Jump to content

அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு: 'டிரம்ப் குறித்த உண்மைகளை கூறப்போகிறேன்' - கோவன்


Recommended Posts

அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு: 'டிரம்ப் குறித்த உண்மைகளை கூறப்போகிறேன்' - கோவன்

ரஷ்யாவுடன் கூட்டுச்சதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவுடன் கூட்டுச்சதி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது தொடர்பான விசாரணையில் தான் பேச மிகவும் விருப்பமும், மகிழ்வும் கொள்வதாக டொனால்ட் டிரம்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோவன் தெரிவித்துள்ளார்.

2016-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திய நிதி தொடர்பாக சட்டத்தை மீறி டிரம்புடன் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்களுக்கு ரகசியமாக பணம் அளித்ததாக நீதிமன்றத்தில் கோவன் செவ்வாய்க்கிழமையன்று ஒப்புக்கொண்டார்.

வேட்பாளரின் உத்தரவுக்கு இணங்க தேர்தல் முடிவுகளில் பாதிப்பு ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு தான் இவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.

இந்த வழக்கு விசாரணையில், 51 வயதான கோவன் வரி மற்றும் வங்கி பண மோசடிஉள்பட 8 அம்சங்களில் நடந்த முறைகேடுகளை ஒப்புக் கொண்டுள்ளார்.

டிரம்ப் மீது முன்னாள் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

'டொனால்ட் டிரம்ப் குறித்து தனக்கு தெரிந்த அனைத்தையும் கூற' கோவன் தயாராக இருப்பதாக அவரது வழக்கறிஞர் லேனி டேவிஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இது குறித்து கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப், ஆதாயம் பெறுவதற்காக கோவன் கட்டுக்கதைகளை உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கபடுவதற்காக தான் ரஷ்யாவுடன் எந்த கூட்டுச்சதியும் செய்யவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.

ஃபாக்ஸ் அண்ட் பிரண்ட்ஸ் (Fox & Friends) தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக அளித்த பேட்டியில், தன் பெயரில் பணம் செலுத்தப்பட்டதை பின்னர் அறிந்து கொண்டதாகவும், அதற்கும் தேர்தல் பிரசாரத்துக்கும் தொடர்பு இல்லை எனவும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தனி விவகாரங்களுக்கு நீண்ட காலமாக வழக்கறிஞராக செயல்பட்ட மைக்கேல் டீ கோவன் , கடந்த 2016இல் ஆபாசப் பட நடிகை ஒருவருக்கு 1,30,000 டாலர் பணம் அளித்ததாக அமெரிக்க ஊடகங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.

மனைவி மெலானியாவுடன் டிரம்ப் (இடது), ஸ்ட்ரோமி டேனியல்ஸ் (வலது)படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionடிரம்ப் (இடது), ஸ்ட்ரோமி டேனியல்ஸ் (வலது)

டிரம்ப்புடனான உறவு குறித்து பொது வெளியில் பேசுவதைத் தவிர்க்க ஸ்ட்ரோமி டேனியல்ஸ் எனும் அந்த நடிகைக்கு பணம் வழங்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானபின் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அதிபர் தேர்தல் நடந்த 2016இல் டிரம்ப் உடனான உறவு குறித்து பேச டேனியல்ஸ் சில தொலைக்காட்சி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததாக கூறப்பட்டதால் அவருக்கு பணம் வழங்கப்பட்டது என்ற செய்தி கடந்த ஜனவரி மாதம் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் உடன் டேனியல்ஸ்க்கு எவ்விதமான தொடர்பும் இல்லை என்று அந்த நடிகையின் செய்தித்தொடர்பாளர் ஜனவரி 30 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

https://www.bbc.com/tamil/global-45279369

Link to comment
Share on other sites

தேர்தல் நேரத்தில் பேசாமல் இருக்க இரண்டு பெண்களுக்கு பணம் தந்தது தவறல்ல - டிரம்ப்

டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇதுல என்னங்க தப்பு இருக்கு...?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் தங்களுக்கு உறவு இருந்ததாக கூறிய இரண்டு பெண்கள் தேர்தல் நேரத்தில் பேசாமல் இருப்பதற்காக அவர்களுக்குப் பணம் தரப்பட்டது என டிரம்பின் முன்னாள் வழக்குரைஞர் கூறியுள்ளார். இந்நிலையில் அப்படி பணம் தந்தது சட்டபூர்வமானதே என்கிறார் டிரம்ப்.

2016 அமெரிக்க அதிபர் தேர்தல் நேரத்தில் அந்தப் பெண்களுக்குப் பணம் தருவதில் பங்கெடுத்ததன் மூலம் தாம் சட்ட விரோதமாக நடந்துகொண்டதாக டிரம்பின் முன்னாள் வழங்குரைஞர் மைக்கேல் கோவன் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதில் அளித்த டிரம்ப், அந்த இரண்டு பெண்களுக்கு பணம் தரப்பட்டது தேர்தல் பிரசார விதிகளை மீறவில்லை என்கிறார். அது தமது தனிப்பட்ட நிதியில் இருந்து தரப்பட்டதே அல்லாமல் பிரசார நிதியில் இருந்து வழங்கப்படவில்லை என்றும் கூறுகிறார் டிரம்ப்.

ஆனால், அந்த இருவரில் ஒருவருக்குப் பணம் தந்தது பற்றிய பேச்சின்போது பணம் தந்ததே தமக்குத் தெரியாது என்று கடந்த காலத்தில் பேசியுள்ளார் டிரம்ப்.

குறைவான தண்டனை பெறுவதற்காக கதைகள் புனைவதாகவும் அவர் மைக்கேல் கோவனை குற்றம்சாட்டினார்.

ஃபாக்ஸ் & ஃப்ரெண்ட்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்க்காணலில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், அந்தப் பெண்களுக்குப் பணம் கொடுத்தது பற்றி பின்னரே தமக்குத் தெரியும் என்றும், அந்தப் பணம் பிரசார நிதியில் இருந்து அல்லாமல் தமது சொந்த நிதியில் இருந்தே தரப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆனால், டிரம்பின் இந்த கூற்று, டிரம்ப்பின் உத்தரவுப்படியே அந்தப் பெண்களுக்குப் பணம் தரப்பட்டதாக கோவன் கூறிய கூற்றோடு முரண்படுகிறது.

யார் அந்தப் பெண்கள்?

ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ், முன்னாள் பிளேபாய் மாடல் கரேன் மெக்டௌகல் ஆகிய இருவருக்கும் இந்தப் பணம் போனதாக நம்பப்படுகிறது. பணத்தை இரண்டு பெண்களுக்கு தந்ததாக பத்தாண்டு காலத்துக்கும் மேலாக டிரம்பின் தனிப்பட்ட வழக்குரைஞராக இருந்த கோவன் ஒப்புக்கொண்டுள்ளார்.

மைக்கேல் கோவன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமைக்கேல் கோவன்: "அவரு கொடுக்கச் சொன்னாரு, கொடுத்தேன்... "

இந்தப் பணப்பட்டுவாடா விவகாரம் அப்போது தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்படவில்லை. அந்தப் பணம் டிரம்பின் தனிப்பட்ட கௌரவத்தை பாதுகாப்பதற்காகத் தரப்பட்டதா, குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் என்ற முறையில் அவரது பெயரைப் பாதுகாக்கத் தரப்பட்டதா என்பதே சட்டபூர்வமாக விடைதேட வேண்டிய கேள்வியாக உள்ளது.

வாக்குகளைக் கவரும் நோக்கத்துடன் செலவிடப்படும் எல்லா பணம் குறித்தும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கவேண்டும் என்பது அமெரிக்கத் தேர்தல் விதி.

தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் நோக்கத்தோடு, வேட்பாளர் என்ற முறையில் அவரது பெயரைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு பணம் தரப்பட்டது என்று மைக்கேல் கோவன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

என்ன செய்ய முடியும்?

டிரம்ப் தற்போது குடியரசுத் தலைவராக இருப்பதால், அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுக்காக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றால் அதனை சாதாரண நீதிமன்றத்தில் செய்ய இயலாது.

அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசில் கண்டனத் தீர்மானம் கொண்டுவருவதுதான் சாத்தியமான சட்ட நடவடிக்கையாகத் தெரிகிறது. இதைச் செய்வதற்கு புலன்விசாரணை செய்வோர், தேர்தல் காரணங்களுக்காக டிரம்ப் அந்தப் பணத்தை கோவனிடம் தந்தார் என்பதை நிரூபிக்கவேண்டும்.

https://www.bbc.com/tamil/global-45283985

Link to comment
Share on other sites

எனக்கெதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினால் சந்தை சரிவடையும் - டிரம்ப்

டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇதுல என்னங்க தப்பு இருக்கு...?

2016 தேர்தல் நேரத்தில் தம்முடன் உறவு வைத்திருந்ததாக பேசாமல் இருப்பதற்காக இரண்டு பெண்களுக்கு தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சார்பில் பணம் தரப்பட்டது தொடர்பான விவகாரம் பெரிதாகி வருகிறது.

இந்நிலையில் தம்மை பதவி நீக்கும் வகையில் (அமெரிக்க காங்கிரசில்) பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவந்தால், அதனால் சந்தை சரிவை சந்திக்கும், எல்லோரும் ஏழையாவார்கள் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஃபாக்ஸ் நியூசுக்கு தந்த பேட்டியில் அவர் இப்படித் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் தங்களுக்கு உறவு இருந்ததாக கூறிய இரண்டு பெண்கள் தேர்தல் நேரத்தில் பேசாமல் இருப்பதற்காக அவர்களுக்குப் பணம் தரப்பட்டது என டிரம்பின் முன்னாள் வழக்குரைஞர் கூறினார். அப்படி பணம் தந்தது சட்டபூர்வமானதே என்று கூறினார் டிரம்ப்.

2016 அமெரிக்க அதிபர் தேர்தல் நேரத்தில் அந்தப் பெண்களுக்குப் பணம் தருவதில் பங்கெடுத்ததன் மூலம் தாம் சட்ட விரோதமாக நடந்துகொண்டதாக டிரம்பின் முன்னாள் வழங்குரைஞர் மைக்கேல் கோவன் ஒப்புதல் தெரிவித்தார்.

இதற்குப் பதில் அளித்த டிரம்ப், அந்த இரண்டு பெண்களுக்கு பணம் தரப்பட்டது தேர்தல் பிரசார விதிகளை மீறவில்லை என்கிறார். அது தமது தனிப்பட்ட நிதியில் இருந்து தரப்பட்டதே அல்லாமல் பிரசார நிதியில் இருந்து வழங்கப்படவில்லை என்றும் கூறுகிறார் டிரம்ப்.

ஆனால், அந்த இருவரில் ஒருவருக்குப் பணம் தந்தது பற்றிய பேச்சின்போது பணம் தந்ததே தமக்குத் தெரியாது என்று கடந்த காலத்தில் பேசியுள்ளார் டிரம்ப்.

குறைவான தண்டனை பெறுவதற்காக கதைகள் புனைவதாகவும் அவர் மைக்கேல் கோவனை குற்றம்சாட்டினார்.

ஃபாக்ஸ் & ஃப்ரெண்ட்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்க்காணலில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், அந்தப் பெண்களுக்குப் பணம் கொடுத்தது பற்றி பின்னரே தமக்குத் தெரியும் என்றும், அந்தப் பணம் பிரசார நிதியில் இருந்து அல்லாமல் தமது சொந்த நிதியில் இருந்தே தரப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆனால், டிரம்பின் இந்த கூற்று, டிரம்ப்பின் உத்தரவுப்படியே அந்தப் பெண்களுக்குப் பணம் தரப்பட்டதாக கோவன் கூறிய கூற்றோடு முரண்படுகிறது.

https://www.bbc.com/tamil/global-45283985

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
    • நல்லது இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.
    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.