் ஏற்படுத்தும் உடல் நல பிரச்சனை தொடர்பாக இதுவரை நடத்தப்பட்டிராத மிக முக்கியமான ஆய்வு இதுவென பேராசிரியர் சாசானா கூறியுள்ளார்.

"ஆல்கஹால் விற்பனை, குடித்த ஆல்கஹால் அளவு பற்றி சுயமாக அளிக்கப்பட்ட தரவுகள், மது அருந்தாமல் இருத்தல், சுற்றுலா தரவுகள் மற்றும் சட்டபூர்வமற்ற வர்த்தக அளவுகள், அந்தந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆல்கஹால் என அதிக அம்சங்கள் இந்த ஆய்வில் கவனத்தில் எடுத்துகொள்ளப்பட்டுள்ளதால், பிற ஆய்வுகளை விட மேலதிகமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் விளக்கியுள்ளார்.

பிரிட்டன் பெண்கள் ஒரு நாளைக்கு 3 முறை மது அருந்துவதாகவும், உலக அளவில் அதிக மது அருந்துவோர் பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளதாகவும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

ஓயின்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதேபோல ஒரு நாளைக்கு மூன்று முறை குடித்திருந்தாலும், பெண்களுக்கு மாறாக பிரிட்டன் ஆண்கள் உலக அளவில் 62வது இடத்தையே 195 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பெற்றிருந்தனர்.

ஆண்களிடம் மது அருந்தும் அளவு மிகவும் அதிகமாக இருப்பதே இதற்கு காரணமாகும். ருமேனிய ஆண்கள் ஒரு நாளைக்கு 8 முறை குடிப்பதாக தெரியவந்தது.

ஒரு சிறிய கிளாஸ் ஒயின், கேன் அல்லது பீர் பாட்டில் அல்லது ஆல்கஹாலின் ஏதாவது ஒரு வகைக்கு சமமான 10 கிராம் ஆல்கஹாலைதான் ஒரு முறை குடிப்பது என்று வரையறுக்கின்றோம்.

பிரிட்டனில் ஒரு யூனிட் என்பது 8 கிராம் ஆல்கஹாலுக்கு சமம்.

உலக அளவில் மூன்றில் ஒருவர் மது குடிப்பதாக கருதப்படுகிறது. மது குடிப்பது 15 முதல் 49 வயது வரை இறப்பவர்களில் பத்தில் ஒரு பகுதியினரின் மரணத்தோடு தொடர்புடையாதாக கருதப்படுகிறது.

"பாதுகாப்பு அளவுக்கு மேலாகவே பிரிட்டனில் பெரும்பாலானோர் மது அருந்துகின்றனர். இந்த ஆய்வு தெரிவிப்பதைபோல ஆல்கஹாலில் பாதுகாப்பான அளவு என்று எதுவுமில்லை. அரசு தனது கொள்கையை பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். நீங்கள் மது அருந்த விரும்பினால், அதனால் வருகின்ற ஆபத்துகளை பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார் பேராசிரியர் சாசானா.

https://www.bbc.com/tamil/science-45302439

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடிப்பதே உடல்நலத்திற்கு கேடு என காலங்காலமாய் அனுபவபூர்வமாக அறிந்தும், இதில் ஒரு சதவீத குடியென்ன நூறு சதவீத குடியென்ன..?

இதில் பகுப்பு ஆராய்ச்சிகள் வேறு..! வெளங்கிடும் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணியடிக்கிறது கூடாது எண்டு கொதிக்கிறதை விட்டுட்டு....:cool:
இப்ப விக்கிற மரக்கறி பழங்கள் சாப்பாட்டு சாமான்கள் எல்லாத்திலையும் கெமிக்கல் கலக்கிறதை கொஞ்சம் கவனியுங்கப்பா........

சின்னஞ்சிறுசுகள் எல்லாம் சாப்பிடுற சாப்பாட்டிலையே நஞ்சை விட....

  கொடுமையான வருத்தங்கள் வரக்கூடிய   சுவையூட்டிகள் எல்லாம் கலந்திருக்கப்பா :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

தண்ணியடிக்கிறது கூடாது எண்டு கொதிக்கிறதை விட்டுட்டு....:cool:
இப்ப விக்கிற மரக்கறி பழங்கள் சாப்பாட்டு சாமான்கள் எல்லாத்திலையும் கெமிக்கல் கலக்கிறதை கொஞ்சம் கவனியுங்கப்பா........

சின்னஞ்சிறுசுகள் எல்லாம் சாப்பிடுற சாப்பாட்டிலையே நஞ்சை விட....

  கொடுமையான வருத்தங்கள் வரக்கூடிய   சுவையூட்டிகள் எல்லாம் கலந்திருக்கப்பா :(

நானும் இதைத் தான் சொல்லவந்தேன்.

இப்போ தண்ணியைவிட அன்றாடம் சாப்பிடும் சாப்பாட்டிலேயே அதிகளவு நஞ்சுகள் உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நானும் இதைத் தான் சொல்லவந்தேன்.

இப்போ தண்ணியைவிட அன்றாடம் சாப்பிடும் சாப்பாட்டிலேயே அதிகளவு நஞ்சுகள் உள்ளன.

அதை விட கொடுமை இன்னுமொண்டு சொல்லட்டே....
போத்தில் தண்ணி...போத்தில் தண்ணி எண்டு வாங்கி குடிக்கினமெல்லே....அதிலை என்ன நரகத்தையெல்லாம் கலந்து விக்கிறாங்கள் எண்டதை  உந்த ஆராய்ச்சியாளர் எல்லாம் வெளியிலை சொல்ல மாட்டினம்.........சொல்லவும் கூடாது.....பிறகு கைச்செலவுக்கு காசு வராதெல்லே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.