Jump to content

சீமானிடம் கேரள காவல்துறையினர் விசாரணை.. நாம் தமிழர் கட்சி கண்டனம்.


Recommended Posts

தமிழக வேட்பாளர்களில் எனக்கு நம்பிக்கை இல்லை ...

அண்மையில் ஒரு செய்தி பார்த்தேன் ஆற்றை தூர்வாரிய சீமான் கட்சியினர் கைது .. போலிஸாரிற்கு நீதிபதி கண்டனம்.. இப்படியான செயற்பாடுகள் மூலம்..மக்களை அடையக்கூடிய இன்னும் பல செயல்களை செய்யலாம் ..

வந்தேறி அது இது என வெறுப்பரசியலை வளர்ப்பதை விட்டு.. நான் சொல்வதெல்லாம் விஜயகாந்த் வீழ்ச்சிக்கு அவரை மிகையாக ட்ரோல் பண்ணி அவரின் விம்பத்தை மக்கள் மத்தியில் சிதைத்தது தான் முக்கிய காரணம்.. அந்த வழியில் தான் சீமானினையும் கொண்டு செல்கிறார்கள்.. கட்சியின் குறிக்கோள் தி.மு.க வை எதிர்ப்பதா ஆட்சியமைப்பதா.. ? ஆட்சியமைப்பது தான் எனில் அது தொடர்பான வேலைகளில் உறுப்பினர்களை இறங்கி வேலை செய்ய பண்ணணும் .. ஆனால் உறுப்பினர்கள்..வலைத்தளங்களில்

கடுமையான திமுக எதிர்ப்பை காட்டுகின்றனர்  திமுக இப்போது ஆட்சியிலும் இல்லை அவர்களை இப்போது எதிர்பதில் எதும் பலன் இருக்கிறதா ? 

 

கப்பல் / கப்பல்கள் ஒருமை பன்மை பொஸ் :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அபராஜிதன் said:

தமிழக வேட்பாளர்களில் எனக்கு நம்பிக்கை இல்லை ...

அண்மையில் ஒரு செய்தி பார்த்தேன் ஆற்றை தூர்வாரிய சீமான் கட்சியினர் கைது .. போலிஸாரிற்கு நீதிபதி கண்டனம்.. இப்படியான செயற்பாடுகள் மூலம்..மக்களை அடையக்கூடிய இன்னும் பல செயல்களை செய்யலாம் ..

வந்தேறி அது இது என வெறுப்பரசியலை வளர்ப்பதை விட்டு.. நான் சொல்வதெல்லாம் விஜயகாந்த் வீழ்ச்சிக்கு அவரை மிகையாக ட்ரோல் பண்ணி அவரின் விம்பத்தை மக்கள் மத்தியில் சிதைத்தது தான் முக்கிய காரணம்.. அந்த வழியில் தான் சீமானினையும் கொண்டு செல்கிறார்கள்.. கட்சியின் குறிக்கோள் தி.மு.க வை எதிர்ப்பதா ஆட்சியமைப்பதா.. ? ஆட்சியமைப்பது தான் எனில் அது தொடர்பான வேலைகளில் உறுப்பினர்களை இறங்கி வேலை செய்ய பண்ணணும் .. ஆனால் உறுப்பினர்கள்..வலைத்தளங்களில்

கடுமையான திமுக எதிர்ப்பை காட்டுகின்றனர்  திமுக இப்போது ஆட்சியிலும் இல்லை அவர்களை இப்போது எதிர்பதில் எதும் பலன் இருக்கிறதா ? 

 

கப்பல் / கப்பல்கள் ஒருமை பன்மை பொஸ் :) 

விஜயகாந்த் தனது இமேஜினை தானே கெடுத்துக் கொண்டார். எவ்வாறு என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்காது.

சீமான் சொன்ன 60,000 யானைகள் அவரது சொந்த கருத்து ஆக இருக்க முடியாது பாஸ். 

பண்டைய இலக்கியங்களில் இந்த இலக்கங்களில் பாரிய நம்பகத்தன்மையின்மை உள்ளது. முக்கியமாக திருத்தராச்டிசன் மன்னன் மனைவி காந்தாரி 100 பிள்ளைகள் பெற்று எடுத்தார் என்று பண்டைய கதைகள் சொல்கின்றது.

சாத்தியமானதா? தமிழில் எழுத்து சீர்திருத்தம் வந்தது போல, எண் சீர்திருத்தம் பின்னர் வந்து இருக்கலாம். 

ஆகவே 60,000 யானைகளா என்று சும்மா அதிர்ந்து போகாதீர்கள்.... அப்படியே இந்தக் காதாலே எடுத்து அந்தக் காதாலே விட்டு விடுங்கள்.

அடுத்த தேர்தலில்... பா ஜ க யினால் முண்டு கொடுக்கப் படும் அதிமுக காணாமல் போகும். எடப்பாடி, பன்னீர் தமது தொகுதிகளிலே வெல்ல முடியாது.

தினகரன் பெரிதாக வெல்ல முடியும் என்று யாரும் நினைக்கவில்லை. டோக்கன் அரசியல் சரி வராது.... மக்கள் பணம் கேட்ப்பார்கள். கொடுத்தால் சிக்குவார்...

ரஜனி + பா ஜ க கூட்டு பெரிதாக எடுபட போவதில்லை. 

அடுத்து வருவது திமுக தான்.

ஆகவே சீமான் திமுகவை எதிர்ப்பதே சரியான அரசியல். பொசிஷனிங்....

தி மு க வை மட்டுமல்ல, ரஜனியையும் எதிர்க்கிறாரே கடுமையாக.

உங்கள் தகவலுக்கு: முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனே, சந்திரனில் இருந்து அரிசி கொண்டு வருவேன் என்று 1977 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊர் ஊராக சொன்னாராம். அதைக் கேட்டும் கூட வாக்களித்து வெல்ல வைத்தார்கள் நம் ஊர்  வாக்காள பெருமக்கள்.

உங்கள் ஊர் என்றால் ஓகே. பக்கத்து தமிழ் நாடு என்றால் பம்மாத்தா? :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, சண்டமாருதன் said:

 

இந்த களத்தில் இவர் சீமானுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கவே வருகின்றார். இது ஒரு தனிப்பட்ட காழ்புணர்வு சார்ந்தது. 

 

 

ஒன்றை எழுதும் போது
முதலில் ஒரு சிறு
அளவுக்கேனும் ஆராய்ந்து
பார்த்து விட்டு எழுதுவது
நல்லது

நான் இதுவரைக்கும்
224 பதிவுகள் இட்டுள்ளேன்
இதில் 150 இற்கும் மேற்பட்டவை
சீமான் சாராத பதிவுகள்

சரி
அவ்வாறே நான் சீமானை
விமர்சிக்கத்தான்
வருகின்றேன் எனில்
அது என் தெரிவு
என் சுதந்திரம்
என் உரிமை

உங்களுக்கு பொறுக்கவில்லை
என்றால் ஒன்றில்
பதில் கருத்து எழுதுங்கள்
அல்லது பொத்திக் கொண்டு
இருங்கள்

13 hours ago, சண்டமாருதன் said:

1996 ல் சீமான் தயாரித்த  பாஞ்சாலம் குறிச்சி படத்தில் சீமான் என்றே பெயர் உள்ளது. ஏதோ ஒன்றை இழுத்து சொட்டை நொட்டை சொல்வதே நோக்கமாக உள்ளது. கிறித்தவ பெயர் இஸ்லாமியப்பெயர் இந்து பெயர் என எதுவாக இருந்தால் தான் என்ன பிரச்சனை ?

 

நான் சீமானை
குறிப்பிடும் போது
செபஸ்டியன் சைமன் என்ற
அவரின் ஆரம்பகால
பெயரை குறிப்பிட்டு
எழுதினேன்
அது கிறிஸ்தவ பெயராக
இருந்தமையால் தான்
நான் எழுதினேன் என
நீங்களும் நாதமுனியும்
நினைத்தால் அது
என் பிரச்சனை அல்ல

ஆனால் அப் பெயரை
குறிப்பிட்டு எழுதிய
கருத்தின் பிரதான அம்சத்தினை
விட்டு விட்டு ஏன் அப் பெயர்
எழுதினேன் என்பதில்
பிடித்து தொங்கி
கொண்டு இருக்கிறியள்

மாட்டை பற்றி
எழுதாமல் அது கட்டியிருக்கும்
கயிற்றை பற்றி எழுதுதல்
ஒரு தப்பித்தல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, சண்டமாருதன் said:

தமிழக அரசியலை பெறுத்தவரை தேமுதிக மதிமுக போன்ற கட்சிகள் வலைத்தளங்களில் கேலிகளுக்கு உள்ளாகி பெரும் பின்னடைவை சந்தித்தது. ஒருவகையில் குறிவைத்து தக்கப்பட்டது என்ற செல்ல முடியும். இவ்வாறு நடக்கும் போது வேறு தெரிவுகள் இல்லாத நிலையில் திமுக அதிமுக மீளவும் பலம்பெறுகின்றது. அரசியல் வாதியை விமர்சனம் செய்கின்றேன் என்ற போர்வையில் தன்தலையில் தானே மண்ணள்ளி போடும் கதைதான் நடக்கின்றது. புலிகள் இருக்கும் வரை அவர்களை விமர்சிப்பதையே ஒரு வேலையாக செய்துகொண்டிருந்த தளங்கள் கடசியாக கண்டது ஒன்றும் இல்லை. புலிகளின் முடிவுக்கு பின்னர் அவர்கள் வலைத்தளங்களை கூட காப்பாற்ற முடியவில்லை. 

 

விசயகாந்தின் கட்சி
பலவீனமடைந்தமைக்கு பிரதான
காரணங்கள் அவர்
எதிர்க்கட்சியாக தெரிவாகியும்
எதுவும் செய்யாமை,
தவறான கூட்டணியுடன்
சேர்ந்தமை,
மற்றும் அவரது உடல்நிலை
மோசமானவை
ஆகியன

வைகோவின் கட்சி
பலவீனமடைந்தமைக்கு
காரணம் வைகோ வை
விட வேறு எதுவும்
இல்லை
வைகோ
அரசியல் சதுரங்கத்தில்
ஆட வந்த ஒரு கோமாளி


திமுக விட மோசமாக
வலைத்தளங்களில் வறுத்தெடுக்கப்பட்ட
கட்சி அங்கு எதுவும் இல்லை
ஆனால் அது எவ்வாறு
பலம்பெறுகின்றது?

தமிழத்தின் தலைவிதியை
நிர்ணயிப்பது
பாமர மக்களும்
வறுமை நிலையில் இருப்பவர்களும்
அவர்கள்
மீம்ஸ் பார்த்து வாக்களிப்பார்கள்
என நினைக்கும் அளவுக்கு
உங்கள் அறியாமை இருக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, சண்டமாருதன் said:

தமிழ்த்தேசீயம் - இனம் சர்ந்த உணர்வு எங்கெல்லாம் துளிர்விடுகின்றதோ அவைகள் தமிழர்களாலேயே கிள்ளி எறியப்படும். சாதியச் சமூகங்களின் சிந்தனை முறை ஒரு போதும் நேர்த்தியாகவோ தூரநோக்கிலோ இருக்காது. இனத் தேசீய எழுச்சிக்கு எதிராகவே அது இயங்கும். அதை புரிந்துகொள்வது கடினம். இன்றய தமிழகத்தின் "கலாய்த்தல்" என்ற பகிடி கலாச்சாரம் நேற்றய சாதிய நையப்புடைப்புகளின் நீட்சியோடு தொடர்புடையது. அரசியல் விமர்சனங்களிலும் இவை கலந்தே உள்ளது.  சாண் ஏற முழம் சறுக்கும். 

நாம் சாதி மத பிரதேசவாத முரண்பாடுகளை கடந்து ஒரு இனமாக மாற முற்படுகின்றோம் தவிர நாம் ஒரு பலமான தேசீய இனத்தை சார்ந்தவர்கள் இல்லை.  தமிழர்களது அரசியல் என்பது எப்போதும் தனது இனத்தை கட்டமைப்பதும் பிற இனங்களிடம் இருந்து தன்னை தற்காத்துக்கொளவதும் என்ற  இரண்டு நிலை இயக்கத்தில் இருக்கும் அதனடிப்படையில் எமக்கு நாமே எதிரிகள் மற்றது புறநிலை எதிரிகள். எமது வார்த்தைகள் கருத்துக்கள் நாம் எதிர்பார்ப்பதை விட  நூறுமடங்கு இனமென்ற அடிப்படையில் எமக்கே எதிரானவை. அழிவுகளை ஏற்படுத்துபவை. 

 

 

தமிழர்கள் மத்தியில்
சாதியத்தை விதைத்தது
வர்ணாசிரமம்

வர்ணாசிரமத்தை
கொள்கையாக
தன் பாதையாக
தன் வழியாக
வைத்துக் கொண்டுள்ளது
ஆரியமும் பார்ப்பனியமும்

தமிழ் தேசியத்தின்
பெரும் எதிரியே இந்த
ஆரியமும் பாப்பனியமும்
தான்

அதை முழு மூச்சாக
எதிர்க்க கொண்டு
வரப்பட்டதே 'திராவிடம்'
எனும் கருத்தியல்

மற்ற மானிலங்களில்
வேரூன்ற முடிந்த
காவிக் கட்சிக்கு
தமிழகம் நோட்டாவை
கொடுப்பதே இந்த
திராவிடம் எனும் கருதியலும்
பெரியாரின் கருத்துகளும்
ஆகும்

ஆனால் சைமன் எதிர்ப்பதே
இந்த திராவிடம் எனும்
கருத்தியலையும்
அதன் இயங்கு
தளத்தையும்

எதை காவிக் கட்சியும்
ஆர்.எஸ்.எஸ் சும்
சங்க பரிவார்களும்
எதிர்க்கின்றனரோ
எந்த கருத்தியலை தகர்க்க
முற்படுகின்றார்களோ
அதையே சைமனுன் செய்கின்றார்

நீங்கள்
சாதியத்தை கடந்து
தமிழர்களாக அணிதிரள்வது
பற்றி குறிப்பிட்டு கொண்டே
சைமனையும் ஆதரிக்கின்றீர்கள்

சைமன் செய்வது
இவன் தெலுங்கன்
இவன் மலையாளி
இவன் நாயக்கன்
என்று வகை பிரித்து
மேலும் மேலும்
சிதைப்பதே

தீவிர தமிழ் தேசியம்
பேசுகின்றோம் என்ற
பெயரில்
தமிழ் இனவாதத்தை
கக்கிக் கொண்டு இருக்கின்றார்
சைமன்

அதுக்காக எம் இனத்து
விடுதலையையும்
தலைவரையும்
போராளிகளையும்
அவர்கள் செய்த
தியாகங்களையும்
பயன்படுத்தி கொண்டு
இருக்கின்றார்

இப்படிப்பட்ட ஒருவரை
கண்ணை மூடிக் கொண்டு
உங்கள் அரைகுரை
அரசியல் பார்வைகளுடன்
தூக்கி தலையில் வைத்து
கொண்டாடுங்கள்

ஆனால் என்னால்
முடியாது
சைமன் எம் போராட்டத்தை
எம் போராளிகளை
தலைவரை தன்
சுய அரசியல் லாபத்துக்கு
பாவிக்கும் வரை
எதிர்த்து எழுதிக் கொண்டு
இருப்பேன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வைரவன் said:

தமிழ் தேசியத்தின்
பெரும் எதிரியே இந்த
ஆரியமும் பாப்பனியமும்
தான்

அதை முழு மூச்சாக
எதிர்க்க கொண்டு
வரப்பட்டதே 'திராவிடம்'
எனும் கருத்தியல்

மற்ற மானிலங்களில்
வேரூன்ற முடிந்த
காவிக் கட்சிக்கு
தமிழகம் நோட்டாவை
கொடுப்பதே இந்த
திராவிடம் எனும் கருதியலும்
பெரியாரின் கருத்துகளும்
ஆகும்

ஆனால் சைமன் எதிர்ப்பதே
இந்த திராவிடம் எனும்
கருத்தியலையும்
அதன் இயங்கு
தளத்தையும்

எதை காவிக் கட்சியும்
ஆர்.எஸ்.எஸ் சும்
சங்க பரிவார்களும்
எதிர்க்கின்றனரோ
எந்த கருத்தியலை தகர்க்க
முற்படுகின்றார்களோ
அதையே சைமனுன் செய்கின்றார்

 

உங்கள் பிடிவாதத்தினால், சில உண்மைகளை புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்.

அண்ணா, பெரியார் உருவாக்கிய 'திராவிடம்' எனும் கருத்தியல் ஊழல், குடும்ப- வாரிசு அரசியல் என, நாசமறுத்தது யார்? 

இறுதியில் யாரை எதிர்த்து திராவிடம் வந்ததோ, அதே பிராமணத்துப் பெண் இன்னொரு (அ)திமுகவுக்கு தலைமை தங்கியது எவ்வாறு? 

ஏனைய மாநிலங்களில் காலூன்றிய காவிக் கட்சிக்கு, தமிழகத்தில் ராஜபாட்டை அமைத்துக் கொடுத்தது எந்த திராவிட கட்சி?

சீமான் இந்த திராவிட கருத்தியலை எதிர்ப்பதாக சொல்கிறீர்கள்? இந்த போலி 'திராவிடம்' தமிழகத்தினை, அதன் மலை, மண் வளங்களை வித்து அந்த பணத்தினை வாக்குக்கு லஞ்சமாக கொடுத்து... மேலும் மேலும் ஊழல் செய்கின்றனவே. 

அது, கண்ணை வித்து, சித்திரம் வாங்கும் அது, உங்களுக்கு சம்மதமோ?

முதலில் சீமான், சைமன் இரண்டில் ஒன்று குறித்த தெளிவான முடிவுக்கு வாருங்கள். அதன் பின்னர் நியாயம் பிளக்கலாம். 

உங்கள் ஊரில், இனவாதம் பேசும் சிங்கள அரசியல் வாதிகள் குறித்து பேசுங்கள்... பின்னர் அடுத்த நாட்டு சீமானின் இனவாதம் குறித்து பேசலாம்.

சீமானுடைய ஊர், தாய், தந்தை... சகல விடயங்களையும் ஊடகங்கள் ஆய்வு செய்து ஆவண படங்களாக போட்டு இருக்கின்றன. 

பெயர் விடயத்தில் பொய் சொல்லி... அரசியல் நடத்த முடியும் என்று நம்பும் உங்களுடன் விவாதங்களில் ஈடுபட முடியுமா என்பதே எனது கவலை.

உங்கள் கருத்துக்களை பதிவிடும் உரிமை உங்களுக்கு உள்ள அதே நேரம்... இங்கே உள்ள அடுத்த பதிவாளர்கள், தரமான பதிவுகளை எதிர்பார்க்கும் உரிமை உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். விசமத்தனமான அபத்தங்களை அல்ல..

Link to comment
Share on other sites

11 hours ago, வைரவன் said:

 

தமிழத்தின் தலைவிதியை
நிர்ணயிப்பது
பாமர மக்களும்
வறுமை நிலையில் இருப்பவர்களும்
அவர்கள்
மீம்ஸ் பார்த்து வாக்களிப்பார்கள்
என நினைக்கும் அளவுக்கு
உங்கள் அறியாமை இருக்கின்றது

 

தமிழகத்தின் தலைவிதியை தீர்மானிப்பது வறுமையில் இருப்பவர்களும் பாமர மக்களும் எனில் அதற்கு அர்த்தம் பணம் படைத்த கட்சியே தலைவிதியை தீர்மானிக்கின்றது என்பதாகும். கடந்த காலங்களில் நடந்ததும் இதுவே. 50 ஆண்டுகளில் திமுகவும் அதிமுகாவும் ஆட்சிக்கு வந்ததே தவிர கருத்தியல் ரீதியான அரசியல் மாற்றம் ஏற்படவில்லை. வறுமைப்பட்ட மக்கள் ஆட்சியை தீர்மானித்தால் ஏன் அவர்கள் வறுமை போகவில்லை ? நீங்கள் மீம்ஸ் என்ற சிறு விசயத்தோடு நிற்பது உங்கள் அறியாமை. வியாபாரிகள் அரசியல்கட்சிகள் செய்தி ஊடகங்கள் என்ற கூட்டணியில் வலைத்தளங்கள் ஒரு அங்கமே ஆகும். தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மாநிலத்திலும் வறுமைப்பட்ட மக்கள் தமது அரசியல் தலைவிதியை தீர்மானிப்பதில்லை. மேலே சொன்ன கூட்டணியில் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். 

11 hours ago, வைரவன் said:

சைமன் செய்வது
இவன் தெலுங்கன்
இவன் மலையாளி
இவன் நாயக்கன்
என்று வகை பிரித்து
மேலும் மேலும்
சிதைப்பதே

 

தெலுங்கு மலையாளி கன்னடர் என்பது சாதிகள் இல்லை இனங்கள். தமிழனத்தை தமிழன் ஆழவேண்டும் என்பது உங்கள் பாணியில் சிதைவென்றால் பிறகெதுக்கு சிங்கள இனத்தோடு சண்டை தனிநாடு எல்லாம் ?

11 hours ago, வைரவன் said:

ஆனால் என்னால்
முடியாது
சைமன் எம் போராட்டத்தை
எம் போராளிகளை
தலைவரை தன்
சுய அரசியல் லாபத்துக்கு
பாவிக்கும் வரை
எதிர்த்து எழுதிக் கொண்டு
இருப்பேன்

 

ஏன் நீங்கள் தலைவரையும் போரட்டத்தையும் குத்தகைக்கு எடுத்துள்ளீர்களா ? 

தலைவர் படத்தை தூக்கிப்பிடிப்பதால் புலிக்கொடியை தூக்கிப் பிடிப்பதால் வருமானம் வரும் என்றால் புலம்பெயர் நாட்டில் தூக்கிப்பிடித்துக்கொண்டிருப்பார்கள் ஆனால் லாபம் இல்லை என்றவுடன் கீழே போட்டாகிவிட்டதே. 

இன எழுச்சிக்கு அடயாளமாக தலைவர் படத்தை நாம்தமிழர் பயன்படுத்துகின்றார்கள். இந்தியாவை பொறுத்தவரை அதனால் அவர்களுக்கு நட்டமே தவிர லாபம் கிடையாது. அவர்களால் கனகாலத்துக்கு இதை பயன்படுத்தவும் முடியாது. குறிப்பிட்ட காலத்தில் அவை தடைசெய்யப்படும். நீங்கள் தமிழ் தேசீயம் சார்ந்து இன எழுச்சி ஐக்கியப்படு சார்ந்து ஏதாவது இயக்கம், அரசியல், மாநாடு நடத்துகின்றீர்களா ? அதற்காக தலைவர் போராட்டம் போராளிகளை பயன்படுத்தப்போகின்றீர்களா ? இல்லை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று சட்ட ரீதியாக உரிமை கொண்டாடுகின்றீர்களா? இல்லை புலிகளின் முடிவுக்கு முன்னர் இவற்றைப் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லிவிட்டு முடிந்துபோனார்களா ? ஒன்றும் புரியவில்லை, உங்கள் எதிர்பிற்கு என்ன அடிப்படை ?அதனால் எதை முன்வைக்க விரும்புகின்றீர்கள் ? 

நீங்கள் ஈழத்தமிழனாக தலைவர் போராளிகள் போராட்டத்தை பாவிப்பதை எதிர்த்தால் நாங்கள் ஈழத்தமிழராக பாவிப்பதை ஆதரிக்கின்றோம். முடிந்தவரை இன தேசீய எழுச்சிக்காவும் ஐக்கியப்பட்டுக்காகவும் யார் பயன்படுத்தினாலும் ஆதரிக்கின்றறோம். இவற்றைப் பாவித்து புலம்பெயர் நாட்டில் நிகழ்ச்சி நடத்துவது வியாபாரம் செய்வது காசு சேர்த்து கல்லா கட்டுவது வடை வாய்பன் விற்பதை எதிர்க்கின்றோம். சீமான் பாவிப்பதால் உங்களுக்கு எங்க அரிக்கின்றது என்பது நன்கு விளங்குது ஆனால் இங்க சொறிய யாரும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைரவன் அவர்களை,  உடனே... மேடைக்கு வரும்படி,  அன்புடன். அழைக்கின்றோம்.  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

வைரவன் அவர்களை,  உடனே... மேடைக்கு வரும்படி,  அன்புடன். அழைக்கின்றோம்.  ?

ஒரு mac ஐடிக்கு யுசெர் நேம் கொடுக்கும் கருத்துக்களமாக மாறினால் நல்லது போல் உள்ளது ஓனரிடம் கேட்கணும் ஒவ்வொரு பெயரில் வந்து இருட்டுக்குள் இருந்து கல் எறிபவர்கள் போல் கருத்துகளை உமிழ்ந்துவிட்டு ஓடிசெல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

நேற்றோ அதற்கு முந்திய நாள் சீமான் பேசிய பேச்சு மிக அதிகமான எதிர்ப்புகளை சம்பாதித்திருக்கிறது... திராவிட சுடுகாடு என பேசியதில்.. ஆபாச கருத்துகள் இருப்பதாகவும்..பூநகரி சண்டையில் தமிழ்ச்செல்வன் காயப்பட்டிருக்கும் போது காலிழந்த இன்னொரு போராளியிடம் வீரச்சாவடைந்த இன்னொரு போராளி பற்றி அவர் சொன்னதாக சீமான் கூறிய ( அவனவன் தலை இல்லாமல் கிடக்கான் நீ என்னடா என்றால் கால் போனதுக்கு இந்த கத்து  கத்திறாய் என்று சாரப்பட ) கருத்தும்... இதை வைத்து கடுமையான கருத்துக்களை வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, அபராஜிதன் said:

நேற்றோ அதற்கு முந்திய நாள் சீமான் பேசிய பேச்சு மிக அதிகமான எதிர்ப்புகளை சம்பாதித்திருக்கிறது... திராவிட சுடுகாடு என பேசியதில்.. ஆபாச கருத்துகள் இருப்பதாகவும்..பூநகரி சண்டையில் தமிழ்ச்செல்வன் காயப்பட்டிருக்கும் போது காலிழந்த இன்னொரு போராளியிடம் வீரச்சாவடைந்த இன்னொரு போராளி பற்றி அவர் சொன்னதாக சீமான் கூறிய ( அவனவன் தலை இல்லாமல் கிடக்கான் நீ என்னடா என்றால் கால் போனதுக்கு இந்த கத்து  கத்திறாய் என்று சாரப்பட ) கருத்தும்... இதை வைத்து கடுமையான கருத்துக்களை வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்

ஆங்கிலத்தில் 'Taken out of  context' என்று ஒரு விசயம் சொல்லுவார்கள்.

ஒரு நீண்ட ஒரு விபரணத்தில், அல்லது உரையில் ஒரு சிறு வசனத்தினை மட்டும் எடுத்து, தமது நியாயப்பிளப்புக்கு பயன்படுத்திக் கொள்வது.

சீமானின் இரு மணி நேர நீண்ட உரையினை கேட்டால் அவர் சொல்ல வந்தது சரியாக புரியும். இது ஒரு சிறு பகுதி. அதனால் அது ஆபாசமாக தெரியும்.

அவர் சொல்ல வந்தது எந்த பிராமணியத்தினை திராவிடம் எதிர்த்ததோ, அந்த எதிர்த்த மூவர்களுடன், எதிர்க்கப் பட்ட பிராமணியத்தின் ஒரு பெண்ணும் சேர்ந்து  அந்த 'திராவிட மயானத்தில்' படுத்து இருக்கிறார்கள், என்பது.

அந்த முக்கிய விசயத்தினை விட்டு ஒரு பெண் மூன்று ஆண்களுடன் படுத்து இருக்கிறார் என்று ஆபாசமாக சொல்லி விட்டார் என்று அலம்பறை பண்ணுகிறார்கள்.

அனைவருமே இறந்தவர்கள், வயதானவர்கள்... நோயினால் மாண்டவர்கள்..

இப்படி எழுதும் அந்த ஒரு சில நெட்டிசன்கள் தான் தமது எழுத்துக்கு வருந்த வேண்டும்.

ஒரு காலிழந்த போராளி, வலியில் துடித்த போது, அவரை வீரனாக... உற்சாகப் படுத்தவே.... சொல்லப் பட்ட வார்த்தைகளையே அவர் சொல்லி இருந்தார்... உனக்கு காலிலேதான் காயம். அங்கே தலையிலே காயம் பட்டும், சிலர் தலையே இழந்து இருக்கிறார்கள். ஆகவே கவலைப் படாமல் எழுந்து வா' என்று சொல்லப் பட்டது என்பதே சீமானின் பேச்சின் நோக்கம்.

இந்த பின்னூட்டம் பார்க்க முனைந்தால் தலை கிறுகிறுக்கும். இலங்கைப் பிரதமர் ரணில், உலகமெங்கும் சமூக ஊடகங்களின் பின்னூடடம் பெரும் தலைவலியாக மாறி வருகிறது என்கிறார். 

பல தற்கொலைகளுக்கும் பின்னூடடம் காரணமாகி உள்ளது. அண்மையில் கூட மத்திய கிழக்கு நாடொன்றில், ஒரு கேரள நிறுவனம், கேரளாவில் வெள்ளத்தினால் பாதிக்கப் பட பெண்களுக்கு நாப்கின் வேண்டும்... உதவுங்கள் என்று கோர... அதே நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு கேரள ஊழியர்.... பின்னூடடம் போட்டிருந்தார்...  'சரி தான்.... ஆண்களுக்கு ஆணுறை வேண்டாமோ'..என்று..

அடுத்தநாளே பெரும் கண்டனங்களை சந்த்தித்து.... மது வெறியில் பிழையாக எழுதி விட்டேன் என்று சொன்னாலும்.... நிறுவனம் அவரை பதவி நீக்கியது.

ஆகவே இந்த பின்னூட்டம் போடுவர்களை சீரியஸ் ஆக எடுக்க முடியாது, கூடாது.

Link to comment
Share on other sites

26 minutes ago, Nathamuni said:

ஆங்கிலத்தில் 'Taken out of  context' என்று ஒரு விசயம் சொல்லுவார்கள்.

ஒரு நீண்ட ஒரு விபரணத்தில், அல்லது உரையில் ஒரு சிறு வசனத்தினை மட்டும் எடுத்து, தமது நியாயப்பிளப்புக்கு பயன்படுத்திக் கொள்வது.

சீமானின் இரு மணி நேர நீண்ட உரையினை கேட்டால் அவர் சொல்ல வந்தது சரியாக புரியும். இது ஒரு சிறு பகுதி. அதனால் அது ஆபாசமாக தெரியும்.

அவர் சொல்ல வந்தது எந்த பிராமணியத்தினை திராவிடம் எதிர்த்ததோ, அந்த எதிர்த்த மூவர்களுடன், எதிர்க்கப் பட்ட பிராமணியத்தின் ஒரு பெண்ணும் சேர்ந்து  அந்த 'திராவிட மயானத்தில்' படுத்து இருக்கிறார்கள், என்பது.

அந்த முக்கிய விசயத்தினை விட்டு ஒரு பெண் மூன்று ஆண்களுடன் படுத்து இருக்கிறார் என்று ஆபாசமாக சொல்லி விட்டார் என்று அலம்பறை பண்ணுகிறார்கள்.

அனைவருமே இறந்தவர்கள், வயதானவர்கள்... நோயினால் மாண்டவர்கள்..

இப்படி எழுதும் அந்த ஒரு சில நெட்டிசன்கள் தான் தமது எழுத்துக்கு வருந்த வேண்டும்.

ஒரு காலிழந்த போராளி, வலியில் துடித்த போது, அவரை வீரனாக... உற்சாகப் படுத்தவே.... சொல்லப் பட்ட வார்த்தைகளையே அவர் சொல்லி இருந்தார்... உனக்கு காலிலேதான் காயம். அங்கே தலையிலே காயம் பட்டும், சிலர் தலையே இழந்து இருக்கிறார்கள். ஆகவே கவலைப் படாமல் எழுந்து வா' என்று சொல்லப் பட்டது என்பதே சீமானின் பேச்சின் நோக்கம்.

இந்த பின்னூட்டம் பார்க்க முனைந்தால் தலை கிறுகிறுக்கும். இலங்கைப் பிரதமர் ரணில், உலகமெங்கும் சமூக ஊடகங்களின் பின்னூடடம் பெரும் தலைவலியாக மாறி வருகிறது என்கிறார். 

பல தற்கொலைகளுக்கும் பின்னூடடம் காரணமாகி உள்ளது. அண்மையில் கூட மத்திய கிழக்கு நாடொன்றில், ஒரு கேரள நிறுவனம், கேரளாவில் வெள்ளத்தினால் பாதிக்கப் பட பெண்களுக்கு நாப்கின் வேண்டும்... உதவுங்கள் என்று கோர... அதே நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு கேரள ஊழியர்.... பின்னூடடம் போட்டிருந்தார்...  'சரி தான்.... ஆண்களுக்கு ஆணுறை வேண்டாமோ'..என்று..

அடுத்தநாளே பெரும் கண்டனங்களை சந்த்தித்து.... மது வெறியில் பிழையாக எழுதி விட்டேன் என்று சொன்னாலும்.... நிறுவனம் அவரை பதவி நீக்கியது.

ஆகவே இந்த பின்னூட்டம் போடுவர்களை சீரியஸ் ஆக எடுக்க முடியாது, கூடாது.

ஆம்நீங்கள் சொல்வது சரி ஆனால் ட்ரோல் பண்ணுபவர்கள்.. அந்த குறுகிய பகுதியை மட்டுமே எடுத்து போட்டு வறுக்கின்றனர்..அவர்களில் யாருமே சீமானின் முழு பேச்சையும் கேட்கவே இல்லை கேட்கப்போவதுமல்லை.. அவர்களிற்கு தேவையே இப்படியான சில துண்டுகளே அதற்கு தான்.. அவர்கள் பாத்திருக்கிறார்கள்., அதற்கும் மேலாக இன்னொரு தி.மு.க கூட்டம்.. இப்படி வருகிறது.. என்ன தான்  எனக்கு புலிகள் மேல் விமர்சனம்கள் இருந்தாலும் களத்தி்ல் போராடிய போராளியை இப்படி சொல்வது.. என்பதாக தொடர்கிறது.. இத்தனைக்கும் இந்த ஐடி புலிகளை மிக கேவலமாக ட்ரக் கடத்தியவர்கள் குழந்தை போரளிகள் என கேவலமா எழுதியது..இப்படியான ஐடிகள் கிட்டத்தட்ட 5000 வரையான நட்புகளையும்  20000-30000 வரையான பலோவர்களையும் கொண்டவை இவர்கள்சொல்லும் கருத்துகள் அதிகமானோர்களால் பார்க்கப்படுகின்றன மற்றும் பகிரப்படுகின்றன

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.