Jump to content

உண்மையான நல்லிணக்கவாதி: கண்டி வன்முறைகளிலிருந்து கற்றுக்கொள்ளக் கூடிய பாடம்


Recommended Posts

உண்மையான நல்லிணக்கவாதி: கண்டி வன்முறைகளிலிருந்து கற்றுக்கொள்ளக் கூடிய பாடம்
எம்.எஸ்.எம். ஐயூப் /

இனக் கலவரங்களின் போது குற்றமிழைப்போரை, அவர்களது இனத்தைப் பாராது தண்டிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு தண்டிக்கப்படுவோரது பிள்ளைகள், அத்தண்டனைகளால் பாதிக்கப்பட்டு, பிரச்சினையை எதிர்காலத்துக்கும் எடுத்துச் செல்லக்கூடும். அதனைத் தடுக்கவும் வழிமுறைகளைக் காண வேண்டும்.

- இவ்வாறு கூறுகிறார், கண்டி மாவட்டத்தில் மெத மஹநுவர, அம்பால என்னும் கிராமத்தில் இருக்கும், பேரகெட்டிய ஸ்ரீ இஸிபத்தனாராமய விகாரையின் பிரதம மதகுருவான, கீனபெலெஸ்ஸே உப்பாலி ஞானிஸ்ஸர தேரர். அம்பால என்பது, கண்டி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம், முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்செயல்களுக்குக் காரணமான சம்பவத்தின் போது உயிரிழந்த சிங்களவரின் கிராமமே.

இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி, பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த லொறிச் சாரதியான எம்.ஜீ. குமாரசிங்கவுக்கும் ஓட்டோவொன்றில் பயணம் செய்த நான்கு முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக, தெல்தெனியவில் வைத்து, குமாரசிங்க கடுமையாகத் தாக்கப்படுகிறார். பின்னர் குமாரசிங்க, வைத்தியசாலையில் சிகிச்சை பயனளிக்காது உயிரிழக்கிறார். அதனை அடுத்தே, கண்டி மாவட்டத்தில் பல இடங்களில், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் இடம்பெற்றன.

குமாரசிங்க இறப்பதற்கு முன்னரே, சம்பந்தப்பட்ட நான்கு முஸ்லிம்களும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்படுகிறார்கள். அந்த நான்கு பேரைப் பற்றிக் குறிப்பிடும் போதே, ஞானிஸ்ஸர தேரர் மேற்கண்டாறு கூறுகிறார்.

இது, வித்தியாசமானமானதொரு கருத்தாகத் தெரிகிறது. பொதுவாக எவரும், “குற்றமிழைத்தவர்கள், அவர்களது இனத்தைப் பாராது தண்டிக்கப்பட வேண்டும்” என்பதோடு நின்றுவிடுவார்கள். தண்டனை நியாயமாகத் தென்படுவதனாலேயே அவ்வாறு கூறுவர். அதேவேளை, தண்டனையால் மற்றவர்கள் பாடம் படிக்கலாம் என்றும் கருதப்படுவதாலும் அவ்வாறு கூறுவர். ஆனால் சிலவேளை, அவ்வாறு கூறுவோர், தமது இனத்தவர்கள் தண்டிக்கப்படுவதை விரும்ப மாட்டார்கள். நிலைமை அவ்வாறிருக்க, குற்றவாளிகளின் பிள்ளைகளைப் பற்றி, எவரும் ஒருபோதும் அக்கறை கொள்வதில்லை.  

ஞானிஸ்ஸர தேரர், தண்டனைக்கு அப்பாலும் சிந்திக்கிறார். “குமாரசிங்கவைத் தாக்கியவர்கள், தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆனால் அவர்கள் சிறைக்குச் செல்லும்போது, அவர்களின் பிள்ளைகள் பாதிக்கப்படுவார்கள். அப்பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். அந்தப் பாதிப்பின் காரணமாக, அந்தப் பிள்ளைகள், பிரச்சினையை எதிர்காலத்துக்கும் எடுத்துச் செல்லக்கூடும். அதற்கும், நாம் தான் பரிகாரம் காண வேண்டும்” என அவர் கூறுகிறார்.  இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அனுசரணையுடன், நியூஸ்வியூ நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஊடகத்துறைப் பாடநெறியொன்றைக் கற்கும் மாணவர்கள் சிலரோடு, நடைமுறைப் பயிற்சிக்காக அம்பாலவுக்குச் சென்று ஞானிஸ்ஸர தேரரைச் சந்தித்த போதே, அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். 

ஊடகத்துறை மாணவர்கள் அவரைச் சந்திப்பதற்கு முக்கிய காரணம் ஒன்று இருந்தது. மேற்படி நான்கு முஸ்லிம்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த குமாரசிங்கவின் பெயரில், கண்டி மாவட்டத்தில் திகன, தெல்தெனிய, கட்டுகஸ்தோட்ட போன்ற பல இடங்களில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல வீடுகள், கடைகள், வாகனங்கள் தாக்கி எரிக்கப்பட்ட போதிலும், குமாரசிங்கவின் பிறப்பிடமான அம்பாலவில், எவ்வித வன்செயலும் இடம்பெறவில்லை. 

அந்தப் பிரதேசத்தில், ஏழாயிரத்துக்கு அதிகமான சிங்கள மக்கள் வாழ்கிறார்கள். எனினும், 36 முஸ்லிம் குடும்பங்களே வாழ்கின்றன. எனவே, அதுபோன்றதொரு சம்பவத்தை அடுத்து, அங்கு முஸ்லிம்களுக்கு எவ்விதப் பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லை. இந்த நிலையில், ஞானிஸ்ஸர தேரர் எடுத்த பெரு முயற்சியின் பயனாகவே, குமாரசிங்கவின் பெயரில் கண்டி மாவட்டத்தில் பல பகுதிகள் பற்றியெரியும் போதும், குமாரசிங்கவின் சொந்த ஊரான அம்பாலவில், முஸ்லிம்கள் பாதுகாக்கப்பட்டனர். அம்பால பள்ளிவாசலில் கடமையாற்றுவோரும் இதனை உறுதிப்படுத்தினர். 

“இந்த ஊரில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு, நீங்கள் எவ்வாறு பார்த்துக் கொண்டீர்கள்?” என்று, எம்மில் ஒருவர் அவரிடம் கேட்ட போது, நீண்டதொரு கதையை அவர் கூறினார். அதற்கு முன்னர், அதனை அவர் சாராம்சப்படுத்தினார்: “கடுமையாகத் தாக்கப்பட்டு இருந்ததால் காயமடைந்த குமாரசிங்க உயிரிழக்கலாம் என்ற சந்தேகம், ஆரம்பத்திலிருந்தே எம்மிடம் இருந்தது. எனவே, அதற்கு முன்னரே, பிரதேச மக்கள் கொதித்தெழாமல், அதைத் தாங்கிக் கொள்ளும் மனப்பாங்கை நாம் உருவாக்கினோம்” என, அவர் கூறினார். 

ஞானிஸ்ஸர தேரர், அந்தக் கேள்விக்கு அளித்த நீண்ட பதிலை, அவரது வார்த்தைகளாலேயே குறிப்பிடுவது பொருத்தமாகும்.

“குமாரசிங்கவின் குடும்பம், மிகப் பெரியது. அதாவது, அவரது உறவினர்கள், ஊர் முழுவதிலும் வாழ்கிறார்கள். எனவே, தாக்கப்பட்டு வைத்தியசாலையில் இருந்த அவருக்கு ஏதாவது நடந்தால், நிலைமை விபரிதமாகிவிடும் என நாம் நினைத்தோம். எனவே, வைத்தியசாலையில் அவர் இருந்த ஒன்பது நாள்களிலும், நாம் அந்த உறவினர்களைச் சமாதானப்படுத்தினோம். எனவே, அவர் உயிரிழந்த போது, பொறுமை உணர்வை நாம் அவர்களிடத்தில் உருவாக்கியிருந்தோம்.

“அவரது பெற்றோரை நாம் பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பி, பொலிஸார் மூலமாக, பொறுமைக்கான உபதேசங்களை அவர்களுக்கு வழங்கினோம். பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரை இங்கு அழைத்து, இங்கு குடும்பங்களின் மூத்தவர்களுக்கு நிலைமையை விளக்கினோம். இனக் கலவரம் ஏற்பட்டால், புதிய சட்டத்தின் படி, அதில் சம்பந்தப்பட்டவர்களுக்குப் பிணை வழங்கப்பட மாட்டாது என்பதையும் விளக்கினோம். 

“அதேவேளை, குமாரசிங்கவுக்காக நாம், பௌத்த சமயத்தின் படி, ஒன்பது நாள்களிலும் போதி பூஜைகளை நடத்தினோம் அவற்றின் போதும் நாம், பொறுமையையே வலியுறுத்தினோம். கட்டுப்படுத்த முடியாதவர்களை, பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்தி, அவர்கள் ஒன்று கூடி, குரோதத்தை வளர்க்கும் சந்தர்ப்பங்களை, கூடிய வரை குறைத்தோம். இதற்காக நாம், ஊரில் உள்ள முற்போக்குக் கருத்துள்ள இளைஞர்களைப் பயன்படுத்தினோம். அவர்கள், வீடு வீடாகச் சென்று, அமைதியை வலியுறுத்தி வந்தனர். எனவே, குமாரசிங்கவின் மரணச் செய்தி வரும் போது, ஊர் மக்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய நிலைமையை நாம் உருவாக்கியிருந்தோம்.

“ஆனால், எதுவுமே நடக்கவில்லை என்று கூற முடியாது. இரண்டு சிறிய சம்பவங்கள் இடம்பெற்றன. ஆனால், கிராமத்தில் மூத்தவர்களினதும் முற்போக்குக் கருத்துள்ள இளைஞர்களினதும் உதவியோடு, நிலைமையை நாம் கட்டுப்படுத்திக் கொண்டோம். குமாரசிங்க இறந்த நாள் இரவு முழுவதும், இங்குள்ள பள்ளிவாசல் அருகே தான் நான் இருந்தேன். சந்தேகிக்கக்கூடிய கடைசி நபரும் அந்தப் பகுதியிலிருந்து விலகிச் சென்றதன் பின்னர், அதிகாலை 2.45க்கே, விகாரைக்கு நான் வந்தேன். 

“மரணம் இடம்பெற்றதன் பின்னரும், இங்குள்ள முஸ்லிம் கடையொன்று திறந்து இருந்தது. நான் அதன் உரிமையாளருக்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுத்து, கடையை மூடுமாறு கூறினேன். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. அப்போது நான், பள்ளிவாசல் மௌலவிக்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுத்து, அதை மூடச் செய்தேன். அவ்வாறானதொரு புரிந்துணர்வு, சமயத் தலைவர்களிடையே இங்கு இருக்கிறது. 

“அம்பகஹ சந்தி பள்ளிவாசலில் கலந்துரையாடல் ஒன்றை நாம் நடத்தி, இறந்தவரின் குடும்பத்துக்கு எவ்வாறு உதவி செய்யலாம் என்பதை ஆராய்ந்தோம். அது, நல்லுறவுக்கு உதவும் என்பதாலேயே அவ்வாறு செய்தோம். கிராமத்தில் சுமார் 300 பேரை, பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பி, பொலிஸார் மூலமாக, அமைதிக்கான ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கினோம். 

“குமாரசிங்கவின் இறுதிச் சடங்கின் ‘பான்சுகூல’ கிரியையின் போதும் (சடலத்தை அடக்குவதற்கு முன்னரான சமயக் கிரியைகளின் போதும்), ஒன்றாக இணைந்து வாழ்வதன் நன்மைகளையே வலியுறுத்தினோம். ‘சட்டத்தைப் பொலிஸார் கவனித்துக் கொள்ளட்டும்’ என்று எடுத்துக் கூறினோம்.

இவ்வாறு குமாரசிங்க தாக்கப்பட்ட நாள் முதல், அவரது பூதவுடல் அடக்கப்படும் வரை, அமைதியை பேணுவதற்காக நாம், அயராது உழைத்தோம். ஆனால், நான் தனியாக இவற்றைச் செய்யவில்லை. இங்குள்ள முற்போக்குக் கருத்துள்ள இளைஞர்கள் எனக்கு உதவினார்கள். எனக்கு வேண்டிய இடங்களுக்கெல்லாம், அவர்களது வாகனங்களில் அழைத்துச் சென்றார்கள். 

“வழமையாக பௌத்த பிக்குகள், அழைப்பின் பேரிலேயே மரணச் சடங்குகளில் கலந்து கொள்வார்கள். ஆனால், இந்த மரணத்தின் போது, மெத தும்பர பிரதேசத்தின் சகல விகாரைகளிலுமுள்ள பிக்குகள், அழைப்பின்றியே வந்தார்கள். இனக் கண்ணோட்டத்தில் பிரச்சினையை நாம் அணுகவிடாமல், பாதிக்கப்பட்ட குடும்பத்தைக் கட்டியெழுப்புவது பற்றியே கவனத்தைச் செலுத்தச் செய்தோம். வந்த பிக்குகள் எவரும், மற்ற நோக்கத்தோடு இருக்கவில்லை. அவர்களும், சுமூக நிலைமையைப் பாதுகாக்க அர்ப்பணிப்போடு செயற்பட்டனர்.

“இந்தப் பிரதேசத்தில் சமயத் தலைவர்களிடையே ஏற்கனவே நல்ல புரிந்துணர்வு இருந்தது. அதேவேளை, கிராமத்தில் வாழும் மூத்தவர்கள், நீண்ட காலமாக ஏனைய இனத்தவர்களுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தவர்கள். அந்த உறவு பாதிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. அந்த நிலைமை எமக்கு உதவியது” என்று அவர் விளக்கினார். 

இந்த விளக்கத்தோடு, ஞானிஸ்ஸர தேரர், இடைக்கிடையே சில முக்கிய கருத்துகளையும் கூறினார். இரு இனங்களைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு தகாத சம்பவம் இடம்பெற்றால், அந்தப் பிரச்சினை என்ன என்று அடையாளம் காண வேண்டுமேயல்லாது, அதற்கு இனச் சாயம் பூசக்கூடாது என்பதை, பல முறை அவர் கூறினார். ஒரு சம்பவம் இடம்பெற்றால், சம்பந்தப்பட்டவர்களின் இனம் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்ற மனோபாவம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இது, நாட்டில் சகல இனத்தவர்களுக்கும் பொருத்தமான ஆலோசனையாகும். 

ஒரு சில தசாப்தங்களுக்கு முன்னர், பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களிடையே நிலவி வந்த உறவு இப்போது காணப்படாமையால், பிணக்குகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது என்கிறார், ஞானிஸ்ஸர தேரர். அதற்கு அவர், சில காரணங்களையும் முன்வைத்தார். இன, மத ரீதியான பாடசாலைகள்; இன, மத ரீதியான அரசியல் கட்சிகள்; ஊடகங்களின் பக்கச்சார்பான போக்கு ஆகியன, அவர்கள் குறிப்பிட்ட காரணங்களாகும்.

 அவர் கூறுவது முற்றிலும் உண்மையே. ஆனால், இன, மத ரீதியான பாடசாலைகள், உண்மையிலேயே முன்னரும் இருந்தன. எனினும் அக்காலத்தில், எந்தவொரு மாணவனும் தாம் விரும்பிய பாடசாலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டான். இப்போது, சகல பிரதான பாடசாலைகளிலும், குறிப்பிட்டதொரு விகிதாசாரத்திலேயே மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். 

அதேவேளை, சிங்களத் தலைமையுள்ள இரு பிரதான கட்சிகளும் இடதுசாரிக் கட்சிகளும், சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைப் புறக்கணித்தமையிலேயே, இனவாரியான கட்சிகள் உருவாகின. விகிதாசாரத் தேர்தல் முறை, மக்கள் மேலும் இன ரீதியாக நாடாளுமன்ற, மாகாண சபை, உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்யத் தூண்டுகிறது. எனவே, இவற்றுக்குத் தீர்வு காண்பது மிகவும் கடினமாகியுள்ளது.

ஞானிஸ்ஸர தேரர், சில ஆலோசனைகளை முன்வைக்கிறார். “பல இனங்களைச் சேர்ந்த மாணவர்கள், சகல பாடசாலைகளிலும் போதியளவில் இருக்க வேண்டும்; சகல இன மக்களும், சகல அரசியல் கட்சிகளிலும் இருக்க வேண்டும்; விளையாட்டு மைதானத்தில், சகல இனப் பிள்ளைகளும் ஒன்றாக விளையாட வேண்டும்; அந்தந்தப் பிரதேசங்களில் பிக்குவுக்கும் மௌலவிக்கும் இந்து மத குருவுக்கும் பாதிரியாருக்கும் இடையே, நெருங்கிய உறவு இருக்க வேண்டும்; அந்த உறவு, மக்கள் பார்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போது தான், சாதாரண மக்களும் ஏனைய சமயத்தவர்களுடன் பழகுவார்கள். 

“சிங்கள மக்களை நேசிக்கும் முஸ்லிம்களையும் தமிழர்களையும் உருவாக்க வேண்டும்; தமிழர்களை நேசிக்கும் சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் உருவாக்க வேண்டும்; அதேபோல், முஸ்லிம்களை நேசிக்கும் சிங்களவர்களையும் தமிழர்களையும் உருவாக்க வேண்டும். 

“பௌத்தரல்லாதோர் விகாரைகளுக்கு வர வேண்டும்; முஸ்லிம் அல்லாதோர், பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டும். அப்போது தான், ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் பயமும் சந்தேகமும் இல்லாமல் போகும். இப்போது, பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள், தனித் தனியாகத் தமது வேலைகளைச் செய்து கொள்கிறார்கள். அவர்கள் ஒன்று கூடுவது, சண்டையில் மட்டுமே. அந்த நிலைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும்” என, தேரர் தமது ஆலோசனைகளை அடுக்கிக் கொண்டு போகிறார்.  
சிங்கள, தமிழ் ஊடகங்கள், தமது சந்தைத் தேவைகளுக்காக, பக்கச்சார்பாகச் செயற்படுகின்றன எனக் கூறிய அவர், அதனைக் கடுமையாகச் சாடினார். 

மற்றொரு வித்தியாசமான, முக்கிய கருத்தையும் அவர் தெரிவித்தார். அதாவது, இனங்களுக்கிடையே உறவை வளர்ப்பதில், உணவகங்களின் பங்கு மிகவும் முக்கியம் என்பதே. உரிமையாளரின் இனத்தைப் பார்க்காது, மக்கள் ஒன்றாக உணவருந்தக்கூடிய இடங்கள் இருக்க வேண்டும் என்பது, அவரது வாதமாகும். 

நாட்டுப்பற்று என்றால், தமது நடவடிக்கைகளால் நாட்டுக்கு ஏற்படப் போவது கௌரவமா, இழுக்கா என்பதைச் சிந்திக்கக் கூடிய தன்மையே என, ஞானிஸ்ஸர தேரர் கூறுகிறார். போரின் போது இடம்பெற்ற பல சம்பவங்கள், நாட்டுக்கு அவப்பெயரையே தேடித்தந்தன என்கிறார் அவர். 

நடந்து முடிந்த சம்பவங்களில், போதைப்பொருட்களின பங்கை விவரித்த அவர், சிங்கள இளைஞரைத் தாக்கியவர்களும் போதையில் இருந்துள்ளனர்; அதேபோல் முஸ்லிம்களின் உடைமைகளைத் தீயிட்டுக் கொளுத்தியவர்களிலும் பெரும்பாலானோர், குடிபோதையிலேயே தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர் என அவர் கூறுகிறார். 

ஏறத்தாழ தனிச் சிங்களக் கிராமமொன்றில் வாழும் இந்த மதகுருவின் நடுநிலை, ஒரு வகையில் ஆச்சரியத்துக்குரியது என்றே கூற வேண்டும். 

  •  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உண்மையான-நல்லிணக்கவாதி-கண்டி-வன்முறைகளிலிருந்து-கற்றுக்கொள்ளக்-கூடிய-பாடம்/91-220615

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.