Jump to content

லக்ஷ்மி சினிமா விமர்சனம்


Recommended Posts

லக்ஷ்மி சினிமா விமர்சனம்

 

 
Master.jpg

 

 
விமர்சகர் மதிப்பீடு 4 / 5
வாசகரின் சராசரி மதிப்பீடு4 / 5
 
நடிகர்கள் பிரபுதேவா,ஐஸ்வர்யா ராஜேஷ்,திவ்யா பாண்டே,கருணாகரன்
இயக்கம் ஏ எல் விஜய்
சினிமா வகை Drama
 
 
 
 
கரு: நடனம் ஆடி 'இந்தியாவின் பெருமை' என்ற பட்டம் பெறும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற துடிக்கும் 10 வயது மகளின் நடனப் போராட்டமே இப்படக்கரு

கதை: இந்த படத்தின் மெயின் கேரக்டர் லக்ஷமி. ஸ்கூலுக்கு செல்லும் 10 வயது சிறுமி. இந்த பொண்ணுக்கு நடனம் தான் எல்லாமே. இந்தியாவின் பெருமை என்ற பட்டம் வழங்கும் நடனப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவதே லக்ஷமியின் கனவு. ஆனால், லக்ஷமியின் தாய்க்கோ நடனமே பிடிக்காது. எனவே, லக்ஷமி தனது தாய்க்கு தெரியாமல் நடனப்பயிற்சி பள்ளி ஒன்றில் சேர்ந்து நடனம் கற்கிறாள். சென்னை டான்ஸ் அகாடமி நடத்தும் நடனப்போட்டியில் பங்கேற்கிறார். ஆனால், அதில்தோல்வியடைகிறார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருக்கிறார்.

இந்த சமயத்தில் தான் பிரபுதேவா கதைக்குள் வருகிறார். இவர் லக்ஷமியினுடைய நடனக்குழுவுக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்கும் படி கேட்கிறார். பின்னர், அவரே லக்ஷமியின் நடன ஆர்வத்தைப் புரிந்து கொண்டு பயிற்சியாளராக மாறுகிறார். தொடர்ந்து, கடும் பயிற்சிக்குப் பின் பிரைட் ஆப் இந்தியா போட்டிக்கு லக்ஷமி செல்கிறார். அங்கு லக்ஷ்மி வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பதே படத்தின் கதை.

ஏ எல் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, திவ்யா பாண்டே, ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வெளிவந்துள்ள படம் லக்ஷ்மி. இந்த படத்திற்கு சாம். சிஎஸ் இசையமைத்துள்ளார். ஏபிசிடி திரைப்படத்துக்குப் பிறகு அதனினுடைய இரண்டாம் பாகம் என்று சொல்வது போல் லக்ஷ்மி திரைப்படம் நடனங்களால் மெருகேற்றப்பட்டுள்ளது.

https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/prabhu-deva-lakshmi-tamil-movie-review-rating/moviereview/65524116.cms

Link to comment
Share on other sites

லக்ஷ்மி திரை விமர்சனம்

nலக்ஷ்மி திரை விமர்சனம்

 
 

 

 

 

 

 

 

 

லக்ஷ்மி திரை விமர்சனம்

 

பிரபுதேவா நீண்ட இடைவேளைக்கு பிறகு தேவி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, தற்போது அதே படத்தின் இயக்குனர் விஜய்யுடன் மீண்டும் பிரபுதேவா லக்ஷ்மி படத்தின் மூலம் இணைந்துள்ளார். பிரபுதேவா என்றாலே நடனம் தான், அந்த நடனத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ள லக்ஷ்மி ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

லக்ஷ்மி நின்றால் நடனம், நடந்தால் நடனம் என நடனத்தை மட்டுமே தன் வாழ்க்கையாக கொண்டு இருக்கின்றார். ஆனால், அவருடைய அம்மா ஐஸ்வர்யா ராஜேஷிற்கு மகள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பது விருப்பம்.

நடனம் என்றாலே வெறுக்கின்றார், அந்த நேரத்தில் யதார்த்தமாக ஒரு காபி ஷாப் வைத்திருக்கும் பிரபுதேவாவிடம் லக்ஷ்மிக்கு அறிமுகம் கிடைக்கின்றது.

லக்ஷ்மியை பிரபுதேவாவிற்கு பிடித்துப்போக அவரின் நடத்திற்கு பணம் கொடுத்து உதவுகின்றார். ப்ரைட் ஆப் இந்தியா டான்ஸ் போட்டியில் லக்ஷ்மி சொதப்புகிறாள்.

அதனால் அவருடைய அணி வெளியேறும் நிலை வர, லக்ஷ்மி இனி நடனமாட முடியாது என்கின்றனர் மாஸ்டர். அதை தொடர்ந்து லக்ஷ்மிக்கு ஆதரவாக பிரபுதேவா செல்ல அங்கு அனைவரும் அவரை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். அந்த ஆச்சரியத்திற்கான காரணம் என்ன, லக்ஷ்மி வெற்றி பெற்றாளா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

இந்த வயதில் இப்படி நடனமாடும் பெண்ணா என்று காட்சிக்கு காட்சி நம்மை பிரமிக்க வைக்கின்றார். லேடி குட்டி பிரபுதேவா என்ற பட்டத்தை கொடுக்கலாம். தனக்கு காசு தரவில்லை என்று இந்த கடையில் சாப்பிட்டால் புட் பாயிஷன் ஆகும் என பிரபுதேவாவை கலாய்க்கும் இடத்திலும் நடிப்பிலும் ஸ்கோர் செய்கின்றார்.

பிரபுதேவா ஆல்ரெடி ஹிந்தியில் ABCD படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான், அதே போல் தான் இதிலும், தனக்கே உரிய யதார்த்தமான நடிப்பில் கவர்கின்றார்.

டான்ஸ் படம் என்றாலே போட்டி, பொறாமை ஜெயிப்பதற்கு எந்த லெவல் வேண்டுமானாலும் செல்வது போல் காட்டுவார்கள். ஆனால், இதில் கடைசி வரை பாசிட்டிவிட்டி தான்.

நடனத்தின் போது ஆணியினை கொட்டும் எதிரனியை கூட எளிதாக மன்னித்து விடுகிறார்கள் குழந்தைகள். படத்தில் வில்லன் என்று நினைப்பவர் கூட, அட இவரும் நல்லவர் தான்பா என்று கிளைமேக்ஸில் சொல்ல வைத்து விடுகின்றனர். இது ரசிக்க வைத்தாலும் இதுவே போட்டியின் வலிமையையும் குறைக்கின்றது.

படத்தில் பிரபுதேவா, லக்ஷ்மி தாண்டி நம்மை மிகவும் கவர்வது ஒரு குண்டு தம்பி தான். லக்ஷ்மியை இம்ப்ரஸ் செய்வது, கடைசியாக ஆணியில் விழுந்து சக போட்டியாளரை காப்பாற்றுவது என சூப்பர்டா தம்பி.

இயக்குனர் விஜய் படம் என்றாலே மற்ற படங்களுடன் கம்பேர் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த லக்ஷ்மியை பல படங்களுடன் கம்பேர் செய்யலாம், பாலிவுட்டில் வெளிவந்த ABCD, ஹாலிவுட்டில் வந்த ரியல் ஸ்டில் போன்ற படங்களின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

லக்ஷ்மியின் மறைமுக ஹீரோ இசையமைப்பாளர் சாம் தான், டான்ஸ் படத்திற்கு என்ன தேவையோ அதை முழுவதுமாக கொடுத்துள்ளார். நமக்கே எழுந்து நடனமாடும் வகையில் தாளம் போட வைக்கின்றது.

க்ளாப்ஸ்

லக்ஷ்மி கதாபாத்திரம், டித்யா பாண்டே இவரை தவிர வேறு யாராலும் இந்த கதாபாத்திரத்தை இத்தனை அழகாக செய்திருக்க முடியாது.

படத்தின் நடன காட்சிகள், இதை அமைத்தவரை கைத்தட்டி பாராட்டலாம், அதிலும் கிளைமேக்ஸில் பிரபுதேவாவிற்கும் டித்யாவிற்குமான காட்சிகள் சூப்பர்.

படத்தின் இசை, கதைக்கு தேவையான வகையில் அமைந்துள்ளது.

பல்ப்ஸ்

இதற்கு முன் வந்த பல நடன படங்களின் சாயல் மிகவும் தெரிகின்றது.

பிரபுதேவா-ஐஸ்வர்யா ராஜேஸ் குறித்த உறவு இன்னும் வலுவானதாக அமைத்திருக்கலாம்.

மொத்தத்தில் இந்த லக்ஷ்மியின் நடனத்திற்காக இல்லை, நடனம் என்ற சொல் உங்களுக்கு பிடித்தாலே கண்டிப்பாக இந்த படத்திற்கு விசிட் அடிக்கலாம்.

https://www.cineulagam.com/films/05/100957?ref=cineulagam-reviews-feed

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.