Jump to content

UEFA யின் சிறந்த வீரர் விருதிற்கு தெரிவாகியுள்ள வீரர்கள்


Recommended Posts

UEFA யின் சிறந்த வீரர் விருதிற்கு தெரிவாகியுள்ள வீரர்கள்

Ronaldo, Modric, Salah
 

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஓன்றியமான UEFA யின் 2017/18 ஆம் பருவகாலத்திற்கான சிறந்த கால்பந்து வீரர் விருதிற்கான இறுதிப் பெயர் பட்டியல் திங்கட்கிமை (20) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் லுகா மொட்ரீச், முஹமட் சலாஹ் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

 

UEFA யின் சிறந்த வீரர் விருதிற்கான இறுதி மூவரைக் கொண்ட பெயர் பட்டியலானது பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மூலம் வழங்கப்படும் மொத்த வாக்குகளின் அடிப்படையிலே தெரிவு செய்யப்படுகின்றது. அதனடிப்படையில் 80 பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் 55 ஊடகவியலாளர்களால் லுகா மொட்ரீச், முஹமட் சலாஹ் மற்றும் கிரிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு இம்முறை தெரிவு செய்யப்பட்ட வீரர்களில் இருந்து சிறந்த வீரருக்கான இறுதி விருதானது, 2018/19 ஆம் பருவகாலத்திற்கான UEFA யின் சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளிற்கான குழுக்களை தெரிவு செய்யும் விழாவில் வழங்கப்படும். இவ்விழாவானது ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை மொனோக்கோ நகரில் நடைபெறும்.

  • லுகா மொட்ரீச் (குரோஷியாரியல் மெட்ரிட் கால்பந்து கழகம்)

குரோஷிய அணியின் தலைவரும், ரியல் மெட்ரிட் அணியின் மத்தியகள வீரருமான லுகா மொட்ரீச், ரியல் மெட்ரிட் சார்பாக கடந்த பருவகாலத்தில் UEFA சம்பியன் கிண்ணம், UEFA சுப்பர் கிண்ணம், ஸ்பானிய சுப்பர் கிண்ணம் மற்றும் பிஃபா மூலம் நடாத்தப்பட்ட கழகங்களுக்கிடையிலான உலகக் கிண்ணம் என்பவற்றை வென்றுள்ளார்.

இவ்வருடம் நடைபெற்ற பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் தனது சிறப்பாட்டத்தின் மூலம் குரோஷிய அணியை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வைத்த லுகா மொட்ரீச், குறித்த தொடரில் தங்கப் பந்து (Golden Ball) விருதையும் வென்றார்.  

 

கடந்த பருவகாலம் 11 UEFA சம்பியன் கிண்ணப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஒரு கோல் மற்றும் ஒரு கோலுக்கான உதவியையும் (Assist) பதிவு செய்துள்ளார். அதே போல் லா லிகா சுற்றுத் தொடரில் கடந்த பருவகாலத்தில் தனது அணிக்காக ஒரு கோலை பெற்றுக் கொடுத்துள்ளார்.

  • முஹமட் சலாஹ் (எகிப்துலிவர்பூல் கால்பந்து கழகம்)

பிரீமியர் லீக் 2017/18ஆம் பருவகாலத்திற்கான சுற்றுப் போட்டியில் தங்கப் பாதணி (Golden Boot) விருதை வென்ற முஹமட் சலாஹ், தனது அணிக்காக கடந்த பருவகாலத்தில் 38 போட்டிகளில் விளையாடி, 32 கோல்களை பெற்றுக்கொடுத்துள்ளார். இது ஒரு பருவகாலத்திற்கான பிரீமியர் லீக் போட்டிகளில் அதிகமான கோல்களை பெற்ற லுயிஸ் சுவாரெஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அலன் ஸெய்ரர் ஆகிய வீரர்கள் வரிசையில் முன்னிலையில் உள்ளது.

2017/18 ஆம் பருவகாலத்திற்கான சம்பியன் லீக் இறுதிப் போட்டிக்கு லிவர்பூல் அணி தகுதிபெற்ற போதும், அவ்வணியின் நட்சத்திர வீரரான முஹமட் சலாஹ்வால் 25 நிமிடங்கள் மாத்திரமே விளையாட முடிந்தது.

சம்பியன் லீக் போட்டிகளில் 10 கோல்களை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்துள்ள இவர், எகிப்து கால்பந்து அணியை உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி பெறச் செய்வதற்கும் முக்கிய பங்கு வகித்தார்.

  • கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்த்துக்கல்ரியல் மெட்ரிட் கால்பந்து கழகம்)

போர்த்துக்கல் அணித்தலைவரும், ரியல் மெட்ரிட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து வரலாற்றில் UEFA யின் சிறந்த வீரருக்கான விருதை மூன்று முறை (2014, 2016, 2017) வென்ற ஓரே வீரராக திகழ்கிறார்.

 

மேலும், இவர் கடந்த பருவகாலத்தில் ரியல் மெட்ரிட் அணி சார்பாக விளையாடி, UEFA சம்பியன் கிண்ணம், UEFA சுப்பர் கிண்ணம், ஸ்பானிய சுப்பர் கிண்ணம் மற்றும் கழகங்களுக்கிடையிலான உலகக் கிண்ணம் என்பவற்றில் கிண்ணங்களை வென்றுள்ளார்.  

வரலாற்றிலே 5 முறை UEFA வின் சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ள முதல் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கடந்த பருவகாலத்தில் சம்பியன் கிண்ணத் தொடரின் 13 போட்டிகளில் விளையாடி 15 கோல்களை பெற்றுள்ளதோடு, அதி கூடிய கோல்களை பெற்ற வீரர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கின்றார்.

இப்பருவ காலம் முதல் ஜுவன்டஸ் கழகத்துடன் இணைந்து கொண்டுள்ள இவர், கடந்த பருவகாலத்தில் லா லிகா சுற்றுப் போட்டிகளில் ரியல் மெட்ரிட் அணிக்காக 26 கோல்களை பெற்றுக் கொடுத்தார். மேலும் பிஃபா உலகக் கிண்ணப் போட்டிகளிலும் தனது தனித்துவத்தை காட்ட தவறாத இவர், ஸ்பெயின் அணிக்கெதிரான போட்டியில் ஹட்ரிக் கோல் ஒன்றையும் பதிவு செய்தார்.  

http://www.thepapare.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.