Jump to content

அண்ணா சிலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை பேரணி; செப்டம்பர் 5-ம் தேதி பலத்தை நிரூபிக்க அழகிரி தீவிரம்; 1 லட்சத்துக்கும் அதிகமானோரை திரட்ட முடிவு


Recommended Posts

அண்ணா சிலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை பேரணி; செப்டம்பர் 5-ம் தேதி பலத்தை நிரூபிக்க அழகிரி தீவிரம்; 1 லட்சத்துக்கும் அதிகமானோரை திரட்ட முடிவு

 

 
downloadjpg

மு.க.அழகிரி: கோப்புப்படம்

அண்ணா சிலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ள பேரணியில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர், தென் மண்டல அமைப்புச் செயலாளர் என திமுகவில் செல்வாக்கோடு வலம் வந்த மு.க.அழகிரிக்கும், அவரது தம்பியும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இடையே மோதல் வெடித்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டார். அதன்பிறகு ஸ்டாலினை அவ்வப்போது விமர் சித்தாலும் அரசியலில் இருந்து அழகிரி ஒதுங்கியே இருந்தார். கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 89 தொகுதிகளில் வென்ற திமுக நூலிழையில் ஆட்சி அமைக் கும் வாய்ப்பை இழந்தது. அதனைத் தொடர்ந்து, ‘‘ஸ்டாலின் இருக்கும் வரை திமுக வெற்றி பெறாது’’ என அழகிரி விமர்சித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த அழகிரி, ‘’ஸ்டாலின் செயல் தலைவர் அல்ல. செயல்படாத தலைவர்’’ என கடுமையாக சாடினார்.

 

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். அவர் சிகிச்சை பெற்ற 11 நாட்களும் அழகிரி, ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் மருத்துவமனையிலேயே இருந்த னர். அப்போது அழகிரி - ஸ்டாலின் இடையே இணக்கத்தை ஏற்படுத்த அவர்களது சகோதரி செல்வி மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த 13-ம் தேதி கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்திய அழகிரி, ‘கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர். அடுத்து என்ன செய்வது என்பதை விரைவில் அறிவிப்பேன்’ என கூறியிருந்தார். கருணாநிதி மறைந்த ஒரு வாரத்தில் அழகிரி எழுப்பிய இந்த கலகக் குரல் திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் வரும் செப்டம்பர் 5-ம் தேதி கருணாநிதி நினைவிடத்துக்கு பேரணி நடத்த அழகிரி திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘செப்டம்பர் 5-ம் தேதி அண்ணா சாலை, வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை யிலிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடத்த இருக்கிறேன். இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந் தும் 1 லட்சத்துக்கும் அதிகமா னோர் பங்கேற்பார்கள். கருணாநிதி யின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர் என்பதை அப்போது அனைவரும் புரிந்து கொள்வார்கள். எனது பின்னணி யில் பாஜக உட்பட எந்தக் கட்சியும் இல்லை. கருணாநிதி யின் லட்சியத்தை நிறைவேற்று வதற்கான முயற்சியில் இறங்கி யுள்ளேன்’’ என்றார்.

வரும் 28-ம் தேதி திமுக பொதுக் குழுவில் கட்சித் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், அழகிரி பேரணி நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://tamil.thehindu.com/tamilnadu/article24750053.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரியாணியும் குவாட்டரும் போடுவாய்ங்க...

வேற யாரு வாறீங்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

அப்போது அழகிரி - ஸ்டாலின் இடையே இணக்கத்தை ஏற்படுத்த அவர்களது சகோதரி செல்வி மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

யார் அழுதாலும் உடைவு கொண்பேர்ம் .

கொஞ்ச நாளைக்கு பிரியாணி கடைக்காரங்கள் ஓட்டல்களை பூட்டி இளைப்பாறுவது அவர்களின் உடம்புக்கு நல்லது .

Link to comment
Share on other sites

மு.க.அழகிரியின் பேரணியை முறியடிக்க ஸ்டாலின் தீவிரம்: மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை

 

 
alagirijpg

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து காலியாக உள்ள திமுக தலைவர் பதவிக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. கடந்த 2017 ஜனவரி 4-ம் தேதி முதல் செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின், திமுகவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், கருணா நிதியின் மகனுமான மு.க.அழகிரி கட்சித் தலைமையை கைப்பற்ற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு திமுகவில் இருந்து அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார். அதன் பிறகு ஸ்டாலினுக்கு எதிராக அவ் வப்போது கருத்துகளை தெரிவித்து வந்தாலும் அரசியலில் இருந்து அழகிரி ஒதுங்கியே இருந்தார்.

 

கருணாநிதி மறைவுக்குப் பிறகு அழகிரியை கட்சியில் இணைக்க குடும்பத்தினர் முயற்சித்தனர். அதற்கு ஸ்டாலின் மறுத்து விட்ட தாகக் கூறப்படுகிறது. கடந்த 13-ம் தேதி கருணாநிதி நினை விடத்தில் அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, “கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவில் அறிவிப்பேன்’” என்றார். ஸ்டாலினுக்கு போட்டி இருக்காது என்று கூறப்பட்ட நிலையில் அழகிரியின் இந்த கலகக்குரல் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தனது பலத்தை நிரூபிப்பதற்காக வரும் செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் பேரணி நடத்த அழகிரி முடிவு செய்துள் ளார். அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை பேரணி நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

இதற்காக திமுக தலைமை நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், மாவட் டச் செயலாளர்கள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்களுடன் அழகிரி தொடர்ந்து பேசி ஆதரவு திரட்டி வருகிறார். ஸ்டாலினால் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர்கள், அதிருப்தியில் இருப்பவர்களை அழகிரியின் பக்கம் இழுக்க அவரது ஆதரவாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

மாவட்டச் செயலாளர்கள் மீது அதிருப்தியில் உள்ள ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள் பலர் அழகிரி நடத்தும் பேரணி யில் பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த ஸ்டாலின், மாவட்டச் செயலாளர் களை தொடர்புகொண்டு, ஆலோசித்து வருகிறார். இது தொடர்பாக மாவட்டச் செயலாளர் ஒருவர் கூறும்போது, “சென்னையில் அழகிரி நடத்தும் பேரணி யில் திமுக நிர்வாகிகள் யாரும் பங்கேற்கக் கூடாது. அதிருப்தியில் உள்ள கட்சியினரை அரவணைத்துச் செல்ல வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். திருவாரூர், திருப்பரங் குன்றம் இடைத்தேர்தல் மட்டுமல்லாது மக்களவைத் தேர்தலும் வருவதால் கட்சி உடையாமல் பலமானதாக இருக்க வேண்டும். இல்லையெனில் யாருக்கும் பலனில்லாமல் போய்விடும் என ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்டச் செயலாளர்களுடன் மாவட்டச் செயலாளர்கள் பேசி வருகின்றனர். அழகிரியின் பேரணியை முறியடிக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்” என்றார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24757754.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

கருணாநிதி நம்மாளு! இதோ.. தெலுங்கு ஊடகமே சொல்லுது.. 

 

?‍♂️

Link to comment
Share on other sites

989 முதல் 2018 வரை.. அழகிரியின் அரசியலும், திக்குமுக்காடும் நிலவரமும்!

117_thumb.jpg
 

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார தென்மாவட்டங்களில் 1994-ம் ஆண்டுக்குப் பிறகு, தி.மு.க-வில் அவர் வைத்ததே சட்டம் என்கிற அளவுக்கு அழகிரியின் அதிகாரம் சென்றது.  அவர் கைகாட்டும் ஆளுக்குத்தான் கட்சிப் பதவி கிடைத்தது; தேர்தலில் நிற்க சீட் கொடுக்கப்பட்டது.

1989 முதல் 2018 வரை.. அழகிரியின் அரசியலும், திக்குமுக்காடும் நிலவரமும்!
 

தி.மு.க-வில் முக்கியப் பதவி வகித்து, மத்திய அமைச்சராகவும் இருந்த மு.க.அழகிரியை `அஞ்சா நெஞ்சன்' என்று வாஞ்சையோடு கருணாநிதி அழைத்ததும் உண்டு. முரசொலி பத்திரிகையைக் கவனிப்பதற்காக 1979-ம் ஆண்டு மதுரை மண்ணில் காலடி எடுத்து வைத்தார். ஆனாலும், 1989-ம் ஆண்டிலிருந்துதான் மதுரையில் அவர் கோலோச்ச ஆரம்பித்தார். மனக்கசப்பு ஏற்பட்டு தி.மு.க-வுக்கு எதிராக, வைகோ களம் கண்டபோது, மு.க.அழகிரி மதுரை மண்டலத்தில் கட்சியினரைச் சந்தித்து தொடர்ந்து தி.மு.க-விலேயே தக்கவைக்கும் பணியில் முக்கியப் பங்காற்றினார். இதையடுத்து, கட்சியில் அதிகார மையமாக மெள்ள மெள்ள உருமாறினார். 

ஸ்டாலின் அழகிரி

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார தென்மாவட்டங்களில் 1994-ம் ஆண்டுக்குப் பிறகு, தி.மு.க-வில் அவர் வைத்ததே சட்டம் என்கிற அளவுக்கு அழகிரியின் அதிகாரம் சென்றது.  அவர் கைகாட்டும் ஆளுக்குத்தான் கட்சிப் பதவி கிடைத்தது; தேர்தலில் நிற்க சீட் கொடுக்கப்பட்டது. அழகிரி ஆதரவாளர்கள் சிலர் அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டனர். கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமலேயே, தென் மாவட்ட தி.மு.க-வில் அதிகார மையமாகச் செயல்பட்டார். இந்நிலையில்தான், கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது நடைபெற்ற திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில், அதுவரை தமிழகம் கண்டிராத புதிய ஃபார்முலாவை நிறைவேற்றி, தி.மு.க-வுக்கு வெற்றி தேடித்தந்தார். அதன் பிறகு அவர் அதிகார மையத்தின் உச்சத்துக்குச் சென்றார் எனலாம்.  

 

 

கருணாநிதியுடன்

திருமங்கலம் வெற்றிக்குப் பரிசாக, கட்சியில் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு, அழகிரிக்கு வழங்கப்பட்டது. அதுவரை கட்சித் தொண்டர்களால் மட்டுமே `அஞ்சா நெஞ்சன்' என்று புகழப்பட்ட அழகிரியை, மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சித் தலைவராக இருந்த மறைந்த கருணாநிதியே, `அஞ்சா நெஞ்சன் அழகிரி' என்று புகழ்ந்து பேசினார். தென் மாவட்டங்களில் பெரும்பாலான தி.மு.க. நிர்வாகிகள், அழகிரி பக்கம் இருக்க, ஒருசில நிர்வாகிகள் மட்டுமே ஸ்டாலின் அணியில் இருந்தனர். பின்னர் 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், மதுரை தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் ஆனார். 

 

 

இந்த நிலையில் 2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற்று முதல்வர் ஆனதும், உள்ளூர் அரசியலிலிருந்து படிப்படியாக ஒதுங்கி, மத்திய அமைச்சர் பதவியில் மட்டும் பிஸியாக இருந்தார். இந்த நேரத்தில்தான், மகன் துரை தயாநிதி மீது கிரானைட் முறைகேடு வழக்கு தொடர்ந்தது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு. இதையடுத்து, அழகிரி ஆதரவாளர்கள் போலீஸ் நடவடிக்கைகளுக்கு பயந்து தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கினர். மதுரையில் தி.மு.க. ஆட்டம்காண ஆரம்பித்தது. 

அதன்பின்னர், 2013-ம் ஆண்டு, மத்திய அமைச்சர் பதவியை மு.க.அழகிரி ராஜினாமா செய்ததும், கட்சிப் பணிகளில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களோடு அழகிரியின் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க படுதோல்வி அடைந்தது. மு.க.அழகிரி முற்றிலுமாக தி.மு.க-விலிருந்து ஓரங்கட்டப்பட்டார். மதுரை மாநகர் தி.மு.க கட்சி நிர்வாகம் முற்றிலுமாகக் கலைக்கப்பட்டு, ஸ்டாலின் ஆதரவாளர்கள் பதவிக்குக் கொண்டுவரப்பட்டனர். அழகிரியையும் கருணாநிதி கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார். அதன்பின்னர், அழகிரிக்கு இறங்குமுகம்தான். இதனால் மு.க.ஸ்டாலின் கை ஓங்கியது.

 

 

ரஜினியுடன்

இதற்கிடையில் 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், தி.மு.க. 89 இடங்களைப் பிடித்தபோதிலும், ஆட்சியைப் பிடிக்கமுடியவில்லை. இதையடுத்து கருணாநிதி உடல் நலம் குன்றி, கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்தார். தி.மு.க செயல் தலைவரானார் ஸ்டாலின். முழுக்க முழுக்க கட்சி நிர்வாகம் அனைத்தும் ஸ்டாலின் கைக்கு வந்தது. இப்போது, கருணாநிதி மரணத்துக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் - மு.க.அழகிரி மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு பேட்டி அளித்த மு.க.அழகிரி, ``எனது ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்து விட்டேன்'' என்று கூறினார். ரஜினி, பி.ஜே.பி ஆதரவாளர்கள், அழகிரியைப் பின்னாலிருந்து இயக்குகிறார்கள் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இதை அடியோடு மறுத்துள்ளார் அழகிரி. 

இந்நிலையில், ஆகஸ்ட்  28-ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார். செப்டம்பர் 5-ம் தேதி, கருணாநிதி நினைவிடத்துக்கு அமைதிப் பேரணியை நடத்தப்போவதாக மு.க.அழகிரி அறிவித்துள்ளார். இதுகுறித்து மு.க.அழகிரி அளித்த பேட்டியில், ``சென்னையில் செப்டம்பர் 5-ம் தேதி நடத்தும் அமைதிப் பேரணியில் கட்சித் தொண்டர்கள், யார் பக்கம் உள்ளார்கள் என்பதை நிரூபிப்பேன்'' என்று கூறினார். இப்படி, அழகிரி அரசியல் நகர்வுகளை மேற்கொண்டாலும் கட்சியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து விட்டார். சென்னை அமைதிப் பேரணிக்கு தனது ஆதரவாளர்களைத் திரட்டும் வேலைகளில் அழகிரி இறங்கியுள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் ஆட்கள் அதற்கு செக் வைக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள். `நீயா.. நானா..?' என்று அண்ணன் தம்பி இருவரும் களம் இறங்கியிருப்பதை ஆளும் அ.தி.மு.க உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது.

https://www.vikatan.com/news/politics/134902-political-war-between-mkalagiri-and-mkstalin.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம சப்போர்ட் அழகிரிக்கே நீங்க தொடங்குங்க ராசா ..............................................?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

நாம சப்போர்ட் அழகிரிக்கே நீங்க தொடங்குங்க ராசா ..............................................?

நாங்களும்... அஞ்சா  நெஞ்சன்  அழகிரி பக்கம் தான். ?
ஜேர்மனியில் ..  கலைஞர்  திராவிட முன்னேற்ற கழகத்திற்கு, கிளையே  திறந்து விட்டோம்.   :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.