Jump to content

பொலிஸாரின் அறிவிப்பு பொய்யானது- கொக்குவிலில் இனந்தெரியாத குழு அட்டகாசம்!!


Recommended Posts

பொலிஸாரின் அறிவிப்பு பொய்யானது- கொக்குவிலில் இனந்தெரியாத குழு அட்டகாசம்!!

Capture-30-1.jpg

கொக்­கு­வில் சம்­பி­யன் லேனில் மருத்­து­வர் ஒரு­வ­ரது வீட்டை, உந்­து­ரு­ளி­யில் முகங்­களை மூடிக்­கட்­டிக் கொண்டு வந்த குழு­வி­னர் தாக்­கி­யுள்­ள­னர். வீட்­டி­லி­ருந்த பொருள்­கள், கண்­ணா­டி­கள் அந்­தக் குழு­வி­ன­ரால் உடைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தச் சம்­ப­வம் நேற்­று­மாலை இடம்­பெற்­றுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

யாழ்ப்­பா­ணத்­தில் குறித்த சில பொலிஸ் பிரி­வு­க­ளில் இடம்­பெற்ற வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்­டுள்­ள­தாக வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர் நேற்­று­முன்­தி­னம் தெரி­வித்­தி­ருந்­தார். இந்த நிலை­யில் நேற்­று­மாலை கொக்­கு­வி­லில் இந்­தத் தாக்­கு­தல் சம்­ப­வம் நடை­பெற்­றுள்­ளது.

சம்­பி­யன் லேனில் மருத்­து­வர் வாட­கைக்­குத் தங்­கி­யுள்­ளார். அவ­ரது வீட்­டுக்கு 3 உந்­து­ரு­ளி­யில் வந்த இனந்­தெ­ரி­யாத குழு­வி­னர் தாக்­கு­தலை நடத்­தி­யுள்­ள­னர். 4 பேர் வரை­யில் வீதி­யில் நிற்க இரு­வர் வீட்­டின் உள்ளே சென்று தாக்­கு­தல் நடத்­தி­ய­தாக அய­ல­வர்­கள் குறிப்­பிட்­ட­னர். இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் நேற்று இரவு பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

https://newuthayan.com/story/09/பொலிஸாரின்-அறிவிப்பு-பொய்யானது-கொக்குவிலில்-இனந்தெரியாத-குழு-அட்டகாசம்.html

Link to comment
Share on other sites

வாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்

 

யாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

doctor.jpg

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக இன்று மதியம் அரை மணிநேர கண்டன போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டனர்.

IMG_7654_1_.jpg

தாக்குதலாளிகளை பொலிஸார் விரைந்து கைது செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்த வைத்தியர்கள், கைது செய்யப்பாடத விடத்து, தாம் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என தெரிவித்தனர்.

IMG_7658_1_.jpg

யாழ். கொக்குவில் சம்பியன் ஒழுங்கையில் உள்ள வைத்தியரின் வீட்டுக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி உள்நுழைந்த வாள் வெட்டுக்குழு வீட்டின் யன்னல் கண்ணாடிகள் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்திய பின்னர் தப்பி சென்றமையை கண்டித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

IMG_7668_1_.jpg

http://www.virakesari.lk/article/38793

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

வாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல்

எனக்கு இந்த தலையங்கத்தை பார்த்த உடன் வாள் வெட்டுக்குழுவில் வைத்தியர் இருந்தவரோ என ஒரு நிமிடம் சொக்கா போயிட்டேன்...tw_tounge:

Link to comment
Share on other sites

15 minutes ago, putthan said:

எனக்கு இந்த தலையங்கத்தை பார்த்த உடன் வாள் வெட்டுக்குழுவில் வைத்தியர் இருந்தவரோ என ஒரு நிமிடம் சொக்கா போயிட்டேன்...tw_tounge:

அவர் அறுவைச் சிகிச்சை வைத்தியராக இருக்கவேண்டும், அவரால் வெட்டித்தான் வைத்தியம் பார்க்க முடியும்....! ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை முதலில் உள்வீட்டுக்குளிருந்துதான் வெளிக்கிட்டிருக்கும் என நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

அடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்

 

“யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் வைத்தியர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு வைத்தியரின் வீட்டுக்கு அண்மையாக உள்ள வாள்வெட்டுச் சந்தேகநபர் ஒருவரின் வீடாகும். தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்”

doctor__1.jpg

இவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்குவில் சம்பியன் லேனில் உள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டுக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த கும்பல் ஒன்று அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்தது.

தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் இமானுவேல் சாந்தகுமார், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு முறைப்பாடு செய்திருந்தார்.

அத்துடன், வைத்தியருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலைக் கண்டித்தும் குற்றவாளிகளை நீதியின் முன் முற்படுத்த வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஆரம்ப விசாரணைகள் தொடர்பில் பொலிஸார் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் வைத்தியர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு வைத்தியரின் வீட்டுக்கு அண்மையாக உள்ள வாள்வெட்டுச் சந்தேகநபர் ஒருவரின் வீடாகும்.

முகப்புத் தோற்றளவில் வைத்தியரின் வீடும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த வீடும் ஒரே மாதிரியானவை. அதனால்தான் வைத்தியரின் வீட்டின் மீது தாக்கிவிட்டு கும்பல் தப்பித்துள்ளது.

doctor_02.jpg

தாக்குதலுக்கு இலக்கு வைத்த வீடு, கடந்த மாத இறுதியில் கொக்குவிலில் இடம்பெற்ற வாள்வெட்டுக் குழுவின் அடாவடிகளை அடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருடையது.

ஆவா குழுவுக்கும் அதற்கு எதிரான கும்பலுக்கும் இடையிலான மோதலின் தொடர்ச்சியே இந்தத் தாக்குதலாகும். தாக்குதல் நடத்தியவர்கள் சாதாரண டிலக்ஸ் மோட்டார் சைக்கிள்களிலேயே வந்துள்ளனர்.

தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர், என்றனர்.

http://www.virakesari.lk/article/38836

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.