Jump to content

காணிகள் விடுவிப்பும் இராணுவ நிகழ்ச்சி நிரலும்


Recommended Posts

காணிகள் விடுவிப்பும் இராணுவ நிகழ்ச்சி நிரலும்
கே. சஞ்சயன் /

பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்காக, சில இராணுவ முகாம்களை மூடுவதற்கும், சில இராணுவ முகாம்களின் பருமனைக் குறைப்பதற்கும், இராணுவத் தளபதி எடுத்துள்ள நடவடிக்கை முட்டாள்த் தனமானது என்று விமர்சித்திருக்கிறார் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.  

முன்னர் சரத் பொன்சேகாவின் தீவிர விசுவாசியாக இருந்தவர், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, அதனால், மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தால் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டவர்.   
வெளிநாட்டுக்குத் தப்பியோடி, தலைமறைவாக இருந்துவிட்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அடுத்த நாளே, அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்து இறங்கியிருந்தார். அந்தளவுக்கு, இருவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகம்.  ஆனால், லெப்.ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், இவர்களுக்கிடையிலான உறவுகள் நன்றாக இல்லை.  

ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டு விடயத்தில், இருவரும் முரண்பட்டுக் கொண்டனர். வேறு பல சந்தர்ப்பங்களிலும், முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டு வந்தனர். இராணுவத்துக்குள் சரத் பொன்சேகா தலையீடு செய்கிறார். தனக்குத் தெரியாமல் அதிகாரிகளுடன் பேசுகிறார், இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் பற்றிப் பேசுகிறார் என்று, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், இராணுவத் தளபதி முறையீடு செய்திருந்தார் என்றொரு தகவலும் வெளியானது.  

இப்போது அந்த மோதல், இராணுவத் தளபதியின் முடிவை முட்டாள்த்தனமானது என்று சரத் பொன்சேகா விமர்சிக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறது.  இந்த விமர்சனம், ஓர் இராணுவ ரீதியான கண்ணோட்டத்துக்கும் அப்பாற்பட்ட ஒன்றாகவே தெரிகிறது.  

இராணுவத் தளபதி, அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணிந்து செயற்படுகிறார் என்ற தொனியில் தான், சரத் பொன்சேகாவின் கருத்துகள் அமைந்திருக்கின்றன. ஒருவகையில் அது, உண்மையானதும் கூட.  
தற்போதைய அரசாங்கம், நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு - முற்றிலுமாக இசைந்து செயற்படாவிடினும், சில குறிப்பிட்ட விடயங்களில், அவ்வாறு நடந்து கொள்ள முனைகிறது.  அவ்வாறான நல்லிணக்கச் செயற்பாடுகளுடன், இராணுவத்தை இணைந்து செயற்பட வைப்பதில், தற்போதைய இராணுவத் தளபதி அதிகளவு ஈடுபாடு காட்டி வருகிறார். அரசாங்கத்தின் அந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைக்கிறார்.  

பொதுவாக, பெரும்பாலான இராணுவத் தளபதிகள், அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைப்பவர்களாகத் தான் இருந்து வந்திருக்கிறார்கள். அவ்வாறு ஒத்துழைக்க மறுத்தவர்கள், அந்த அரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.  உதாரணத்துக்குச் சொல்லப்போனால், சரத் பொன்சேகாவுக்கும் கூட அதே நிலை, 2005இல் ஏற்பட்டது.   

சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகும் தகுதியில் இருந்தபோது, அவர் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துழைக்கமாட்டார் என்பதாலேயே, ஜெனரல் சாந்த கோட்டேகொடவுக்குப் பதவி நீடிப்பு வழங்கி, இவரைக் கழற்றிவிட, சந்திரிகா அரசாங்கம் தயாராக இருந்தது.  

அந்தச் சமயத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தான், ஓய்வுபெறும் நிலையில் இருந்த சரத் பொன்சேகாவுக்கு இராணுவத் தளபதியாகும் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தது.  

அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்காத புகழ்பெற்ற இராணுவத் தளபதிகள் பலரால், இராணுவத் தளபதியாகும் வாய்ப்பைப் பெற முடியாமல் போனது வரலாறு. மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, மேஜர் ஜெனரல் லக்கி அல்கம போன்றவர்கள் அதற்கு உதாரணம்.  சரத் பொன்சேகாவை விடவும், போர்த் திறமையை வெளிப்படுத்தியவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா. ஆனால், அவரையும் கூட அரசியல் நிகழ்ச்சி நிரல் தான் ஓரம் கட்டியது. அதனால், பெரும்பாலான தளபதிகள், அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைத்தே வந்துள்ளனர். எனினும், அதற்கு ஒத்துழைக்காத சில சம்பவங்கள் நடந்ததையும் மறந்து விட முடியாது.  

ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், தாம் யாழ்ப்பாணத்தில் கட்டளை அதிகாரியாக இருந்த போது, உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் சில இடங்களை விட்டு விலகுமாறு, அரசாங்கம் அழுத்தம் கொடுத்தது என்றும் ஆனால், அதற்குத் தாம் மறுத்து விட்டதாகவும் சரத் பொன்சேகா கூறியிருக்கிறார். அது உண்மை.   

2002ஆம் ஆண்டு, போர்நிறுத்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகள் மற்றும் இராணுவத் தளபதிகள் மட்டக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பிராந்திய மட்டத்திலான அந்தக் கூட்டங்களில், பாதுகாப்பு நெருக்கடிகளைக் குறைப்பது பற்றி ஆராயப்பட்டன.  

அதன் தொடர்ச்சியாகத் தான், உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகள் சிலவற்றை விடுவிக்க வேண்டும் என்று, விடுதலைப் புலிகள் வலியுறுத்தினர். அதனை அப்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் ஏற்றுக்கொண்டது. ஆனால், யாழ். குடாநாட்டுக்கான தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா அதற்கு இணங்கவில்லை.   

சரத் பொன்சேகாவின் அந்த இறுக்கமான நிலைப்பாடு தான், பிராந்திய மட்டத்திலான பாதுகாப்புக் கூட்டங்கள் தடைப்பட்டுப் போகவும், அரசாங்கத்தின் இராணுவ நிகழ்ச்சி நிரல் மீது, விடுதலைப் புலிகள் சந்தேகம் கொள்ளவும் காரணமாகியது.  

அதுபோன்று, நாகர்கோவில் பகுதி முன்னரங்க நிலையிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதுபற்றி “நந்திக்கடலுக்கான பாதை“ நூலில், மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன குறிப்பிட்டிருக்கிறார். அவர் அப்போது, நாகர்கோவிலுக்குப் பொறுப்பான 55 ஆவது டிவிசனின் ஒரு பிரிகேட்டுக்குப் பொறுப்பாக இருந்தார்.   

நாகர்கோவில் முன்னரங்க நிலையில் ஒரு பகுதியில், இராணுவம் அமைத்திருந்த புதிய பாதுகாப்பு நிலையை விலக்குமாறு, கண்காணிப்புக் குழு மூலம் புலிகள் கோரினர். அரசாங்கமும் அதற்குத் தயாராகவே இருந்தது. ஆனால், அப்போது கேணல் நிலையில் இருந்த கமல் குணரத்ன அதனை நிராகரித்து விட்டார்.  இதுவும் இருதரப்பு முரண்பாடுகள் வலுப்பதற்குக் காரணமாக இருந்தது.  

இப்போதும் கூட, அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் சிலர் இருக்கின்றனர். தற்போதைய அரசாங்கம், நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலணியை உருவாக்கிய போது. அதில் இராணுவ அதிகாரிகளுக்கும் இடமளிக்க வேண்டும் என்று முரண்டு பிடித்து, வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீரவுடன் வாக்குவாதம் செய்திருந்தார் யாழ்ப்பாணத்தில், 52ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சாஜி கால்லகே.  

உடனடியாக அவர் இராணுவத் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டு, முக்கிய பொறுப்புகள் அளிக்கப்படாமல் வைத்திருக்கப்படுகிறார். இந்த மாத இறுதியுடன் அவர், ஓய்வுபெறவும் போகிறார்.  

விதிவிலக்காகச் சில அதிகாரிகள் இருந்திருந்தாலும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துழைப்பது என்பது, இராணுவத் தளபதிகளின் பொதுவான இயல்பாகத் தான் இருந்து வந்திருக்கிறது.  

1989ஆம் ஆண்டு, இந்தியப்படைகளுக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு, பிரேமதாச அரசாங்கம் ஆயுதங்களை வழங்க முடிவு செய்தது. அந்த ஆயுதங்களைப் புலிகளிடம் கொண்டு போய் சேர்த்ததும் இராணுவ அதிகாரிகள் தான். அந்த ஆயுதங்கள், தமக்கு எதிராகவும் திரும்பும் என்று, பல இராணுவ அதிகாரிகள் சந்தேகம் கொண்டிருந்தனர். ஆனாலும். அவர்கள் அப்போது பிரேமதாச அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலை எதிர்க்கவில்லை. அதனை மௌனமாக அங்கிகரித்திருந்தனர்.  

அப்போதிருந்த சூழலும் இப்போதுள்ள சூழலும் ஒன்றல்ல. சரத் பொன்சேகாவும் கமல் குணரத்னவும், அரசாங்கத்துடன் முரண்டுபிடித்த காலம், போர் நிறுத்த காலம். இது போர் முடிந்த காலம்.  
பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்காக, இராணுவ முகாம்களை சுருக்குதல் முட்டாள்த்தனமானது என்று, போர் முடிந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் சரத் பொன்சேகா கூறுகிறார்.  போர் முடிந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னரும், அவரது போர்க்கால மனோநிலை மாறவில்லை என்பதைத் தான் இது காட்டுகிறது.  

வடக்கில் இன்னமும் 16,115 ஏக்கர் காணிகளும், கிழக்கில், 3,185 ஏக்கர் காணிகளும், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளன என்பதை, இராணுவத் தளபதி உறுதி செய்திருக்கிறார்.  

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் காணிகளில் 2,621 ஏக்கர் காணிகள் தனியாருக்குச் சொந்தமானவை. இந்தக் காணிகளை விடுவிப்பதற்குத் தான், முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இதனை, சரத் பொன்சேகா கடுமையாக எதிர்த்திருக்கிறார்.  

இராணுவம் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது முக்கியமானது தான். சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு முன்னுரிமை என்பது, ஒரு தலைப்பட்சமானது. அது யாருக்காக பாதுகாப்பு என்பதைக் கவனத்தில் கொள்ளாமல் கண்மூடித்தனமான பாதுகாப்புக் கொள்கையை வெளிப்படுத்துகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை, வெற்றி கொண்ட தளபதியாக சரத் பொன்சேகா இருந்தாலும், அவர் போருக்கு மாத்திரமே ஒத்துழைக்கக் கூடிய தளபதியாக இருந்தார் என்பது, இதன் மூலம் நிரூபணமாகிறது.  

2002 இல், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் முரண்பட்டதை மாத்திரம் வைத்துக் கொண்டு, இந்த முடிவுக்கு வர முடியாது. போர் முடிந்த பின்னர், மஹிந்த ராஜபக்‌ஷவும் கூட, இராணுவத் தளபதி பதவியில் இருந்து அவரை நீக்கி, கூட்டுப் படைகளின் தளபதியாக நியமித்தார். மஹிந்த அரசாங்கத்தின், அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அவர் ஒத்துழைக்கமாட்டார் என்பதால் தான், அந்த முடிவு எடுக்கப்பட்டது. அதனால் தான், அவர் மஹிந்த அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொண்டு வெளியேறவும் நேரிட்டது.  

அதேபோன்றதொரு முடிவைத் தான், தற்போதைய இராணுவத் தளபதியும் எடுக்க வேண்டும் என்று, சரத் பொன்சேகா ஆசைப்படுகிறார். அரசியல்வாதிகளுக்கு, இராணுவத்தை நிலைப்படுத்தும் விடயங்களில் போதிய அறிவில்லை என்று சாடும் அவரால், போர்க்காலத்திலும், சமாதான காலத்திலும் எவ்வாறு வேறுபட்ட அணுகுமுறையுடன் செயற்படுவது என்று, சரியாகப் புரிந்து கொள்ள முடியாதிருப்பது ஆச்சரியம்.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/காணிகள்-விடுவிப்பும்-இராணுவ-நிகழ்ச்சி-நிரலும்/91-220691

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.