Jump to content

நெஸ்லே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பால் மாவட்ட மாதிரித் திட்டம்


Recommended Posts

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்றுள்ள ஒரு பாரம்பரிய கைத்தொழிலான உள்நாட்டு பால் உற்பத்தியின் ஆற்றல் மூலமாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சிறுவர்களின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு அது உதவி வருகின்றமை நாம் அனைவரும் அறிந்துள்ள ஒரு விடயமாகும்.

உள்நாட்டு பால் உற்பத்தி கைத்தொழில் துறையை முன்னெடுத்துச் செல்வதன் நடுநாயகமாக இலங்கையில் உள்ள சிறு அளவிலான பாற்பண்ணையாளர்கள் காணப்படுகின்றனர். அதாவது அனேகமாக குடும்பங்களால் நிர்வகிக்கப்படுகின்ற சிறு பாற்பண்ணைகள்.

எனினும், இலங்கையின் பால் உற்பத்தி கைத்தொழில் இன்னும் வளர்ந்து வருகின்ற ஒரு துறையாகக் காணப்படுவதுடன், கேள்வியை ஈடுசெய்யும் அளவிற்கு வழங்கல் இன்னும் முழுமையான அளவில் கிடைப்பதில்லை.

Nestle-2-1.jpg

பால் உற்பத்தி மற்றும் உள்நாட்டுப் பாலின் தரம் ஆகியவற்றை அதிகரிப்பதற்காக, தனது பால்மாவட்ட மாதிரித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, இந்த தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்காக 1980 களில் அரசாங்கம் மற்றும் உள்நாட்டு பாற்பண்ணையாளர்களுடன் ஒன்றிணைந்து செயற்படும் வேலைத்திட்டமொன்றை நெஸ்லே நிறுவனம் ஆரம்பித்திருந்தது. கிட்டத்தட்ட 20,000 பாற்பண்ணையாளர்களுக்கு வழக்கமான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள், தொழில்நுட்ப மற்றும் நுண்கடன் உதவிகள், நடமாடும் கால்நடை சிகிச்சை மையங்கள், பால் கொள்கலன்கள் மற்றும் ஏனைய வளங்களை நிறுவனம் தற்போது வழங்கி வருகின்றது.

பாற்பண்ணையாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்கின்ற பாலை முறையாக சந்தைப்படுத்துவதற்கு உதவும் வகையில் பால் சேகரிப்பு மையங்கள் மற்றும் பாலைக் குளிரூட்டிப் பேணும் மையங்கள் (பாலின் தரம் கெடாமல் பேணிப் பாதுகாப்பதற்கு) போன்ற அத்தியாவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதிலும் அது கணிசமான அளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

உயர் தரம் கொண்ட உள்நாட்டுப் பாலைச் சேகரித்து, உயர் தரம் கொண்ட ஊட்டச்சத்துடனான உற்பத்திகள் பலவற்றை நுகர்வோருக்கு வழங்குவதற்கு நெஸ்லே நிறுவனத்தின் பணிகள் இடமளிப்பது மட்டுமன்றி, பண்டார மெனிக்கே போன்ற சிறு அளவிலான பாற்பண்ணையாளர்களுக்கு தமது வர்த்தக முயற்சிகளை வளர்த்து, தமது குடும்பங்களுக்கு உதவுவதற்கான வாழ்வாதாரத்தை வழங்கவும் இடமளிக்கின்றன.

நாட்டில் தொழில்வாய்ப்புகள் போதிய அளவில் காணப்படாத காலகட்டமாகிய 1980 களின் பிற்பகுதியில் தமது வாழ்வுக்கு வருமானத்தை ஈட்டும் ஒரு மார்க்கமாக பண்டார மெனிக்கே மற்றும் அவரது கணவர் இணைந்து பாற்பண்ணை முயற்சியை ஆரம்பித்திருந்தனர். நாட்டில் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தமையால், எனது கணவனால் எந்த இடத்திலும் தொழில் ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை, என்று ரம்புக்கன நகரத்தின் புறநகரத்திலுள்ள பின்தங்கிய கிராமத்தில் வசித்து வருகின்ற பண்டார மெனிக்கே குறிப்பிட்டார். ஆகவே நிலையான வருமானம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக நாம் இருவரும் இணைந்து பாற்பண்ணை முயற்சியை ஆரம்பித்தோம் என்று குறிப்பிட்டார். எனினும் 2005 ஆம் ஆண்டில் அவரது கணவருக்கு சுகவீனம் ஏற்பட்டமையால் அந்த வியாபாரத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒட்டுமொத்த பொறுப்பையும் மெனிக்கே ஏற்றுக்கொண்டார்.

ஆரம்பத்தில், கணவரின் உதவியின்றி பாற்பண்ணையை நிர்வகிப்பது அவருக்கு பலத்த சவாலாகவே காணப்பட்டது. பால் கறப்பது அவருக்கு பெரும் சவால்மிக்க ஒரு பணியாக காணப்பட்டது. குறிப்பாக ஏராளமான பசுக்கள் உள்ள போது கைகளால் பால்கறப்பது மிகவும் கடினமாக இருந்ததுடன், சோர்வை ஏற்படுத்துவதாகவும் காணப்பட்டது, என்று அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் நெஸ்லே நிறுவனத்தின் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு நான் செல்ல ஆரம்பித்ததுடன், அந்நிறுவனத்தின் விவசாயசேவை அலுவலர்கள் எவ்வாறு முறையாக பால் கறப்பது என்பது தொடர்பில் எனக்கு போதித்ததுடன், அதன் காரணமாக மிகச் சிறந்த தரம் கொண்ட பாலை உற்பத்தி செய்ய என்னால் முடிந்தது.
நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு ஆகியவற்றை வழங்குவதற்குப் புறம்பாக, நிலைபேற்றியலைப் பேணும் வகையில் பாற்பண்ணையை நிர்வகிப்பதற்கும் மெனிக்கேவை நெஸ்லே ஊக்குவித்து வருகின்றது. பசுக்களின் சாணத்தை அவர் தற்போது சேதன வாயுவாக மாற்றம் செய்து, தனது பாற்பண்ணைக்கும், வீட்டில் குடும்பத்திற்கும் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றார்.

தற்போது நெஸ்லே நிறுவனத்திற்கு பாலை விநியோகிப்பதன் மூலமாக மாதம் ஒன்றுக்கு ரூபா 80,000 வருமானத்தை மெனிக்கே ஈட்டி வருவதுடன், தான் கட்டியெழுப்பியுள்ள வியாபார முயற்சியை எண்ணி அவர் மிகவும் பெருமை கொள்கின்றார். பாற்பண்ணையை சிறப்பாக முன்னெடுத்துச் செல்கின்றமைக்காக நெஸ்லே நிறுவனத்தால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள விருதுகளைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்வுகளில் அவர்கள் ஏற்கனவே மூன்று ஜனாதிபதிகளையும், பல அமைச்சர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளையும் மெனிக்கே நேரடியாக சந்தித்துள்ளார்.

தரமான மற்றும் அதிகளவான பாலை உற்பத்தி செய்து வழங்குதல் மற்றும் அவரது பாற்பண்ணை மற்றும் கால்நடை நிர்வகிப்பு ஆகியவற்றைப் பாராட்டும் வகையில் நாட்டிலுள்ள மிகச் சிறந்த 100 பாற்பண்ணையாளர்களுள் ஒருவராக நெஸ்லே நிறுவனம் அவருக்கு இனங்காணல் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இந்த இனங்காணல் அங்கீகாரங்கள் அவரது சமூகம் மற்றும் ஏனைய பாற்பண்ணையார்கள் மத்தியில் சமூகரீதியான அந்தஸ்தை ஈட்டவும் மெனிக்கேக்கு உதவியுள்ளன.

தனது பிள்ளைகளுக்கு சிறப்பான கல்வியை வழங்க முடிந்துள்ளமையே அவர் மிகவும் பெருமைப்படும் ஒரு விடயமாகும். வியாபார முயற்சியை விரிவுபடுத்துவதற்கு பிள்ளைகள் தமது கல்வியை உபயோகிப்பர் என அவர் நம்புகின்றார்.

அவர் தற்போது அன்றாடம் 40 லீட்டர் பாலை உற்பத்தி செய்து வருவதுடன், தனது குடும்பத்திற்கு தேவையானதை எடுத்த பின்னர், தனது கிராமத்திலுள்ள சிலருக்கும் அவற்றை விற்பனை செய்து வருவதுடன், மேலதிகமாக உள்ள பாலை நெஸ்லே நிறுவனத்திற்கு விற்பனை செய்து வருகின்றார். எப்போதும் புதிய சவாலை ஏற்கக் காத்திருக்கும் அவர், அன்றாடம் 100 லீட்டர் பாலை உற்பத்தி செய்யும் அளவிற்கு தனது வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளார்.

http://thinakkural.lk/article/15158

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.