Jump to content

உடனே ஒரு தற்காப்புக் கலை கத்துக்கணும் பாஸ்! ஏன்னு கேளுங்களேன்..!? 'களரி' விமர்சனம்


Recommended Posts

உடனே ஒரு தற்காப்புக் கலை கத்துக்கணும் பாஸ்! ஏன்னு கேளுங்களேன்..!? 'களரி' விமர்சனம்

 

பயந்த சுபாவம் கொண்ட ஒருவன் தன் தங்கச்சிக்கு நேர்ந்த கொடுமையால் வில்லனைப் பழிவாங்கும் மாடர்ன் பாசமலர் கதைதான் களரியின் ஒன்லைன்.

உடனே ஒரு தற்காப்புக் கலை கத்துக்கணும் பாஸ்! ஏன்னு கேளுங்களேன்..!? 'களரி' விமர்சனம்
 

த்தம், வெடி சத்தம் என்று எதற்கெடுத்தாலும் பயந்து மயங்கும் அப்பாவி மளிகைக் கடை ஓனராக முருகேசன் (கிருஷ்ணா). முருகேசனின் தங்கை தேன்மொழி (சம்யுக்தா மேனன்) அப்படியே அண்ணனுக்கு நேரெதிர். ரவுடிகளை செருப்பால் அடிக்கவும், தவறு செய்தவர்களை எதிர்த்துப்பேசவும் துளியும் தயங்கமாட்டார். குடிகார அப்பா மாரி (எம்.எஸ். பாஸ்கர்) வீட்டைக் கவனிக்காமல் வீட்டிலிருக்கும் பொருள்களையே விற்று குடிக்கும் அளவுக்குப் பொறுப்பில்லாமல் இருப்பதால், முருகேசனுக்கு குடும்பத்தில் டபுள் பொறுப்பு. தங்கையை நல்ல இடத்தில் கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டிருக்கும் முருகேசன், தன் தங்கச்சிக்கு நேரும் கொடுமை தாங்காமல், தன் சுயரூபத்தில் இருந்து விலகி எப்படி வில்லனை பழி தீர்த்தார் என்பதே களரியின் கதை.

களரி

பெரிய ஹீரோக்களைப் போல் மாஸ் பாடலுடன் என்ட்ரியாகும் கிருஷ்ணா, முதல் பாதியில் கோழையாகவும், இரண்டாம் பாதியில் ரவுடிகளை விரட்டி விரட்டி வெளுக்கும் சூப்பர் ஹீரோவாகவும் வெரைட்டி காட்டியிருக்கிறார். பார்லரில் வேலை பார்க்கும் மாடர்ன் பெண்ணாக 'நாயகி' வித்யா பிரதீப். கமர்ஷியல் படங்களில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் மிகப்பெரிய வேலைதான் வித்யாவுக்கும். அதாங்க, பாட்டுக்கும் ரொமான்ஸுக்கும் வந்துபோற ரோல்! கிருஷ்ணாவின் தங்கையாக சம்யுக்தா மேனன். மலையாளத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் 'தீ வண்டி' படத்தின் மூலம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இவர், இப்படத்திலும் தனது நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். தனது அண்ணனுக்கு ஏதாவது ஒன்று என்றால் நரம்பு புடைக்கும் அளவுக்கு வீர வசனம் பேசுவது, மற்ற நேரங்களில் இருக்கிற இடம் தெரியாத அளவுக்கு சாந்தமாக இருப்பது எனப் பக்கா குடும்பத்துப் பெண்ணாக வலம் வந்திருக்கிறார். கண்டிப்பாக சினிமாவில் பெரிய எதிர்காலம் சம்யுக்தாவுக்கு உண்டு. வெல்கம் டு கோலிவுட்!  

 

 

கேரளா கொச்சினுக்கு அருகேயுள்ள தமிழர்கள் வாழும் பகுதியான 'வாதுருத்தி' என்ற இடத்தில் படம் தொடங்குகிறது. படம் தொடங்கியதில் இருந்து புதிதாக எதாவது ஒரு காட்சி வந்துவிடாதா என்கிற நம் ஆர்வத்துக்கு கடைசி வரை இயக்குநர் கிரண் தீனி போடவில்லை. பல தமிழ்ப்படங்களில் பார்த்த ட்விஸ்டுகள், மிரட்டல் காட்சிகள் என முதல் பாதி முழுக்க இப்படியே நகர்கிறது. அப்போ இரண்டாவது பாதி ஓகேவானு கேட்காதீங்க; அதுவும் அதே மாதிரிதான் இருக்கிறது. 

 

 

களரி

ஒருசில படங்களில் கன்ட்டென்ட் சொதப்பலாக இருந்தாலும், மேக்கிங் அண்ட் டெக்னிக்கல் விஷயங்களில் பார்வையாளர்களைத் திருப்திப்படுத்திவிடுவார்கள். ஆனால், களரியில் எல்லாமே கதம் கதம்தான். டீ டம்ளரை க்ளோஸப்பில் காட்டுவது, ஒரு காட்சியிலிருந்து அடுத்த காட்சிக்கு போகும்போது ஸூம்-அவுட் செய்வது எனக் காந்தி காலத்து கத்திரியை வைத்து படத்தை நறுக்கியிருக்கிறார் எடிட்டர். வித்தியாசமாக காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு காட்சியை இரண்டாக வெட்டி அங்கொன்றும் இங்கொன்றுமாக சொருகியிருக்கிறார்கள். சம்பந்தமே இல்லாத சண்டைக்காட்சிகள் நடுநடுவே வந்து இன்னும் கடுப்பேற்றுகின்றன. கொஞ்சம் அப்டேட் ஆகுங்க பாஸ்! 

’அண்ணன், அண்ணன் என்று சொல்லிக்கிட்டு இருந்த இவளை அன்வர், அன்வர்னு சொல்ல வெச்சிருக்கான் இந்தப் பாவி’ என வசனங்கள் பலவும் சிரிப்பூட்டும் சீரியல் டைப்பிலேயே இருக்கிறது. கிருஷ்ணாவுக்கு இருப்பது அகோரோபோஃபியா என்று பயத்துக்குப் புதிய பெயர் சொல்லும்போது வித்தியாசமாக இருந்தாலும், அதன்பிறகு எந்தக் காட்சியிலும் அதைப் பயன்படுத்தவில்லை; வித்தியாசமாகவும் இல்லை. இப்படி தேமே என்று நகரும் படத்தின் க்ளைமாக்ஸ், இந்திய சினிமா கண்டிடாத அப்படி ஒரு பழிவாங்கும் காட்சி.  

 

 

'களரி' என்பது ஒரு தற்காப்புக் கலை, பயமும் ஒரு தற்காப்புக் கலைதான் என்று, இதை டைட்டிலாக வைத்திருப்பார்கள் போல. இதுபோன்ற படங்களில் இருந்து தப்பிக்க, முதலில் நாம ஒரு தற்காப்புக் கலையை கத்துக்கணும்!

https://cinema.vikatan.com/movie-review/135077-kalari-tamil-movie-review.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.