Jump to content

டி20 போட்டியில் புதிய சாதனை: 4 ஓவர்கள் வீசி ஒரு ரன் மட்டுமே கொடுத்த பாக். வீரர் அபாரம்


Recommended Posts

டி20 போட்டியில் புதிய சாதனை: 4 ஓவர்கள் வீசி ஒரு ரன் மட்டுமே கொடுத்த பாக். வீரர் அபாரம்

 

 

 
IRFAN

பிரிட்ஜ்டவுனில் நடந்த கரிபியன் ப்ரிமியர்லீக் போட்டியில் பர்படாஸ் அணிக்காக பந்துவீசிய முகமது இர்பான்   -  படம்: ஏஎப்பி

டி20 போட்டிகளில் குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் எனும் பெருமையை பாகிஸ்தான் வீரர் முகமது இர்பான் பெற்றார்.

4 ஓவர்கள் வீசிய முகமது இர்பான் (4-3-1-2) 23 டாட் பந்துகள், 3 மெய்டன் ஓவர், ஒரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகமது இர்பான். பாகிஸ்தானில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் ப்ரிமீயர் லீக் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. இதனால், மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள கரீபியன் கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், பர்படாஸ் டிரிடென்ட்ஸ் அணிக்காக முகமது இர்பான் விளையாடி வருகிறார். பர்படாஸில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பர்படாஸ் டிரிடென்ட்ஸ் அணி 147 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 148 ரன்கள் இலக்காக வைத்து ஆட்டத்தைத் தொடங்கிய செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 7 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் பர்படாஸ் பாட்ரியாட்ஸ் அணி வீரர் முகமது இர்பான் 4 ஓவர்கள் வீசி 3 மெய்டன்களையும் 2 விக்கெட்டுகளையும், ஒரு ரன்னை மட்டுமே விட்டுக்கொடுத்து டி20 வரலாற்றில் மிகக் குறைந்த ரன் கொடுத்த பந்துவீச்சாளர் எனும் புதிய சாதனையைப் படைத்தார்.

7 அடி உயரம் கொண்ட, இடதுகை வேகப்பந்துவீச்சாளரான முகமது இர்பான் பந்துவீசிய முதல் ஓவரிலேயே கிறிஸ் கெயில் விக்கெட்டையும், அடுத்த பந்தில் இவின் லிவிஸ் விக்கெட்டையும் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். அதன்பின் தனது அசுரத்தனமான வேகப்பந்துவீச்சால் ரன்கள் விட்டுக்கொடுக்காமல் இர்பான் பந்துவீசினார்.

இது குறித்து முகமது இர்பான் கூறுகையில்,” நான் எனது பந்துவீச்சு குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால், இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். டி20 வரலாற்றிலேயே மிகக் குறைந்த ரன் கொடுத்ததாக எனப் பந்துவீச்சு அமைந்தது இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது.

26irfanjpg
 

பந்துகள் நன்றாக எழும்பும், தரமான ஆடுகளங்களில் பந்துவீச எனக்கு மிகவும் பிடிக்கும், நான் வழக்கமான பந்துவீச்சாளர்களைக் காட்டிலும் உயரம் அதிகம் என்பதால், பந்துவீசும் போது பவுன்ஸ் ஆவது அதிகரிக்கும், இதனால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படும். இந்தப் போட்டியில் எனது பந்துவீச்சு மனநிறைவு அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் வீரரான முகமது இர்பான் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளையும், 60 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 83 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். 20 டி20 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

https://tamil.thehindu.com/sports/article24784977.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.