Jump to content

துருக்கி ஜனாதிபதியின் துடுக்கும் நாணயத்தின் வீழ்ச்சியும்


Recommended Posts

துருக்கி ஜனாதிபதியின் துடுக்கும் நாணயத்தின் வீழ்ச்சியும்

Untitled-14-2ed0baf67bc5272e3dbd9e0039f71f056ec44319.jpg

 

வேல் தர்மா

 

2018ஆம் ஆண்டு ஆரம்­பத்தில் இருந்து 2018.-08-.10ஆம் திகதி வரை துருக்­கிய நாண­ய­மான லிராவின் பெறு­மதி 40 வீதத்தால் வீழ்ச்­சி­ய­டைந்­தது. அதில் மோச­மான வீழ்ச்­சி­யாக 25 வீதம் வீழ்ச்சி 2018-.08-.06ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ஏற்­பட்­டது. அந்த ஆடிக் கடைசி வெள்­ளியை லிரா ஆடிய வெள்ளி என அழைக்­கலாம். லிராவின் பெறு­மதி வீழ்ச்­சிக்­கான காரணம் அமெ­ரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்­பிற்கும் துருக்­கிய ஜனாதிபதி ரெசெப் எர்­டோ­கா­னுக்கும் இடையில் ஏற்­பட்ட முறுகல் என்று சொல்­லப்­ப­டு­கின்­றது. ஆனால் அமெ­ரிக்­கா­வுடன் முறுகல் இல்­லாத பல நாடு­களின் நாண­யங்­கள் (சீனா, இந்­தியா, ஆர்­ஜெண்­டீனா உட்­பட) அமெ­ரிக்க டொல­ருக்கு எதி­ராக வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளன.

ரஷ்யப் பொரு­ளா­தாரத் தடையை சமா­ளித்த துருக்கி

2015ஆம் ஆண்டு துருக்கி தனது F-16 போர் விமா­னத்தால் சிரி­யாவில் தாக்­கு­தலில் ஈடு­பட்­டி­ருந்த ரஷ்­யாவின் SU-24 போர்­வி­மானம் தனது நாட்­டுக்குள் வந்­தது எனச் சொல்லிச் சுட்டு வீழ்த்­தி­யது. அதனால் ஆத்­தி­ர­ம­டைந்த ரஷ்ய ஜனாதிபதி புட்டீன் துருக்­கிக்கு எதி­ராக பல பொரு­ளா­தாரத் தடை­களை ஏற்­ப­டுத்­தினார். துருக்­கியின் பல விவ­சாயப் பொருட்கள் ரஷ்­யா­விற்கு ஏற்­று­மதி செய்­வ­தற்­கான தடை, துருக்­கிக்கு ரஷ்­யர்கள் உல்­லாசப் பயணம் செய்­வது கூட தடை, துருக்­கி­யர்கள் ரஷ்­யாவில் வேலை செய்­வ­தற்குத் தடை, இரு­த­ரப்புப் பொரு­ளா­தார ஒத்­து­ழைப்புத் தடை எனப் பல தடைகள் விதிக்­கப்­பட்­டன. துருக்கி ஏற்­று­மதி செய்யும் நாடு­களின் பட்­டி­யலில் ரஷ்யா 7ஆவது இடத்தில் இருக்­கின்­றது. துருக்­கியின் எரி­வா­யுவில் 98 வீதம் ரஷ்­யாவில் இருந்து விநி­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் ரஷ்யப் பொரு­ளா­தாரத் தடையை துருக்கி சமா­ளித்­தது மட்­டு­மல்ல,அதன் பிறகு துருக்­கியும் ரஷ்­யாவும் சிரிய விவ­கா­ரத்தில் நெருங்கி ஒத்­து­ழைத்­தன. ரஷ்யா விதித்த பொரு­ளா­தாரத் தடை­களும் நீக்­கப்­பட்­டன.

ட்ரம்ப்-­–எர்­டோகான் முறுகல்

2016ஆம் ஆண்டு துருக்­கியில் முறி­ய­டிக்­கப்­பட்ட படைத்­துறைப் புரட்­சியில் தொடர்­பு­டை­யவர் என்ற குற்றச் சாட்டில் அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பாதி­ரியார் அண்­டுரு பிறன்ஸன் துருக்­கியில் சிறை­வைக்­கப்­பட்­டுள்ளார். 2018 ஜூலையில் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த நேட்டோக் கூட்­ட­மைப்பின் உச்சி மாநாட்டில் துருக்­கிய ஜனாதிபதி எர்­டோ­கானைச் சந்­தித்த ட்ரம்ப் பாதி­ரியார் பிறன்­ஸனை விடு­தலை செய்­யு­மாறு வேண்­டுகோள் விடுத்­தி­ருந்தார். அதற்குப் பதி­லாக இஸ்­ரேலில் சிறை வைக்­கப்­பட்­டி­ருக்கும் துருக்­கியர் ஒரு­வரை விடு­விக்க வேண்டும் என எர்­டோகான் வேண்­டுகோள் விடுத்தார். அதன் பேரில் இஸ்ரேல் தனது சிறை­யி­லி­ருந்த துருக்­கி­யரை விடு­தலை செய்­தது. ஆனால் துருக்கி பாதி­ரியார் பிறன்­ஸனை சிறையில் இருந்து மாற்றி வீட்­டுக்­கா­வலில் வைத்­தது. இது ட்ரம்பை ஆத்­தி­ரப்­ப­டுத்­தி­யதால் துருக்­கியின் இரு அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரான பொரு­ளா­தாரத் தடையை ட்ரம்ப் விதித்தார்.

பதி­ல­டி­யாக ட்ரம்பின் அமைச்­ச­ர­வையில் இருந்த இரு­வ­ருக்கு துருக்கி பொரு­ளா­தாரத் தடை விதித்­தது. இதனால் அமெ­ரிக்க –துருக்கி முறு­கலை உரு­வாக்கும் என்ற அச்­சத்தில் ஏற்­க­னவே வலு­வி­ழந்­தி­ருந்த துருக்­கிய நாண­ய­மான லிராவின் பெறு­மதி வீழ்ச்­சி­ய­டையத் தொடங்­கி­யது. இதனால் துருக்­கியப் பொருட்கள் அமெ­ரிக்­கா­விற்கு மலி­வான விலையில் ஏற்­று­மதிச் செய்­யப்­பட்­டன. ஏற்­க­னவே துருக்­கியின் அலு­மி­னி­யத்­திற்கு ட்ரம்ப் இறக்­கு­மதி வரியை அதி­க­ரித்­தி­ருந்தார். லிராவின் பெறு­மதி வீழ்ச்­சியால் அந்த வரி­வி­திப்பு செய­லி­ழந்­தது. உடனே (2018-.08-.10- லிரா ஆடிய வெள்ளி) ட்ரம்ப் துருக்­கிய அலு­மி­னி­யத்­திற்­கான இறக்­கு­மதி வரியை இரட்­டிப்­பாக்­கினார். உட­னேயே லிராவின் பெறு­மதி பெரு­ம­ளவில் வீழ்ச்­சி­ய­டைந்­தது.

கேந்­தி­ரோ­பாயப் பங்­காளி

துருக்கி ஜனாதிபதி எர்­டோகான் நியூயோர்க் டைம்ஸில் திறந்த ஆசி­ரியத் தலை­யங்கம் ஒன்றை எழு­தினார். அதில் அமெ­ரிக்­கா-­–து­ருக்கி இடை­யி­லான 70 ஆண்டுகால கேந்­தி­ரோ­பாய உறவு, துருக்கி- நேட்­டோவின் உறுப்­பு­ரிமை, பொது­வு­டமைப் பரம்­ப­லுக்­கான எதிர்ப்பில் துருக்­கியும் இணைந்து செயற்­பட்­டமை, கொரியப் போரில் துருக்கி அமெ­ரிக்­கா­வுடன் இணைந்து போரிட்­டமை, 1962 கியூபா நெருக்­க­டியில் துருக்கி துருப்புச் சீட்­டாகப் பாவிக்­கப்­பட்­டமை ஆகி­ய­வற்றை விளக்கி எழுதி அமெ­ரிக்கா தனது கேந்­தி­ரோ­பாயப் பங்­கா­ளிக்கு துரோகம் செய்­த­தாக விளக்­கி­யி­ருந்தார்.

முறு­கல்­க­ளுக்­கான கார­ணிகள்

1. அமெ­ரிக்­காவில் இருந்து செயற்­படும் Fethullah Gulen என்ற துருக்­கியர் துருக்­கியில் ஆட்­சிக்­க­விழ்ப்­பிற்கு சதி செய்­கின்றார். அவரை அமெ­ரிக்கா நாடு­க­டத்த வேண்டும் என்­பது துருக்­கிய ஜனாதிபதி எர்­டோ­கானின் நிலைப்­பாடு,

2. துருக்கி பயங்­க­ர­வாத அமைப்­புக்­க­ளாகக் கருதும் சிரிய குர்திஷ் போராளிக் குழுக்­க­ளுடன் (P.Y.D/ Y.P.G) அமெ­ரிக்கா உறவு வைத்­தி­ருக்­கின்­றது.

3. துருக்கி ரஷ்­யாவின் எஸ்-400 ஏவு­கணை எதிர்ப்பு முறை­மையை வாங்­கி­யது

4. துருக்­கிக்கு விற்­பனை செய்ய இருந்த நூறு அமெ­ரிக்­காவின் ஐந்தாம் தலை­முறைப் போர்­வி­மா­னங்­க­ளான F-35ஐயும் ட்ரம்ப் நிறுத்­தி­யுள்ளார்.

  பண­வீக்கம் 16%.

5. சிரி­யாவில், துருக்கி/ஈரா­னு­டனும் ரஷ்­யா­வு­டனும் நெருங்­கிய ஒத்­து­ழைப்பைச் செய்­கின்­றது. சிரிய விவ­காரம் அமெ­ரிக்­கா­விற்கு ஒரு கேந்­தி­ரோ­பாயத் தோல்வி எனக் கரு­தப்­ப­டு­கின்­றது.

6. ட்ரம்ப் இறக்­கு­மதி வரி­களை அதி­க­ரித்து வர்த்­தகப் போர் தொடுத்த நாடு­களில் துருக்­கியும் ஒன்­றாகும்.

7. ட்ரம்பின் வேண்­டு­தலின் படி துருக்கி அமெ­ரிக்கப் பாதி­ரி­யாரை சிறையில் இருந்து முழு­மை­யாக விடு­தலை செய்­தி­ருந்தால் 2018 நவம்­பரில் நடக்­க­வி­ருக்கும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ட்ரம்பின் குடி­ய­ரசுக் கட்­சியின் வெற்றி வாய்ப்பை அதி­க­ரித்­தி­ருக்கும்.

சிரி­யாவில் துருக்கி  3.5 மில்­லியன் சிரி­யர்கள் துருக்­கியில் தஞ்­ச­ம­டைந்­துள்­ளனர். 

ரஷ்ய ஆசி­யுடன் துருக்கி அஃப்­ரி­னையும், அல் பப்­பையும் தன­தாக்­கி­யது, அது துருக்­கிய ஆட்­சியின் கீழ் உள்­ளது. பொது இடங்­க­ளுக்கு எர்­டோ­கானின் பெயர் வைக்­கப்­ப­டு­கின்­றது. துருக்­கி­மொழி அங்கு போதிக்­கப்­ப­டு­கின்­றது. துருக்­கிய ஆத­ரவுப் போரா­ளி­க­ளுக்கு துருக்கி சம்­பளம் வழங்­கு­கின்­றது. துருக்­கியில் இருந்து மின் இணைப்பு இட்­லிப்பை முழு­மை­யாக துருக்­கியின் கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்டு வர­மு­டி­ய­வில்லை, அங்கு பல அவ­தா­னிப்பு நிலை­யங்கள் என்ற போர்­வையில் தனது 1300 பேரைக் கொண்ட படை நிலை­களை துருக்கி நிறுத்­தி­யுள்­ளது. இட்­லிப்பை முழு­மை­யாக தன் வச­மாக்க ரஷ்ய ஆத­ரவை துருக்கி வேண்டி நிற்­கின்­றது அஃப்­ரினும், அல் பப்பும் இட்­லிப்பும் இல்­லாமல் பஷார் அல் அசாத்தால் பத­வியில் நீடிக்க முடியும். அசாத்­துக்கு சில எலும்புத் துண்­டு­களைக் கொடுக்க ரஷ்யா தயா­ராக உள்­ளது. அலேப்­பே­யிற்கு அண்­மை­யாக துருக்­கி­யுடன் எல்­லையைக் கொண்ட பல நக­ரங்­களை அசாத்தின் கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்டு வர ரஷ்யா தயா­ராக உள்­ளது. முதலாம் உலகப் போரின் பின்னர் சிரி­யா­வி­னதும் ஈராக்­கி­னதும் வட பகு­தி­களை துருக்கி தன்­னுடன் இணைக்க முயன்­ற­போது அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அதைக் கடு­மை­யாக எதிர்த்­தன.

அந்தக் கனவை இப்­போது துருக்கி, ரஷ்ய உத­வி­யுடன் நிறை­வேற்­றப்­பார்க்­கின்­றது. இஸ்­லா­மிய நாடான துருக்கி சிரி­யாவில் கால்­ப­திப்­ப­தையோ, அதன் விரி­வாக்­கத்­தையோ இஸ்ரேல் தடுக்க எல்லா நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்கும். ஈரானைத் தனி­மைப்­ப­டுத்தும் அமெ­ரிக்­கா­வி­னதும், இஸ்­ரே­லி­னதும் காய் நகர்த்­தல்­க­ளுக்கு துருக்கி ஈரா­னுடன் கொண்­டுள்ள உறவு தடை­யாக இருக்­கின்­றது. அதனால் துருக்கி வலு­வி­ழக்கச் செய்­யப்­பட வேண்­டிய ஒரு நாடாக இஸ்­ரேலும், அமெ­ரிக்­காவும் கருதும் என ஊகிக்­கலாம்.

நிதிச் சந்தையின் மிகை­யான நட­வ­டிக்­கையா? யூதச் சதியா? 

துருக்­கியின் அலு­மி­னியம், உருக்கு ஆகி­ய­வற்றின் ஏற்­று­மதி அதன் மொத்தப் பொரு­ளா­தார உற்­பத்­தியின் இரண்டு சதவீதம் மட்­டுமே. அதன் ஏற்­று­மதி அமெ­ரிக்­காவில் சந்­திக்கும் வரி அதி­க­ரிப்பு ஒரு நாளில் 25வீதம் வீழ்ச்­சியை துருக்­கிய நாண­யத்தில் ஏற்­ப­டுத்­தி­யமை பொரு­ளா­தாரத் தர்க்க அடிப்­ப­டையில் பிழை­யான ஒன்றே

எர்­டோ­கானின் விநோ­த­மான பொரு­ளா­தாரக் கொள்கை

அமெ­ரிக்­காவின் டொலரின் பெறு­மதி அதி­க­ரிக்கும் போது பல வளர்­முக நாடு­களின் நாண­யங்கள் நெருக்­க­டியைச் சந்­திப்­பது தவிர்க்க முடி­யாது. டொலரின் பெறு­மதி ஏறும்­போது எரி­பொ­ருட்கள் இறக்­கு­மதி செய்­வ­தற்கு பல நாடுகள் அதிக விலை கொடுக்க வேண்டும். அதனால் அந்த நாடு­களில் எரி­பொருள் விலைகள் அதி­க­ரிக்கும். அது­போ­லவே பல இறக்­கு­மதிப் பொருட்­களின் விலை­களும் அதி­க­ரிக்கும். அதற்கு ஏற்ப பொரு­ளா­தார நகர்­வு­களை அந்த நாடுகள் செய்ய வேண்டும். துருக்­கிய ஜனாதிபதி எர்­டோ­கானின் பொரு­ளா­தாரக் கொள்­கைகள் விநோ­த­மா­னவை. துருக்­கியின் அதி­கா­ர­மிக்க தலை­வ­ரான அவர் வட்டி என்­பது தீமை­யான ஒன்று, அதை அதி­க­ரிக்க மாட்டேன் என்று சொல்லி ஆட்­சிக்கு வந்­தவர். துருக்­கியில் பண­வீக்கம் 16வீத­மாக இருக்­கின்­றது. இது இந்­தி­யா­வி­னது பண­வீக்­கத்­திலும் இரு மடங்­கிற்கு மேல். பண­வீக்கம் அதி­க­ரித்தால் நடுவண் வங்கி வட்டி வீதத்தை அதி­க­ரிக்க வேண்டும் என்­பது அடிப்­படைப் பொரு­ளா­தார விதி. அதைத் துருக்கி செய்­யா­ததால் அதன் நாண­யத்தில் வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் வெறுப்புக் காட்டத் தொடங்­கி­யதால் அதன் பெறு­மதி வீழ்ச்­சி­ய­டைந்­தது.

எர்­டோ­கானின் அதி­ரடி நட­வ­டிக்­கைகள் 

2018 ஆகஸ்ட் 14ஆம் திகதி துருக்­கியின் வர்த்­த­கர்கள் எர்­டோ­கானைச் சந்­தித்து லிராவை பாது­காக்­கும்­படி வேண்­டுகோள் விடுத்­தனர். 2018 ஆகஸ்ட் 14ஆம், 15ஆம் திக­தி­களில் எர்­டோகான் அமெ­ரிக்­கா­விற்கு எதி­ரா­கவும் லிராவைப் பாது­காக்­கவும் பல நட­வ­டிக்­கை­களை எடுத்தார். லிராவை குறை­வ­ணி­கத்தில் விற்­பனை செய்­வ­தற்கு எதி­ராகச் செயற்­பட்டார். கட்டார் நாட்டின் உத­வியைக் கோரினார். துருக்­கிக்குச் சென்ற கட்டார் எமிர் அல் தனி துருக்­கியில் 15 பில்­லியன் டொலர்­களை முத­லீடு செய்­வ­தாக அறி­வித்தார். 2017இல் துருக்கியில் செய்யப்பட்ட மொத்த வெளிநாட்டு முதலீடான 10 பில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் கட்டாரின் முதலீடு எத்தகையது என அறியலாம். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் வாகனங்கள், மதுபானங்கள் உட்படப் பல பொருட்களின் இறக்குமதியை பெருமளவில் அதிகரித்தார். அமெரிக்காவின் இலத்திரனியல் பொருட்களை புறக்கணிக்குமாறு தன் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த நடவடிக்கைகளால் 15ஆம் திகதி துருக்கிய நாணயமான லிராவின் பெறுமதி ஐந்து வீதம் அதிகரித்தது. ட்ரம்பின் அடுத்த நடவடிக்கை இந்தக் கட்டுரை எழுதி முடிக்கப்படும் வரை வெளிவரவில்லை.

துருக்கியின் பிழையான பொருளாதார முகாமை, திறனற்ற ஊழல் நிறைந்த அரச கட்டமைப்பு ஆகியவை தான் துருக்கியின் பொருளாதார நெருக்கடிகளுக்குக் காரணம். காரணம் அவை அல்ல எம் எதிரியான அமெரிக்காவே என துருக்கிய மக்களை இலகுவாக நம்பவைக்க எர்டோகானுக்கு ட்ரம்ப் உதவி செய்துள்ளார்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-08-19#page-3

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.