Jump to content

வெளியுறவுச் செயலரின் வட கொரிய பயணத்தை டிரம்ப் ரத்து செய்ய சொன்னது ஏன்?


Recommended Posts

வெளியுறவுச் செயலரின் வட கொரிய பயணத்தை டிரம்ப் ரத்து செய்ய சொன்னது ஏன்?

அமெரிக்க வெளியுறவுச் செயலரான மைக் பாம்பேயோ, முன்னரே திட்டமிட்டிருந்த வட கொரிய பயணத்தை அதிபர் டிரம்ப் கைவிடுமாறு கூறியதால் அவர் வட கொரியாவுக்கு செல்லமாட்டார் என்று தெரிகிறது.

மைக் பாம்பியோபடத்தின் காப்புரிமைWIN MCNAMEE

கொரிய பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்றும் நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் இல்லை என்று டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் தெரிவித்திருந்தார்.

அதே போல், அமெரிக்காவுடனான வணிக ரீதியான உறவுகள் சரியில்லாத காரணத்தால், சீனாவும் வட கொரியாவுக்கு போதுமான அழுத்தத்தை தரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் டிரம்ப்-கிம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பிறகு பேசிய டிரம்ப், இனி வட கொரியா ஓர் அணுஆயுத அச்சுறுத்தலாக இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால், கொரிய பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்ற வட கொரியா தவறிவிட்டதாக பல செய்திகள் வெளிவந்தன.

பெயர்வெளியிடாத அமெரிக்க அதிகாரிகள் வாஷிங்டன் போஸ்ட்டில் வடகொரியா புதிய பேலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கிவருவதாக தெரிகிறது என கூறியுள்ளது சமீபத்திய எச்சரிக்கையாகும்.

வடகொரியா தொடர்ந்து தனது அணுசக்தி திட்டங்களை தொடர்வதாக ஐநாவின் அணுசக்தி நிறுவனமும் தெரிவித்திருந்தது.

டிரம்ப் கூறியது என்ன?

''இந்த சமயத்தில் வடகொரியாவுக்குச் செல்லவேண்டாம் என பாதுகாப்பு துறை செயலர் மைக் பாம்பேயோவுக்கு நான் சொல்லியிருக்கிறேன். கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக்க எடுத்துக்கொண்ட உறுதிமொழியை செயல்படுத்த நாம் போதுமான முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை என உணர்கிறேன்'' என ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Trump Kimபடத்தின் காப்புரிமைREUTERS Image captionவடகொரியா தலைவர் கிம் - டிரம்ப்

''சீனாவுடனான அமெரிக்காவின் கடினமான வர்த்தக நிலைப்பாடு காரணமாக கொரியாவை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக்கும் நடைமுறைக்கு சீனா உதவவில்லை என நான் நினைக்கிறேன்'' என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

 
 

...Secretary Pompeo looks forward to going to North Korea in the near future, most likely after our Trading relationship with China is resolved. In the meantime I would like to send my warmest regards and respect to Chairman Kim. I look forward to seeing him soon!

 
 

''பாம்பேயோ வடகொரியா பயணத்தை எதிர்நோக்கியிருக்கிறார்.சீனாவுடனான வர்த்தக உறவில் ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்கியதும் பாம்பேயோ வருங்காலத்தில் வடகொரியாவுக்கு பயணம் செய்யக்கூடும். இதற்கிடையில் என்னுடைய கனிவான அன்பையும் மரியாதையும் வடகொரிய தலைவர் கிம்முக்கு அனுப்ப விரும்புகிறேன். அவரை விரைவில் சந்திக்க எதிர்நோக்கியிருக்கிறேன். '' என மற்றொரு சமீபத்திய ட்வீட்டில் தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.

வடகொரியா - டிரம்ப் இடையிலான உறவானது ஜூன் மாத சந்திப்புக்கு பிறகு ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறது. ஜூலையில் பாம்பேயோ வடகொரியாவுக்கு சென்றபோது, ''அவர் தாதா போல நிபந்தனை வைக்கிறார்'' என வடகொரியா கண்டித்தது.

வடகொரியாவின் அணு ஆயுத செயல்பாடுகள் முடிவுக்கு வந்தால்தான் பொருளாதார தடைகளை நீக்குவது குறித்து ஆலோசிக்க முடியும் என அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.

https://www.bbc.com/tamil/global-45306055

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.