Jump to content

வடக்கு வீட்டுத்திட்டம் சீனாவுக்கா - இந்தியாவுக்கா இதோ பட்டிமன்றம் ஆரம்பமாகிறது


Recommended Posts

எதை எடுத்தாலும் ஏதோவொரு பிரச்சினை யைக் கிளறிவிடுகின்ற நிலைமைதான் காணப் படுகிறது.

இதற்குக் காரணம் யார் என்பதற்கு அப் பால், இப்படியான பிரச்சினைகளை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டியவற்றை இல்லாமல் செய்வது அல்லது காலதாமத மாக்குவது என்ற நோக்கத்தின் அடிப்படையி லேயே மேற்படி பிரச்சினைகள் நடந்தாகின்றன.

வடக்கின் குடிநீர் விநியோகம் என்ற விடயம் வந்தபோது, இரணைமடுக்குளத்திலிருந்து குடி தண்ணீர் வழங்குவது என்ற விவகாரம் சூடு பிடித்து கடல்நீரைச் சுத்திகரிப்பது என்றளவில் நிலைமை அப்படியே இருக்கிறது.

இருந்தும் நிலத்தின் கீழ் குடிநீர்க் குழாய்களைப் பொருத்துகின்ற பணி நடைபெறுவது ஓரளவுக்கு மன ஆறுதலைத் தருகிறது எனலாம்.

இதற்குப் பின்னர் வீட்டுத்திட்டத்தில் பொருத்து வீடா? கல்வீடா? என்ற பட்டிமன்றம் நீண்ட காலம் நீடித்தது.

அமைச்சர் சுவாமிநாதன் தரப்பு பொருத்து வீடு என்று வாதிட; வடக்கு மாகாண முதல மைச்சர் தரப்பு கல்வீடு என்று எதிர்வாதம் புரிய; நடுவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த விடயத்தில் தலையிட்டார் எனினும் அவரின் தீர்ப்பு என்ன என்பது இன்னும் அறியப்படாததாக உள்ளது.

இதுதான் என்றால், வடக்குக்கான பொரு ளாதார மையம் என்ற புதியதொரு விவகாரம் தலைதூக்கியது.
பொருளாதார மையத்தை வவுனியாவில், ஓமந்தையில், தாண்டிக்குளத்தில் எங்கே? நிறுவ வேண்டும் என்ற பட்டிமன்றம் மூன்று அணியாகப் பிரிந்து நடந்தது.

இப்போது பொருளாதார மையத்துக்கு என்ன நடந்தது என்பதே தெரியாமல் போய் விட்டது.

இவை தவிர, இப்போது வடக்குக்கான வீட் டுத்திட்டத்தை இந்தியாவிடம் கொடுப்பதா? சீனாவிடம் கையளிப்பதா? என்ற பிரச்சினை எழுந்துள்ளது.

மாரிகாலம் ஆரம்பமாகின்ற இக்கட்டத்தில் மக்கள் தகரக்கொட்டகைக்குள் முடங்கிக் கிடக் கின்ற நேரத்தில்; எவ்வளவு விரைவாக வீடுகளைக் கட்டி மக்களைக் குடியமர்த்த முடியுமோ அந்தளவுக்கு வேலையை விரைவுபடுத்துவ தென்றால், இங்கோ வீட்டுத்திட்டத்தை இந்தி யாவிடம் கொடுப்பதா? சீனாவிடம் வழங்கு வதா? என்ற பட்டிமன்றம் நடக்கத் தொடங்கி விட்டது.

இந்தப் பட்டிமன்றம் இப்போதைக்கு தீர்ப் பைத் தருமா என்பது கேள்விக்குறிதான்.

என்ன செய்வது எங்களுக்குள் ஒற்றுமை இல்லை; எங்களுக்குள் புரிந்துணர்வு இல்லை; அரசிடம் ஆணித்தரமாகப் பேசுகின்ற துணிவு நம்மிடம் அறவே இல்லை.

இந்நிலையில் இவ்வாறானவாதப் பிரதி வாதப் பிரச்சினைகள் மேலெழுகின்றன.

இவற்றுக்கெல்லாம் முடிவு காண்பது பற்றி நம் அரசியல் தலைவர்கள் சிந்திக்கப் போவது மில்லை.

இவ்வாறான நிலையில், வடமராட்சி கிழக்கில் கடல் அட்டை பிடிப்பதில் சிங்களக் கடற் றொழிலாளர்கள் நுழைவு; முல்லைத்தீவில் சட்டவிரோத சிங்களக் குடியேற்றம்; தமிழர் தாயகத்தில் புத்த விகாரைகள் அமைப்பு என்ற புதிய பிரச்சினைகள் முளைவிடுகின்றன.

நாங்கள் எங்களுக்குள் மோதிக் கொண்டால் இதுதான் நடக்கும் என்பதற்கு இதை விட்ட வேறு எடுத்துக்காட்டுகள் வேண்டாமே.

http://www.valampurii.lk/valampurii/content.php?id=16813&ctype=news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Athavan CH said:

விரைவுபடுத்துவ தென்றால், இங்கோ வீட்டுத்திட்டத்தை இந்தி யாவிடம் கொடுப்பதா? சீனாவிடம் வழங்கு வதா? என்ற பட்டிமன்றம் நடக்கத் தொடங்கி விட்டது.

என்னை கேட்டால் வருங்கால வல்லரசு பங்காளதேசிடம் கொடுப்பது சால சிறந்தது ?

Link to comment
Share on other sites

5 hours ago, Athavan CH said:

வடக்கின் குடிநீர் விநியோகம் என்ற விடயம் வந்தபோது, இரணைமடுக்குளத்திலிருந்து குடி தண்ணீர் வழங்குவது என்ற விவகாரம் சூடு பிடித்து கடல்நீரைச் சுத்திகரிப்பது என்றளவில் நிலைமை அப்படியே இருக்கிறது.

இருந்தும் நிலத்தின் கீழ் குடிநீர்க் குழாய்களைப் பொருத்துகின்ற பணி நடைபெறுவது ஓரளவுக்கு மன ஆறுதலைத் தருகிறது எனலாம்.

இதற்குப் பின்னர் வீட்டுத்திட்டத்தில் பொருத்து வீடா? கல்வீடா? என்ற பட்டிமன்றம் நீண்ட காலம் நீடித்தது.

அமைச்சர் சுவாமிநாதன் தரப்பு பொருத்து வீடு என்று வாதிட; வடக்கு மாகாண முதல மைச்சர் தரப்பு கல்வீடு என்று எதிர்வாதம் புரிய; நடுவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த விடயத்தில் தலையிட்டார் எனினும் அவரின் தீர்ப்பு என்ன என்பது இன்னும் அறியப்படாததாக உள்ளது.

இதுதான் என்றால், வடக்குக்கான பொரு ளாதார மையம் என்ற புதியதொரு விவகாரம் தலைதூக்கியது.
பொருளாதார மையத்தை வவுனியாவில், ஓமந்தையில், தாண்டிக்குளத்தில் எங்கே? நிறுவ வேண்டும் என்ற பட்டிமன்றம் மூன்று அணியாகப் பிரிந்து நடந்தது.

இப்போது பொருளாதார மையத்துக்கு என்ன நடந்தது என்பதே தெரியாமல் போய் விட்டது.

இவை தவிர, இப்போது வடக்குக்கான வீட் டுத்திட்டத்தை இந்தியாவிடம் கொடுப்பதா? சீனாவிடம் கையளிப்பதா? என்ற பிரச்சினை எழுந்துள்ளது.

ஈழத்தமிழ் மக்களுக்கு இப்படியான நிலை புதியது இல்லை.

தமிழீழம் அல்லது எதுவும் இல்லை என்ற நிலைப்பாடு முதல், மேலே சொல்லப்பட்ட வீட்டுத்திட்டம், பொருளாதார மையம் போன்ற விடயங்கள் வரை  அனைத்தும் எமது தலைவர்களின் அடிப்படையான பலவீனத்தின் பாதிப்பின் விளைவுகளே.

  1. எந்த ஒரு விடயத்தை எடுத்துக்கொண்டாலும் அது பல தரப்பையும் பாதிக்கும் என்பதை ஆரம்பத்திலேயே எமது தலைவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. தமது தரப்புக்கு என்ன பாதிப்பு என்ன நன்மை என்பது பற்றியே எமது தலைவர்கள் கவனத்தில் கொள்வார்கள்.ஆகவே பாதிக்கப்பட்ட மற்ற தரப்புகள் தீவிர நடவடிக்கை எடுக்க ஆரம்பித்ததும் எந்த முன்னேற்றமும் சாத்தியம் இல்லாமல் போகிறது. ஆங்கிலத்தில் இப்படி பாதிக்கப்படக்கூடிய தரப்புகளை stakeholders   என்பார்கள்.
  2. பல தரப்புகளும் பாதிக்கப்படும் நிலை இருப்பதால் எந்த விடயத்தை தீர்க்க விரும்பினாலும், முதலில் ஏனைய தரப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை எப்படி குறைப்பது என்று பார்த்து, அனைவருக்கும் பாதிப்பு குறைவான  தீர்ப்பை முன்வைக்க எமது தலைவர்கள் முன்வர வேண்டும். இதை ஆங்கிலத்தில் mitigation என்று கூறுவார்.
  3. பாதிக்கபடும் தரப்புகளுக்கு நன்மை தரத்தக்க விட்டுக்கொடுப்புகளை வேறு விடயங்களில் செய்வது மூலம் அவர்களுக்கு பாதிப்புகள் உண்டானாலும் அவர்கள் தீர்வுக்கு சம்மதிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். இதை  deal making என்று ஆங்கிலத்தில் அழைப்பர்.

சிங்கப்பூரின் பிதா லீ குவான் யு இந்த விடயங்களில் சிறந்து விளங்கினார். இந்த விடயங்களில் சிறந்த ஆற்றல் கொண்ட காரணத்தாலேயே சுந்தர் பிச்சை (சுந்தரராஜன் பிச்சை) கூகிள் நிறுவனத்தின் தலைவர் ஆனார். எல்லா சிறந்த வணிக நிறுவனங்களின் தலைவர்களும் இந்த விடயங்களில் சிறந்து விளங்குபவர்களே. தூரதிஷ்டவசமாக ஈழத்தமிழ் மக்களின் தலைவர்கள் இந்த விடயங்களை புரிந்து கொள்ளவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.