Jump to content

கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்துக்கு அமித் ஷா அழைப்பு: பா.ஜ.கவை நெருங்குகிறதா தி.மு.க.?


Recommended Posts

கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்துக்கு அமித் ஷா அழைப்பு: பா.ஜ.கவை நெருங்குகிறதா தி.மு.க.?

முரளிதரன் காசி விஸ்வநாதன்பிபிசி தமிழ்

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கான நினைவேந்தல் கூட்டம் ஒன்றில் பா.ஜ.கவின் தலைவர் அமித் ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது அக்கட்சி தொண்டர்களிடத்திலும் தமிழக அரசியல் களத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், தேசிய அளவிலான அரசியல் தலைவர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளை அக்கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

இதில் ஏற்கனவே இரண்டு நிகழ்வுகள் முடிந்துவிட்ட நிலையில், திரைக் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சனிக்கிழமையன்று நடைபெற்றதுது. இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் வரும் 26ஆம் தேதியன்று நடக்கவிருக்கிறது.

இறுதியாக, ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று பிரம்மாண்டமான முறையில் சென்னையில் தேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு தி.மு.க. தற்போது ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. இந்தக் கூட்டத்திற்கான அழைப்பிதழ் எனக் குறிப்பிடப்பட்ட ஒரு படம், வெள்ளிக்கிழமையிலிருந்து இணையத்தில் பரவ ஆரம்பித்தது. இந்த நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.கவின் சார்பில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா கலந்துகொள்வதாக அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஸ்டாலின்படத்தின் காப்புரிமைFACEBOOK/M.K.STALIN

இதையடுத்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது. தி.மு.கவைச் சேர்ந்த பலரும் இந்த அஞ்சலிக் கூட்டத்திற்கு அமித் ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கும் அதில் அவர் பங்கேற்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்தபோது, அவரை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் தமிழக அரசு இடம் கொடுக்க மறுத்ததன் பின்னணியில் பா.ஜ.கவே இருந்தது எனக் குற்றம்சாட்டிய பல தொண்டர்கள், அவர் எப்படி கருணாநிதிக்கான அஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்க முடியும் என்று கேள்வியெழுப்பினர்.

முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு

 

முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு

தி.மு.க. தொடர்ந்து மதவாதத்தை எதிர்த்துவருவதாதக் கூறும் நிலையில், குறிப்பாக தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு எதிரான அலை வீசுவதாகச் சொல்லப்படும் நிலையில், அமித் ஷாவை அஞ்சலிக் கூட்டத்திற்கு அழைப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துமென்றும் சுட்டிக்காட்டினர்.

ஆனால், தி.மு.க. அதிகாரபூர்வமாக இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த நிலையில்தான் வெள்ளிக்கிழமை இரவில் பா.ஜ.கவின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில், கருணாநிதிக்கான அஞ்சலி கூட்டத்தில் அமித் ஷா கலந்துகொள்ளப்போவதில்லை எனத் தெரிவித்தார்.

"தி.மு.க. கூட்டத்தில் கட்சித் தலைவர் அமித் ஷா கலந்துகொள்ளப்போவதில்லை என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி" என சுப்பிரமணியன் சுவாமி அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.subramanian-swamy_normal.jpg

உண்மையிலேயே கருணாநிதிக்கான நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்க அமித் ஷாவுக்கு தி.மு.க. அழைப்பு விடுத்ததா? "ஆம். அழைப்பு விடுக்கப்பட்டது. தேசிய அளவில் எல்லாத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதைப்போல அமித் ஷாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது" என தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால், அமித் ஷா இந்தக் கூட்டத்தில் பங்கேற்பாரா என்பது குறித்து இன்னும் முடிவுசெய்யப்படவில்லை. திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "அவர் வருகை குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அவர் வருவதாக இருந்தால் அவரது பயணத் திட்டம் குறித்து முன்கூட்டியே மாநிலத் தலைமைக்கு தெரிவிக்கப்படும். அப்படி ஏதும் தகவல் இதுவரை வரவில்லை" என்று கூறினார்.

டி.கே.எஸ். இளங்கோவனும் இதையே கூறுகிறார். "அமித் ஷாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அவர் கலந்துகொள்வார் அல்லது அவர் சார்பில் வேறு யாராவது தேசியத் தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்" என்கிறார்.

கருணாநிதியின் அஞ்சலிக் கூட்டத்தில் அமித் ஷாவின் பங்கேற்பு உறுதிசெய்யப்படாத நிலையிலேயே, அரசியல் கூட்டணி தொடர்பான சலசலப்புகளை இந்தச் செய்தி ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்திற்கு அமித் ஷா அழைக்கப்பட்டிருப்பதன் மூலம் இரு கட்சிகளும் நெருங்குகிறதோ என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தியது.

ஸ்டாலின்படத்தின் காப்புரிமைFACEBOOK/MK STALIN

ஆனால் இதை மறுக்கிறார் டி.கே.எஸ். இளங்கோவன். "இதில் அரசியல் எதுவுமே கிடையாது. அ.இ.அ.தி.மு.கவைத் தவிர பிற கட்சிகள் அனைத்தையுமே அழைத்திருக்கிறோம். மாநிலத் தலைவர்கள் நினைவஞ்சலி செலுத்தும் கூட்டத்திற்கு பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அழைக்கப்பட்டிருக்கிறார். அப்போது எழாத சர்ச்சை இப்போது ஏன் எழுகிறதெனத் தெரியவில்லை" என்கிறார் அவர்.

தற்போது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் தி.மு.கவும் நெருக்கமாக உள்ள நிலையில், இந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குலாம் நபி ஆசாத் பங்கேற்பதாகத் தெரியவந்திருக்கிறது. முன்னதாக தி.மு.கவின் சார்பில் முரசொலி இதழுக்கு பவள விழாவை நடத்தியபோது அதில் ராகுல் காந்தி பங்கேற்றார். அந்தப் பின்னணியில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ராகுல் காந்தி வராததும் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனால், இந்தச் செய்திகளைப் புறம்தள்ளுகிறார் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான திருநாவுக்கரசர். "இந்த விழாவிற்கு அமித் ஷா அழைக்கப்படுவது குறித்து காங்கிரசிற்கு ஒன்றுமில்லை. அவர் கலைஞரைப் புகழந்துபேச அழைக்கப்பட்டிருக்கிறார். வந்து பேசிவிட்டுப் போகட்டும். இதனால், தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையில் கூட்டணி ஏற்பட்டுவிடுமென்றெல்லாம் சொல்ல முடியாது" என்று ஊடகங்களிடம் தெரிவித்தார் திருநாவுக்கரசர்.

ஆழி.செந்தில்நாதன்படத்தின் காப்புரிமைFACEBOOK/AAZHI SENTHIL NATHAN

அரசியல் நாகரீகம் கருதியே அமித் ஷா அழைக்கப்பட்டார் என்ற கருத்தை தன்னாட்சித் தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆழி. செந்தில்நாதன் ஏற்கவில்லை. "கலைஞரின் மறைவுக்கு பா.ஜ.க. தலைவர்கள் வந்தார்கள். அதேபோல வாஜ்பாயி மறைவுக்கு ஸ்டாலின் சென்றார். இதை நாகரீகம் என்று சொல்லலாம். ஆனால், நினைவேந்தல் கூட்டத்திற்கு அமித் ஷா அழைப்படுவதை அரசியல் நாகரீகம் என்று சொல்வதை ஏற்க முடியாது. தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கான சமிக்ஞையைப் போலத்தான் இதைப் பார்க்க முடியும். இப்படி ஒரு சமிக்ஞையை விடுப்பது தி.மு.கவுக்கும் நல்லதல்ல. தேர்தலுக்குப் பிறகு அப்படி முடிவுசெய்தால் அது தமிழகத்திற்கும் நல்லதல்ல" என்கிறார் செந்தில்நாதன்.

தி.மு.க. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது அக்கட்சிக்கு தேர்தலிலும் எதிராகவே முடியும்; மேலும் இம்மாதிரி நிகழ்வுகள் கூட்டணிக் கட்சிகளிடமும் மன வருத்தத்தை ஏற்படுத்தும். தற்போது ஆளும் கட்சிகளின் மீது மனவருத்தமடைந்திருப்பவர்கள் தி.மு.கவுக்கு வாக்களிக்க நினைப்பார்கள். அந்த வாக்குகள் கிடைக்காமல் போகும் என்கிறார் செந்தில்நாதன்.

முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு

கடந்த ஜூலை மாதம் ஊடகங்களிடம் பேசிய தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மாநில சுயாட்சி மாநாடு ஒன்றை தி.மு.க. ஆகஸ்ட் மாதம் நடத்தும் எனத் தெரிவித்திருந்தார். இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் தேர்தலுக்கு முந்தைய அணிகள் குறித்து இந்த மாநாடு சுட்டிக்காட்டுமென்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில் கருணாநிதி மறைந்து, அவருக்கான நினைவேந்தல் கூட்டம் திட்டமிடப்பட்டுவிட்ட நிலையில், கூட்டாட்சி மாநாடு எப்போது நடத்தப்படும் என்பது தெரியவில்லை.

இதற்கு முன்பாக 1999ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தமிழகத்தில் மொத்தமுள்ள 39 இடங்களில் 26 இடங்கள் கிடைத்தன. பாரதீய ஜனதாக் கட்சி நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது. தி.மு.கவின் முரசொலி மாறன், டி.ஆர். பாலு, ஆ. ராசா ஆகியோர் வாஜ்பேயி தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றனர்.

https://www.bbc.com/tamil/india-45309468

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொருத்தவரை இது சுடாலினுக்கு தேவை இல்லாத வேலை.. ? மிகப் பெரிய கட்சிகளான திராவிடர் கழகம் ( வீரமணி ) , திராவிட தமிழர் இயக்க பேரவை ( சு.ப. வீரபாண்டியன் ), மேலும் பலமான வாக்கு வங்கி உள்ள கொங்கிரஸ் , 
மதிமுக ஆகியவை கூட்டணியை விட்டு வெளியேறும் . இதனால்  திமுக வெற்றி பாதிக்கபடும் ..?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெல்லுமா?? மற்ற கட்சிகள் வெற்றி வாய்ப்புகள் இல்லையா?? மின்னம்பலம்.  திமுக உடையதா   ??🤣
    • யூன் 4ம் திக‌தி உண்மையான‌ புள்ளி விப‌ர‌ம் தெரியும்   இது ம‌க்க‌ளை குழ‌ப்ப‌ செய்ய‌ப் ப‌ட்ட‌ செய‌லாய் பார்க்கிறேன்...................இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ கால‌த்தில் காணொளி மூல‌ம் உண்மையை வெளியிட‌லாம்............................. ஏன் நேர‌ம் ஒதுக்கி எழுத்தின் மூல‌ம் புர‌ளிய‌ கில‌ப்பி விடுவான்😁....................................
    • இல்லை அண்ணா, இவர் கூறுவது போராடும் ஓர்மம், வழிமுறைகள் பற்றி. இவர் கூறுவது எனக்கு துளியும் உடன்பாடில்லை. நான் சொல்லுவது குரோதம் காரணமாக நமக்கு நாமே இலங்கை நாசாமாய் போய்விட்டது, என பொய்சொல்லி சந்தோசம் அடைந்து விட்டு, குப்புற படுப்பதை. நாளைக்கு எழும்பி பார்த்தால் இலங்கை அப்படியேதான் இருக்கும். பழைய படி டிப்ரெசன் ஆகி - மீண்டும் வந்து ஐயோ இலங்கையில் கொள்ளை, கொள்ளை என எழுதவேண்டும். இப்படியான நச்சு சுழற்சி அவர்களுக்கும் நல்லது இல்லை, சமூகத்துக்கும் நல்லது இல்லை.  
    • 3.3 மில்லியன் அல்ல.. 3.3 பில்லியன்.. அமெரிக்க டொலர்... சொலவாகியுள்ளது.. ஈரானின் வான்வழி ஏவு கலன்களை அழிக்க. 
    • கூலிக்கு மார் அடிக்கும்சிங்களவன் என்று சொல்லப்படாது...இது எங்களது சகோதரயாக்களின் தூர நோக்கு அரசியல் பார்வை(ராஜதந்திரம்.சாணக்கியம்) என்ற கோணத்தில் நீங்கள் பார்க்க வேணும் இன்று சிறிலங்கா அமேரிக்கா .இந்தியா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தினுள் வர போகின்றது இதை தடுத்து நிறுத்த ரஸ்யா,சீனா போன்ற  நாடுகளில் சகோதரயாக்கள் இராணுவ பயிற்சி எடுக்க வேணும்....இதில் மாற்று கருத்து ஒன்றுபட்ட சிறிலங்கா அம்பிகளுக்கு இருக்காது...அமெரிக்கா வந்து இறங்க ரஸ்யாவில் பயிற்சி பெற்ற தளபதிகள் எங்கன்ட லங்கா மாதாவை காப்பாற்றுவார்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.