Jump to content

உலக நிகழ்வுகள்.....3200 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதன் உண்ட ‘பாலாடைக் கட்டி’ கண்டுபிடிப்பு


Recommended Posts

3200 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதன் உண்ட ‘பாலாடைக் கட்டி’ கண்டுபிடிப்பு

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம்.

பாலாடைக் கட்டி

பாலாடைக் கட்டிபடத்தின் காப்புரிமைUNIVERSITY OF CATANIA AND CAIRO UNIVERSITY

பண்டைய எகிப்திய சமாதி ஒன்றை ஆய்வு செய்துவரும் தொல்பொருள் ஆய்வாளர்கள், அந்த கல்லறையில் இருந்த ஜாடி ஒன்றில் பாலாடைக் கட்டியின் படிமங்களை கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய பாலாடைக் கட்டி படிமங்களில் இதுவே மிகவும் பழையது என அவர்கள் நிரூபித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்திய உயரதிகாரியான தஹ்மெஸின் கல்லறையில் சில உடைந்த ஜாடிகளை கண்டுபிடித்தனர். அதில் இறுக்கமான வெள்ளை திடப் பொருளொன்று இருந்தது. அதனை ஆய்வு செய்ததில் அந்த பாலாடைக் கட்டியானது 3200 ஆண்டுக்கு முந்தைய பழமையான பாலாடைக் கட்டி என்று தெரியவந்துள்ளது.

Presentational grey line

நடனமாடிய புதின்

நடனமாடிய புதின்படத்தின் காப்புரிமைAFP

ஆஸ்திரிய வெளியுறவுத் துறை அமைச்சர், கரின் திருமணத்தில் கலந்துக் கொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கரினுடன் நடனமாடினார். புதினை திருமணத்திற்கு அழைத்ததால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தார் கரின். ரஷ்ய அதிபருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு அனைத்தும் மக்கள் வரிப் பணம் என்று மக்களும், கரின் தன் விருப்பத்திற்கு விருந்தாளிகளை தேர்ந்தெடுத்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கைகளை குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என எதிர் கட்சியினரும் குற்றஞ்சாட்டி இருந்தனர். ஜெர்மன் சான்சிலர் ஏங்கெலா மெர்கலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த செல்லும் வழியில் ஆஸ்திரியாவில் இந்த திருமண நிகழ்வில் கலந்துக் கொண்டார் புதின்.

Presentational grey line Presentational grey line

'தமிழன்' நாயகிக்கு திருமணம்

'தமிழன்' நாயகிக்கு திருமணம்படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES

'தமிழன்' எனும் தமிழ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ராவுக்கு பாலிவுட், ஹாலிவுட் என பல உச்சங்களை தொட்டார். அவருக்கும், அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸுக்கும் சனிக்கிழமை மும்பையில் திருமணம் நிச்சயம் ஆனது. இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார்கள் என பல வாரங்களாக வதந்தி உலவிய நிலையில் இந்த திருமணம் நிச்சயம் நிகழ்ந்துள்ளது. ஆனால், திருமண தேதி குறித்து அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. பிரியங்காவைவிட நிக்கிற்கு வயது குறைவு.

Presentational grey line

இணையத்தை கட்டுப்படுத்தும் சட்டம்

இணையத்தை கட்டுப்படுத்தும் சட்டம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

எகிப்தில் இணையத்தை கட்டுப்படுத்தும் ஒரு புதிய சட்டம் ஒன்றில் அந்நாட்டு பிரதமர் அப்டெல்  ஃபட்டா அல்- சிசி  கையெழுத்திட்டுள்ளார். சைபர்கிரைம் எனும் அச்சட்டத்தின்படி தேச பாதுகாப்பு அல்லது பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான வலைதளங்கள் அந்நாட்டில் யாரும் அணுகமுடியாவாறு முடுக்கப்படும். இது போன்ற வலைதளங்களை  யாராவது நடத்தி வந்தாலும் அல்லது அப்பக்கங்களில் உதவினாலும் அவர்  சிறை தண்டனை அல்லது அபராதம் கட்ட வேண்டிய நிலையை சந்திக்கவேண்டியிருக்கும்.

Presentational grey line

உலக தலைவர் அஞ்சலி

கோஃபி அன்னான்படத்தின் காப்புரிமைAFP

ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபையின் முன்னாள் பொது செயலரான கோஃபி அன்னான் சனிக்கிழமை உயிரிழந்தார். என்பது வயதில் காலமான கோஃபி அன்னானுக்கு உலக தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவை தடைகளை உடைத்த கோஃபி, சிறந்த உலத்திற்கான தமது நாட்டத்தை எப்போதும் நிறுத்தவில்லை என்று கூறி உள்ளார். அது போல இந்திய பிரதமர் மோதி உலகின் சிறந்த ஆஃப்ரிக்க ராஜதந்திரியையும், மனிதநேய பண்பாளரையும் இவ்வுலகம் இழந்துவிட்டது என கூறி உள்ளார்.

https://www.bbc.com/tamil/global-45237509

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.