Jump to content

எகேலுவின் கதை


Recommended Posts

எகேலுவின் கதை - சிறுகதை

 

p26a_1534850357.jpg

ஜேர்மன்காரர் இரண்டு மாதம் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகுதான் சம்பவம் நடந்தது. சிறையில், வளர்ந்த தாடியை மழிக்கக் கூடாது என்பது அதிகாரிகள் தரும் கூடுதல் தண்டனை. ஆகவே, அவர் தாடியுடன் காணப்பட்டார். பெயர் ஃபிரெடரிக். ஏழை மக்களுக்கு மலிவு வீடுகள் கட்டித் தரும் தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்தார். ஜேர்மன்காரர்களுக்கு வாழ்க்கையில் இரண்டு குறிக்கோள்கள். ஒன்று, அன்றாடம் செலவுக்கணக்கு எழுதி வைப்பது. இரண்டு, பீர் குடிப்பது. இரண்டாவது குறிக்கோள்தான் அவருடைய சிறைவாசத்துக்குக் காரணம்.

p26b_1534850301.jpg

ஃபிரெடரிக் வேலைசெய்தது சோமாலிலாண்ட் எனும் நாட்டில். இது சோமாலியாவில் இருந்து தனியாகப் பிரிந்து, உலகத்தில் வேறு எந்த நாட்டாலும் அங்கீகரிக்கப்படாமல், சோமாலியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் இந்து சமுத்திரத்துக்கும் இடையே சிக்கிக்கொண்ட குட்டி நாடு. ஃபிரெடரிக்கின் மனைவி அமெரிக்கக்காரி, பெயர் மார்த்தா. சோமாலிலாண்டில் குடிவகை தடுக்கப்பட்டிருந்தது. ஆகவே, ஃபிரெடரிக் ரகசியமாக வீட்டிலேயே சோளத்திலிருந்து பீர் தயாரித்து இரவு நேரத்தில் அருந்துவார். ஒரு வருடமாக வாழ்க்கை நிம்மதியாகப் போனது. ஒருநாள் போலீஸ் எப்படியோ இதைக் கண்டுபிடித்து அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது.

ஃபிரெடரிக் தம்பதியின் வேலைக்காரி, அதிகாலை சந்தைக்குப் போனவள் அலறிக்கொண்டு திரும்பி வந்தாள். அழுதபடியே மார்த்தாவிடம் ஏதோ சொன்னாள். மார்த்தாவும் அவளுடன் சந்தைக்கு ஓடினாள். அங்கே வழக்கத்திலும் பார்க்க ஜனக்கூட்டம் சேர்ந்துவிட்டது. 100, 200 பேர் சுற்றிவர நின்றார்கள். மார்த்தா இடித்து முன்னேறி எட்டிப்பார்த்தார். அவர் இதயத்தை யாரோ பிய்த்துப் போட்டதுபோல இருந்தது. சாக்குத்துணியில் சுற்றி அப்போதுதான் பிறந்த சிசு ஒன்று வீதியிலே வீசப்பட்டிருந்தது. எறும்புகளும் ஈக்களும் மொய்த்தன. கண்கள் மூடியிருந்தாலும் குழந்தை முனகும் சத்தம் கேட்டது. மூன்று குட்டி விரல்கள் வெளியே நீட்டி இருந்தன. பார்ப்பவர்கள் மனதை உருக்கும் காட்சி அது. ஊர்த்தலைவர் கட்டளையிட்டிருந்த படியால், ஒருவராலும் சிசுவை அணுக முடியவில்லை.p26c_1534850378.jpg

மார்த்தாவிடம் டெலிபோன் வசதி கிடையாது. ரேடியோவில் கணவரைத் தொடர்புகொண்டார். நீண்ட தாடி இருந்ததால் ஊர்த் தலைவருக்கு அவரிடம் மரியாதை இருந்தது. ஆனால், சிசுவை ஒருவரும் தொடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஃபிரெடரிக்கின் மேலதிகாரிகள் ஜெனீவாவைத் தொடர்புகொண்டு, அவர்கள் மூலம் அரசாட்சியில் இருந்தவர்களுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். ரோட்டில் கிடந்த குழந்தையை மார்த்தா மீட்டபோது பின்மதியம் 3 மணி. ஊர்த்தலைவரும் மக்களும் அவரை வெறுப்புடன் பார்த்தார்கள். வீடு வரை தொடர்ந்து மிரட்டினார்கள். அவர் பொருட்படுத்தவில்லை; பயந்ததாகக் காட்டிக்கொள்ளவுமில்லை. வீடு வந்த பிறகுதான் குழந்தை ஆண் என்பதைக் கண்டுபிடித்தார். ‘எகேலு’ என்று பெயர் சூட்டினார். ஹாவாய் மொழியில் அதன் பொருள் மூன்று. கணவர் கேட்டதற்குச் சொன்னார், ``இன்று தேதி மூன்று. நேரமும் மூன்று. குழந்தை மூன்று விரல்களைக் காட்டி என்னை அழைத்தது.’’

குழந்தையின் சுவாசப்பை மெள்ள மெள்ள மூச்சுவிட தானாகவே கற்றுக்கொண்டது. எகேலு திடீரென விக்கி, ஒரு கணம் விழித்தான். அந்தக் கணத்தில் மார்த்தாவுக்கு அந்த விழிகள் நன்றி சொன்னதுபோலப் பட்டது. ஆரம்பத்தில் இருந்தே எகேலு வித்தியாசமானவன் என்ற நினைப்பு மார்த்தாவுக்கு இருந்தது. அவன் சிரிப்பது கிடையாது. பசிக்கு அழுவதும் இல்லை. பலவந்தமாகப் பாலை ஊட்டினால்தான் உண்டு. அவன் பார்வை, எதையும் பார்க்காத பார்வை. ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதுபோல இருக்கும். நடுச்சாமத்தில் சிலவேளை மார்த்தா விழித்துக்கொண்டு குழந்தையைப் பார்ப்பார். அது தூங்காமல் நெடுநேரம் கிடக்கும். அந்தக் கண்கள் எங்கோ தூரத்தில் நிலைத்திருக்கும்.

p26d_1534850412.jpg

தவழத் தொடங்கியதும் குழந்தை வீடு முழுக்க நகர்ந்து ஆராய்ந்தது. ஃபிரெடரிக்கிடம் நிறைய புத்தகங்கள் இருந்தன. எகேலு, புத்தகங்களை ஒவ்வொன்றாக இழுத்துப் பார்ப்பான். கிழிக்காமல், கசக்காமல் பக்குவமாக ஒவ்வொரு பக்கமாகத் திருப்புவான். விளையாட்டுச் சாமான்கள் அவனுக்குத் தேவையேயில்லை. ஒரு புத்தகத்தைக் கொடுத்தால் போதும். அதனுடனேயே அன்று முழுவதும் கழிப்பான்.

ஒன்றரை வயது வரை அவன் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசியது கிடையாது. சோமாலிலாண்டின் தலைநகரமான ஹர்கீசாவுக்குச் சென்று அங்கே அவனை மருத்துவரிடம் காட்டலாமா எனக் கணவனும் மனைவியும் ஆலோசித்தார்கள். ஆனால், அதற்கு அவசியம் இருக்கவில்லை. ஒருநாள் இரவு, வழக்கம்போல மூவரும் மேசையில் அமர்ந்து உணவருந்தினார்கள். உயரமான நாற்காலியில் உட்கார்ந்த எகேலு, கரண்டியால் உணவை எடுத்து வாயில் வைத்தான். அவன் கண்கள் மட்டும் எங்கோ தூரத்தில் சஞ்சரித்தன. ஃபிரெடரிக் நெஞ்சுவரை வளர்ந்துவிட்ட தாடியைத் தன் மேல் சட்டைக்குள் நுழைத்துவிட்டு, மாட்டிறைச்சியை வெட்டி வாயில் வைத்தார். பிறகு வாழைப்பழத்தைக் கடித்துக்கொண்டு மேசையில் தாளம்போட்டு மகனுக்கு விளையாட்டு காட்டினார். ``நிறுத்து. நான் சிந்திக்கிறேன் அல்லவா?’’ என்று சுத்தமான ஜேர்மன் மொழியில் எகேலு வாயைத் திறந்து பேசினான். ஃபிரெடரிக்கின் கை அரை அடி உயரத்தில் மேசைக்குமேல் அப்படியே நின்றது. மார்த்தா, தன்  வாயில் வைத்த உணவை விழுங்கவில்லை. ``என்ன சொன்னாய் மகனே?’’ என்று அதிர்ச்சி நீங்காமல் ஃபிரெடரிக் கேட்டார். மறுபடியும் எகேலு அதையே சொன்னான்.

அன்று மார்த்தாவும் ஃபிரெடரிக்கும் நீண்ட நேரம் எகேலு பற்றி விவாதித்தார்கள். மேற்கொண்டு என்ன செய்வது என்று மட்டும் அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. அடுத்தடுத்து வந்த நாளில் ஜேர்மன் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் அவன் தடங்கல் இல்லாமல் பேசுவது தெரியவந்தது. மற்ற குழந்தைகள்போல வார்த்தை வார்த்தையாக அவன் பேசவில்லை. வசனங்களை இலக்கணச் சுத்தமாக அமைத்து நிதானமாகப் பேசினான். இவன் அபூர்வமான குழந்தை என்று உணர்ந்தபிறகு, ஃபிரெடரிக் இன்னும் அதிக கவனம் எடுத்தார். எழுத்துகளையும் அவற்றின் உச்சரிப்பையும் சொல்லிக்கொடுத்தபோது முதல் தடவையாக எகேலுவின் முகத்தில் மகிழ்ச்சி விளையாடியது. புத்தகப் பக்கங்களை சும்மா திருப்புவதுபோய், எழுத்துக்கூட்டித் தானாகவே அவற்றைப் படிக்க ஆரம்பித்தான்.

p26e_1534850436.jpgஅவனுக்குப் பேச்சு வந்தாலும் அவன் தொடர்ந்து பேசுவது கிடையாது. நீண்ட மௌனம்தான். இன்னது செய்வான், இன்னது செய்ய மாட்டான் என்றும் சொல்ல முடியாது. தினம் தினம் ஆச்சர்யப்படுத்தினான். ஒருநாள் மதியம் அகாசியா மரத்தின் கீழ் நின்றபோது ``அம்மா’’ என்றான். மார்த்தாவுக்கு திக்கென்றது. ``புறப்படு. மழையைப் பார்க்கப் போவோம்.’’ ``மழையா, அது என்ன?’’ என்றார் மார்த்தா.

``அதற்கு, உருவம் கிடையாது; நிறம் கிடையாது; எல்லை கிடையாது; திசை கிடையாது. தொடலாம். ஆனால், பிடிக்க முடியாது. மிருதுவானதும் அழகானதும். ஆகாயத்தின் மணம் அதில் இருக்கும்.’’ ``அப்படியா?’’ என்றார் மார்த்தா. அவரால் வேறு பதில் தயாரிக்க முடியவில்லை.

இன்னொரு நாள் ``அம்மா’’ என்றான். மார்த்தா அதிர்ச்சியை ஏற்பதற்குத் தயாராக முகத்தை மாற்றிக்கொண்டு நின்றார். ``ஒருமுறை நீ எனக்கு சூடான பால் தந்தாய். எனக்கு வாய் வெந்துவிட்டது. நான் கதறிக் கதறி அழுதேன்’’ என்றான்.

``ஆமாம். தவறுதலாய்ச் செய்துவிட்டேன். உனக்கு அப்போது மூன்று மாதம். எப்படித் தெரியும்?’’ என்றார். ``எனக்கு ஞாபகம் இருக்கு. ஆனால், அப்போது என்னால் பேச முடியவில்லை. நீ பாலைப் புகட்ட வரும்போது நான் தலையை அப்படியும் இப்படியும் ஆட்டுவது அதனால்தான். எங்கே சூடான பாலைத் தந்துவிடுவாயோ என்ற பயம்தான்.’’ ``மன்னித்துவிடு எகேலு’’ என்றாள் மார்த்தா. அவன் பார்வை, பல மைல்கள் தூரத்துக்குப் போய்விட்டது.

ஒருநாள் எகேலுவை மனநல மருத்துவரிடம் அழைத்துப் போனார்கள். அவர் சோதனைகள் செய்து முடித்த பிறகு கூறினார், ``இவன் அபூர்வமான குழந்தை மேதை. அதுதான் இவன் மனம் எப்போதும் ஆழ்ந்த சிந்தனையின் வசம் இருக்கிறது. அதைக் கெடுக்கும்விதமாக ஏதாவது செய்யவேண்டாம். நீங்கள் ஒன்றுமே கற்பிக்கத் தேவையில்லை. அவனாகவே கற்றுக்கொள்வான். வசதிகளை மட்டும் செய்துகொடுங்கள். இசைமேதை மோஸார்ட் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் சிறுவனாக இருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. அந்தக் காலத்தில் பிரபல இசை மேதையாக இருந்தவர் பெயர் கிரிகோரியோ. அவர் அபூர்வமான இசைக்கோவை ஒன்று தயாரித்து அதை போப்பாண்டவர் முன்னிலையில் இசைத்துக்காட்டினார். அந்தக் கூட்டத்தில் சிறுவன் மோஸார்ட்டும் இருந்தான். அன்று வீட்டுக்குத் திரும்பிய மோஸார்ட்டால் இரவு தூங்கவே முடியவில்லை. அவன் கேட்ட இசை காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்த இசையின் குறிப்புகளை ஞாபகத்திலிருந்து அப்படியே மீட்டு இரவிரவாக எழுதினான். காலை ஆனபோது அந்த அற்புதமான இசைக்கோவை முழுவதையும் திரும்பவும் படைத்துவிட்டான். உங்கள் மகனும் பெரிய மேதை. அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அவன் வழியிலேயே விடுங்கள்’’ என்றார்.

ஒவ்வொரு நாளையும் எகேலு புதிய நாளாக மாற்றினான். ஒரு விடுமுறை நாள் வீட்டுத் தோட்டத்தில் உட்கார்ந்து மூவரும் வேடிக்கை பார்த்தார்கள். பெற்றோரின் சம்பாஷணையில் அவன் கலந்துகொள்வதில்லை. வழக்கம்போல புத்தகம் ஒன்றின் பக்கங்களைத் திருப்பியபடி இருந்தான். வீட்டிலே உள்ள புத்தகங்கள் முடிந்துவிட்டதால், வெளிநாட்டிலிருந்து நூல்களை வரவழைத்துக் கொடுத்தார் ஃபிரெடரிக். எதைப் படித்தாலும் அதை அவன் மறப்பதில்லை. இன்ன புத்தகம் வேண்டும் என்று அவன் கேட்பதுமில்லை. அன்றும் அப்படித்தான் ஏதோ ஒரு புத்தகத்தைக் கையில் வைத்து, பக்கம் பக்கமாகப் புரட்டிக்கொண்டிருந்தான்.

மஃரிப் தொழுகைக்கான அழைப்பு, காற்றில் வந்தது. ஓர் அம்பு எய்தால் அது விழும் இடம் தெரியவேண்டும். அதுதான் மஃரிப் தொழுகைக்கான நேரம். பகல் முடியவில்லை, இரவு தொடங்கவில்லை. பிரமாண்டமான பறவை ஒன்று சத்தமிட்டபடி மேலே பறந்துபோனது. எகேலு ஒரு கணம் நிமிர்ந்து பார்த்துவிட்டு ``அது கோரிபஸ்டார்ட் பறவை. எங்கேயோ பக்கத்தில் நிலத்திலே குழிபறித்து முட்டை இடப்போகிறது. உலகிலேயே அதிக எடைகொண்ட பறவை இதுதான்’’ என்றான். இத்தனைக்கும் அவன் அந்தப் பறவையை இதற்கு முன்னர் கண்டது கிடையாது. எல்லாம் எங்கேயோ புத்தகத்தில் படித்தவைதான்.

அடுத்து நடந்த சம்பவத்துக்குப் பிறகுதான் நைரோபிக்கு மாற்றல் கேட்க வேண்டும் என்ற எண்ணம் தம்பதிக்குத் தோன்றியது. வருமானவரிக் கணக்கு சம்பந்தமாக ஃபிரெடரிக் ஏதோ எழுதியவர் பாதியில் மார்த்தாவை அழைத்து ``எங்கள் கூட்டு வருமானத்தில் 23 சதவிகிதம் எவ்வளவு?’’ என்று கேட்டார். மார்த்தா கேல்குலேட்டரைத் தேடியபோது ஏதோ சிந்தனையிலிருந்து விடுபட்ட எகேலு, சரியான விடையைச் சொன்னான். அவனுக்கு 1, 2, 3 என எண்களை யாரும் கற்றுக்கொடுத்தது கிடையாது. தானாகவே எங்கேயோ படித்து, கணித அறிவை வளர்த்திருந்தான். ‘எப்படித் தெரியும்?’ என்றெல்லாம் கேட்க முடியாது. ‘எப்படியோ தெரியும்’ என்றுதான் பதில் வரும்.

அவர்கள் மாற்றல் கேட்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ‘ஒரு மாதம் முன்னர் நைரோபியில் அமெரிக்கத் தூதரகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பலர் பலியாகினர். சில அமெரிக்கர்கள் வீடு திரும்பிவிட்டார்கள். அங்கே தொண்டு நிறுவனத்துக்கு ஆள்கள் தேவை. உங்களுக்கு அங்கே போகச் சம்மதமா?’ என மேலதிகாரி எழுதிய கடிதம் வந்தது. உடனேயே சம்மதம் தெரிவித்து ஃபிரெடரிக் எழுதினார். நைரோபி வந்ததும் முதல் வேலையாக தாடியை மழித்தார். எகேலுவுக்குக்கூட அவரை அடையாளம் தெரியவில்லை. அவனுடைய மூன்றாவது பிறந்த நாளைக் கொண்டாடிய சில நாளில் பிரபலமான மனநல மருத்துவர் ஒருவரைப் போய்ப் பார்த்தார்கள். சோமாலிலாண்ட் மருத்துவரைப்போலவே அவரும் ``ஒன்றுமே செய்யவேண்டாம். பையன் அவன் வழியிலேயே வளரட்டும். அவனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு’’ என்று நம்பிக்கையூட்டினார்.p26f_1534850455.jpg

மருத்துவமனையின் நான்காவது மாடியிலிருந்து கீழே இறங்கி வரவேற்பறையைத் தாண்டியபோது பெரும்சத்தம் கேட்டது. அந்தக் காட்சியைக் கண்டு மூவரும் செய்வதறியாது உறைந்துபோனார்கள். தரையிலே ஒரு பெண் உருண்டுகொண்டிருந்தாள். நீள முரட்டுத் துணியால் உடம்பைச் சுற்றியிருந்ததால் அவள் ஒரு சோமாலியப் பெண் என யூகிக்க முடிந்தது. அவள் ஏன் கத்துகிறாள், என்ன மொழியில் பிதற்றுகிறாள் என்பது ஒருவருக்கும் புரியவில்லை. மருத்துவமனைக் காவலாளி,  ``சத்தமிட வேண்டாம்’’ என அவளை அதட்டினான். அவளுடைய ஓலம், ஆஸ்பத்திரியை நிறைத்தது.

மார்த்தாவின் கையை உதறிவிட்டு, அந்தப் பெண்ணிடம் ஓடினான் எகேலு. அவளிடம் ஏதோ கேட்டான். அவள் பதில் சொன்னாள். மீண்டும் ஏதோ கேட்டான். அவர்கள் சம்பாஷணை தொடர்ந்தது. காவலாளி அதைப் பார்த்துத் திகைத்துப் போய் நின்றான். எகேலு வரவேற்பறைப் பெண்ணிடம் ஆங்கிலத்தில் அந்தப் பெண் சொன்னதை விவரமாகச் சொன்னான். ``அந்த அம்மாவின் கணவர் ரோட்டிலே வலியில் துடித்து மயங்கிக் கிடக்கிறார். உடனே உதவி கிடைக்கா விட்டால் அவர் உயிர் போய்விடும். அவசர கவனிப்பு தேவை.’’

அடுத்த நிமிடம் ஆஸ்பத்திரி பரபரவென இயங்கியது. மனிதரை உள்ளே கொண்டுவந்து அவசர சிகிச்சை அளித்தார்கள். மருத்துவர் சொன்னார் ``இன்னும் ஒரு நிமிடம் தாமதித்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கவே முடியாது.’’ அடுத்த நாள் பத்திரிகைகள், அந்தச் சம்பவம் பற்றி எழுதின. சில பத்திரிகையாளர்களும், டிவி சேனல்களும் எகேலுவைப் பேட்டிகண்டன. எகேலு ஜேர்மன் மொழியிலும் ஆங்கிலத்திலும் ஸ்வாஹிலியிலும் எந்தவிதத் தயக்கமுமின்றிப் பேட்டி அளித்தான். ஒரே நாளில் எகேலு நாட்டில் மிகப் பிரலமாகிவிட்டான்.

எகேலுவுக்குப் பள்ளிக்கூடம் தேவையில்லை, அவன் வீட்டிலேயே படிக்கலாம் என்பதில் பிடிவாதமாக இருந்தார் மார்த்தா. அவன் புத்தகங்களைப் படித்திருந்தாலும் அவனுக்கு எழுத்து வராது. தன் பெயரைக்கூட எழுதத் தெரியாது. வீட்டிலேயே எழுதப் படிப்பிக்கலாம் என மார்த்தா நினைத்தார். மனநல மருத்துவர் வேறு மாதிரி அபிப்பிராயப்பட்டார். ``அவன் சமுதாயத்தில் வளர வேண்டியவன். பள்ளிக்கூடத்தில் அவன் புதிதாக ஒன்றையுமே கற்கப்போவதில்லை. ஏற்கெனவே கற்றுக்கொண்டதைத்தான் கற்பிப்பார்கள். ஆனாலும் வகுப்பிலே மற்ற மாணவர்களோடு பழகுவது அவனுக்கு உலகத்தைக் கற்றுக்கொடுக்கும்’’ என்றார்.

மார்த்தா மழலையர் பள்ளிக்கூடத்தை நோக்கி எகேலுவுடன் நடந்தார். விண்ணப்பப்படிவத்தை ஏற்கெனவே நிரப்பியிருந்தார். அனுமதி பொறுப்பாளர், எகேலுவைப் பற்றிப் பத்திரிகைகளில் படித்திருந்தார். ``வருக, வருக’’ என்று வரவேற்றார். ``எகேலு என்றால் பொருள் மூன்று அல்லவா? இப்போது உனக்கு மூன்று வயது நடக்கிறது. அப்ப சரி. நான்கு வயது நடக்கும்போது உன் பெயரை ‘நான்கு’ என்று மாற்றுவாயா?’’ ஒரு நகைச்சுவைக்காகத்தான் அவர் அப்படிச் சொன்னார். மார்த்தாவுக்கு எரிச்சலாக வந்தது, ``இதுவா பள்ளிக்கூடம்? குழந்தையிடம் ஒரு ஆசிரியர் இப்படியா பேசுவது?’’ நிலத்தைப் பார்த்துக்கொண்டு எகேலு பேசினான், ``உங்களுடைய பெயர் பாட்ரு என்று வெளியே கதவில் எழுதியிருக்கிறது. பாட்ரு என்பது ஸ்வாஹிலி அல்ல, அரபு வார்த்தை. பூரணச்சந்திரன் என்று பொருள். உங்கள் முகம் சந்திரன்போலவும் இல்லை. பிரகாசமும் கிடையாது. வெறும் இருட்டுதான்’’ என்றான். யாரோ ‘கெக்’ எனச் சிரித்தார்கள். எகேலு கையைப் பறித்துக்கொண்டு வெளியே ஓட, மார்த்தா அவனைத் தொடர்ந்தார்.

வீடு திரும்பும் வழியில் எகேலு பேசினான். ``அம்மா, சாக்கிலே சுற்றி வீதியிலே வீசப்பட்டு கவனிப்பாரின்றிக் கிடந்த என்னை எடுத்து நீ வளர்த்தாய்.’’

``உனக்கு அது தெரியுமா?’’

``தெரியும் அம்மா. முழுக் கிராமமும் என்னைக் கொல்ல நினைத்தது. நீ தன்னந்தனியாக எதிர்த்து நின்று காப்பாற்றினாய். நீ எனக்குக் கொடுத்த அந்தப் பெரிய அன்பை, என்னால் திருப்பித் தரவே முடியாது. நான் எத்தனை ஆயிரம் புத்தகம் படித்து அறிவைப் பெருக்கினாலும் என்ன பிரயோஜனம்? அன்புக்கு நிகர் ஒன்றுமே கிடையாது. இந்த உலகத்தில் ஆகப்பெரியது அன்புதான். அது உன்னிடம் இருக்கிறது’’ என்றான்.

``மகனே, நாளைக்கு நீ பெரிய விஞ்ஞானி ஆகலாம், தத்துவவாதி ஆகலாம், படைப்பாளி ஆகலாம். அதெல்லாம் பெரிதல்ல. ஓர் ஏழை சோமாலிப் பெண்ணின் கணவரை, சாவிலிருந்து காப்பாற்றினாய். அதுதான் பெரிது. அந்த நேயம் உன்னிடம் இருக்கிறதே. நான் பெருமைப்படுகிறேன்’’ என்றார் மார்த்தா.

உருவம் இல்லாத, நிறம் இல்லாத, எல்லை இல்லாத, திசை இல்லாத, தொட மிருதுவான, ஆனால் பிடிக்க முடியாத ஆகாய மணம்கொண்ட மழையை,  எகேலுவின் கண்கள் முதன்முறையாகக் கண்டன.

அ.முத்துலிங்கம் - ஓவியங்கள்: ஸ்யாம் 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.