Jump to content

கொள்ளிடம் மேலணையில் 7 மதகுகள் உடைப்பு


Recommended Posts

கொள்ளிடம் மேலணையில் 7 மதகுகள் உடைப்பு

 

Colors:
  •  
  •  
  •  
  •  
 
 

திருச்சி: கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் உள்ள 7 மதகுகளும் உடைந்து வெள்ளத்தில் அடித்து சொல்லப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கரையோர கிராம மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொள்ளிடம் அணையில் மொத்தம் உள்ள 45 மதகுகளில் தற்போது 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
 

 

 

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை



அணையின் 7 மதகுகள் உடைந்து அதன் வழியாக தண்ணீர் வெளியேறி வருவதை அடுத்து கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில்வசித்து வரும் மக்கள்பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.1836-ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் காலத்தில் முக்கொம்பு மேலணை கட்டப்பட்டது. அணையின் 7 மதகுகள் உடைந்ததை அடுத்து பாலமும் உடைந்தது. இதில் 90 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது. இதனையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாலம் உடைந்ததையடுத்து அப்பகுதியில் பாலத்தின் மீது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

123180_Manikandan_DSC_1491_230818031724.jpg
prev.png
திருச்சி முக்கொம்பில், உள்ள கொள்ளிடம் மேலணையில் ஆறாவது மதகில் இருந்து 12 வது மதகுகள் வரை ஆற்றில் அடித்து செல்லப் பட்டது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=2086160

123177_Manikandan_DSC_1488_230818031704.jpg

123173_Manikandan_DSC_1481_230818031508.jpg

Link to comment
Share on other sites

கோடி கோடியாக நடைபெற்ற கொள்ளை… முக்கொம்பு அணை உடைந்த ரகசியம்!

 

கொள்ளிடம் அணை, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதும் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் துடிப்பதற்குப் பின்னணியில் மணல் கொள்ளையும் அதில் பல கோடி ரூபாய் மதிப்பில் அரசு அதிகாரிகள் கொள்ளையடித்திருப்பதுமே காரணம் எனத் தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கோடி கோடியாக நடைபெற்ற கொள்ளை… முக்கொம்பு அணை உடைந்த ரகசியம்!
 

திருச்சி மாவட்டம் முக்கொம்பின் கொள்ளிடம் மேலணை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம், பெரும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகப் பெய்துவந்த கனமழை காரணமாகக் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு, மேட்டூர் அணையிலிருந்து அளவுக்கு அதிகமான தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் கொள்ளிடம் பாலம் உடைந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு சுமார் 8.10 மணியளவில் முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் உள்ள 9 மதகுகள் அடுத்தடுத்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இதையடுத்து முதல்வரின் முதன்மைச் செயலாளர் சாய்குமார், பொதுப் பணித்துறை முதன்மைச் செயலாளர் பிரபாகர், திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோர் முக்கொம்புக்கு நேரில் வந்து பார்வையிட்டனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை நேரில் பார்வையிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

கொள்ளிடம் அணை, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதும் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் துடிப்பதற்குப் பின்னணியில் மணல் கொள்ளையும் அதில் பல கோடி ரூபாய் மதிப்பில் அரசு அதிகாரிகள் கொள்ளையடித்திருப்பதுமே காரணம் எனத் தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 

 

முக்கொம்பு

“கடந்த சில வருடங்களுக்கு முன்னாள், திருச்சி முக்கொம்பு மேலணையில் மராமத்துப் பணிகள் செய்யத் தமிழக அரசு ரூ.10 கோடி ரூபாய் ஒதுக்கியது. அந்தப் பணத்தில் முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றின் வலது மற்றும் இடதுகரை உள்ள 55 அடைப்புப் பலகைகள், சீரமைக்கப்பட்டன. அதேபோல் மதகுகள் அனைத்தும் மின் மோட்டார் வசதியுடன் இயக்கும் முறை அப்போதுதான் செயல்படுத்தப்பட்டது. ஆனால், இந்தப் பணத்தில் பாதிப் பணத்தை அதிகாரிகள் அமுக்கிவிட்டனர்'' என்று குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

``வழக்கமாக மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை அணையின் பராமரிப்புப் பணிக்காகக் கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கினால், மதகுகளுக்கு வர்ணம் பூசுதல், இரும்புத் துரு நீக்குதல் போன்ற பணிகளை மட்டும் செய்துவிட்டு மீதிப் பணத்தை அமுக்கிவிடுகின்றனர். இதுகுறித்து எழுந்த புகார்களை அதிகாரிகள் மூடி மறைத்துவிடுகின்றனர். இவை குறித்து முறையாக விசாரணை நடத்தினால் பல அதிகாரிகள் சிக்குவார்கள்” என்கின்றனர் அவர்கள்.

கொள்ளிடம் அணை, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது குறித்துப் பேசிய திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி, ``திருச்சி முக்கொம்பில் காவிரி பிரியும் பகுதியான கொள்ளிடத்தில் உள்ள 45 ஷட்டர்களில், 6 முதல் 13 வரையிலான தூண்கள் என மொத்தம் 9 மதகுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மற்ற ஷட்டர்களின் ஸ்திரதன்மை பொதுப் பணித்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட உள்ளது. நேற்று இரவு நிலவரப்படி காவிரியில் 32,000 கன அடி தண்ணீரும் கொள்ளிடத்தில் 8,000 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. மாயனூரிலிருந்து கூடுதலாகத் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதன்படி, இன்று காலை நிலவரப்படி காவிரியில் 50,000 கன அடியும் கொள்ளிடத்தில் 23,000 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளன. 

 

 

கொள்ளிடம்

முக்கொம்புக்கு வரும் நீரின் அளவு குறையும். முக்கொம்பு கொள்ளிடம் அணை உடைந்ததால், வெள்ளப் பாதிப்புகளோ விவசாயத்துக்குத் தண்ணீர் பற்றாக்குறையோ ஏற்படாது. மேலும் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்குத் தேவையான நீர் காவிரி வழியாகத் தொடர்ந்து திறந்துவிடப்படுகிறது. இதனால் விவசாயத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. காவிரியைவிடக் கொள்ளிடம் கொஞ்சம் மேடாக இருப்பதால், பெரிய பாதிப்பு இல்லை. அணை இடிந்த பகுதிகளில் இன்று மாலை முதல் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகள் ஒரு வார காலத்துக்குள் முடிக்கப்படும். இதற்காக ராட்சத இயந்திரங்கள், தொழில்நுட்பக் குழுவினர்கள் வரவழைக்கப்படுகின்றனர். உடைந்த கொள்ளிடம் ஆற்றில் இரும்புக் கம்பிகள், மணல் மூட்டைகள், பில்லர்கள் கொண்டு அமைக்கப்படும் கட்டுமான சீரமைப்புப் பணிகள் ஒரு வாரத்தில் முடியும்” என்றார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், ``முக்கொம்பு மேலணையில் ஏற்பட்ட உடைப்பால் பாதிப்பு ஏதுமில்லை. முதல்கட்டமாக அணையில் ஏற்பட்ட உடைப்பைச் சீரமைப்பது பற்றி ஆய்வு நடக்கிறது. மேலணையில் உடைப்பையடுத்து நிரந்தரத் தீர்வு காண்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. முக்கொம்பு மேலணையில் ஏற்பட்ட உடைப்பு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கிருந்து காவிரிக்கு நீர் திறக்கும் பகுதி பாதுகாப்பாக உள்ளது. தமிழகத்தில் 100 ஆண்டுகள் பழைமையான அணைகள் அரசின் ஆலோசனை பெற்று ஆய்வு செய்யப்படும்” என்றார்.

அணையைப் பாதுகாக்காதது யார் தவறோ?

https://www.vikatan.com/news/tamilnadu/134909-why-did-kollidam-dam-broken-social-activists-says-the-reason.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.