Jump to content

தூண்டில் இரைகள்


Recommended Posts

தூண்டில் இரைகள்
கே.எல்.ரி.யுதாஜித் /

இன்னமும் நாம் ஒற்றுமைப்படவில்லை; வாய்ப்பேச்சிலும் சரி, செயற்பாடுகளிலும்  சரி நமக்குள் அடிக்கடி அடிபுடிகள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. எம்மை நம்பி வாக்களித்த மக்கள் எப்போக்கில் போனாலும் சரி, எக்கேடு கெட்டாலும் சரி, நாங்கள் அடுத்துவரும் தேர்தலைப் பற்றியே சிந்திப்போம் என்பதுதான், பெருமளவான அரசியல்வாதிகளின் மனஓட்டமாக இருக்கிறது.

விலைவாசி ஏறிக்கொண்டிருக்கிறது. பஸ், ஓட்டோ, இனி ரயில்க் கட்டணமும் அதிகரிக்கப்படுகிறது. உணவகங்கள் எல்லாமே, தமது உற்பத்திகளுக்கு விலைகளை உயர்த்திவிட்டன. இந்த நிலையில் மாகாண சபைத் தேர்தல் முதலில் நடக்குமா, நாடாளுமன்றத் தேர்தல் முதலில் நடக்குமா, ஜனாதிபத்தித் தேர்தல் எப்பொழுது நடக்கும் என்றவாறான முழுச்சிந்தனையிலேயே நமது அரசியல்வாதிகள் உலாவருகின்றார்கள். 

தேர்தல் வரும்போது, பொருட்களின் விலைகளைக் குறைப்பதும், தேர்தல் முடிந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக விலைகளை உயர்த்தி, மக்களை வாழ்க்கைத் திண்டாட்டத்துக்குள் தள்ளுவதும் நமது நாட்டுக்கே உரித்தான, பாரம்பரியமான வழக்கம் ஆகும். அடுத்த தேர்தல் வரும்போது, பொருட்கள், சேவைகளின் விலைகளைக் குறைத்து, மக்களிடம் வாக்குக் கேட்பதும் சுதந்திரத்துக்குப் பின்னிருந்து தொடர்ந்து, நடந்து கொண்டிருக்கிறது.

தேசிய அரசியல் ஒருபக்கம் இருக்கையில், நாம், தமிழர் வாழும் மாகாணங்களின் போக்கு, வடக்கு, கிழக்கில் தமிழர்களின் நிலைப்பாடு, அங்குள்ள அரசியல் நிலை பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

ஒரே தலைமையின் கீழ், ஒரே குரலில் இருக்கின்ற சமுதாயம் தான், அதன் இலக்கை நோக்கிச் செல்லும்; இல்லையானால் நோக்கம் குலைந்து, துன்பங்களை அனுபவித்துப் பிரச்சினைகளுக்குள் சிக்கித் தவிக்கும் என்பதுதான் யதார்த்தம். இது, காலாகாலமாகத் தமிழர்கள் எடுத்த தேர்தல் முடிவுகளுக்கு நல்ல உதாரணம்.

எவ்வாறான குழப்பங்கள், கொள்கை முரண்பாடுகள் தம்மிடையே இருந்தாலும் இறுதி நேரத்தில் தமிழர்கள் ஒற்றுமை சார்ந்து, ஒரு முடிவை எடுப்பதுதான் வழமை. அந்த வகையில், தமிழ்த் தேசிய உணர்வின் நிமித்தமே, அவர்கள் எல்லோரும் ஒன்றுபடுகின்றார்கள் என்பதே உண்மை. 

தேர்தல்கள் எல்லாமே வெல்வதற்கானவையே. தேர்தல் முறைமைகளை மாற்றுவதும் திருத்துவதும் கட்சிகளின் வெற்றி வாய்ப்புக்கான சந்தர்ப்பங்களை அதிகரிப்பதற்கானதாகவே நடந்தேறுகின்றன. 

அடுத்த தேர்தல் எந்தமுறையில் நடைபெறும் என்று அறிவிக்காமலே, அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில், தேர்தல் நடைபெறப்போகிறது என்று மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் தான், வடக்கு, கிழக்கிலுள்ள அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவதற்கான சாத்தியக்கூறுகள், சந்தர்ப்பங்களை உய்ந்தறிந்து, சந்தர்ப்பவாதிகளாக ‘பங்கு பிரித்தல்’ கலந்துரையாடல்களில் முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஒரு பதியப்படாத கூட்டு. இந்தக் கூட்டுக்குள் தமிழரசுக்கட்சி தனது சின்னத்தைக் கொடுத்து, தேர்தலில் போட்டியிட்டு வருகிறது. இதற்குத் தான் ஒரு பலம் பொருந்திய கட்சி என்றோர் இறுமாப்பும் இருக்கிறது. 

கூட்டமைப்புக்குள் ஆரம்பத்தில் டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி ஆகிய கட்சிகள் இருந்தன. முரண்பாட்டின் வெளிப்பாடால், முதலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வெளியேறியது. 

கடந்த தேர்தலையடுத்து ஈ.பி.ஆர். எல்.எப் வெளியேறியது. அதற்கு முன்னர், புளொட் அமைப்பு கூட்டமைப்பில் இணைந்து கொண்டது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர், டெலோ, புளொட் அமைப்புகள் வெளியேறிவிடும் என்று நம்பப்பட்டது. அதற்கு அப்போது ஏற்பட்ட, கடைசிக் குழப்பம் காரணமாக இருந்தது. இருந்தாலும் வெளியேறிவிட்டால் நமது நிலை குறித்த அச்சத்துக்குள் அகப்பட்ட வேளை, கலந்துரையாடல்களை அடுத்து,  பிரதேச சபைகள் பங்கிடப்பட்டமையால் அந்தப்பிரிவு என்ற கணடத்தை சுமூகமாகத் தாண்டப்பட்டது.

சுய மதிப்பீடுகள் முழுமையாகச் செய்யப்பட்டாத நிலையில், யாரை யார் வீழ்த்துவது என்பது சிக்கலான விடயம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற ஈ.பி.ஆர்.எல்.எப், ஏற்கெனவே தமிழ்த் தேசிய அரசியலில் குழப்பங்களுக்குரியதாகச் சொல்லப்பட்ட உதய சூரியன் சின்னத்தை உடைய, தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் கைகோர்த்து,  இன்னும் சில உதிரிக்கட்சிகளும் இணைந்து, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டது. குறிப்பிட்டளவு ஆசனங்களையும் அவர்கள் பெற்றுக் கொண்டனர். 

அவ்வாறு குறிப்பிட்டளவு ஆசங்கள் கிடைக்கப் பெற்றமைக்கு, புதிய தேர்தல் முறையும் ஒரு காரணம். ஆனால், அந்த உறுப்பினர்களின் சுயாதீனத்தன்மை இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

இணைந்து போட்டியிட்ட கட்சிகளுக்கு, அதிகாரமின்றி இடைஞ்சல்களுடன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த இடைஞ்சல்கள், இப்போது மீண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தனிமைப்படுத்துவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் முரண்பாடால் பிரிந்து, தனிக்கட்சியாகச் செயற்பட முனைந்து, வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனைத் தலைவராகக் கொண்டு செயற்பட்ட, தமிழ் மக்கள் பேரவையுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ்    பிரேமசந்திரன் இணைந்து இயங்கினார். 

அதன் பின்னர், உள்ளூராட்சித் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி போட்டியிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆனந்த சங்கரியின் செயற்பாடுகளால் கூட்டுக்குள் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விரிசல், ஈ.பி.ஆர்.எல்.எப் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைவதற்கான சாத்தியக் கூறுகளை உருவாக்கியிருக்கிறது. நடைபெறுமா என்பது சந்தேகமும் தான். 

அதேவேளை வடக்கு, கிழக்கில் தென்னிலங்கைக் கட்சிகள் சிலவும் கால் பதிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்றன. இந்த முன்னெடுப்புகள் வடக்கு, கிழக்கில் எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடும் சில கட்சிகளது அழுத்தங்களுடன் சேர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தாலும், அதில் பெரும் சரிவில்லை என்றே சொல்ல வேண்டும்.

யாரை நிறுத்தினாலும் தமிழர்களின் உணர்வென்ற ஒன்றுக்கு மத்தியில், தென்னிலங்கை பெரும்பான்மையினக் கட்சிகளால் சாதிப்பது என்பது சிரமமே என்ற யதார்த்தம் உணரப்படுகின்றமையால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேர்தல் பட்டியலில் இடம் தராவிட்டால், இப்போது என்ன செய்வது என்கிற கேள்வி, தற்போதைய அரசியல்வாதிகள் மத்தியில் உள்ளது.

போராட்ட இயக்கங்களில் அங்கத்தவர்களாக இருப்பவர்களுக்கு எதிரான கருத்துகள் பரப்பப்படுவதும் அவர்கள் தொடர்பான எதிர்ப்புகள் உருவாகி வருவதும் வடக்குக் கிழக்கில் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்த எதிர்ப்புணர்வுகளுக்கு மத்தியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கூட்டைக் குலைக்காமல், இருந்தபடியே தேர்தல்களை எதிர்கொள்வது என்பது, இணைந்த கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்தடவை போட்டியிட்டு, தந்திரச் செயற்பாடுகளால் வென்றுவிட்டோம் என்று தெரிந்திருந்தும், தான் போட்டியிட்டு வெற்றிபெற்ற கட்சியையே விமர்சித்து, தலைவரை விமர்சித்து, மக்களைக் குழப்புவதே வேலையென்று இருக்கின்ற அரசியல்வாதிகளுக்கு, வயிற்றில் புளியைக்கரைக்கின்ற நிலைமை, மீண்டும் ஒரு தேர்தலைப்பற்றிய சிந்தனையால் உருவாகியுள்ளது.

இதுதான் இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்முறை தேர்தல் பட்டியலில் இடம் தராவிட்டால் என்ன செய்வது என்பதாகும்.

தொடர்ச்சியாக கடந்த கால அனுபவங்களின் ஊடாகப் பாடங்களைப் படித்துக் கொண்டு, அந்தப் பாடங்களில் இருந்து, அடுத்த பதிவுகளுக்குச் செல்லுவதுதான், ஓர் இனத்தின் இருப்பைத் தக்க வைப்பற்குச் சிறந்த வழியாக இருக்கும். அவ்வாறு வருகின்ற போது, தற்போது இருக்கின்ற பக்கங்களில் இருந்து கொண்டு, அதற்கு முன்னைய பக்கங்களை உள்வாங்கிக் கொண்டு, அடுத்த பக்கத்துக்கு நாங்கள் எவ்வாறு போகப் போகின்றோம் என்பதைத் தீர்மானிக்கும் வகையிலே அரசியல்வாதிகள் இருந்தாக வேண்டும். 

எழுபது ஆண்டு காலமாக, இந்த நாட்டில் நடைபெற்ற தமிழர்களின் போராட்டமானது, எடுத்துச் சென்றவைகளும் விட்டுச் சென்றவைகளும் ஏராளம். இலக்கு வைக்கப்பட்ட தமிழர்களின் அரசியலில் உழைக்கின்றவர்களும், உழைத்தவர்களும் இருக்கிறார்கள். இழந்தவர்களும் ஆண்டியானவர்களும் இருக்கின்றார்கள்.

வருடக்கணக்கில், காணாமல் போனோரது உறவுகளின் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இருந்தாலும் வேட்பாளர் பட்டியல், குறியாக இருப்பவர்கள் எடுக்கின்ற குழப்பங்களையே எல்லோரும் கை தட்டி வரவேற்கின்றனர். இந்த அரசியலுக்கான விடிவை, மக்கள்தான் ஏற்படுத்தியாக வேண்டும் என்றால், அதற்குள் தேசியம் புகுந்து நின்றுகொண்டு நடனமாடும். 

ஒரு விடயத்தில் காட்சி, ஐயம், தெளிதல், தேறுதல் என்கின்ற நான்கு படிமுறைகள் இருக்கின்றமை போன்று, அரசியலில் நடந்து முடிந்த பிறகு, ஒன்றுமே இருக்காது. இதுதான் இலங்கையில் தமிழர்களின் அரசியலின் நிலை.

1949.12.18ஆம் திகதி தமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணம் செய்கின்ற போது, தந்தை செல்வா பின்வருமாறு மொழிந்திருந்தார்.  “இந்த நாட்டில் தமிழர்கள், தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டு, தங்கள் வரலாற்றை வாழ்வித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றால், கூட்டாட்சிக் கட்டமைப்புக்குள்ளேயான ஓர் அரசியல் வரண்முறை, இந்த நாட்டில் ஆக்கப்பட வேண்டும். அந்த வரண்முறையை அடைவதற்கு, வன்முறையற்ற செயற்பாடுகளுக்கு நாங்கள் எங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.  

இந்த அடைவுகள் எல்லாம், அஹிம்சை, சாத்வீக முறைகளின் ஊடாக அடையப்பட வேண்டும் என்கின்ற விடயத்தை, ஆழ்ந்து சிந்தித்திருக்கின்றோமா? என்பது தொடர்பிலான கேள்விகளை அரசியல்வாதிகள் உட்பட ஒவொருவரும் கேட்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். 

எமக்குப் பலம் இருக்கின்றதா? எம்மால் அடைய முடியுமா? உலக நிலைமை எவ்வாறு இருக்கிறது? என்பவற்றையெல்லாம் சிந்தித்து, காய்களை நகர்த்தும் செயற்பாடுகள்  நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அடிப்படைக் கட்டுமானங்கள் அழிந்து கொண்டே இருக்கின்றன. அதனைச் சரிவரச் செய்யாது, அழிவுகளினூடாக நாம் உருவாகிக் கொண்டிருக்கின்றோம் என்று நம்புவது, தமிழர்களை மண்கௌவ்வ வைத்துவிடும். தேர்தல்களின் மூலம் அதிகாரங்களுக்கு வந்த அரசியல்வாதிகள், தம்மை நிலை நிறுத்திக் கொள்ள எடுத்த முயற்சிகள் இன்னமும் ஓய்ந்து விடவில்லை. யதார்த்தங்களை மறந்து, மக்களை நட்டாற்றில் விடுவது, தேர்தல் அரசியல் காரணமாகவேயாகும்.

மீன் கொத்துமிடத்தில் தூண்டில் போடும் அரசியலில் இருந்து விடுபடுவதற்கான முயற்சிகளுக்கிடையில், வெளிநாடுகளின் காய்நகர்த்தல்களையும் உணர்ந்து, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்படும் என்பது, அதற்கான அரசியல் தலைமையின் உருவாக்கத்திலேயே சாத்தியப்படும்.

தேர்தலுக்கான பட்டியல் பற்றியே சிந்திக்கும் தனித் தனிக்கட்சிகள், ஒற்றுமையாக இயங்குவதற்கான முன்னெடுப்புகள் குறித்து, தேர்தல் வரும் வேளையில் மாத்திரம் சிந்திக்கின்ற போக்கிலிலுந்து, தமிழ்த் தேசிய அரசியல் மாற்றம் காணுமா? 

விடுதலைப்புலிகளின் அழிவுக்கு முன்னர், தமிழ்த் தேசியக் கூடுட்டமைப்புக்கு வெளியே இருந்த கட்சிகள் தனித்தனியாக மேற்கொண்ட முயற்சிகள், கருத்துப்பகர்வுகள், கூட்டமைப்புக்குள் ஒன்றான பின்னர், இல்லாமல் போனது. வெவ்வேறு கருத்துகளின் வெளிப்படுத்தல்களால், உருவாகும் மனஅழுத்தங்கள் முரண்பாடுகளுக்கு வழிவகுத்து, ஒற்றுமையைக் குலைத்தமையை, கடந்த கால வரலாறுகள் கற்றுத் தந்த பாடங்களாகும்.  முரண்பாடுகளும் விமர்சனங்களும்  எதையும் செய்துவிடாது என்பதும் யதார்த்தமாகும்.

ஆனால், விமர்சனத்துக்காகச் செயற்படுவது ஒரு படியாகும். அதனைத் திரித்துச் சொல்லவும் முடியும். அதன் மூலம் சமுதாயத்துக்கு எந்த ஒரு பயனும் கிடைக்காது. ஆனாலும் நாம் ஒவ்வொருவரும், நினைத்தபடி செயற்படுதும் எல்லாவற்றையும் குழைத்துக் கூழாக்கி, அபாயத்துக்குள் ஆளாகவைத்துவிடும். 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தூண்டில்-இரைகள்/91-220579

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.